Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அது முதல் கணவன்.. இது இரண்டாவது புருஷன்'

Featured Replies


 
 

article_1466584407-1111.jpg-எம்.றொசாந்த்

இரண்டு கணவர்களிடமிருந்தும் தாபரிப்புப் பணம் பெற்று வந்த பெண்ணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று புதன்கிழமை (22) அடையாளம் கண்டுகொண்டார்.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரிடமிருந்து தாபரிப்புப் பணம் பெறுவதற்காக நீதிமன்றத்துக்கு வந்து, நீதவான் முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, பிறிதொரு வழக்கில் பிள்ளையை வளர்ப்பதற்கான தாபரிப்புப் பணத்தைச் செலுத்துவதற்காக நபர் ஒருவர், நீதிமன்றத்துக்கு வந்தார்.

அவரின் தாபரிப்புப் பணத்தைப் பெறுவதற்கும், முன்னர் தாபரிப்புப் பெற்ற அதே பெண்ணே வந்தார்.

இதனை அவதானித்த நீதவான், விவரத்தை வினாவியபோது, முதல் கணவனை பிரிந்து வாழ்வதால் அவரிடமிருந்து தாபரிப்புப் பணம் பெறுவதாகவும், இரண்டாவது கணவன் மூலம் தனக்கு பிள்ளை இருப்பதுடன் அவரையும் விட்டுப் பிரிந்து வாழ்வதால் பிள்ளையை வளர்ப்பதற்கான தாபரிப்புப் பணத்தைப் அவரிடமிருந்தும் பெறுவதாக அந்தப் பெண் கூறினார்.

இதனையடுத்து, முதல் நபரை அழைத்த நீதவான், சட்டத்தரணி ஒருவர் மூலம் மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வழக்கு தாக்கல் செய்யுமாறு அறிவுரை கூறினார். 

- See more at: http://www.tamilmirror.lk/175303#sthash.RgFakMck.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது ஊரில. வெள்ளைக்காரங்க கூட இப்படியில்லை. அசிங்கம் பிடிச்ச இந்த சமூகத்திற்காக இத்தனை பேர் போராடி உயிரை விட்டிருக்குதுகள் என்று நினைக்கிறப்போ.. ரெம்ப கவலையா இருக்குது. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nedukkalapoovan said:

என்ன நடக்குது ஊரில. வெள்ளைக்காரங்க கூட இப்படியில்லை. அசிங்கம் பிடிச்ச இந்த சமூகத்திற்காக இத்தனை பேர் போராடி உயிரை விட்டிருக்குதுகள் என்று நினைக்கிறப்போ.. ரெம்ப கவலையா இருக்குது. tw_angry::rolleyes:

நெடுக்கர்,

ஜீவனாம்சம் என்பது புதிதல்லவே. எனக்கு தெரிந்த வகையில், இலங்கையில் பல காலமாக உள்ளது.

பொறுப்பற்ற அப்பாமார், தாயுடன் தமது பிள்ளையை விட்டுவிட்டு, புதுமாப்பிளையாக வேறு பெண்னுடன் வாழத் தொடங்குவர். இதற்கான கடிவாளமே ஜீவனாம்சம் எனும் பராமரிப்பு பணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா நிஜவாழ்க்கையிலையும் வடிவேலுவின்ரை காமெடி மாதிரி இருக்கு... haha.gif

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

நெடுக்கர்,

ஜீவனாம்சம் என்பது புதிதல்லவே. எனக்கு தெரிந்த வகையில், இலங்கையில் பல காலமாக உள்ளது.

பொறுப்பற்ற அப்பாமார், தாயுடன் தமது பிள்ளையை விட்டுவிட்டு, புதுமாப்பிளையாக வேறு பெண்னுடன் வாழத் தொடங்குவர். இதற்கான கடிவாளமே ஜீவனாம்சம் எனும் பராமரிப்பு பணம்.

ஜீவனாம்சம் பழசு.. இப்படி ஊரு பூரா புருசன்களை வைச்சுக்கிட்டு.. ஆளாளட்ட ஜீவனாம்சம் வாங்கிறது புதிசு. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

ஜீவனாம்சம் பழசு.. இப்படி ஊரு பூரா புருசன்களை வைச்சுக்கிட்டு.. ஆளாளட்ட ஜீவனாம்சம் வாங்கிறது புதிசு. tw_blush::rolleyes:

நான் நினைச்சன், நீங்க, அந்த பிள்ளைகளைப்பற்றி கவலைப்பட்டியளோ எனறு? :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, Nathamuni said:

நான் நினைச்சன், நீங்க, அந்த பிள்ளைகளைப்பற்றி கவலைப்பட்டியளோ எனறு? :grin:

ஆசை தோசை அப்பளம் வடை... Tanzen

இந்தப் பெண்களுக்கு யாரோடும் அனுசரித்து வாழத் தெரியவில்லை என்று தெரிகிறது. அது தான் இரண்டாவது கணவரும் விட்டுட்டு ஓடிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கணவனிடமிருந்து அவரின் பிள்ளைகளுக்கும் இரண்டாவது (கடைசியாக மணம்செய்த) கணவனிடமிருந்து பிரிந்து வாழும் மனைவிக்கும் அவர்மூலம் பிறந்த பிள்ளைகளுக்கும் நாட்டில் தாபரிப்புப் பணம் பெறமுடியும். ஆனால் பிள்ளைகள் பராயமடையாதவர்களாக இருக்கணும். வெளிநாட்டிலும் இதே கணக்குதான் ஆனால் பெண்ணுக்கு இல்லை பராயமடையாத பிள்ளைகளுக்கு மட்டும்தான்.

வெளிநாட்டில் பெண்ணுக்கு தாபரிப்புப்பணம் கொடுக்க வேண்டியதில்லை என்று சொன்னதும் சந்தோசப்படவேண்டாம் வீட்டையும் கொடுத்து சொத்தை பிரித்து அதில் அரைவாசிக்கு மேல் கொடுக்க வேண்டும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் புதுப்புது வழக்குகளில் திண்டாடும் நீதிபதிகள் என்னடா நடக்கிறது ஊரில் கேட்பவனுகளுக்கு நல்ல நல்ல செய்தியாக போகிறது 

5 hours ago, Nathamuni said:

நான் நினைச்சன், நீங்க, அந்த பிள்ளைகளைப்பற்றி கவலைப்பட்டியளோ எனறு? :grin:

ஹாஹா ஹாஹா நம்ம நெடுகுகா ம்கும்?

2 hours ago, முனிவர் ஜீ said:

 

ஹாஹா ஹாஹா 

ஆமா நம்ம முனிவர் ஏன் கோமணத்துடன் இப்ப குந்தி இருக்கிறார்? 

  • கருத்துக்கள உறவுகள்

 

36 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா நம்ம முனிவர் ஏன் கோமணத்துடன் இப்ப குந்தி இருக்கிறார்? 

காத்தும் போட்டுதாம்tw_dizzy:

3 minutes ago, நந்தன் said:

 

காத்தும் போட்டுதாம்tw_dizzy:

அட பாவி :grin:

7 hours ago, vanangaamudi said:

முதலாவது கணவனிடமிருந்து அவரின் பிள்ளைகளுக்கும் இரண்டாவது (கடைசியாக மணம்செய்த) கணவனிடமிருந்து பிரிந்து வாழும் மனைவிக்கும் அவர்மூலம் பிறந்த பிள்ளைகளுக்கும் நாட்டில் தாபரிப்புப் பணம் பெறமுடியும். ஆனால் பிள்ளைகள் பராயமடையாதவர்களாக இருக்கணும். வெளிநாட்டிலும் இதே கணக்குதான் ஆனால் பெண்ணுக்கு இல்லை பராயமடையாத பிள்ளைகளுக்கு மட்டும்தான்.

வெளிநாட்டில் பெண்ணுக்கு தாபரிப்புப்பணம் கொடுக்க வேண்டியதில்லை என்று சொன்னதும் சந்தோசப்படவேண்டாம் வீட்டையும் கொடுத்து சொத்தை பிரித்து அதில் அரைவாசிக்கு மேல் கொடுக்க வேண்டும்.

ஒரு சந்தேகம்!

வெளிநாட்டில், பெண்ணுக்கு கணவனை விட சொத்துக்கள் அதிகம் என்றால் பெண் தன் சொத்துக்களை பிரித்து கணவருக்கு கொடுக்க வேண்டுமா?

வெளிநாட்டில், பெண்ணுக்கு கணவனை விட வருமானம் / சம்பளம் அதிகம் என்றால் பெண் கணவருக்கு தாபரிப்பு பணம் கொடுக்க வேண்டுமா?

வெளிநாடுகளில் ஆண், பெண் சமத்துவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள தான் இந்தக் கேள்விகள். அறிந்தவர்கள் பதில் தரலாம்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vanangaamudi said:

வெளிநாட்டில் பெண்ணுக்கு தாபரிப்புப்பணம் கொடுக்க வேண்டியதில்லை என்று சொன்னதும் சந்தோசப்படவேண்டாம் வீட்டையும் கொடுத்து சொத்தை பிரித்து அதில் அரைவாசிக்கு மேல் கொடுக்க வேண்டும்.

வெளிநாட்டில் தாபரிப்புப் பணம் இல்லையோ? Child Support Agency இங்கே, வரித்தினைக்களத்துக்கு இணையாக, தோலில துண்டைப் போட்டு பணத்தை புடுங்குவார்கள்.

அடுத்து உழைத்த பணம், தேட்டம், கலியாணத்துக்குப் பிறகு எண்டால் தான் பாதி, பிரிந்து போன, கணவன் அல்லது மணைவிக்கு. இப்ப இந்த சொத்து பிரிவினை பற்றி முதலே ஒப்பந்தம் எழுதி கலியாணம் செய்ய சிலர் நிக்கினம், அது செல்லாது என்று வரலாம்!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா நம்ம முனிவர் ஏன் கோமணத்துடன் இப்ப குந்தி இருக்கிறார்? 

ஹாஹா சும்மா தான் தள்ளாடும் வயதில் தன் உழைப்பை நேசிக்கும் விவசாயி எனக்கு பிடித்து இருந்தது இந்தப்படம்  அண்ணே ??

 

10 hours ago, நந்தன் said:

 

காத்தும் போட்டுதாம்tw_dizzy:

ம்கும் பழைய தாத்தா மார் கச்சைக்கட்டுடன் தோட்டத்தில் தண்ணீர் ஊற்றும் காலத்தில்  வாழந்த சந்ததியாக்கும் 

நல்ல காற்றோட்டமாகதான் இருக்கிறது ??சந்தோசமாக இருக்கிறதா நந்தண்ணா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.