Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்காவது ஆசை இருக்கா ????

Featured Replies

அண்ணை கனக்க ஆராய்ச்சி நடத்துறியள்.........பெல்ஜியத்தில், பிரான்சில் நடந்தது இப்போதைக்கு ஊரில நடக்காத படியா.......இப்போதைக்கு ஊர்ல போய் இயற்கையை அனுபவியுங்கள். 

என்னும் 16நாள்ல விடுமுறை......... கள்ளு என்னவிலை போகுதோ???? நண்டு என்ன விலை போகுதோ?????? வாங்கிறம் அடிக்கிறம்......... அவ்வளவு தான்.

Edited by Surveyor

  • Replies 168
  • Views 21.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

when in Rome, do as the Romans do

தப்பில்லைதானே மீரா

அப்போ இத்தாலிய பாஸ்போட்டிற்கு / அடையாள அட்டைக்கு எங்க போவது? 

வேறோரு நாட்டின் கடவுச்சீட்டை பெற்றபின்னர் இலங்கை அடையாள அட்டையையோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தையோ பயன்படுத்துவது குற்றம் தானே? 

3 hours ago, nedukkalapoovan said:

நாங்க ஊருக்குப் போகப் போறதில்லை.. ஆனால்.. பிரன்சைஸா சந்திக்கு சந்தி சைக்கிள் கடையும் ரீக்கடையும் சேர்ந்தாப் போல போடப்போறம். இப்ப எல்லாம் சிங்கள ஆமிக்காரனும்.. புலனாய்வாளர்களும் சைக்கிளில் தான் அதிகம் திரிகிறார்கள்... இந்த வெளியிலுக்கு ரீகடையில இளனி..போட்டாலே.. நல்ல வியாபாரம் போகும்.  150,000 சிங்கள இராணுவம் இருக்குது. ஆளுக்கு ஒரு இளநீ வாங்கினாலே.. நம்ம வியாபாரம் மில்லியனை தொட்டிடும். 

நமக்கு நிம்மதியா குந்த ஒரு சொந்தத் திண்ணை இல்லை.. இதில.. சிங்கப்பூருன்னு கனவு வேற. கனவு காண்பது அவரவர் உரிமை.. அது சாத்தியமாகுமா இல்லையா என்று சிந்திப்பது அறிவுடமை ஆகும். tw_blush:

ஐயோ நீங்க ஒன்னு.. உதில பல.. பாஸ்போட்டைக் கிழிக்கேக்க ஐடியை கிழிக்காமல் விட்டதில மிஞ்சினது. கோத்தா பாதுகாப்பு அமைச்சு அனுமதி எடுக்கனுன்னு.. சட்டம் கொண்டு வரேக்க.. கொழும்பு போனதும் வெளிநாட்டு பாஸ்போட்டை ஒளிச்சு வைச்சிட்டு கிழிக்காமல் வைச்சிருந்த ஐடில ஊருக்குப் போய் வந்தவை தான். இப்ப அதனை எயார்போட்டில வைச்சுப் பறிச்சிடுறாங்களாம். அதில வேற போய் வாறவ ரெம்பக் கவலையா இருக்கினம். tw_blush:

எனி ஐடியும் மாறிட்டுது. ரெம்பக் கஸ்டம் தான். மாறுவேசம் தான் ஒரே வழி. இந்திய ரோ புடவை விற்குது அது போல.. ! tw_blush:

நெடுக்ஸ் நான் கேட்பது விளங்கினாலும் விளங்காத மாதிரி இருக்கிறார்கள் 

மீரா ஆண்டி சொறிலங்கா NICஎல்லாம் ஒரு ID..... நீங்கள் நேரத்தை வீணடிக்கிரியல்.

அண்ணையிண்ட  ஆக்கள் எல்லாம் 1ம் இலக்க(கொழும்பு மாவட்ட) IDயும் பொலிஸ் ரிப்போர்ட்டும் கொண்டு திரிய  சும்மா நிண்டவை தான் களி திண்டவை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் 2009ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற முன்றலுக்கு முன்னாலே தான் நின்டனான்.[பனங்காய்க்கு என்னை நல்லாய் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.].2010ம் ஆண்டு கட்டுநாயக்காவால் ஊருக்குப் போனேன்.போகைக்கு முதல் உன்ட படம் எல்லாம் அவங்களிட்ட இருக்கும் போகாதே என்று என்னை கணபேர் பயமுறுத்தினவை.என்னை ஒருத்தரும் பிடிக்கேல்லை.ஒரு வேளை நான் பணக்கார,பிரபல்யமான ஆள் இல்லையோ!

53 minutes ago, ரதி said:

நான் 2009ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற முன்றலுக்கு முன்னாலே தான் நின்டனான்.[பனங்காய்க்கு என்னை நல்லாய் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.].2010ம் ஆண்டு கட்டுநாயக்காவால் ஊருக்குப் போனேன்.போகைக்கு முதல் உன்ட படம் எல்லாம் அவங்களிட்ட இருக்கும் போகாதே என்று என்னை கணபேர் பயமுறுத்தினவை.என்னை ஒருத்தரும் பிடிக்கேல்லை.ஒரு வேளை நான் பணக்கார,பிரபல்யமான ஆள் இல்லையோ!

 

கெட்டிகாறி?

 

7 hours ago, Surveyor said:

மீரா ஆண்டி சொறிலங்கா NICஎல்லாம் ஒரு ID..... நீங்கள் நேரத்தை வீணடிக்கிரியல்.

அண்ணையிண்ட  ஆக்கள் எல்லாம் 1ம் இலக்க(கொழும்பு மாவட்ட) IDயும் பொலிஸ் ரிப்போர்ட்டும் கொண்டு திரிய  சும்மா நிண்டவை தான் களி திண்டவை.

 

நீங்கள் சொல்லிறதுதான் சரி?

 

8 hours ago, MEERA said:

அப்போ இத்தாலிய பாஸ்போட்டிற்கு / அடையாள அட்டைக்கு எங்க போவது? 

வேறோரு நாட்டின் கடவுச்சீட்டை பெற்றபின்னர் இலங்கை அடையாள அட்டையையோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தையோ பயன்படுத்துவது குற்றம் தானே? 

நெடுக்ஸ் நான் கேட்பது விளங்கினாலும் விளங்காத மாதிரி இருக்கிறார்கள் 

 


நெடுக்ஸ் சொன்னா உங்களுக்கும் சரிதான்?

 

22 hours ago, nedukkalapoovan said:

சப்பா முடியல்ல.. 2015 அறிக்கையும் அதில இருக்குதுங்க. 2014 உம் இருக்குது. 2013 ம் இருக்குது. 2014 ஆகஸ்டுக்கும் 2015 க்கும் இடையில உள்ள வித்தியாசம் நூற்றாண்டு வித்தியாசம் தானே. கடைசியா எல்லாம் 2016 ஜனவரில் அப்டேட் செய்யப்பட்டிருக்குது. அரைகுரையா விளங்கிறதுமில்லாமல்.. விதண்டாவாதம் வேற.tw_blush:

நோர்வேயில்.. திருவிழாச் செய்ய காசு வாங்கவும் கொடி பிடிச்சவை இருக்கினம். இப்ப அவைதான் ஊரில போய் நின்று கொட்டம் அடிக்கினம். அண்மையில் ஒஸ்லோவில் களவா..சுத்திகரிப்பு வேலை செய்யுற தமிழர்களை எல்லாம் பிடிச்சு உள்ள வைச்சது போல.. அகதி அந்தஸ்து எடுத்திட்டு.. சொறீலங்காவில போய் நிற்கிறவைட.. அகதி அந்தஸ்தை புடுங்கிற சட்டம் வந்தால் தெரியும்.. கொடி பிடிச்சவைட தார்ப்பரியம். சிங்களவன் காட்டுவான். கொள்கைக்காக கொடி பிடிச்சவன் அதில உறுதியாத்தான் நிற்கிறான். tw_blush:

 

நீ படிச்சவன்ரா, நீங்கசொன்னாயெல்லாம் சரிதான்?

Edited by Knowthyself

இந்ததிரியைத்தொடங்கினவ ஒருநாளும் போகமாட்டா?

Edited by Knowthyself

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

28 minutes ago, Knowthyself said:

இந்ததிரியைத்தொடங்கினவ ஒருநாளும் போகமாட்டா?

நான் ஒரு திரியைத் தொடங்கிறான் எண்டால் காரணத்தோடதான் எண்டு விசயம் தெரிஞ்சவைக்கு விளங்கி இருக்கும்.  நான் போய் இருக்கப் போறான் எண்டு புலுடா விடவும் இல்லை. நீங்கள் வந்து சொன்ன உடன உங்களுக்குப் பயந்து இல்ல நான் போகப் போறான் எண்டு மாய்மாலம் விடவும் இல்லை. எனது மகள் மூன்று மாதம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும்  நின்றுவிட்டு வந்தாள். அவள் அங்கு நிற்கும்போது ஒவ்வொருநாளும் ஆவலுடன் தொலைபெசியில் கதைத்த பின்னர் தான் நின்மதியானது. அம்மா நீங்கள் வெளிக்கிட்டு வாங்கோ என்று அவள் கேட்டும் நான் மறுத்துவிட்டேன். முதலில் நீ இங்கே வா பிறகு யோசிப்போம் என்று கூறிவிட்டேன். அவளுக்கு எமது ஊர் மக்கள் எல்லாம் பிடித்துவிட்டது. ஒரு மாதத்தில் மீண்டும் போகபோகிறேன் என்றவளை நான் தான் தடுத்து நிறுத்தினேன். அவள் படித்தது Humanrights Master. அது தொடர்பாக இலங்கையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் அங்கேயே போகப் போகிறேன் என்றாள். நானும் மறுக்க விரும்பாமல் சம்மதித்தேன். அடுத்த ஆண்டு நானும் போய்ய் பார்க்கப் போகிறேன் நிலைமை எப்படி இருக்கிறது என. என் மகளைப் பார்த்து வேறு ஒருபிள்ளையும் தானும் வந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளாள். எமது தலைமுறையினருக்கு அங்கு போய் இருக்கும் துணிவு இருக்காதுதான். ஆனால் இங்கு பிறந்த பிள்ளைகள் துணிவும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள். அவர்களை ஏன் நாம் தடுக்கவேண்டும் ?? ஆனாலும் என் துணிவின் காரணமும் ஒன்று இருக்கிறது. விதி எதுவோ அதுதான் வாழ்க்கை என்பதும் இங்கத்தைய வதிவிட உரிமை உள்ளவர்கள் மீண்டும் ஏதும் பிரச்சனைகள் என்றால் இங்கு வந்துவிட முடியும் என்பதும் மனதுக்குத் தெம்பாக இருக்கிறது.

யேர்மனியில் வாழும் துருக்கி இனத்தவர் ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன தமது நாட்டில் சென்றே திருமணம் செய்வர். அது அவர்களது இனம் யேர்மனியில் பெருகக் காரணாம். ஆனால் இங்கு பிறந்து வளர்ந்த எம்மவர்கள் இங்கு பிறந்தவர்களைத் தான் திருமணம் செய்யவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதும் உங்களுக்குத் தெரியும். என் மகளுக்கு இரட்டை குடியுரிமை இருப்பதனால் அங்கு சென்று வாழ பெரிதாக எந்தப் பிரச்சனையும் இருக்காது. அத்துடன் என் பிள்ளைகள் சரளமாகத் தமிழ் பேச எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள். அங்கு சென்று இருப்பதற்கு எப்பிரகுச்சனையுமில்லை. 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

நான் 2009ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற முன்றலுக்கு முன்னாலே தான் நின்டனான்.[பனங்காய்க்கு என்னை நல்லாய் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.].2010ம் ஆண்டு கட்டுநாயக்காவால் ஊருக்குப் போனேன்.போகைக்கு முதல் உன்ட படம் எல்லாம் அவங்களிட்ட இருக்கும் போகாதே என்று என்னை கணபேர் பயமுறுத்தினவை.என்னை ஒருத்தரும் பிடிக்கேல்லை.ஒரு வேளை நான் பணக்கார,பிரபல்யமான ஆள் இல்லையோ!

தங்கச்சி! பனங்காயை உங்கினேக்கை கண்டால் குமாரசாமியன் சுகம் கேட்டதாய் சொல்லிவிடவும்...

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசத்தில் முன்னுக்கு நிற்பவர்களிடம் இரட்டைக்குடியுரிமை இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ர மச்சான் ஒருத்தன் அண்மையில் திருமணம் முடித்து மனைவியுடன் கொழும்பில் இருக்கிறான்.முந்தி வெள்ளவத்தையில் இருந்தவன் இப்ப வீடு மாறி ஒரு சிங்கள பகுதிக்கு போய்ட்டான்.ஏனென்று கேட்டால் சுத்தி இருக்கும் தமிழ்சனம் அவ்வளவு கொசிப்பாம்.தான் வேலைக்குப் போன பிறகு வீட்டுக்கு யார் வாறாங்கள்,போறாங்கள் என்று விடுப்புப் பார்ப்பதும்/கேட்பதும் தான் வேலையாம்

இங்கு நான் விரும்பிய உடை உடுத்திறன்,எனது எது மனசுக்குப்படுதோ அதன் படியே நடக்கிறன்,கூடுமானவரை எனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்து,அதன் படி வாழ்கிறேன்.

ஊருக்குப் போனால் எனக்குப் பிடித்த மாதிரி வாழ முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MEERA said:

புலம்பெயர் தேசத்தில் முன்னுக்கு நிற்பவர்களிடம் இரட்டைக்குடியுரிமை இருக்கிறது.

பிரித்தானியா இதனால் தான் அகதி விசாவை இப்ப எல்லாம் பிச்சுப் பிச்சுக் கொடுக்குது. அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டால்.. 5 வருடம். அகதி அல்லாத ஆனால் மனிதாபிமான அடிப்படையில் 3 வருடம். இதற்கு மேலதிகமாக சில நெகிழ்வோடு 2007 க்கு முன் அகதிகளாக விண்ணப்பித்தவர்களுக்கு நீண்ட காலம் காத்திருப்போர்.. குடும்பமாக உள்ளோர் என்று கொடுக்கப்படுகிறது. இதுவும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு. பின்னர் இவர்களின் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டு.. குறிப்பாக அகதிகள் என்போர் சொறீலங்கா தூதரகத்தோடு வைக்கும் தொடர்புகளின் அடிப்படையில்.. அவர்களின் அகதிஅந்தஸ்து ஆபத்தைச் சந்திக்கலாம் என்று அமைகிறது. அதனால் எவருமே அங்காலப் பக்கம் போறதில்லை. 

இப்ப அகதிகளாக வந்த அநேகர் நிரந்தரவதிவுரிமை மற்றும் பிரஜா உரிமை பெற்றுவிட்டதால்.. சொறீலங்காவுக்கு போய் வருகினம். சிலர் இரட்டைப் பிரஜா உரிமையும் எடுக்கினம்.

கடந்த ஆண்டு ஆளும் கட்சி எம்பிக்கள் இதனை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டி இருந்தனர். இது தொடர்பில் அகதி விசாவில் இருந்து நிரந்தரவதிவுரிமை மற்றும்.. பிரஜா உரிமை பெற்றவர்கள்.. எந்த நாட்டுக்கு எதிராக.. அகதி அந்தஸ்துக் கோரினார்களோ அந்த  நாட்டுக்கு மீண்டும் செல்வது தொடர்பில் புதிய சட்டம் வந்தால்.. இரட்டைப் பிரஜா உரிமைக்காரர்களின் பிரிட்டன் பிரஜா உரிமை சட்டமூலம் ஊடாக ரத்தாக வாய்ப்பு வரலாம்.

இப்போது பெரும் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் இது நடைமுறையில் இருக்குது.  அவர்களின் அவர்களின் சந்ததிகளின் பிரிட்டன் பாஸ்போட் கிழிக்கப்பட்டு அவர்கள் பூர்வீக நாட்டுக்கு நாடுகடத்தப்பலாம்.

இதில்.. EEA (EU.. Swiss.. Norway) இல் இருந்து வருபவர்கள் சட்ட ஓட்டைகளுக்குள்ளால் பூந்து விளையாடித் திரியினம்.பிரிட்டன் தவிர்ந்த ஈ யு வில் இருந்து வரும் நம்மவர்களிடம் பிள்ளைகளுக்கு அந்த ஐரோப்பிய பிறப்புச் சான்றிதழும்.. சொறீலங்கா பிறப்புப் பதிவும் எடுத்து வைச்சிருக்கினம். குறிப்பாக அகதிகளாக வந்தோர். இவர்களுக்கு அகதிகள் பிரமானப்படி.. எப்படி இதைச் செய்ய ஈயு இடமளிக்குது என்று தெரியவில்லை. ஆனால் நடக்குது.

பிரிட்டன் ஈயுவில் இருந்து வெளில வந்தால்.. உந்த தில்லுமுல்லுக் கள்ளர் நாட்டை விட்டு ஓட வேண்டி வரும். இவை மட்டுமல்ல.. ஈயுவில் இருந்து வந்து.. 24 மணி நேரம் வேலை செய்வதாகக் காட்டிக் கொண்டு.. அல்லது குறைந்த வருமானத்தில் வியாபாரம் ஓடுது என்று காட்டிக் கொண்டு.. அரச சலுகைகள் எல்லாவற்றையும் அனுபவிப்பதோடு.. அரசுக்கு காட்டாமல்.. கூடிய நேரம் வேலை செய்கிறார்கள்..! இது அரசுக்கு தெரியும். ஆனால் அரசு ஈயு நடைமுறைக்குள் சட்டங்களை கடுமையாக்கி அமுலாக்க முடியாமல் உள்ளது. இவை எல்லாம் தான் பிரிட்டன் பூர்வீக மக்கள் ஈயு குடியேற்றக்காரர்களை வெறுக்க காரணமாகும். 

ஆரம்பத்தில்.. அகதி அந்தஸ்து என்பது எவ்வளவோ இலகுவாக இருந்தது. இன்று அது பெரும் போராட்டமாக மாறிவிட்டது ஐரோப்பா எங்கனும். இந்தக் குடியேற்றக்காரர்களின் சுத்துமாத்தால்.. எனி நிரந்தர வதிவுரிமைகள்.. மற்றும் பிரஜா உரிமைகளுக்கும் ஆப்பு வரலாம். tw_warning:tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,அவர் இங்க தான் எங்கேயாவது நிற்பார்[எனக்கு கோசான் தான் பனங்காயோ என்ட டவுட் இருக்குது.]

மீரா நீங்கள் என்னை சொல்லவில்லையென்டாலும் என்னிடம் இன்னும் இருப்பது இலங்கை கடவுச் சீட்டு மட்டும் தான் என சொல்லிக் கொள்கிறேன்

இங்கேயே பிறந்து வளர்ந்த என்ட சித்தியின்ட மகள் வாழ்க்கையில் ஓரே ஒரு தடவை குழந்தையாக இருக்கையில் போனதற்கு இந்த வருடம் ஹொலிடே போய்ட்டு வந்து தான் இனி மேல் அங்கேயே வேலை எடுத்துப் போகப் போறேன் என அடம் பிடிக்கத் தொடங்கிட்டாள்.தாய்,தகப்பன் விட மாட்டோம் என சொல்லி கட்டாயபடுத்தி வைச்சிருக்கினம்

23 minutes ago, nedukkalapoovan said:

இதில்.. EEA (EU.. Swiss.. Norway) இல் இருந்து வருபவர்கள் சட்ட ஓட்டைகளுக்குள்ளால் பூந்து விளையாடித் திரியினம்.பிரிட்டன் தவிர்ந்த ஈ யு வில் இருந்து வரும் நம்மவர்களிடம் பிள்ளைகளுக்கு அந்த ஐரோப்பிய பிறப்புச் சான்றிதழும்.. சொறீலங்கா பிறப்புப் பதிவும் எடுத்து வைச்சிருக்கினம். குறிப்பாக அகதிகளாக வந்தோர். இவர்களுக்கு அகதிகள் பிரமானப்படி.. எப்படி இதைச் செய்ய ஈயு இடமளிக்குது என்று தெரியவில்லை. ஆனால் நடக்குது.

அப்புறம்

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

நான் ஒரு திரியைத் தொடங்கிறான் எண்டால் காரணத்தோடதான் எண்டு விசயம் தெரிஞ்சவைக்கு விளங்கி இருக்கும்.  நான் போய் இருக்கப் போறான் எண்டு புலுடா விடவும் இல்லை. நீங்கள் வந்து சொன்ன உடன உங்களுக்குப் பயந்து இல்ல நான் போகப் போறான் எண்டு மாய்மாலம் விடவும் இல்லை. எனது மகள் மூன்று மாதம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும்  நின்றுவிட்டு வந்தாள். அவள் அங்கு நிற்கும்போது ஒவ்வொருநாளும் ஆவலுடன் தொலைபெசியில் கதைத்த பின்னர் தான் நின்மதியானது. அம்மா நீங்கள் வெளிக்கிட்டு வாங்கோ என்று அவள் கேட்டும் நான் மறுத்துவிட்டேன். முதலில் நீ இங்கே வா பிறகு யோசிப்போம் என்று கூறிவிட்டேன். அவளுக்கு எமது ஊர் மக்கள் எல்லாம் பிடித்துவிட்டது. ஒரு மாதத்தில் மீண்டும் போகபோகிறேன் என்றவளை நான் தான் தடுத்து நிறுத்தினேன். அவள் படித்தது Humanrights Master. அது தொடர்பாக இலங்கையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் அங்கேயே போகப் போகிறேன் என்றாள். நானும் மறுக்க விரும்பாமல் சம்மதித்தேன். அடுத்த ஆண்டு நானும் போய்ய் பார்க்கப் போகிறேன் நிலைமை எப்படி இருக்கிறது என. என் மகளைப் பார்த்து வேறு ஒருபிள்ளையும் தானும் வந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளாள். எமது தலைமுறையினருக்கு அங்கு போய் இருக்கும் துணிவு இருக்காதுதான். ஆனால் இங்கு பிறந்த பிள்ளைகள் துணிவும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள். அவர்களை ஏன் நாம் தடுக்கவேண்டும் ?? ஆனாலும் என் துணிவின் காரணமும் ஒன்று இருக்கிறது. விதி எதுவோ அதுதான் வாழ்க்கை என்பதும் இங்கத்தைய வதிவிட உரிமை உள்ளவர்கள் மீண்டும் ஏதும் பிரச்சனைகள் என்றால் இங்கு வந்துவிட முடியும் என்பதும் மனதுக்குத் தெம்பாக இருக்கிறது.

யேர்மனியில் வாழும் துருக்கி இனத்தவர் ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன தமது நாட்டில் சென்றே திருமணம் செய்வர். அது அவர்களது இனம் யேர்மனியில் பெருகக் காரணாம். ஆனால் இங்கு பிறந்து வளர்ந்த எம்மவர்கள் இங்கு பிறந்தவர்களைத் தான் திருமணம் செய்யவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதும் உங்களுக்குத் தெரியும். என் மகளுக்கு இரட்டை குடியுரிமை இருப்பதனால் அங்கு சென்று வாழ பெரிதாக எந்தப் பிரச்சனையும் இருக்காது. அத்துடன் என் பிள்ளைகள் சரளமாகத் தமிழ் பேச எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள். அங்கு சென்று இருப்பதற்கு எப்பிரகுச்சனையுமில்லை. 

----------

 

உங்களுக்குமுடியுது, இங்குளெதுபவர்களைப்பார்த்தீர்களா, எவ்வளவுதிமிரும், சந்தர்ப்பவாதமும் .. இயற்கையாகயெல்லாம் நடக்கட்டும்-நடக்கும். உங்களைபோன்றோர் நிறையச்செய்யலாம், ஏதாவது செய்வதைப்பற்றிக்கதைப்போம், செய்வோம் தூரநோக்குடன், சிங்களமக்களையுமன்புடன் இனைத்து, இங்குள்ளமேலாதிக்க (இனவெறி) இனத்தவருடன் பார்த்தால் சிங்ளவர்கள் மேல், அவர்களுக்கு எங்கள்மேல் உள்ள மதிப்பையும் மரியாதையும் எங்கள் திமிரும் எங்களுக்தான் தெரியும் (மேற்கத்தியருடன் சேர்ந்துகொண்டு) குறைத்துவிட்டிருக்கிறது. இதன்விளைவுதான் எமதுயிலைஞ்சர்களின் வெறியாட்டம், வெளிநாட்டு தமிழர்கள் மேலுள்ள காழ்ப்புணர்ச்சி, எங்கள் பக்கமே திரும்பியிருக்கிறது, காசு அனுப்பியும்.

 

 

 

 

 

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்

The European Economic Area (EEA) provides for the free movement of persons, goods, services and capital within the internal market of the European Union (EU) between its 28 member states, as well as three of the four member states of the European Free Trade Association (EFTA): Iceland, Liechtenstein and Norway.

 European Economic Area

250px-European_Economic_Area_members.svg

https://en.wikipedia.org/wiki/European_Economic_Area

EEA பற்றிய விளக்கம் *****************tw_blush:tw_warning:

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக விளக்கம் தலைப்புக்கு அவசியமில்லை என்றே கருதுகிறோம். இருந்தாலும் ************...நோர்வே என்பது சிலரின் தாயகம் அல்ல. அது ஒரு EEA குழும நாடு. சுவிஸ் என்பதும் சிலரின் தாயகம் அல்ல. அது முன்னாள் EEA நாடு. இப்போதும் சில மட்டுப்படுத்திய தொடர்புகளைப் பேணி வரும் நாடு. அதனால்.. ஈயு  நாடுகளுக்கும் ஈயு அல்லாத சில ஐரோப்பிய நாடுகளுக்கும்.. EEA இன் கீழ் குடிவரவு குடியகழ்வுக் கோட்பாடுகளை பிரிட்டன் கையாளுகிறது. சுவிஸ்... ஈஈஏ நடைமுறையின் கீழ் கையாளப்பட்டாலும்.. அது அந்த அங்கத்துவத்தில் தற்போது இல்லாத போதும்.. குடிவரவு குடியகழ்வு விடயங்களில்.... சுவிஸ் ஈஈஏ நாடுகளோடு இணைத்துப் பார்க்கப்படும். tw_blush:tw_warning:

சிலருக்கு அருண்டதெல்லாம் பேய். tw_blush:

Edited by நியானி
தணிக்கை

உங்கள்கருத்தை எழுதுங்கோ, மற்றவர்களின் அறிவிலோ அல்லது ஒன்று தெரியாமல் இருப்பதைவைத்து சவாரிசெய்வதை நிறுத்துங்கள்

Edited by Knowthyself

20 minutes ago, nedukkalapoovan said:

சிலருக்கு அருண்டதெல்லாம் பேய். tw_blush:

 

இங்கு EU, EEC, EEA வேறுபாடுகளை புரிந்து எழுதினால் உங்கள் அன்பு பேய் இங்கு ஏன் வரப் போகுது. 

 

9 minutes ago, Knowthyself said:

உங்கள் கருத்தை எழுதுங்கோ, மற்றவர்களின் அறிவிலோ அல்லது ஒன்று தெரியாமல் இருப்பதை வைத்து சவாரி செய்வதை நிறுத்துங்கள்

தப்புத்தான் நிறுத்திடுறேன் 

இது எனக்கு எழுதியதாக இருந்தால் 

Edited by ஜீவன் சிவா

16 minutes ago, ஜீவன் சிவா said:

 

இங்கு EU, EEC, EEA வேறுபாடுகளை புரிந்து எழுதினால் உங்கள் அன்பு பேய் இங்கு ஏன் வரப் போகுது. 

 

தப்புத்தான் நிறுத்திடுறேன் 

இது எனக்கு எழுதியதாக இருந்தால் 

 

நன்பா, உங்களுக்கு எழுதவில்லை

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து யாழில் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வாழும் பிள்ளைகள் எழுதுவதில்லை. எனவே சுமோ இந்த கேள்வியை அவர்களை நோக்கி எழுப்பவில்லை என நினைக்கிறேன். 

மேலும் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளை இலங்கைக்கு போகுதாம் எரித்திரியாவிற்கு போகுதாம் என்பது ஒரு விடயமே அல்ல. அப்படி போறவர்கள் நாளை ஒரு பிரச்சனை என்றவுடன் றிட்டேண்.

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா ? 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Knowthyself said:

உங்கள்கருத்தை எழுதுங்கோ, மற்றவர்களின் அறிவிலோ அல்லது ஒன்று தெரியாமல் இருப்பதைவைத்து சவாரிசெய்வதை நிறுத்துங்கள்

கருத்தை முதலில் வாசிச்சு விளங்குங்கோ. அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது. அதுதான் இங்கு சிலரால் நிகழ்த்தப்படுகிறது.

உங்களை இந்தப் பெயரில் ஏவிவிட்டுள்ள.. உங்கள் நண்பர்களிடம் சொல்லி வையுங்கள். மேலும்.. நிறுத்து.. போ வா.. என்று சொல்லுறதை இங்கு நிறுத்தினால் நல்லது. சவாரி செய்யதாக வகைக்கு அப்படியான இடங்களில் உங்கள் அறிவின் பால்.. பதிலை கூடிய விளக்கத்துடன் எழுதலாமே.tw_blush: 

 

28 minutes ago, ஜீவன் சிவா said:

 

இங்கு EU, EEC, EEA வேறுபாடுகளை புரிந்து எழுதினால் உங்கள் அன்பு பேய் இங்கு ஏன் வரப் போகுது. 

உங்களுக்கு தமிழ்மொழி மற்றும் நடைமுறை.. பிரித்தானிய விடயங்களில் கருத்தை உணரும் தன்மை குறைவு என்றே நினைக்கிறேன். இல்ல கருத்தெழுதுபவர்களின் பால் கடுப்பில்.. எழுதுகிறீர்கள் என்றே நினைக்கின்றேன். tw_blush:

Edited by nedukkalapoovan

10 minutes ago, MEERA said:

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா ? 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா

ஆம் எமது சந்ததியில் சிலர் 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

நிச்சயமாக இல்லை

44 minutes ago, nedukkalapoovan said:

கருத்தை முதலில் வாசிச்சு விளங்குங்கோ. அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது. அதுதான் இங்கு சிலரால் நிகழ்த்தப்படுகிறது.

உங்களை இந்தப் பெயரில் ஏவிவிட்டுள்ள.. உங்கள் நண்பர்களிடம் சொல்லி வையுங்கள். மேலும்.. நிறுத்து.. போ வா.. என்று சொல்லுறதை இங்கு நிறுத்தினால் நல்லது. சவாரி செய்யதாக வகைக்கு அப்படியான இடங்களில் உங்கள் அறிவின் பால்.. பதிலை கூடிய விளக்கத்துடன் எழுதலாமே.tw_blush: 

 

நிறுத்து.. போ வா.. என்று ஒருமையில் சொல்லவில்லையே?

[அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது]

[ உங்களுக்கு தமிழ்மொழி மற்றும் நடைமுறை.. பிரித்தானிய விடயங்களில் கருத்தை உணரும் தன்மை குறைவு என்றே நினைக்கிறேன். இல்ல கருத்தெழுதுபவர்களின் பால் கடுப்பில்.. ]

இப்படி சொல்வது அழகல்ல

[உங்களை இந்தப் பெயரில் ஏவிவிட்டுள்ள.. உங்கள் நண்பர்களிடம் சொல்லி வையுங்கள்.]

இது என்னை தாக்குவது, இதுதான் தேவையில்லையென்றுசொல்கிறேன்

https://www.google.ca/search?q=vadivelu+comedy&biw=1292&bih=675&tbm=isch&imgil=UrwksWKlPl8r9M%253A%253B2MeOmHti5gHKPM%253Bhttp%25253A%25252F%25252Fthemaduraicity.com%25252Fvadivelu-facebook-images.html&source=iu&pf=m&fir=UrwksWKlPl8r9M%253A%252C2MeOmHti5gHKPM%252C_&usg=__6Wx6dKgWJdUjZN0gbFhojdEH4YI%3D&ved=0ahUKEwjj7s7f04zMAhUQ7GMKHQ3NDmsQyjcIMQ&ei=_8YOV6PzDJDYjwONmrvYBg#imgrc=SVZxd8IptkhNQM%3A

நான் என்னச்சொன்னேன்

 

 

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் கேள்விக்கு விடை இல்லை என்பது தானே ஜீவன். 

தாயகம் திரும்பும் ஒரு சிலரும் ஏதோ ஒரு காரணத்திற்காக இலங்கையை விட்டு வெளியேறுவதற்கான Emergency Exit யையும் வைத்துக் கொண்டே திரும்புகின்றனர்.

இங்கு ஆளுக்கு ஆள் Emergency Exit இக்கான காரணம் வேறுபடுவதை தவிர வேறொன்றும் இல்லை. 

1 hour ago, nedukkalapoovan said:

அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது. அதுதான் இங்கு சிலரால் நிகழ்த்தப்படுகிறது.

:grin:

56 minutes ago, MEERA said:

இந்த திரியின் கேள்விக்கு விடை இல்லை என்பது தானே ஜீவன். 

யாருக்காவது-ஆசை-இருக்கா 

என்பதுதான்  கேள்வி அதற்கு விடை ஆம் என்பதே 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.