Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாணவிகள் ஐவர் துஷ்பிரயோகம்: பாடசாலையில் பதற்றம்

Featured Replies

மாணவிகள் ஐவர் துஷ்பிரயோகம்: பாடசாலையில் பதற்றம்
 

article_1466566430-Arpaattam.jpg- சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை (22) மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் பதற்றம் நிலவுகின்றது.

இதனையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

- See more at: http://www.tamilmirror.lk/175260/ம-ணவ-கள-ஐவர-த-ஷ-ப-ரய-கம-ப-டச-ல-ய-ல-பதற-றம-#sthash.vQuUn0Hh.dpuf

யாழில்.உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளை துஸ்பிரோயகத்திற்கு ஆசிரியர் ஒருவர் உட்படுத்தினார் எனவும், அது குறித்து பாடசாலை அதிபரிடம் முறையிட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பொலிஸார் பாடசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டமையால் பதட்டம் ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட ஆசிரியரையும், அதிபரையும்,தாம் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்போம் என மாணவர்களுக்கு பொலிஸார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இதுவரை ஆசிரியரையோ அதிபரையோ பொலிஸார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133347/language/ta-IN/article.aspx

ஐந்து மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்! ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு

 

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஐந்து மாணவியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த பாலியல் சேட்டையை கண்டித்து பாடசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள் ஒன்றுதிரண்டு நேற்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
யாழ்.நகரை அண்மித்த பாடசாலையில் தரம் ஏழில் கல்வி கற்று வரும் மாணவியர் ஐவருக்கு குறித்த பாடசாலையில் விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஐம்பத்து ஐந்து வயதுடைய ஆசிரியர் ஒருவர் கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக பாலியல் துன்புறுத்தல்களை வழங்கி வந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்துக்கு பலமுறை தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பாடசாலையை முற்றுகையிட்ட மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எதிர்ப்பை வெளி யிட்டுள்ளனர். இதனால் நேற்றைய தினம் அங்கு பதற்றம் காணப்பட்டது. 

எனினும் குறித்த ஆசிரியர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்ற உறுதிமொழியை அடுத்து பாடசாலை மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து யாழ்.பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவிடம் கேட்டபோது, குறித்த சம்பவம் தொடர்பில் அவ்வாறு யாரும்  சரணடையவில்லை எனத் தெரிவித்தனர்.

எனினும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சில மாணவிகளின் பெற்றோர்கள் யாழ்.பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவில் நேற்று மாலை முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குறித்த ஆசிரியர் மற்றும் சம்பவத்தை மறைக்க முயன்ற அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என தெரியவருகின்றது.        

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10611&ctype=news

  • தொடங்கியவர்

மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொண்ட ஆசிரியர் கைது ; அதிபர் தலைமறைவு (காணொளி இணைப்பு )

 

( விரூஷன் )

யாழ். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பெரியபுலம் மகாவித்தியாலய மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும்  ஆசிரியரை யாழ்ப்பாண பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

school.jpg

சம்பவத்தை மூடி மறைத்த பாடசாலை அதிபர் தலைமறைவாகியுள்ளார்.

 

மாணவிகள் மீது ஆசிரியர் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டபோதும், அதிபர் அதனை மூடி மறைக்க முயன்றதாக பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் தெரிவித்து இன்று காலை பாடசாலைக்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்றும், சம்பவத்தை மூடி மறைத்த அதிபரை பதவிநீக்கம் செய்யவேண்டுமெனவும் அதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு ஆசிரியரை கைதுசெய்யக்கோரியும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில், மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் ஆசிரியரை யாழ்ப்பாண பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் தலைமறைவாகியுள்ள அதிபரைத் தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மற்றைய ஆசரியரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/7945

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு பாலியல் கல்வி போதிப்பதைவிட இப்ப ஆசிரியர்கள் என்ற போர்வையில் இருக்கும் மிருகங்களுக்கு தான் பாலியல் கல்வி போதிக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

வரணி முடிஞ்சு.. இப்ப பெரியபுலம்.. 

இப்படியான ஆசிரியர்களுக்கு நிரந்தரப் பணி நீக்கமும்.. வேறு இடங்களில் சிறுவர் சிறுமிகளோடு.. பெண்களோடு வேலை செய்யத் தடையும் கொண்டு வர வேண்டும்.

ஒரு உன்னத போராட்டத்தை முன்னெடுத்த சமூகத்தின் பிரதிநிதிகளா இவர்கள் என்று நினைக்கிறப்போ.. எமது சமூகத்தில் சிலது... கடும்  தண்டனைகளுக்கு மட்டும்.. பயந்து நடித்து வாழ்ந்திருக்குது. இப்ப அது இல்லை என்றவுடன் தலைகால் புரியாத ஆட்டம் ஆடினம் எல்லாரும். tw_angry:

மக்கள் போய் முறையிடுவது.. பாலியலை வன்முறையை ஒரு ஆயுதமாகப் பாவித்த சிங்கள இராணுவ.. பொலிஸ் கட்டமைப்பிடம் எனும் போது எப்படி நீதி கிடைக்கும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

வரணி முடிஞ்சு.. இப்ப பெரியபுலம்.. 

இப்படியான ஆசிரியர்களுக்கு நிரந்தரப் பணி நீக்கமும்.. வேறு இடங்களில் சிறுவர் சிறுமிகளோடு.. பெண்களோடு வேலை செய்யத் தடையும் கொண்டு வர வேண்டும்.

ஒரு உன்னத போராட்டத்தை முன்னெடுத்த சமூகத்தின் பிரதிநிதிகளா இவர்கள் என்று நினைக்கிறப்போ.. எமது சமூகத்தில் சிலது... கடும்  தண்டனைகளுக்கு மட்டும்.. பயந்து நடித்து வாழ்ந்திருக்குது. இப்ப அது இல்லை என்றவுடன் தலைகால் புரியாத ஆட்டம் ஆடினம் எல்லாரும். tw_angry:

மக்கள் போய் முறையிடுவது.. பாலியலை வன்முறையை ஒரு ஆயுதமாகப் பாவித்த சிங்கள இராணுவ.. பொலிஸ் கட்டமைப்பிடம் எனும் போது எப்படி நீதி கிடைக்கும். :rolleyes:

நீதவான் இளஞ்செழியன் மண்ணின் மைந்தன் தானே

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

நீதவான் இளஞ்செழியன் மண்ணின் மைந்தன் தானே

அவர் மட்டும் மண்ணின் மைந்தரா இருந்து என்ன பிரயோசனம். அவருக்கு எடுபிடியா இருப்பது.. சிங்கள பொலிஸும் இராணுவமும் ஆச்சே. அது எல்லாம் அடுத்த மண்ணின் மைந்தர்கள் ஆச்சே.

அதிலும் ஒரு குற்றச்சாட்டை விசாரிக்கிற  மாதிரியைப் பாருங்க.. கேற்றுக்கு மேலால.. குசலம் விசாரிக்கிறாப் போல.. விசாரிக்குது சொறீலங்கா பொலிஸ். இது எல்லாம் குற்றத்தை தடுக்குமா கூட்டுமா..?! :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதவியும் செல்வாக்குமிருந்தால் எதுவும் செய்யலாம். இதுதான் உலகம். :(

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

அவர் மட்டும் மண்ணின் மைந்தரா இருந்து என்ன பிரயோசனம். அவருக்கு எடுபிடியா இருப்பது.. சிங்கள பொலிஸும் இராணுவமும் ஆச்சே. அது எல்லாம் அடுத்த மண்ணின் மைந்தர்கள் ஆச்சே.

அதிலும் ஒரு குற்றச்சாட்டை விசாரிக்கிற  மாதிரியைப் பாருங்க.. கேற்றுக்கு மேலால.. குசலம் விசாரிக்கிறாப் போல.. விசாரிக்குது சொறீலங்கா பொலிஸ். இது எல்லாம் குற்றத்தை தடுக்குமா கூட்டுமா..?! :rolleyes:tw_angry:

அடுத்த மண்ணின் மைந்தர்களில் சிலர் நீதியை நிலை நாட்ட முயற்சிப்பார்கள் .....என எண்ணுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

மாணவர்களுக்கு பாலியல் கல்வி போதிப்பதைவிட இப்ப ஆசிரியர்கள் என்ற போர்வையில் இருக்கும் மிருகங்களுக்கு தான் பாலியல் கல்வி போதிக்க வேண்டும் 

உலக வரலாறுகளைப்பார்த்தால் போருக்கு பின்னர் தான் புரட்சிகளும் பெரும் மாற்றங்களையும் பலமான மனிதாபிமானச்சட்டங்களையும் அவை கண்டுள்ளன. எனவே இவைகளை கடந்து புதிய சட்டங்கள் புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வரணும். நடைமுறைப்படுத்தணும். அதற்கு மக்கள்மீதும்  தேசத்தின் மீதும் பற்றுக்கொண்ட தலைவர்கள் வரணும். அது இல்லாதுதொடர்ந்து பழைய சட்டங்களையும் குரு மதிப்பையும் வைத்துக்கொண்டு திரிந்தால் வேலிகளே பயிரை மேய்வதை......???

இந்த கட்டாக்காலி ஆசிரியர்கள் சிலர் யுத்தம் மும்மரமாக நடைபெற்ற காலங்களில் ஒட்டுக்குழுக்களின் தயவில் வேலைகளுக்கு சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

இவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்வதுடன், விசாரணைகளின் பின்னர் இவர்களுக்கு கடுமையான சிறைத் தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். இந்தக் கயவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் அதில் இருந்து பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.   

அநீதியை எதிர்த்து போராடும் மாணவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். இவர்களுக்கு நாம் எப்போதும் துணையாக இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

உலக வரலாறுகளைப்பார்த்தால் போருக்கு பின்னர் தான் புரட்சிகளும் பெரும் மாற்றங்களையும் பலமான மனிதாபிமானச்சட்டங்களையும் அவை கண்டுள்ளன. எனவே இவைகளை கடந்து புதிய சட்டங்கள் புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வரணும். நடைமுறைப்படுத்தணும். அதற்கு மக்கள்மீதும்  தேசத்தின் மீதும் பற்றுக்கொண்ட தலைவர்கள் வரணும். அது இல்லாதுதொடர்ந்து பழைய சட்டங்களையும் குரு மதிப்பையும் வைத்துக்கொண்டு திரிந்தால் வேலிகளே பயிரை மேய்வதை......???

அதுவும் சரிதான்

இரண்டு நாட்கள் முன்பு நிந்தவூர் என்ற பிரதேசத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சென்ற சிறுமியை துஸ்பிரயோகம் செய்த வைத்தியர் அப்பிரதேசத்தில் மிகவும் பிரபலமான முஸ்லிம் வைத்தியர் இப்படியும் இருக்குறார்கள்  இப்ப மருத்துவர் மட்டு சிறையில் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.