Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் பேரணியில் நாம் தமிழர் தொண்டர் தீக்குளிப்பு: சென்னையில் அதிர்ச்சி

Featured Replies

சீமான் பேரணியில் நாம் தமிழர் தொண்டர் தீக்குளிப்பு: சென்னையில் அதிர்ச்சி

seeman_vc2.jpg

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நடந்த பேரணியில் தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. ஒரு வாரத்திற்கும் மேல் நடந்த போராட்டத்தின் உச்சசட்டமாக சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த வன்முறையில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிாிழந்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடவும், நடுவர்மன்ற உத்தரவின்படி தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், தமிழர்களுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் வன்முறைகளை கண்டித்தும், தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடுகளுக்கு, இழப்பீடுகள் வழங்கிட வற்புறுத்தியும், காவேரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை ஏற்படுத்திட வற்புறுத்தியும், மொத்தத்தில் தமிழக விவசாய பெருங்குடி மக்கள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோரின் நலன் காக்கப்படுவதன் மூலம் தமிழகத்தின் நலன் காக்கப்பட மத்திய - மாநில அரசுகளை வற்புறுத்தி நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை எழும்பூரில் இன்று பிற்பகலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் இயக்குநர்கள் அமீர், சேரன் மற்றும் ரவி மரியா உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த பேரணியில் கட்சித் தொண்டர் திருவாரூரை சேர்ந்த விக்னேஷ்குமார் பங்கேற்றார்.

seeman_vc1.jpg

 

ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து புறப்பட்ட பேரணி எழும்பூரில் முடிவடைய இருந்தது. புதுப்பேட்டை அருகே பேரணி வந்து கொண்டிருந்தபோது விக்னேஷ்குமார் தீக்குளிக்க முயன்றார். உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த கட்சியினர் தண்ணீர் மற்றும் வேப்பம் இலை கொண்டும் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விக்னேஷ்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேரணி எழும்பூரில் முடிவடைந்து அங்கு கூட்டம் நடைபெற்றது. சிறிது நேரமே கூட்டத்தில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களை உடனடியாக சந்தித்தார். அப்போது, "காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்குரியது. தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. தீக்குளிப்பை நாம் தமிழர் கட்சி ஊக்கப்படுத்தவில்லை. தமிழர் என்ற உணர்வுடன் ஒன்றுபடுவோம். தமிழர் என்ற உணர்வுடன் ஒன்றுபடுவோம். பேரணியின்போது தீக்குளிப்பு நடந்தது விரும்பத்தகாத ஒரு நிகழ்வு. அறிவுபூர்வமாக செயல்பட வேண்டும்" என்றார்.

seemmmmmmm1.jpg



முன்னதாக, பேரணியில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சியினர் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் வந்து கொண்டிருந்தபோது, கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று வந்து சென்றது. இதனைப் பார்த்த நாம் தமிழர் கட்சியினர், அந்த வாகனத்தை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்த வாகனத்தை மீட்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/68420-naam-thamizhar-cadre-self-immolated-himself-in-front-of-seeman.art

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சப்பேர்

நாம் தமிழர் கட்சி ஒன்றுக்கம் லாயக்கற்றது என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி.......?:(

  • கருத்துக்கள உறவுகள்

அடி வாங்குவதும் நாம், நொந்து நம் உயிரை அழிப்பதும்.....  நாமாக இருக்கக் கூடாது.
தமிழ் நாட்டில்... இந்த தீக்குளிப்பு  கலாச்சாரத்தை நிறுத்த, அதன் தலைவர்கள் தமது தொண்டர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

அடி வாங்குவதும் நாம், நொந்து நம் உயிரை அழிப்பதும்.....  நாமாக இருக்கக் கூடாது.
தமிழ் நாட்டில்... இந்த தீக்குளிப்பு  கலாச்சாரத்தை நிறுத்த, அதன் தலைவர்கள் தமது தொண்டர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.

உயிர் தரவேண்டாம் ஆனால் உணர்வைத் தாருங்கள் என்றுதான் கேட்கிறார்கள். ஆனால் பலர் மனதுக்குள் உணர்வை வைத்திருந்தாலும் வெளிக்காட்டுவதற்குப் பயப்படுகிறார்கள். வேறும் பலர் பணத்தாசை, சினிமா, சீரியல் மோகம் என மூழ்கிக் கிடக்கிறார்கள். மூழ்கிக் கிடப்பவர்களை எழுப்ப இருக்கும் சில நல்லவர்களும் தீக்குளித்துச் சாகிறார்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள்..! 

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

seemmmmmmm1.jpg

ஆழ்ந்த அனுதாபங்கள்.....  விக்னேஷ்குமார்.

###########

5 hours ago, இசைக்கலைஞன் said:

உயிர் தரவேண்டாம் ஆனால் உணர்வைத் தாருங்கள் என்றுதான் கேட்கிறார்கள். ஆனால் பலர் மனதுக்குள் உணர்வை வைத்திருந்தாலும் வெளிக்காட்டுவதற்குப் பயப்படுகிறார்கள். வேறும் பலர் பணத்தாசை, சினிமா, சீரியல் மோகம் என மூழ்கிக் கிடக்கிறார்கள். மூழ்கிக் கிடப்பவர்களை எழுப்ப இருக்கும் சில நல்லவர்களும் தீக்குளித்துச் சாகிறார்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள்..! 

உண்மைதான்  இசை.... 
ஆனால் அந்த நல்லவர்களும்,  தீக் குளிக்கும் போது.... மனதில் இனம் புரியாத ஆத்திரமும், நெருடலும் ஏற்படுகின்றது.
இவர்கள்,  தீக் குளிப்பதால்.... தமிழக ஆளும் கட்சியோ,  எதிர்க்கட்சியோ, மத்திய அரசோ... கவலைப் படப் போவதில்லை.
அப்படி இருந்தும்.... இவர்கள் தொடர்ந்து செய்வதை, என்னால் ஏற்க முடியவில்லை.

தண்ட வாளத்தில் தலை வைத்துப் படுத்து, ஓடும் ரயிலை நிறுத்திய..... உலகத் தமிழர்களின் காவலன் என்றும்....
கடைசியாக,  மெரினா பீச்சிலும் உண்ணாவிரதம் இருந்து....  75 வருசம் தமிழனுக்காக உழைத்தவர் என்றும்.....
மக்களை... முட்டாளாக்கி, வைத்திருக்கும் நாடு தான்.... தமிழ் நாடு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்போ தான்.... இந்தக் காணொளியை பார்த்தேன்.
சீமான்... கேட்ட கேள்விக்கு... யாரிடமும், பதில் இல்லை.

  • தொடங்கியவர்

விக்னேஷ் மரணத்துக்கு சீமானைக் குறி வைக்கும் வழக்கு!

Naam%20Tamizhar%20%20%284%29.jpg

 

காவிரிப் பிரச்னையில், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 16-ம் தேதி நாம் தமிழர் கட்சியினர் பேரணி நடத்தினர். இப்பேரணியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை செயலாளரான விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்து இறந்தார். இந்நிலையில், 'நாம் தமிழர் கட்சி விதிமுறைகளை மீறி செயல்படுவதால் அக்கட்சியை தடை செய்ய வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் வழக்கறிஞர் ரீகன்.

இதுகுறித்துப் பேசும் அவர், ''சீமானின் அலட்சியம்தான் விக்னேஷ் உயிரிழப்புக்குக் காரணம். எந்தவொரு போராட்டம், பேரணி என்றாலும் Reegan.pngசம்பந்தப்பட்ட அமைப்பும், அரசும் அந்த நிகழ்வை வீடியோ கவரேஜ் செய்ய வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியை சம்பந்தப்பட்ட யாரும் வீடியோ எடுக்கவில்லை.

மேலும் தடைசெய்யப்பட்ட அமைப்பான எல்.டி.டி.இ தலைவர் பிரபாகரனின் படங்களையும், உணர்ச்சியைத் தூண்டக் கூடிய வகையிலான வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் பேரணியில் வந்தவர்கள் ஏந்திச் சென்றுள்ளனர்.

தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக உணர்ச்சிகரமாகப் பேசி இளைஞர்களைத் தூண்டிவிடும் வேலையையே சீமான் செய்து வருகிறார். இதுவரை சீமானின் பேச்சுகளைப் பார்த்து வந்தவர்களுக்கு அது தெளிவாகப் புரியும். பேரணி நடத்துவதற்கான எந்தவொரு முறையான ஏற்பாடுகளையும் செய்யாமல், உணர்ச்சியைத் தூண்டி ஒரு உயிரைப் பலி வாங்கிவிட்டார்.

அவருடைய பேச்சுகளிலோ நடவடிக்கைகளிலோ எந்தவொரு நியாயமான அரசியல் நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்" என்கிறார்  ஆவேசமாக.

http://www.vikatan.com/news/tamilnadu/68514-petition-filed-against-naam-tamizhar-katchi-in-apex-court.art

  • கருத்துக்கள உறவுகள்

22 வயது  கன்னடத்தி பாக்யா தமிழனுடைய பஸ் கொளுத்தறா.. 24 வயது தமிழன் விக்னேஸ்  தன்னை கொளுத்திக்கிறான்.. !!

  • கருத்துக்கள உறவுகள்

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

தீக்குளிப்புக்கள் இனியும் வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.