Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தைக் கைவிடுகிறது பத்மநாபா ஈபிஆர்எல்எவ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தனது பெயரிலிருந்து ஈழம் என்ற பதத்தை நீக்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிவினைவாத கோட்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் பழமையான தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பெயரில் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தனது பெயரிலிருந்து ஈழம் என்ற பதத்தை நீக்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிவினைவாத கோட்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் பழமையான தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பெயரில் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது

   

தற்போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி இரண்டு பிரிவுகளளாக இயங்குகின்றன. இதில் ஒரு பிரிவினரான பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழம் என்ற பதத்தை நீக்கத் தீர்மானித்துள்ளதாகவும், தமிழ் மக்கள் சமூக ஜனநாயக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி அமைக்கப்பட உள்ளதாகவும், இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கட்சியின் பெயர் மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் ஐஏஎன்எஸ் கூறுகிறது.

இது குறித்து பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகம் சுகு என்ற சிறிதரன் கருத்து வெளியிடுகையில், பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற நீளமான பெயரை சுருக்குவதற்கான கலந்துரையாடல் தொடர்வதாகவும், அதே வேளை பரந்துபட்ட சமூக ஜனநாயகக் கடசி ஒன்றின் அவசியம் கருதி தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=154686&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஈழம் கேட்டு பலியிட்டது எல்லாம் சும்மா பம்பலுக்குப் போல. அதுசரி.. எனி ஹிந்தியாவுக்கு அது தேவையில்ல இல்ல.:rolleyes:

எல்லாரும் ஈழம் கேட்டது பிரபாகரனுக்குப் போடியாப் போல. தமிழ் மக்களுக்காக இல்லை. எனி அதுக்கு தேவை இல்லைத் தானே. tw_blush:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி (E)PRLF தொடர்ந்து விடுதலை புலிகளை தவிர்ந்த ஏனைய இயக்கங்களும் ஈழ கோரிக்கையை கைவிடலாம். அவர்களுக்கோ இந்தியாவுக்கோ அந்த தேவையும் இனிமேல் இல்லை tw_blush:

ஈழம் எதற்காக என்ற எண்ணம் மலிந்திருக்கிறது. அதுதான் காரணமாக இருக்கும். யாராவது ஈழம் கேட்டால்தான் அதற்குப் போட்டியாகக் கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் பெயரைச் சுருக்க வேணுமெண்டால் வேறு எத்தனையோ மாதிரி அதை செய்திருக்கலாம் ஆனால் அதற்கு முன் உங்க கட்சியின் எந்த கொள்கை கோட்பாடுகளையெல்லாம் சுருக்கிபோட்டீங்க  சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் அறிக்கைவிட்டு ஈழத்தை கைவிடியினம்.....உண்மையிலயே ஈழத்தை கைவிட்டு பல ஆண்டுகள் ஓடிவிட்டன‌

ஒட்டுக்குழுவொன்று ஈழம் பெற்றுக் கொடுத்துவிட்டதால் பெயரை மாற்றுகிறது

3374_1459613770_PhototasticCollage-2016-

ஒட்டுக்குழுவொன்று தமது பெயரில் உள்ள ஈழம், விடுதலை ஆகிய பெயர்களை நீக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடர்பான அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஒட்டுக்குழுவே பெயரை மாற்றவுள்ளதாக தெரியவருகிறது 

பத்மநாபா E.P.R.L.F  கட்சியின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தற்போது நடந்து வருகிறது.

இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும், கனடா, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து. ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்தும் கட்சியின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர்.

இந்த மாநாட்டிலேயே, ஈழம், விடுதலை ஆகியவற்றைக் கைவிட்டு, புதிய கட்சியின் பெயரை அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிந்திய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே, பத்மநாபா E.P.R.L.F  கட்சி தமது பெயரை மாற்றிக் கொள்ளும் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

விடுதலைப் புலிகளால் ஆயுதப் போராட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட பின்னர், அரசியல் கட்சியாக E.P.R.L.F  பதிவு செய்து கொண்டது. E.P.R.L.F  கட்சியின் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டதையடுத்து, கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டன.

இதன் பின்னர், கட்சியின் ஒரு பிரிவு சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டது.

அதேவேளை, மற்றொரு பிரிவு பத்மநாபா E.P.R.L.F  என்ற பெயரில் இயங்கி வந்தது. தற்போது பத்மநாபா E.P.R.L.F  கட்சியே தமது பெயரை மாற்றிக் கொள்ளவுள்ளது.

சுதந்திர தமிழீழத்தை உருவாக்கும் நோக்கில், E.P.R.L.F  அமைப்பு, 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://battinaatham.com/description.php?art=3374

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தை கைவிட்டது நல்ல விடயம். மிகுதியை எப்போ கைவிடப்போகிறார்கள்?

நாட்டில் புலிகள் இனி எக்காலமும் இல்லை ,

வெளிநாட்டில் ஓடிவந்த புலிகள் என்று பெயரை மாற்றி இனி புலிகளும் இயங்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தாங்கள் ஓடி வந்த புளொட் ஆ? அதுவும் சொல்லிக் கொள்ளாமல் ஓடி வந்த புளொட். 

15 minutes ago, arjun said:

நாட்டில் புலிகள் இனி எக்காலமும் இல்லை ,

வெளிநாட்டில் ஓடிவந்த புலிகள் என்று பெயரை மாற்றி இனி புலிகளும் இயங்கலாம் .

 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, arjun said:

நாட்டில் புலிகள் இனி எக்காலமும் இல்லை ,

வெளிநாட்டில் ஓடிவந்த புலிகள் என்று பெயரை மாற்றி இனி புலிகளும் இயங்கலாம் .

இது கொள்கைகள் உள்ள இயக்கத்தவர் சொல்ல வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, arjun said:

நாட்டில் புலிகள் இனி எக்காலமும் இல்லை ,

வெளிநாட்டில் ஓடிவந்த புலிகள் என்று பெயரை மாற்றி இனி புலிகளும் இயங்கலாம் .

புலிகளுக்கு மட்டுமில்லை 
உலகில் வாழ்ந்த மானமுள்ள மனிதர்கள் யாபருக்கும் அதுவே இயல்பு 

வாழ்ந்தார்கள் 
இறந்தார்கள் 
இந்த இரண்டுதான் இதனால்தான்  
பகவத்சிங்  ..... சேகுவரா என்று காலங்களால் கூட அழியாது வாழ்கிறார்கள் 

நக்கினார்கள்...... அண்டினார்கள் 
அது நாய்களுக்கு உரியவை !

On 4/2/2016 at 3:13 PM, தமிழரசு said:
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தனது பெயரிலிருந்து ஈழம் என்ற பதத்தை நீக்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிவினைவாத கோட்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் பழமையான தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பெயரில் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தனது பெயரிலிருந்து ஈழம் என்ற பதத்தை நீக்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிவினைவாத கோட்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் பழமையான தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பெயரில் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது

   

தற்போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி இரண்டு பிரிவுகளளாக இயங்குகின்றன. இதில் ஒரு பிரிவினரான பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழம் என்ற பதத்தை நீக்கத் தீர்மானித்துள்ளதாகவும், தமிழ் மக்கள் சமூக ஜனநாயக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி அமைக்கப்பட உள்ளதாகவும், இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கட்சியின் பெயர் மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் ஐஏஎன்எஸ் கூறுகிறது.

இது குறித்து பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகம் சுகு என்ற சிறிதரன் கருத்து வெளியிடுகையில், பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற நீளமான பெயரை சுருக்குவதற்கான கலந்துரையாடல் தொடர்வதாகவும், அதே வேளை பரந்துபட்ட சமூக ஜனநாயகக் கடசி ஒன்றின் அவசியம் கருதி தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=154686&category=TamilNews&language=tamil

விடுதலை என்ற சொல்லை 
விட முடியாது ............. தேர்தல் காலத்திற்கு தேவை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.