Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'3 ஏக்கரை விடுவித்தால் பிரச்சினைக்கு தீர்வு'

Featured Replies


'3 ஏக்கரை விடுவித்தால் பிரச்சினைக்கு தீர்வு'
 
 

article_1467113086-DSC_0072.jpg

-எஸ்.ஜெகநாதன், எம்.றொசாந்த்

'அச்சுவேலி – அராலி வீதியை திறப்பதற்கு, இராணுவத்தினர் இன்னமும் 3 ஏக்கர் காணியை விடுவித்தால் போதுமானதாக இருக்கும், இந்த நிலையில், எங்களுடைய காணிகளை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள புதிய வீதி எங்களுக்கு வேண்டாம்' என குரும்பசிட்டி மக்கள் கூறியுள்ளனர்.

வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த 201.3 ஏக்கர் காணியை, கடந்த சனிக்கிழமை (25) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூகுரே ஆகியோர், உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகத்திடம் கையளித்தனர்.

இதன்போது, மேற்படி அச்சுவேலி – அராலி வீதியும் விடுவிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மக்களின் காணிகளை ஊடறுத்து கட்;டுவன் சந்தியிலிருந்து குரும்பசிட்டி வரையில் இராணுவத்தினர் புதிய வீதியொன்றை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

தங்களுடைய காணிகளை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள வீதிக்கு ஒரு போதும் தாங்கள் அனுமதி வழங்க முடியாது எனவும், தங்கள் காணிகளுக்கு எல்லைகள் போடவுள்ளதாகவும், அச்சுவேலி – அராலி வீதியை விடுவிக்க வேண்டும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.

இந்த வீதியை உபயோகப்படுத்த இராணுவத்தினர் வசமுள்ள 3 ஏக்கர் காணியை விடுக்க வேண்டும் எனவும் மக்கள் கூறினர். இந்த விடயத்தை இன்று செவ்வாய்க்கிழமை (28) அங்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவுக்கும் மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

article_1467113099-DSC_0079.jpg

- See more at: http://www.tamilmirror.lk/175778#sthash.fEdYkyzG.dpuf

கூட்டமைப்பினர் விரைந்து போராட்டங்களை நடத்தியாவது குறித்த 3 ஏக்கர் காணியை விடுவிப்பதன் மூலம் பலரது காணிகள் அவர்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வது அவசியம்.

2 hours ago, போல் said:

கூட்டமைப்பினர் விரைந்து போராட்டங்களை நடத்தியாவது குறித்த 3 ஏக்கர் காணியை விடுவிப்பதன் மூலம் பலரது காணிகள் அவர்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வது அவசியம்.

"காணி அபகரிப்பாளர்களுக்கும், காணிகளை அபகரித்து சொத்துத்துக்களை சூறையாடிவிட்டு திரும்ப கொடுப்பவர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், திருடர்களுக்கும், பாலியல் பலாத்காரிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் நன்றி சொல்ல தனி ஒருவர் இல்லை ஒருசிலர் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது."

இதையும் யாரோ எங்கோ சொல்லியிருக்கிறார்கள்

"

12 minutes ago, ஜீவன் சிவா said:
2 hours ago, போல் said:

கூட்டமைப்பினர் விரைந்து போராட்டங்களை நடத்தியாவது குறித்த 3 ஏக்கர் காணியை விடுவிப்பதன் மூலம் பலரது காணிகள் அவர்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வது அவசியம்.

 

12 minutes ago, ஜீவன் சிவா said:

"காணி அபகரிப்பாளர்களுக்கும், காணிகளை அபகரித்து சொத்துத்துக்களை சூறையாடிவிட்டு திரும்ப கொடுப்பவர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், திருடர்களுக்கும், பாலியல் பலாத்காரிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் நன்றி சொல்ல தனி ஒருவர் இல்லை ஒருசிலர் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது."

இதையும் யாரோ எங்கோ சொல்லியிருக்கிறார்கள்

"

தனது உரிமைகளை, உடமைகளை அதை அபகரித்தவனிடம் இருந்து மீளப் பெறுவது ஒருவனது அடிப்படை உரிமை என்பதை உணர்ந்தவனுக்கும்,
தனது உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனிடம் இருந்து அவற்றை மீளப் பெறுவது அவன் போடும் பிச்சை என்ற உணர்விழந்து அடிமை மனநிலையுடன் இருப்பவனுக்கும்
இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர்களுக்கு இந்தக் குழப்பம் எப்போதும் வராது.  ,

 

4 minutes ago, போல் said:

 

தனது உரிமைகளை, உடமைகளை அதை அபகரித்தவனிடம் இருந்து மீளப் பெறுவது ஒருவனது அடிப்படை உரிமை என்பதை உணர்ந்தவனுக்கும்,
தனது உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனிடம் இருந்து அவற்றை மீளப் பெறுவது அவன் போடும் பிச்சை என்ற உணர்விழந்து அடிமை மனநிலையுடன் இருப்பவனுக்கும்
இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர்களுக்கு இந்தக் குழப்பம் எப்போதும் வராது.  ,

 

நாம் போராடாமல் எமக்கு எந்த நிலமும் திரும்ப கிடைத்ததில்லை. இங்கு பிச்சை என்ற சொல்லுக்கு வேலையே இல்லை... இது திரும்பவும் போராடும் மக்களை கீழ்த்தரமாக கணிப்பதற்கு சமன்.

1 minute ago, ஜீவன் சிவா said:

நாம் போராடாமல் எமக்கு எந்த நிலமும் திரும்ப கிடைத்ததில்லை. இங்கு பிச்சை என்ற சொல்லுக்கு வேலையே இல்லை... இது திரும்பவும் போராடும் மக்களை கீழ்த்தரமாக கணிப்பதற்கு சமன்.

உங்கள் மனவிகாரமே உங்கள் குழப்பத்துக்கு காரணம்!
தெளிந்த மனம் இருந்தால் இந்தக் குழப்பங்கள், தளம்பல்கள், முரண் கருத்துக்கள் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை...யாரை நம்புவது....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

கூட்டமைப்பினர் விரைந்து போராட்டங்களை நடத்தியாவது குறித்த 3 ஏக்கர் காணியை விடுவிப்பதன் மூலம் பலரது காணிகள் அவர்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வது அவசியம்.

ம்கும் ??☺

51 minutes ago, ஜீவன் சிவா said:

நாம் போராடாமல் எமக்கு எந்த நிலமும் திரும்ப கிடைத்ததில்லை. இங்கு பிச்சை என்ற சொல்லுக்கு வேலையே இல்லை... இது திரும்பவும் போராடும் மக்களை கீழ்த்தரமாக கணிப்பதற்கு சமன்.

அதே அதே

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை உறவுகள் எங்களுக்குள் பிடுங்குப்படாமால் அங்கை உள்ள மக்களுக்கு கிடைக்கிறதை அந்த மக்கள் பெற்று நல் வாழ்வு வாழ உதவி செய்வதே நன்று.

5 hours ago, முனிவர் ஜீ said:

அதே அதே

தனது உரிமைகளை, உடமைகளை அதை அபகரித்தவனிடம் இருந்து அவற்றை போராடியாவது மீளப் பெறுவது ஒருவனது அடிப்படை உரிமை என்பதை உணர்ந்தவனுக்கும்,
தனது உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனிடம் இருந்து அவற்றை மீளப் பெறுவது அவன் போடும் பிச்சை என்ற உணர்விழந்து அடிமை மனநிலையுடன் இருப்பவனுக்கும்
இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர்களுக்கு இந்தக் குழப்பம் எப்போதும் வராது.
 
இந்தக் காணிகள் விடுபட்டதற்கு காணிகளை இழந்த பல தன்மான உணர்வுள்ள மக்கள், பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சிறந்த தலைவர்கள், கூட்டமைப்பில் உள்ள சிலர், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நடத்திய தொடர் போராட்டமே தான் காரணம். இந்த யதார்த்தத்தை அறியாதவர்கள் நிச்சயம் கடைந்தெடுத்த மூடர்களாகத் தான் இருக்க வேண்டும். போராடிய இவர்களுக்கு நன்றி கூறுத் தவறியவர்கள், யாரோ போராடிய போராட்டத்தில் குளிர்காய்பவர்கள் (டக்ளஸ் கும்பல், ஆனந்தசங்கரி கும்பல், சித்தார்த்தன் கும்பல் போன்றவர்கள்)  போலவே சிலர்  தமது மக்களின் உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனுக்கு பிச்சைகார மனநிலையுடன், உணர்விழந்து அடிமை மனநிலையுடன் துதி பாடி வருவதை தமிழ் மக்கள் காலம் காலமாக பார்த்து வருகிறார்கள்.

இந்த அடிமை மனநிலை உடையவர்கள் காணி அபகரிப்பாளர்களுக்கும், காணிகளை அபகரித்து சொத்துத்துக்களை சூறையாடிவிட்டு திரும்ப கொடுப்பவர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், திருடர்களுக்கும், பாலியல் பலாத்காரிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் தான் நன்றி சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.

இந்த அடிமை மனநிலை உடையவர்கள் சகோதர சகோதரிகளை சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்துவிட்டு அவர்கள் உடலங்களை சிதைத்து திருப்பி தருபவர்களுக்கும் தான் தமிழர்கள் சார்பில் நன்றி சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் என்பதையும் தமிழ் மக்கள் அறிவார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

இங்கை உறவுகள் எங்களுக்குள் பிடுங்குப்படாமால் அங்கை உள்ள மக்களுக்கு கிடைக்கிறதை அந்த மக்கள் பெற்று நல் வாழ்வு வாழ உதவி செய்வதே நன்று.

இதையே தான்  நாங்கள் சொல்கிறோம் கனபேருக்கு இன்னும் விளங்கிக் கொள்ள முடியவில்லை கிடைக்கிற வரை மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது எங்களது விருப்பம் ?☺

 

2 hours ago, போல் said:

தனது உரிமைகளை, உடமைகளை அதை அபகரித்தவனிடம் இருந்து அவற்றை போராடியாவது மீளப் பெறுவது ஒருவனது அடிப்படை உரிமை என்பதை உணர்ந்தவனுக்கும்,
தனது உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனிடம் இருந்து அவற்றை மீளப் பெறுவது அவன் போடும் பிச்சை என்ற உணர்விழந்து அடிமை மனநிலையுடன் இருப்பவனுக்கும்
இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர்களுக்கு இந்தக் குழப்பம் எப்போதும் வராது.
 
இந்தக் காணிகள் விடுபட்டதற்கு காணிகளை இழந்த பல தன்மான உணர்வுள்ள மக்கள், பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சிறந்த தலைவர்கள், கூட்டமைப்பில் உள்ள சிலர், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நடத்திய தொடர் போராட்டமே தான் காரணம். இந்த யதார்த்தத்தை அறியாதவர்கள் நிச்சயம் கடைந்தெடுத்த மூடர்களாகத் தான் இருக்க வேண்டும். போராடிய இவர்களுக்கு நன்றி கூறுத் தவறியவர்கள், யாரோ போராடிய போராட்டத்தில் குளிர்காய்பவர்கள் (டக்ளஸ் கும்பல், ஆனந்தசங்கரி கும்பல், சித்தார்த்தன் கும்பல் போன்றவர்கள்)  போலவே சிலர்  தமது மக்களின் உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனுக்கு பிச்சைகார மனநிலையுடன், உணர்விழந்து அடிமை மனநிலையுடன் துதி பாடி வருவதை தமிழ் மக்கள் காலம் காலமாக பார்த்து வருகிறார்கள்.

இந்த அடிமை மனநிலை உடையவர்கள் காணி அபகரிப்பாளர்களுக்கும், காணிகளை அபகரித்து சொத்துத்துக்களை சூறையாடிவிட்டு திரும்ப கொடுப்பவர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், திருடர்களுக்கும், பாலியல் பலாத்காரிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் தான் நன்றி சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.

இந்த அடிமை மனநிலை உடையவர்கள் சகோதர சகோதரிகளை சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்துவிட்டு அவர்கள் உடலங்களை சிதைத்து திருப்பி தருபவர்களுக்கும் தான் தமிழர்கள் சார்பில் நன்றி சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் என்பதையும் தமிழ் மக்கள் அறிவார்கள்.

 

இங்கேயும் இதே பதிலா 

தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து சீக்கிரம் ஆரம்பித்து கைப்பற்றுங்கள் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பட்டும் ?☺

6 minutes ago, முனிவர் ஜீ said:

இதையே தான்  நாங்கள் சொல்கிறோம் கனபேருக்கு இன்னும் விளங்கிக் கொள்ள முடியவில்லை கிடைக்கிற வரை மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது எங்களது விருப்பம் ?☺

 

இங்கேயும் இதே பதிலா 

தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து சீக்கிரம் ஆரம்பித்து கைப்பற்றுங்கள் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பட்டும் ?☺

இந்தக் காணிகள் விடுபட்டதற்கு காணிகளை இழந்த பல தன்மான உணர்வுள்ள மக்கள், பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சிறந்த தலைவர்கள், கூட்டமைப்பில் உள்ள சிலர், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நடத்திய தொடர் போராட்டமே தான் காரணம். இந்த யதார்த்தத்தை அறியாதவர்கள் நிச்சயம் கடைந்தெடுத்த மூடர்களாகத் தான் இருக்க வேண்டும். போராடிய இவர்களுக்கு நன்றி கூறுத் தவறியவர்கள், யாரோ போராடிய போராட்டத்தில் குளிர்காய்பவர்கள் (டக்ளஸ் கும்பல், ஆனந்தசங்கரி கும்பல், சித்தார்த்தன் கும்பல் போன்றவர்கள்)  போலவே சிலர்  தமது மக்களின் உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனுக்கு பிச்சைகார மனநிலையுடன், உணர்விழந்து அடிமை மனநிலையுடன் துதி பாடி வருவதை தமிழ் மக்கள் காலம் காலமாக பார்த்து வருகிறார்கள்.

போராடுபவர்களால் தான் மக்களின் இயல்பு நிலை திரும்பும்.  இணக்க அரசியல் துதி பாடுபவர்களால் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

 

போராடுபவர்களால் தான் மக்களின் இயல்பு நிலை திரும்பும்.  .

யார் இந்த போராளிகள்?? தமிழரசு கட்சியா ஹாஹா  சம்மந்தன் ஐயா ஒரு அறிக்கை விட்டிருந்தார் தெரியும் தானே 

Just now, முனிவர் ஜீ said:

யார் இந்த போராளிகள்?? தமிழரசு கட்சியா ஹாஹா  சம்மந்தன் ஐயா ஒரு அறிக்கை விட்டிருந்தார் தெரியும் தானே 

இந்தக் காணிகள் விடுபட்டதற்கு காணிகளை இழந்த பல தன்மான உணர்வுள்ள மக்கள், பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சிறந்த தலைவர்கள், கூட்டமைப்பில் உள்ள சிலர், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நடத்திய தொடர் போராட்டமே தான் காரணம். இந்த யதார்த்தத்தை அறியாதவர்கள் நிச்சயம் கடைந்தெடுத்த மூடர்களாகத் தான் இருக்க வேண்டும். போராடிய இவர்களுக்கு நன்றி கூறுத் தவறியவர்கள், யாரோ போராடிய போராட்டத்தில் குளிர்காய்பவர்கள் (டக்ளஸ் கும்பல், ஆனந்தசங்கரி கும்பல், சித்தார்த்தன் கும்பல் போன்றவர்கள்)  போலவே சிலர்  தமது மக்களின் உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனுக்கு பிச்சைகார மனநிலையுடன், உணர்விழந்து அடிமை மனநிலையுடன் துதி பாடி வருவதை தமிழ் மக்கள் காலம் காலமாக பார்த்து வருகிறார்கள்.

போராடுபவர்களால் தான் மக்களின் இயல்பு நிலை திரும்பும்.  இணக்க அரசியல் துதி பாடுபவர்களால் இல்லை.

காணியையே வீதியாக்கிவிட்டு விடுவிப்புப் பத்திரம் வழங்கிய இராணுவம்! வலி.வடக்கு வாசியின் ஆதங்கம்

காணியை வீதியாக்கிவிட்டு அந்தக் காணியை விடுவித்ததாகத் தெரிவித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி பத்திரம் வழங்கினார் எனக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

"எனது காணியை நான் பயன்படுத்த முடியாதவாறு வீதி அமைத்துள்ளனர். இவ்வாறான நிலையில் எனது காணி விடுவிக்கப்பட்டதாக பத்திரத்தை மாத்திரம் வழங்கியுள்ளனர்'' என காணியின் உரிமையாளர் சுப்பிரமணியம் தளையசிங்கம் தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கில் 201 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் பயன்பாட்டுக்காக வல்லை - அராலி பிரதான வீதியை விடுவிக்காமல், மக்களின் காணிகள் ஊடாகப் புதிய பாதை அமைக்கப்பட்டு அதுவும் விடுவிக்கப்பட்டது. இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட வீதியின் ஒரு பகுதி தனது காணியின் ஊடாகவே அமைக்கப்பட்டுள்ளதாக தளையசிங்கம் கூறுகின்றார்.

ஆனால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால், அவரது காணி மீளக் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அம்பலவாணர் வீதியில் மொத்தம் 11 பரப்பு, எனது உறுதிக்காணி. இதனை விடுவித்துள்ளதாக சான்றிதழ் வழங்கினர். அதன் பிரகாரம் எனது காணியைப் பொறுப்பெடுக்கும் ஆர்வத்தில் சென்றேன். எனது ஒன்பதரைப் பரப்புக் காணியை இராணுவம் இன்னும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது. மீதி ஒன்றரைப் பரப்புக் காணியை வீதியாக்கி வைத்திருக்கின்றனர். குடியிருக்கக் காணியின்றி நாம் வீதியில் அலைய, எனது காணியில் அனுமதியில்லாமல் இராணுவம் வீதி அமைத்துள்ளது.

அந்த வீதிக்கு விடுவித்தல் சான்றிதழ் வேறு. அதனை மேடைக்கு அழைத்து வேறு வழங்கினர்'' என்று தளையசிங்கம் கவலை வெளியிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/109281

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் வைத்துப் பாராட்டப்பட வேண்டிய விடயம். அவன் சர்வதேசத்தை ஏமாற்றப் போடுகிற நாடகத்தை நாங்கள் பாராட்ட வேண்டும் பாருங்கோ. உப்பிடித்தான் மகிந்தரும் மேடை போட்டு  நகை மீள அளிச்சவர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.