Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் அப்படி கூறவில்லை..! சீமான் சொல்வது இதுதான்

Featured Replies

நான் அப்படி கூறவில்லை..! சீமான் சொல்வது இதுதான்

seeman2a.jpg


தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு அவர்களுடன் இணைவதாக கூறவில்லை. கம்யூனிஸ்டு கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று காட்டுவோம் என்றுதான் கூறினேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 4½ லட்சம் வாக்குகளை பெற்றது. இந்த 4½ லட்சம் வாக்குகளும் தமிழகத்தில் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்காக கிடைத்த வாக்குகளாகும். இதை ஒரு தொடக்கமாக வைத்துக்கொண்டு 2021-ல் நல்லாட்சி அமைக்க பாடுபடுவோம். இந்த 5 ஆண்டு காலத்தை எங்கள் களமாக மாற்றுவோம். சட்டமன்ற தேர்தலை போலவே நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.

தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு அவர்களுடன் இணைவதாக கூறவில்லை. கம்யூனிஸ்டு கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று காட்டுவோம் என்றுதான் கூறினேன். அதேபோல அவர்கள் பெற்ற வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி 1.1 சதவீத வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் மக்கள் அ.தி.மு.க., தி.மு.க.வை மட்டும் தான் மாற்று கட்சிகளாக நினைக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது என்பது தவறு. தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தவர்கள் ஆளுங்கட்சி ஆகிவிட்டார்கள். ரூ.500 கொடுத்தவர்கள் எதிர்க்கட்சி ஆகிவிட்டார்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதா பெற்றது வெற்றியல்ல. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பெற்றது தான் உண்மையான வெற்றியாகும். சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. வாக்குச் சாவடி முன்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வீடியோ ஆதாரம் என்னிடம் கூட உள்ளது.

ராஜீவ் கொலையாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் 173-வது பிரிவு என்ற தமிழக அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவேன் என்று கூறுவதை நிறைவேற்ற மாட்டார். 5 முறை முதலமைச்சராக இருந்தபோது இதை நிறைவேற்றாதது ஏன்? இந்த வாக்குறுதியை மட்டுமல்ல, மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்ற வாக்குறுதி உட்பட எதையும் நிறைவேற்ற போவதில்லை.

தமிழகத்தில் வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக்குகளில் அரசியல் கட்சி தலைவர்களை கிண்டல் செய்து பரப்பப்பட்டு அவர்களது செல்வாக்கை சரிக்கும் செய்திகளுக்கு பின்னணியில் இருப்பவர்கள் பற்றி தெரியாது. அதுகுறித்து கவலைப்படுபவர்களுக்கு தான் பிரச்னை. நான் கவலைப்படுவது இல்லை" என கூறியுள்ளார்.
 

http://www.vikatan.com/news/politics/64887-only-said-we-will-get-more-votes-than-communists.art

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி மாத்திப் போடு அரிவாள

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமான் சொல்வது உண்மையே. 

அருணனைப் பார்த்து உங்களை விட ஒரு வாக்காவது வாங்கிக் காட்டுகிறேன் என்று தான் கூறி இருந்தார். மக்கள் நலக் கூட்டணின்னு ஒட்டுமொத்தமாகக் கருதி.. அங்கு பேசப்படவில்ல. அங்கு அன்று நடந்த சம்பாசணையில் கூட அருணன் கட்சி பற்றி தான் சீமான் விமர்சனமும் வைத்தார். மக்கள் நலக் கூட்டணின்னு சொல்லப்பட்டிருந்தாலும் கூட அங்கு அது அருணனின் கட்சியையே தான் சொல்லி நிற்கும். அதுதானே யதார்த்தம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் மீதிருந்த கடைசித் துளி நம்பிக்கையும் அம்பேல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

அப்படி மாத்திப் போடு அரிவாள

கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாத்திப்போடாத அருவாள்களா???? அதெல்லாம் கண்ணிலையும் படாது...காதிலையும் விளாது. எவன் ஈழத்தமிழனுக்கு சார்பாக கதைக்கிறானோ அவனை உரிச்சு எடுக்கிறதுதான் நம்ம வேலை :cool:

:grin:

 

இந்த லூசு கூட்டம் பேசுறத எல்லாம் யாரது சீரியஸா எடுத்தது !

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் அல்ல லூசுக் கூட்டம்.. ஒரு அரசியல் பேச்சின் பொருள்.. இடம்.. காலம்.. காரணம்.. காரியம்.. ஏவல்.. தொக்குத்.. தொனி.. ஆகுபெயர்.. சீண்டல் சிலேடை புரியாமல்.. அதில்.. குறைபிடிக்க காவிக் கொண்டு திரிவது தான் லூசுத் தனத்திலும் லூசுத் தனம்.

இதே காலையில் ஒன்று மாலையில் ஒன்றாக கருணாநிதி.. ஜெயலலிதா.. ஏன் நம்ம சம் சும் கும்பல் பேசினால்..

2016 இல் அதிசயம் நிகழும் என்றார்கள் 2015 இல் தேர்தலின் போது. இப்ப 2016 நடுவில் வந்து நின்று கொண்டு அது என் சொந்தக் கருத்து.. சும்மா சொல்லிப் பார்த்தன் என்ற லூசுத்தனத்தைக் காட்டிலும்.. சீமான் பேச்சில் லூசுத்தனமுள்ளதாகத் தெரியவில்லை.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொன்னது சரிதான்.

ஆனால், இவர் சொன்ன பின்னாடி தான், ம.ந. கூ யுடன் கப்டன் கட்சியும், வாசன் கட்சியும் இணைந்தன.

ஆகவே இவர் சொன்ன சவாலை அப்படியே எடுக்க முடியாதே.

ஒருமுறை கட்டுமரம், அரசியல் அமைப்பு சட்ட எரிப்பு போராட்டம் நடத்தினார்.

உயர் மரியாதைக்குரிய அரசியல் அமைப்பு சட்ட நகல்கள் எரித்தது, தேச துரோக சங்கதி என்று வழக்கு போட்டு நீதிமன்றில் நிறுத்தினார்கள்.

ஐயா, நாங்க எரித்தது பழைய காகிதக் கட்டு. அதை எப்படி அரசியல் அமைப்பு சட்ட நகல்கள் என்று சொல்ல முடியும் என்று அரிவாளை மாத்தி போட்டு, தப்பி விட்டார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத நிலையில் தான் இங்கு பலர் இருக்கினம்...ஒரு கதைக்கு சீமான் பதவியில் இருந்து கொண்டு ஊழல் செய்து பிடிபட்டாலும் ஜெ ஊழல் செய்யலாம்,கருணாநிதி செய்யலாம்.தமிழன் சீமான் செய்தால் என்ன தப்பு என்று கேட்பார்கள்...கோபாவேசத்தில் தெரியாத் தனமாக சொல்லி விட்டேன்.மன்னித்து விடுங்கள் என்டால் மக்கள் மன்னித்து மறந்து விடப் போறார்கள்...அந்தக் கட்சி சேர முன்னர் சொன்னது,இந்த கட்சி சேர முன்னர் சொன்னது என்று நாமுவின் கருத்து வேற செம கொமடி.அவங்கள் சேர்ந்திருக்காட்டில் இவர்கள் என்னவோ கிழித்திருப்பினமாக்கும்.

பி;கு; கப்டன் கட்சி சேராட்டிலும் வாக்கு எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் அவர்களது மக்கள் நலக் கூட்டனி தான் சீமானை விட முன்னுக்கு நிற்பதாக கோசான் எழுதினதாக ஞாபகம்.

  • தொடங்கியவர்
3 minutes ago, ரதி said:



பி;கு; கப்டன் கட்சி சேராட்டிலும் வாக்கு எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் அவர்களது மக்கள் நலக் கூட்டனி தான் சீமானை விட முன்னுக்கு நிற்பதாக கோசான் எழுதினதாக ஞாபகம்.

Elec3.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு சிலிப்பில ம்.ந.கூ என்று சொல்லிட்டாறப்பா.

ஆனால், சவால் யாருக்கு விட்டாரோ, அந்த CPM (0.7%) லும் பார்க்க கூட வாங்கி இருக்கிறாரே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீலங்காவில் அடுத்தவருச தைப்பொங்கல் தமிழீழத்தில் தான் என்று கூக்குரலிட்டு வெற்றிவாகை சூடியவர்கள் 30வருடங்களுக்கு மேலாக அரிவாளை மாத்தி மாத்தி போட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அதை கேட்க வக்கில்லை.....தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் சீமான் இவர்களுக்கு கண்ணுக்கை குத்துதாக்கும். வந்திட்டாவு...வந்திட்டாரு கதைக்க கதை சொள்ள :cool:

25 minutes ago, குமாரசாமி said:

ஸ்ரீலங்காவில் அடுத்தவருச தைப்பொங்கல் தமிழீழத்தில் தான் என்று கூக்குரலிட்டு வெற்றிவாகை சூடியவர்கள் 30வருடங்களுக்கு மேலாக அரிவாளை மாத்தி மாத்தி போட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அதை கேட்க வக்கில்லை.....

இப்படியான கோசம் போடுகின்றவர்களை நம்பி போராட ஆரம்பித்து கடைசியில் என்ன நிலமை ஆனது என்று கண்கூடாக பார்த்த பின் தான் தமிழக மக்களை இப்படியான வெற்றுக் கோசம் போட்டு வயிறும் பதவியும் வளர்க்கும் ஆட்களை எம்மைப் போல நம்பிக் கெட வேண்டாம் என்று அறிவுரை கூறும் நல்ல எண்ணெமும் சீமானை விமர்சிப்பவர்களுக்கு இருக்கலாம் தானே கு.சா அண்ணா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் தமிழர் பிரதேசங்களிலும் / தமிழகத்திலும் 50/60 வருடகாலமாக பொய் பிரட்டுக்களை வாரி  வழங்கிக்கொண்டிருக்கும் அரசியல் வள்ளல்களை தொடர்ந்து அரியாசனத்தில் வைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். 
பழகி விட்டதல்லவா!!!!tw_tounge_xd:
ஆனால் ஒரு முறை ஆட்சியை தந்து பாருங்கள் என்பவர்களிடம் வீட்டுக்கணக்கும் வட்டிக்கணக்கும் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். :)

ஹா  ஹா  ஹா  இவ்வளவு  அள்ளி  விட்ட  புழுகையே  நம்பிகள்  தம்பிகள்  இது  எல்லாம்  ஒரு  பிரச்சினையா  போங்க .

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள செய்தியின்படி சீமான் சொல்லியிருந்தால் அது தவறுதான். மக்கள் நலக் கூட்டணியை விட அதிகமாக ஒரு வாக்கு என்றாலும் வாங்குவேன் என்றுதான் சொன்னதாக ஞாபகம்.

ஆனாலும் அவர் சொன்னபோது மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்தும், தமாகாவும் சேர்ந்திருக்கவில்லை. விஜயகாந்தின் தேமுதிக கட்சி 2006 தேர்தலில் தனித்து நின்று 8%க்கும் மேல் வாங்கிய கட்சி. இப்போது தனிப்பட்டு அதன் பலம் என்னவென்று தெரிய வாய்ப்பில்லை. இந்த நிலையில், மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்து எல்லோருமாக (ம.ந.கூ + தேமுதிக + தமாகா) ஐந்து வீதத்திற்கு அதிகமாக வாக்குகளை வாங்கியுள்ளார்கள். இதில் 232 தொகுதிகளிலும் விஜயகாந்த கட்சி பெற்றுத்தந்த வாக்குகளே அதிகம் என்பது வெள்ளிடை மலை (2006 அனுபவத்தின் அடிப்படையில்). ஆகவே தற்போது மக்கள் நலக் கூட்டணியின் நான்கு கட்சிகளும் பெற்ற வாக்குகளில் விஜயகாந்தின் கட்சி பெற்றுத் தந்த வாக்குகளே கணிசமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதில் இருந்து மக்கள் நலக் கூட்டணி மட்டும் தனியாக வாங்கிய வாக்குகள் என்பதைப் பிரித்துப் பார்க்க முடியாது. ஆகவே சீமான் சொன்ன விடயமானது மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக மற்றும் தமாகா கூட்டணி வைத்த நாட்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. :D:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசில தமிழ்விசுவாசிகள் நூற்றாண்டுகாலமாக உலக்கை போறதை விட்டுட்டு ஊசி போறதை கண்ணும்கருத்துமாய் கவனிச்சுக்கொண்டிருக்கினம். அரிசியல் அவிதானிகளாம்  BabyTaunt

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட தமிழ் ஆட்களுக்கு யாரையாவது பின் தொடர வேண்டும்,துதி பாட வேண்டும். ஆரம்பத்தில் கூட்டனி இருக்கும் போது அதனை பின் தொடர்ந்தார்கள். அவர்களால் ஒரு பிரயோசனம் இல்லை என்டானவுடன் புலிகளுக்கு பின்னால் போனார்கள். அவர்கள் அழித்து ஒழிக்கப்பட்ட பின் சீமானுக்கு பின்னால் போகிறார்கள்...இன்னும் கொஞ்ச காலத்தில் சீமானின் முகத்திரை தானாகக் கிழிந்த பின் யார் பின்னால் போவார்களோ?...எப்பவும் ஒரு மேய்ப்பன் இருந்து கொண்டு தங்களை மேய்ந்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறார்களோ தெரியவில்லை?

அரசியலில் யார்,யாரோடு கூட்டு வைப்பார்கள் என்று தெரியாது,அப்படி இருக்கும் போது அவசரப்பட்டு சீமான், நான் இவரை விட அதிகம் வோட் வாங்கிக் காட்டுவேன் என்று சொன்னது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுது...துரதிஸ்டவசமாக உணர்ச்சி அரசியல் பேசுகின்றவர்களைத் தான் தமிழருக்கு பிடித்திருக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.