Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுபதாண்டுகளுக்கு முன்பு உரியில் என்ன நடந்தது தெரியுமா? எரியும் எல்லைக்கோடு!

Featured Replies

எழுபதாண்டுகளுக்கு முன்பு உரியில் என்ன நடந்தது தெரியுமா? எரியும் எல்லைக்கோடு! அத்தியாயம் - 1

kashmir223.jpg

ஆர். முத்துக்குமார்

uri1212vc5.jpgஉரிக்குள் நுழைந்துவிட்டார்கள் எதிரிகள் என்ற செய்தி ஒட்டுமொத்த ராணுவத்தினரையும் பதற்றம் கொள்ளச் செய்தது. இன்னும் நூறு கிலோமீட்டர் தாண்டினால் ஸ்ரீநகரைத் தொட்டு விடலாம் என்ற நிலையில், இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தனர். உரிய இடத்திலிருந்து உத்தரவு வந்த வேகத்தில் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர்.

அதுவரைக்கும் தடையின்றி வந்துகொண்டிருந்த எதிரிகளுக்கு உரியில் கிடைத்த மூர்க்கத்தனமான எதிர்ப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது. போதாக்குறைக்கு, எதிரிகளின் முன்னேற்றத்தைத் தடுக்க உரியில் இருந்த பாலம் ஒன்றைத் தகர்த்தெறிந்தனர் ராணுவத்தினர். அதற்கு உத்தரவிட்டவர் பிரிகேடியர் ராஜீந்தர் சிங். திடீரென பாதைகள் தடைபட்டதால் சற்றே தடுமாறிப்போனார்கள் எதிரிகள். என்றாலும், சட்டென்று சுதாரித்துக் கொண்டு ஆவேசத் தாக்குதல் நடத்தி அடுத்தடுத்த பகுதிகளுக்குள் ஊடுருவத் தொடங்கினர்.

மேலே விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவம், சமீபத்தில் நிகழ்ந்த உரி தாக்குதல் அல்ல. சற்றேறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இதே அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நிகழ்ந்த சம்பவம். ஆம், பிரிவினைக் கோடு கிழிக்கப்பட்ட கையோடு நம்மீது பாகிஸ்தான் நடத்திய மறைமுகத் தாக்குதலுக்கான ஆரம்பப்புள்ளிகளுள் இதுவும் ஒன்று.  

உரியின் வழியாக நிகழ்த்திய இந்த ஊடுருவல்தான் அடுத்த சில நாள்களில் நிகழ்ந்த மாபெரும் திருப்பங்களுக்கு அடித்தளமிட்டது. எங்களைக் காப்பாற்றுங்கள் என்று இந்திய அரசிடம் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் விண்ணப்பம் போட்டது, மெளண்ட் பேட்டனின் தலையீடு, இருதரப்புப் பேச்சுவார்த்தை, வி.பி.மேனனின் பயணங்கள், காஷ்மீர் இணைப்பு, இந்திய – பாகிஸ்தான் முதல் யுத்தம் என எல்லாம் நிகழ்ந்தது இந்த உரி தாக்குதலுக்குப் பிறகுதான். அன்று தொடங்கிய யுத்தம் இன்னமும்கூட முடியவில்லை என்று சொல்லலாம்.

uri1212vc1.jpg

 

சற்றேறக்குறைய எழுபதாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது சமீபத்திய உரி தாக்குதல். முன்பு உரிக்குள் ஊடுருவியவர்கள் பதானியர்கள் என்கிற பழங்குடிமக்கள். இப்போது ஊடுருவியவர்கள் பயங்கரவாதிகள் என்கிற பாகிஸ்தானின் வளர்ப்புப் பிள்ளைகள்.

பாகிஸ்தானைத் பொறுத்தவரை பதானியர்களும் பயங்கரவாதிகளும் கூலிப்படையினர்தான். முதலில் கூலிப்படையினரைக் கொண்டு ஊடுருவி, அவர்களின் வழியே தாக்குதலை ஆரம்பிப்பார்கள். பிறகு மெல்ல மெல்ல முகமூடியைக் கழற்றிவிட்டு, நேரடியாகக் களத்தில் இறங்குவார்கள்.

இப்படி இந்தியா மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். சுதந்தரம் அடைந்த கையோடு நடந்த முதல் யுத்தம்,  நேருவின் மறைவுக்குப் பிறகு சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்த இரண்டாம் யுத்தம், வாஜ்பாய் காலத்தில் நிகழ்ந்த கார்கில் யுத்தம் என்று பாகிஸ்தான் நிகழ்த்திய நேரடி யுத்தங்கள் அனைத்திலுமே பாகிஸ்தானுக்குத் தோல்விதான். சேதங்கள் மிக அதிகம்தான்.

uri1212vc3.jpg

 

மறைமுகத் தாக்குதல்களிலும்கூட அவர்களுக்கு ஏகப்பட்ட பொருட்செலவுதான். கெட்டப் பெயர்தான். அவமானம்தான். ஆனாலும் அவற்றைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், இந்தியா மீது தொடர்ந்து மறைமுக, நேரடி யுத்தங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இவற்றின் பின்னணியில் இன்னார்தான் இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிடமுடியாது.

ஒரு யுத்தத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் அரசியல் ஆட்சியாளர்கள் இருந்திருப்பார்கள். இன்னொரு யுத்தத்தின் சூத்திரதாரிகளாக ராணுவ ஆட்சியாளர்கள் இருந்திருப்பார்கள். பல சமயங்களில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் பங்களிப்புதான் மிகப் பிரதானமாக இருந்திருக்கும். குறிப்பாக, மறைமுக ஊடுருவல்களுக்கு மாதிரித் திட்டம் வகுத்துக் கொடுப்பது பெரும்பாலும் இவர்களுடைய கைங்கர்யமாகத்தான் இருக்கும். அரிதான சமயங்களில் அனைவரும் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்ட தருணங்களும் உண்டு.

இத்தனைக்கும் என்னதான் காரணம்?

காஷ்மீர்!

ஆம், காஷ்மீர் என்பது பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கனவு தேசம். ஜின்னாவிடம் தொடங்கிய இந்தக் கனவு அவருக்குப் பிறகு வந்த அத்தனை ஆட்சியாளர்களுக்கும் இருந்திருக்கிறது. ஆம், அயூப் கான், யாஹ்யா கான், ஜியா உல் ஹக், ஜுல்ஃபிகர் அலி புட்டோ தொடங்கி பேனசீர் பூட்டோ, பர்வேஸ் முஷாரஃப், நவாஸ் ஷெரீஃப் வரை வரை அனைவருக்கும் அந்தக் கனவு உண்டு. ஒருவேளை, அவர்களுக்குக் காஷ்மீர் கனவு இல்லை என்றால், ஒன்று, அவர்கள் ஆட்சியாளராக வந்திருக்க முடியாது, அல்லது ஆட்சியாளராக நீடித்திருக்க முடியாது. இதுதான் பாகிஸ்தானின் அரசியல் யதார்த்தம்.

uri1212vc4.jpg

 

கனவை நோக்கிய நகர்வில் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் நிகழ்த்திய காய் நகர்த்தல்களையும் மறைமுகமாக நடத்திய ஊடுருவல்களையும் நேரடியாகத் தொடுத்த யுத்தங்களையும் உன்னிப்பாகக் கவனித்தால், காஷ்மீர் பிரச்னை என்ற விருட்சத்தின் ஆணிவேரையும் கண்டுபிடிக்கமுடியும். அவற்றின் கிளைகளிலும் இலைகளிலும் ஊடுருவியிருக்கும் விஷத்தின் வீரியத்தையும் புரிந்துகொள்ள முடியும்! அதற்கான ஒரு முயற்சியே இந்தத் தொடர்!

 
 

- தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/69408-uri-attack-history-behind-indo-pak-war-series---1.art

  • கருத்துக்கள உறவுகள்

70 ஆண்டு முன்பு ...... 700 ஆண்டு முன்பு ..... 7 ஆயிரம் ஆண்டுமுன்பு ...
என்ன நடந்தது என்பது வெறும் வரலாற்று பாடம் மட்டுமே. அவர்கள் யாரும் இப்போ இருக்க போவதும் இல்லை.
இல்லாதவர்கள் வகுத்த வகுப்பு ...
இருப்பவர்களுக்கு ஒருபோதும் ஒவ்வுவதில்லை (மதம் தவிர்த்து)
அதுதான் உலகம் ஒவ்வரு நாளும் புதிதாய் பிறக்கிறது.

இப்போது இருக்கும் மக்களுக்கு எது வேண்டும் ?
அதை கொடுப்பதே ஜனநாயகம்.

கொலை 
பாலியல் துன்புறுத்தல் 
பொருளாதார இறுக்கம் 

போன்றவற்றை கொடூரமாக செய்யும் இந்தியாவிட்கு .... காஸ்மீர் ஒருபோதும் சொந்தம் ஆகாது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

எங்களைக் காப்பாற்றுங்கள் என்று இந்திய அரசிடம் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் விண்ணப்பம் போட்டது,

தற்போதைய இந்தியாவில் முன்பு இருந்த ஒவ்வொரு சமஸ்தானத்தையும் அந்தந்த மன்னர்களின் ஒப்புதல்களுடனும் இந்திய ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என்பதுதான் பிரிட்டிஷ் அரசுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை. அதன்படி பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்திய ஒன்றியத்துடன் இணைந்துகொண்டன. இந்த இணைப்பை முன்னின்று வழிநடத்தியவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.

இதில் உடன்படாமல் தனித்து நின்ற இரண்டு சமஸ்தானங்களுள் ஒன்று காஷ்மீர். மற்றையது ஹைதராபாத் (ஆந்திரா). காஷ்மீர் அரசர் ஹரிசிங் பாகிஸ்தானுடன் இணைவதா, அல்லது இந்தியாவுடன் இணைவதா அல்லது தனித்திருப்பதா என்று முடிவெடுக்க முடியாமல் இழுபறிப்பட பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல் ஆரம்பித்தது. இந்து மன்னராகிய ஹரிசிங் இந்தியாவை உதவிக்கு அழைத்தார். இதில் சண்டை மூண்டதனால் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் என்கிற அப்பத்தை தமக்குள் பிரித்துக் கொண்டார்கள். tw_astonished:

இதற்கு முன்னர், ஹைதராபாத் நிசாம் தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார். ஆனால் ஒப்பந்தத்தை மீறி அவரது சமஸ்தானத்தை வலுக்கட்டாயமாக இந்திய யூனியனுடன் இணைத்துவிட்டார் பட்டேல். இதுதான் உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடு பிறந்த கதை. tw_blush:

  • தொடங்கியவர்

அங்கே ஜின்னா… இங்கே நேரு! எரியும் எல்லைக்கோடு- 2

jinnnnna.jpg

- ஆர்.முத்துக்குமார்

காஷ்மீர் கனவு ஜின்னாவின் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருந்தது. மன்னர் ஹரிசிங்கைப் பேசியே வழிக்குக் கொண்டுவரலாம் என்று பார்த்தால், அவர் அதற்கு இடம்கொடுப்பதாகத் தெரியவில்லை. எனில், யுத்தம் மட்டும்தான் சரியான வழி என்றனர் ஜின்னாவின் அருகில் இருந்த தலைவர்கள்.

அதேசமயம், நேரடி யுத்தம் செய்வதில் அவர்களுக்குப் பிரச்னை இருந்தது. ஒருவேளை, நாம் போரைத் தொடங்கியதும், ‘காஷ்மீரைக் காப்பாற்றுகிறோம்’ என்ற பெயரில் இந்தியா களத்தில் இறங்கிவிட்டால், அது இரு நாட்டுக்கும் இடையேயான யுத்தமாகப் பரிணாமம் பெறும். சுதந்திரம் வாங்கிய கையோடு பெரிய நாட்டுடனான யுத்தம் பேராபத்தாகப் போய்விடும். என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தபோது, பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு நினைவுக்கு வந்தவர்கள், பதான்கள்!

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்குப் பதான்கள் என்று பெயர். அவர்கள், தொழில்முறை போர்வீரர்கள் அல்லர். ஆனால், ஆயுதங்களைக் கையாளுவதில் ஆர்வமும் அனுபவமும் கொண்டவர்கள். அனுபவம் என்றால், முறைப்படி வித்தை கற்றவர்கள் அல்லர்! கரடுமுரடாகக் கையாளக்கூடியவர்கள். கண்ணில் கொஞ்சம் பணத்தையும் மனத்தில் நிறைய ஆசையையும் காட்டினால் போதும், உயிரைக் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள். ஆகவே, அவர்களை முதலில் காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்து கலகம் ஏற்படுத்தலாம் என்று முடிவானது.

04ss5.jpg



ஆம், மறைமுக யுத்தம். இயன்றவரைக்கும் பதான்களைக் கொண்டே காஷ்மீரைக் கபளீகரம் செய்வது. தேவைப்பட்டால், ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி பாகிஸ்தான் ராணுவத்தைக் களத்தில் இறக்குவது. முதலில், முஸாபராபாத்தைத் தாக்குவது. அடுத்து, டோனல். முடிந்ததும் ஊரியும் பாரமுல்லாவும். பிறகு, தலைநகராம் ஸ்ரீநகர். இறுதியாக, காஷ்மீர். இதுதான் திட்டம். பெயர், ஆபரேஷன் குல்மார்க்.

ஆபரேஷனுக்குத் தேவையான அத்தனை ஆயுதங்களும் பதான்கள் கைகளில் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டன. யார் கண்ணிலும்படாமல், அவர்களைக் கொண்டுபோய் காஷ்மீர் எல்லையில் இறக்கிவிடும் பணியையும் பாகிஸ்தான் ராணுவமே செய்துகொடுத்தது.

திட்டமிட்டபடி 22 அக்டோபர் 1947 அன்று காஷ்மீர் எல்லைக்குள் அசைவின்றி நுழைந்த பதான்கள், ஆவேசத் தாக்குதலில் இறங்கினர். திடீர்த் தாக்குதலை எதிர்பார்த்திராத மன்னர் ஹரிசிங்கின் ராணுவ வீரர்கள் நிலைகுலைந்து போயினர். முதலில் முஸாபராபாத் வசப்பட்டது. கூடவே, உற்சாகமும் வெறியும் சேர்ந்துகொண்டன. விளைவு, கண்ணில்பட்ட மனிதர்களை எல்லாம் அடித்து உதைத்தார்கள் பதான்கள். எதிரில் வந்த பெண்களை எல்லாம் இழுத்துவைத்து நாசம் செய்தார்கள். கடைகள், வீடுகளை எல்லாம் சூறையாடினார்கள்.

pakistan-army.jpg

விஷயம் மன்னர் ஹரிசிங்கின் கவனத்துக்குச் செல்வதற்கு முன்னர் காஷ்மீர் நண்பர்கள் வழியே இந்திய கவர்னர் ஜெனரல் மெளன்ட் பேட்டனின் காதுகளுக்குச் சென்றுவிட்டது. அவர் வழியே இந்தியப் பிரதமர் நேருவுக்கும் சென்றது. இறுதியாகத்தான் மன்னர் ஹரிசிங்குக்கு. காஷ்மீரில் நடப்பதைக் கவனமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தது இந்தியா. ஆனால், மன்னர் ஹரிசிங்கோ பதற்றத்தின் உச்சியில் இருந்தார். முஸாபராபாத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளுக்கும் முன்னேறிக் கொண்டிருந்தனர் பதான்கள்.

இப்படியேபோனால் ஒட்டுமொத்த காஷ்மீரையும் வாரிச்சுருட்டிவிடுவார்கள் என்பது மன்னர் ஹரிசிங்குக்குப் புரிந்தது. கூடவே, மாற்று யோசனைகளும் வரத்தொடங்கின. அவற்றில், முதன்மையான யோசனை... இந்தியாவின் உதவியைக் கோருவது. வெளிப்படையாகக் கேட்டேவிட்டார். அபய கோரிக்கையை அப்படியே ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இல்லை. முதலில் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிடுங்கள். பிறகு, காஷ்மீரைக் காப்பாற்ற உரிமையோடு உள்ளே வருகிறோம் என்றார்கள். அப்படிச் சொல்வதற்குக் காரணம் இருந்தது. எந்தவிதமான உறுதியும் இல்லாமல், சட்டென்று நிகழ்த்தக்கூடிய சாகசம் அல்ல போர். பின்னாளில் ஐ.நா உள்ளிட்ட பலருக்கும் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்பதால், நிபந்தனைப் பட்டியலை நீட்டியது இந்தியா.

நிர்கதியில் நிற்கும்போது நிபந்தனையை ஏற்க மறுப்பது சாத்தியமில்லை என்பது மன்னர் ஹரிசிங்குக்குப் புரிந்தது. மெல்ல தலையசைத்தார். அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் அரங்கேறின. வி.பி.மேனன், சாம் மானெக்சா உள்ளிட்டோர் காஷ்மீர் விரைந்தனர். மன்னரைச் சந்தித்துப் பேசினர். பிறகு டெல்லி திரும்பிய அவர்கள் நேரு, மெளன்ட் பேட்டனிடம் பேசினர்.

இங்கும் அங்குமாக நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் சட்ட நடவடிக்கைகள் முறைப்படி தொடங்கின. உடனடியாகப் புறப்பட்டு ஜம்மு சென்ற வி.பி.மேனன், அங்கிருந்த மன்னர் ஹரிசிங்கிடம் கையெழுத்து வாங்கினார். ஆம், அந்த நொடியில் காஷ்மீர் இந்தியாவின் அதிகாரபூர்வ ஆளுகைக்குள் வந்தது.

pakistan-army_140093k.jpg

அரசியல் நகர்வுகள் அரங்கேறியதைத் தொடர்ந்து ராணுவம் தன்னுடைய நகர்வைத் தொடங்கியது. இந்திய ராணுவம் ஸ்ரீநகர் நோக்கி அணிவகுத்தது. இதன் பொருள், இந்தியா தன்னுடைய பிரதேசங்களுள் ஒன்றான காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்திருக்கும் பாகிஸ்தான் ஆதரவு படையினருக்கு எதிராக யுத்தம் தொடங்கியிருக்கிறது என்பதுதான்.

விஷயம் ஜின்னாவை ஆத்திரம்கொள்ளச் செய்தது. ஒருபக்கம் தந்திரமாகக் காஷ்மீரை எழுதிவாங்கிக்கொண்டு, இன்னொரு பக்கம் யுத்தத்துக்குத் தயாராகியிருப்பதை அவர் துளியும் ரசிக்கவில்லை. ஆகவே, பதிலடி கொடுக்கும் பணியில் பாகிஸ்தானை ஈடுபடுத்தத் தயாரானார். அந்த நொடியில் பதான்களுக்கும் காஷ்மீருக்குமான மறைமுக யுத்தம் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நேரடி யுத்தமாக மாறியது.

பாரமுல்லாவை பாடாய்ப்படுத்திவிட்டு ஸ்ரீநகர் விமானநிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தது பதான்களின் படை.  அவர்களுக்காகவே காத்துக்கொண்டிருந்த இந்திய ராணுவம், பதான்கள் மீது மின்னல் வேகத் தாக்குதலை நடத்தியது. பெரிய எதிர்ப்புகள் இன்றி மெல்லமெல்ல முன்னேறிக்கொண்டிருந்த பதான்களுக்கு இந்தத் திடீர்த் தாக்குதல் அதிர்ச்சியைக் கொடுத்தது.

யுத்த தந்திரங்கள் பற்றிய எந்தவிதமான புரிதலும் இல்லாதவர்கள் பதான்கள். ஆனால், இந்திய ராணுவமோ முறையான வியூகங்களுடன் தாக்குதல் நடத்தியது. விளைவு, ஸ்ரீநகர் விமான நிலையத்தைக் கைப்பற்றும் பதான்களின் நோக்கம் பிசுபிசுத்துப் போனது. என்றாலும், துவண்டுபோன பதான்களுக்குத் தோள்கொடுக்க பாகிஸ்தான் ராணுவம் நேரடியாகக் களத்தில் இறங்கியது. 

பாகிஸ்தான் கூலிப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியது இந்திய ராணுவம். அதற்கான பரிசாக பதான்களின் கைகளுக்குச் சென்றிருந்த ஜாங்கர் இந்திய ராணுவத்தின் வசம் வந்துசேர்ந்தது. அடுத்தடுத்து இந்திய ராணுவம் முழுவேகத்தில் தாக்குதல் நடத்தியதில் பாரமுல்லாவும் வசப்பட்டது. அடுத்த நான்காவது நாள் ஊரியையும் பதான்களிடம் இருந்து விடுவித்தது இந்திய ராணுவம்.

hj.jpg

இங்கே எதுவும் செல்லுபடியாகாது என்று தெரிந்ததும் பாகிஸ்தான் கூலிப்படையும் ராணுவமும் லே பிராந்தியத்துக்குச் சென்று கார்கிலைக் கைப்பற்றின. அங்கிருந்த இந்தியப் படையினரால் கார்கிலைக் காப்பாற்ற முடியவில்லை. மாதக்கணக்கில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

ஓர் இடத்தை அவர்கள் கைப்பற்றுவதும், உடனே இந்தியப் படை அதிரடியாகச் செயல்பட்டு அதை மீட்டெடுப்பதும் தொடர்கதையாக மாறிக்கொண்டிருந்தது. ஆனால், அப்படித் தொடர்வதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை. விரைவில், முற்றும்போடுவதில் ஆர்வம் செலுத்தியது. இத்தனைக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்த பெரும்பாலான முனைகளில் இந்தியாவின் கைகளே ஓங்கியிருந்தன.

இறுதியில், இந்தியா ஒரு முடிவுக்கு வந்தது. பேசாமல் விஷயத்தை ஐக்கிய நாடுகள் சபையிடம் கொண்டு போகலாம். இதுதான் பிரதமர் நேருவின் வாதம். அதில், சில தலைவர்களுக்கு உடன்பாடில்லை. குறிப்பாக, உள்துறை அமைச்சர் வல்லபபாய் பட்டேலுக்கு அதில் துளியும் உடன்பாடில்லை.

ஒருவேளை, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா விசாரணை நடத்துகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். விசாரணை எப்படி நடக்கும்? காஷ்மீர் மீது பரிபூரண உரிமை கொண்ட இந்தியாவையும் கொஞ்சமும் உரிமை இல்லாத பாகிஸ்தானையும் சம அந்தஸ்தில் வைத்தே விசாரணை நடக்கும். இது அவமானம். அநாவசியமும்கூட. ஆகவே வேண்டாம் என்றே பலரும் சொன்னார்கள். எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டு உள்வாங்கிக் கொண்ட நேரு தனக்கு எது சரியென்று தோன்றியதோ அதைத்தான் செய்தார்.

‘‘எங்களுடன் முறைப்படி இணைந்த காஷ்மீர் பிராந்தியத்துக்குள் பாகிஸ்தான் ராணுவத்தின் பரிபூரண ஆசிர்வாதம் பெற்ற ஆசாமிகள் நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். காஷ்மீரின் ஒவ்வோர் அங்குலமும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியேற வேண்டும். கூலிக்கு வந்து குழப்பம் ஏற்படுத்தும் அத்தனை பேரும் வெளியேற வேண்டும். ஆவனச் செய்யுங்கள்.’’

India-Pakistan-Tension-war.jpg

நேருவின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் விசாரணையைத் தொடங்கியது. விசாரணை என்றால், அதற்கு தனியே குழு ஒன்றைப் போடுவது பாரம்பர்ய பழக்கம். அதன்படி இந்தியா – பாகிஸ்தான் பிரச்னைக்காக ஐ.நா. குழு உருவாக்கப்பட்டது. மேற்படி பகுதிகளுக்கு அந்தக் குழுவின் உறுப்பினர்கள் நேரில் செல்வார்கள். என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து உள்ளது உள்ளபடி அறிக்கையாகத் தயார் செய்துகொடுப்பார்கள். இதுதான் நடைமுறை.

அதன்படியே எல்லாம் நடந்தன. பாகிஸ்தான் ஆதரவுபெற்ற கூலிப்படையினர் உடனடியாக காஷ்மீர் பிராந்தியத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு வந்தது ஐ.நா-விடம் இருந்து. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 13, 1948 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருதரப்பும் யுத்தத்தை நிறுத்திக்கொள்ளுங்கள். காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கையை எடுங்கள். இதுதான் தீர்மானத்தின் சாரம்.

போர் நிறுத்தம் என்பது அதிகாரப்பூர்வமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே நடைபெறும் யுத்தத்துக்கு மாத்திரமே. ஆனால், பாகிஸ்தான் ஆதரவுப் படையினர் தங்களுடைய வாலை சுருட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. ஆகவே, அந்தக் காரியத்தை முடிக்கும் பணியில் இந்திய ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டது. மெல்ல மெல்லக் கூலிப்படையினர் விரட்டி அடிக்கப்பட்டனர். இறுதியாக ஜனவரி 1, 1949 அன்று போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

indian-army-l.jpg

இறுதியாக காஷ்மீரை யார், எந்த அளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தபோது ஐந்தில் இரண்டு பங்கு காஷ்மீரை பாகிஸ்தான் கபளீகரம் செய்திருந்தது. மீதமுள்ள ஐந்தில் மூன்று பங்கே இந்தியாவுக்கு எஞ்சியது.

கொஞ்சம் புரியும்படி சொல்லவேண்டும் என்றால், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான அன்று எந்தப் படை எங்கு இருக்கிறதோ அதை அடிப்படையாகவைத்து எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி காஷ்மீரில் ஐந்தில் இரண்டு பங்கு பாகிஸ்தான் வசம் சென்றுவிட்டது. இதனை பாகிஸ்தான் அரசு, ‘ஆஸாத் காஷ்மீர்’ என்று அழைக்கிறது. ஆனால் அதனை இந்தியா, ‘பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் (Pakistan Occupied Kashmir)’ என்கிறது.

எல்லையில் போர் மேகங்கள் கலைந்திருந்தன. ஆனாலும், இருதரப்புக்கும் இடையே அரசியல் ரீதியிலான உரசல்கள் நின்றுவிடவில்லை. அந்த உரசல்களில் இருந்து மீண்டும் ஒரு யுத்த நெருப்பு உருவாவதற்கு 16 ஆண்டுகள் பிடித்தன. அதுதான் 1965 யுத்தம்!

(பதற்றம் தொடர்கிறது...)

http://www.vikatan.com/news/coverstory/69494-history-behind-indo-pak-war-series---2.art

  • தொடங்கியவர்

ஆபரேஷன் ஜிப்ரால்டரும்... ஆடுமேய்க்கும் சிறுவனும்..! எரியும் எல்லைக்கோடு - 3

newssds1_13308.jpg

_85369783_gettyimages-71831452_12099.jpg

சீனாவுடன் நடந்த யுத்தம் கொடுத்த தோல்வி இந்திய ராணுவ வீரர்களை மனதளவில் சோர்வடையச் செய்திருந்தது. போதாக்குறைக்கு, பிரதமர் நேருவின் மரணமும் சேர்ந்துகொண்டது. அது, ஆட்சியாளர்களையும் பொதுமக்களையும் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. ஒட்டுமொத்த தேசமும் உத்வேகம் குன்றிப்போயிருந்த தருணங்கள் அவை.

நடப்பதை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் மனதில் ஒரு சபலம். காயம்பட்ட இடத்தில் ஓங்கி அடித்தால் காஷ்மீர் கிடைக்குமே!

அப்போது பாகிஸ்தானின் அதிபர் நாற்காலியில் இருந்தவர் ஜெனரல் அயூப்கான். ராணுவப் புரட்சியின் வழியாக ஆட்சியைப் பிடித்தவர். ‘‘ஜனநாயகம் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. நாடு எப்படி ஆளப்பட வேண்டும் என்று நான் வழிகாட்டுகிறேன். இனி அதன் பெயர்தான் ஜனநாயகம்’’ என்று சொல்லி ஆட்சி நடத்தியவர். அவருக்குத் துணையாக இருந்தவர் அமைச்சர் ஜுல்ஃபிகர் அலி புட்டோ. பாகிஸ்தானின் உள்விவகாரங்கள் தொடங்கி சர்வதேச அரசியல் வரை அனைத்தையும் குறித்துவைத்திருந்தவர்.

அதிகாரம் நிறைந்த ஆட்சியாளர் அயூப்கான் என்றால், அறிவார்ந்த அரசியல்வாதி புட்டோ. இவர்கள் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் இணைந்து நின்று இந்தியாவுக்கு எதிராகக் காய் நகர்த்தத் தொடங்கினர். இந்தியாவின் மீது எப்படியெல்லாம் ராணுவத் தாக்குதல் நடத்தினால் வெற்றிப்பழம் கிடைக்கும் என்று வியூகம் வகுப்பவர் அயூப்கான் என்றால், ஆபத்துக் காலங்களில் எப்படிச் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவது என்பதற்கான உத்திகளை வகுக்கக்கூடியவர் புட்டோ.

பாகிஸ்தான் அரசியலைப் பொறுத்தவரை ஓர் ஆட்சியாளர் மீது அதிருப்தி இருக்கிறதென்றால், அவர் பிரதமராக இருந்தாலும் சரி, அதிபராக இருந்தாலும் சரி, காஷ்மீரை முன்வைத்து ஒரு போர் நடத்திவிட்டால்போதும். அதளபாதாளத்தில் விழுந்துகிடக்கும் இமேஜ்கூட உச்சாணிக் கொம்பில் வந்து ஒட்டிக்கொள்ளும். அந்த அளவுக்கு காஷ்மீர் என்பது ஒரு மந்திரம்போல பாகிஸ்தான் மக்களின் மனதில் இரண்டறக் கலந்திருந்தது. அதேசமயம், அந்த மந்திரம் இருமுனைக் கத்தி போன்றதும்கூட. காஷ்மீருக்கான யுத்தத்தில் தோல்வி என்று வரும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆட்சியாளரை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள்.

அந்த அபாயத்தை அயூப்கானும் புட்டோவும் நன்றாகவே உணர்ந்திருந்தனர். என்றாலும், அயூப்கானுக்கு உடனடியாக ஒரு யுத்தம் தேவைப்பட்டது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் அதிபர் தேர்தல் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், இமேஜை உயர்த்திக்கொள்வதற்கு யுத்தம் உதவி செய்யும் என்பது அவரது கணிப்பு.

யுத்தம் என்றதும் காஷ்மீரைக் குறிவைப்பதுதான் அவர்களுடைய வழக்கம். ஆனால், இவர் சற்று வித்தியாசமாகச் சிந்தித்தார். இவர் என்றால் புட்டோவும் சேர்ந்துதான். காஷ்மீரைத் தவிர்த்துவிட்டு கட்ச் பகுதியைக் குறிவைத்தனர்.

1965_12362.jpg

கட்ச் வளைகுடா என்பது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கேட்பாரற்றுக் கிடக்கும் பிராந்தியம். கடற்பறவைகளும் முரட்டுக்குதிரைகளும் மட்டுமே வாழும் சேறும் சகதியுமான பகுதி. நிலப்பரப்பின் அளவு என்று பார்த்தால் காஷ்மீர் அளவுக்கு இருக்கும். ஆனால், காஷ்மீர் அளவுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியல்ல.

பிரிவினை முதலே அந்தப் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரும் உறுமிக்கொள்வதும் உரசிக்கொள்வதும் இயல்பான ஒன்று. குறிப்பாக, ரான் பகுதியில் உரசல் ஒலிகள் அதிகம் கேட்பதுண்டு. ஆனால், அவை எதுவும் பெரிய போராக வெடித்ததில்லை. இந்த முறை அதைச் செய்துபார்த்துவிடுவது என்று முடிவுசெய்தது பாகிஸ்தான்.

காரணம், இந்திய ராணுவத்தின் மனச்சோர்வு. அதைப் பயன்படுத்திப் பலன் பார்க்கும் நோக்கத்துடன் பாகிஸ்தான் ராணுவமே முதல் தாக்குதலை ஆரம்பித்துவைத்தது. இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் வேகமெடுத்தன. வியப்பூட்டும் வகையில், பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு இந்திய ராணுவம் சற்றே தடுமாறியது.

எல்லையில் எதிர்பாராத காரியங்கள் எல்லாம் நடந்தன. ஓரிரு வெற்றிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பெரும்பாலும் பின்னடைவுதான். ஒருகட்டத்தில் தானாக முன்வந்து போர் நிறுத்தம் அறிவித்தது இந்தியா. அதே கையோடு, தமது ராணுவத்தைத் திரும்பப்பெறுவதாகவும் அறிவித்தது.

இது பாகிஸ்தானை உத்வேகம்கொள்ளச் செய்தது. ஆஹா, இனி இந்தியா அவ்வளவுதான் என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. என்றாலும், இங்கிலாந்து பிரதமர் ஹெரால்ட் வில்சனின் தலையீடு காரணமாக இருதரப்பு மோதல்கள் நிறுத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகளின் இறுதியில் கட்ச் வளைகுடாவின் வடக்குப் பகுதி பாகிஸ்தானுக்கு என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. கிடைத்த வரை லாபம் என்றுதான் பாகிஸ்தான் படையெடுத்தது. இங்கிலாந்தின் உதவியோடு வடக்குப் பகுதியைப் பெற்றுக்கொண்டு விடைபெற்றது.

உண்மையில், இப்படியொரு வெற்றியை பாகிஸ்தான் எதிர்பார்த்திருக்கவில்லை. அது, அவர்களை அடுத்த கட்டத்துக்கு உந்தித்தள்ளியது. ஆம், ருசி கண்ட பூனைபோல அடுத்த யுத்தத்துக்கு ஆயத்தமானது. இந்திய ராணுவம் நிலைகுலைந்து போயிருக்கும் இந்த நேரத்தில் கட்ச் பகுதிக் கலவரத்தையே அவர்களால் சமாளிக்க முடியவில்லை. காஷ்மீருக்குள் கலகம் விளைவித்தால் பெரும் லாபம் கிடைக்கும். யார் கண்டது, ஒட்டுமொத்த காஷ்மீரே கைக்கு வரவும் வாய்ப்பிருக்கிறது என்று கணித்தது பாகிஸ்தான்.

img_4041_12293.jpg

அதே பழைய திட்டம்தான். முதலில் பயங்கரவாதிகளை காஷ்மீர் எல்லைக்குள் அனுப்பிவைப்பது; இஸ்லாமிய கோஷங்களை எழுப்பி உள்நாட்டுக் கலவரத்தை உருவாக்குவது; பிறகு, ராணுவத்தை அனுப்பித் தாக்குதல் நடத்துவது; இயன்றவரைக்கும் அதிக அளவிலான நிலப்பரப்பைக் கைப்பற்றுவது. வழக்கம்போல சர்வதேச அமைதிப் புறாக்கள் வந்து சேர்வார்கள். அவர்களின் துணையோடு பேசிப்பேசியே காஷ்மீரின் சில பகுதிகளை வசப்படுத்திக்கொள்ளலாம். கிளர்ச்சியூட்டும் ஆசையுடன் வகுத்த திட்டத்துக்கு அவர்கள் வைத்த பெயர், ஆபரேஷன் ஜிப்ரால்டர்.

ஜிப்ரால்டர் என்ற பெயர் தேர்வே வித்தியாசமானது. மத்திய ஸ்பெயினில் மூர் இனத்து மக்கள் எடுத்த ராணுவ முயற்சியின் பெயர் இது. கிட்டத்தட்ட அதேபோன்ற ராணுவ முயற்சியை நடத்தி காஷ்மீரைக் கைப்பற்றுவதுதான் பாகிஸ்தான் ராணுவத்தின் திட்டம்.

1965 ஆகஸ்ட் முதல் வாரத்தில் சில பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்தனர். யாருக்குமே தெரியாது என்றுதான் நினைத்தார்கள். ஆனால், அங்கே ஆடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவனின் கண்களில் அவர்கள் பட்டனர். அவன் வழியே ராணுவத்துக்குத் தகவல் சென்றது. அவர்கள் வழியே பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் சென்றது.

கட்ச் விவகாரத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப்போனதால் வேலி தாண்டி வரப் பார்க்கிறதா வெள்ளாடு? கண்கள் சிவந்திருக்கக் கூடும் அவருக்கு. ‘‘கட்ச் வேறு, காஷ்மீர் வேறு. எல்லைக்குள் நுழைந்த அவர்களை அடித்து விரட்டுங்கள்’’ என்று உத்தரவிட்டார். அதற்காகவே காத்துக்கொண்டிருந்த இந்திய ராணுவம், ஊடுருவல்காரர்கள் மீது தாக்குதலைத் தொடங்கியது. ஆசையுடன் வந்த அத்தனை பேரும் சிறுசிறு சாகசங்களை மட்டும் நிகழ்த்திக் காட்டிவிட்டு, வீழ்ந்துவிட்டனர். அத்தோடு ஆபரேஷன் ஜிப்ரால்டர் அஸ்தமனமானது.

55e025d3a8084_12375.jpg

கட்ச் வளைகுடாவில் பின்வாங்கிய இந்திய ராணுவம் காஷ்மீர் என்றதும் கொதித்தெழுந்தது எப்படி என்று ஆச்சரியப்பட்டுப்போனார் அயூப்கான். ஆனாலும், அவர் அதிர்ந்துபோகவில்லை. ஆபரேஷன் க்ராண்ட்ஸ்லாம் என்ற அடுத்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். ஆம், பயங்கரவாதிகள் மட்டுமல்ல, பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் தாங்கள் அணிந்திருந்த முகமூடிகளை எல்லாம் கழற்றிவீசிவிட்டு, போர் நிறுத்தக் கோட்டைத் தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்தனர்.

கனரகத் துப்பாக்கிகள், பீரங்கிகள் சகிதம் வந்த அவர்கள் 1965 செப்டம்பர் முதல் தேதியன்று தாக்குதலைத் தொடுத்தனர். அமெரிக்க நாட்டு பேட்டன் டாங்குகள் கொண்ட படையினர் நடத்திய தாக்குதல் காரணமாக 30 சதுர மைல் அளவுக்கான நிலப்பரப்பு பாகிஸ்தான் வசம் சென்றது.

அவர்களுடைய அடுத்த இலக்கு, ஆக்நூர் பாலம். அதைக் கைப்பற்றிவிட்டால் ஜம்மு- காஷ்மீர் - பஞ்சாப் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படும். அது அபாய அறிகுறி என்பது இந்திய ராணுவத்துக்குப் புரிந்தது. அதைத் தடுப்பதற்கு ஆகவேண்டிய அத்தனை முயற்சிகளையும் எடுத்தது இந்திய ராணுவம். இருதரப்புமே விமானத் தாக்குதலைத் தொடுத்தன.

இந்தியா தொடுத்த வேம்பயர் விமானத் தாக்குதலை ஸேபர் ஜெட் விமானம் கொண்டு எதிர்கொண்டது பாகிஸ்தான். இருதரப்பும் சளைக்காமல் போரிட்டன. அப்போது, யுத்த வியூகத்தில் சிறு மாற்றத்தைச் செய்தது இந்தியா. அது பெருவெடிப்பாக மாறியது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இரண்டாம் யுத்தத்தின் ஆகப்பெரிய திருப்புமுனை அது!

(பதற்றம் தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/69683-history-behind-indo-pak-war-series-3.art

  • தொடங்கியவர்
 

ஆபரேஷன் ஜிப்ரால்டரும்... ஆடுமேய்க்கும் சிறுவனும்..! எரியும் எல்லைக்கோடு - 3

 

_85369783_gettyimages-71831452_12099.jpg

சீனாவுடன் நடந்த யுத்தம் கொடுத்த தோல்வி இந்திய ராணுவ வீரர்களை மனதளவில் சோர்வடையச் செய்திருந்தது. போதாக்குறைக்கு, பிரதமர் நேருவின் மரணமும் சேர்ந்துகொண்டது. அது, ஆட்சியாளர்களையும் பொதுமக்களையும் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. ஒட்டுமொத்த தேசமும் உத்வேகம் குன்றிப்போயிருந்த தருணங்கள் அவை.

நடப்பதை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் மனதில் ஒரு சபலம். காயம்பட்ட இடத்தில் ஓங்கி அடித்தால் காஷ்மீர் கிடைக்குமே!

அப்போது பாகிஸ்தானின் அதிபர் நாற்காலியில் இருந்தவர் ஜெனரல் அயூப்கான். ராணுவப் புரட்சியின் வழியாக ஆட்சியைப் பிடித்தவர். ‘‘ஜனநாயகம் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. நாடு எப்படி ஆளப்பட வேண்டும் என்று நான் வழிகாட்டுகிறேன். இனி அதன் பெயர்தான் ஜனநாயகம்’’ என்று சொல்லி ஆட்சி நடத்தியவர். அவருக்குத் துணையாக இருந்தவர் அமைச்சர் ஜுல்ஃபிகர் அலி புட்டோ. பாகிஸ்தானின் உள்விவகாரங்கள் தொடங்கி சர்வதேச அரசியல் வரை அனைத்தையும் குறித்துவைத்திருந்தவர்.

அதிகாரம் நிறைந்த ஆட்சியாளர் அயூப்கான் என்றால், அறிவார்ந்த அரசியல்வாதி புட்டோ. இவர்கள் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் இணைந்து நின்று இந்தியாவுக்கு எதிராகக் காய் நகர்த்தத் தொடங்கினர். இந்தியாவின் மீது எப்படியெல்லாம் ராணுவத் தாக்குதல் நடத்தினால் வெற்றிப்பழம் கிடைக்கும் என்று வியூகம் வகுப்பவர் அயூப்கான் என்றால், ஆபத்துக் காலங்களில் எப்படிச் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவது என்பதற்கான உத்திகளை வகுக்கக்கூடியவர் புட்டோ.

பாகிஸ்தான் அரசியலைப் பொறுத்தவரை ஓர் ஆட்சியாளர் மீது அதிருப்தி இருக்கிறதென்றால், அவர் பிரதமராக இருந்தாலும் சரி, அதிபராக இருந்தாலும் சரி, காஷ்மீரை முன்வைத்து ஒரு போர் நடத்திவிட்டால்போதும். அதளபாதாளத்தில் விழுந்துகிடக்கும் இமேஜ்கூட உச்சாணிக் கொம்பில் வந்து ஒட்டிக்கொள்ளும். அந்த அளவுக்கு காஷ்மீர் என்பது ஒரு மந்திரம்போல பாகிஸ்தான் மக்களின் மனதில் இரண்டறக் கலந்திருந்தது. அதேசமயம், அந்த மந்திரம் இருமுனைக் கத்தி போன்றதும்கூட. காஷ்மீருக்கான யுத்தத்தில் தோல்வி என்று வரும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆட்சியாளரை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள்.

அந்த அபாயத்தை அயூப்கானும் புட்டோவும் நன்றாகவே உணர்ந்திருந்தனர். என்றாலும், அயூப்கானுக்கு உடனடியாக ஒரு யுத்தம் தேவைப்பட்டது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் அதிபர் தேர்தல் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், இமேஜை உயர்த்திக்கொள்வதற்கு யுத்தம் உதவி செய்யும் என்பது அவரது கணிப்பு.

யுத்தம் என்றதும் காஷ்மீரைக் குறிவைப்பதுதான் அவர்களுடைய வழக்கம். ஆனால், இவர் சற்று வித்தியாசமாகச் சிந்தித்தார். இவர் என்றால் புட்டோவும் சேர்ந்துதான். காஷ்மீரைத் தவிர்த்துவிட்டு கட்ச் பகுதியைக் குறிவைத்தனர்.

1965_12362.jpg

கட்ச் வளைகுடா என்பது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கேட்பாரற்றுக் கிடக்கும் பிராந்தியம். கடற்பறவைகளும் முரட்டுக்குதிரைகளும் மட்டுமே வாழும் சேறும் சகதியுமான பகுதி. நிலப்பரப்பின் அளவு என்று பார்த்தால் காஷ்மீர் அளவுக்கு இருக்கும். ஆனால், காஷ்மீர் அளவுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியல்ல.

பிரிவினை முதலே அந்தப் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரும் உறுமிக்கொள்வதும் உரசிக்கொள்வதும் இயல்பான ஒன்று. குறிப்பாக, ரான் பகுதியில் உரசல் ஒலிகள் அதிகம் கேட்பதுண்டு. ஆனால், அவை எதுவும் பெரிய போராக வெடித்ததில்லை. இந்த முறை அதைச் செய்துபார்த்துவிடுவது என்று முடிவுசெய்தது பாகிஸ்தான்.

காரணம், இந்திய ராணுவத்தின் மனச்சோர்வு. அதைப் பயன்படுத்திப் பலன் பார்க்கும் நோக்கத்துடன் பாகிஸ்தான் ராணுவமே முதல் தாக்குதலை ஆரம்பித்துவைத்தது. இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் வேகமெடுத்தன. வியப்பூட்டும் வகையில், பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு இந்திய ராணுவம் சற்றே தடுமாறியது.

எல்லையில் எதிர்பாராத காரியங்கள் எல்லாம் நடந்தன. ஓரிரு வெற்றிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பெரும்பாலும் பின்னடைவுதான். ஒருகட்டத்தில் தானாக முன்வந்து போர் நிறுத்தம் அறிவித்தது இந்தியா. அதே கையோடு, தமது ராணுவத்தைத் திரும்பப்பெறுவதாகவும் அறிவித்தது.

இது பாகிஸ்தானை உத்வேகம்கொள்ளச் செய்தது. ஆஹா, இனி இந்தியா அவ்வளவுதான் என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. என்றாலும், இங்கிலாந்து பிரதமர் ஹெரால்ட் வில்சனின் தலையீடு காரணமாக இருதரப்பு மோதல்கள் நிறுத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகளின் இறுதியில் கட்ச் வளைகுடாவின் வடக்குப் பகுதி பாகிஸ்தானுக்கு என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. கிடைத்த வரை லாபம் என்றுதான் பாகிஸ்தான் படையெடுத்தது. இங்கிலாந்தின் உதவியோடு வடக்குப் பகுதியைப் பெற்றுக்கொண்டு விடைபெற்றது.

உண்மையில், இப்படியொரு வெற்றியை பாகிஸ்தான் எதிர்பார்த்திருக்கவில்லை. அது, அவர்களை அடுத்த கட்டத்துக்கு உந்தித்தள்ளியது. ஆம், ருசி கண்ட பூனைபோல அடுத்த யுத்தத்துக்கு ஆயத்தமானது. இந்திய ராணுவம் நிலைகுலைந்து போயிருக்கும் இந்த நேரத்தில் கட்ச் பகுதிக் கலவரத்தையே அவர்களால் சமாளிக்க முடியவில்லை. காஷ்மீருக்குள் கலகம் விளைவித்தால் பெரும் லாபம் கிடைக்கும். யார் கண்டது, ஒட்டுமொத்த காஷ்மீரே கைக்கு வரவும் வாய்ப்பிருக்கிறது என்று கணித்தது பாகிஸ்தான்.

img_4041_12293.jpg

அதே பழைய திட்டம்தான். முதலில் பயங்கரவாதிகளை காஷ்மீர் எல்லைக்குள் அனுப்பிவைப்பது; இஸ்லாமிய கோஷங்களை எழுப்பி உள்நாட்டுக் கலவரத்தை உருவாக்குவது; பிறகு, ராணுவத்தை அனுப்பித் தாக்குதல் நடத்துவது; இயன்றவரைக்கும் அதிக அளவிலான நிலப்பரப்பைக் கைப்பற்றுவது. வழக்கம்போல சர்வதேச அமைதிப் புறாக்கள் வந்து சேர்வார்கள். அவர்களின் துணையோடு பேசிப்பேசியே காஷ்மீரின் சில பகுதிகளை வசப்படுத்திக்கொள்ளலாம். கிளர்ச்சியூட்டும் ஆசையுடன் வகுத்த திட்டத்துக்கு அவர்கள் வைத்த பெயர், ஆபரேஷன் ஜிப்ரால்டர்.

ஜிப்ரால்டர் என்ற பெயர் தேர்வே வித்தியாசமானது. மத்திய ஸ்பெயினில் மூர் இனத்து மக்கள் எடுத்த ராணுவ முயற்சியின் பெயர் இது. கிட்டத்தட்ட அதேபோன்ற ராணுவ முயற்சியை நடத்தி காஷ்மீரைக் கைப்பற்றுவதுதான் பாகிஸ்தான் ராணுவத்தின் திட்டம்.

1965 ஆகஸ்ட் முதல் வாரத்தில் சில பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்தனர். யாருக்குமே தெரியாது என்றுதான் நினைத்தார்கள். ஆனால், அங்கே ஆடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவனின் கண்களில் அவர்கள் பட்டனர். அவன் வழியே ராணுவத்துக்குத் தகவல் சென்றது. அவர்கள் வழியே பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் சென்றது.

கட்ச் விவகாரத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப்போனதால் வேலி தாண்டி வரப் பார்க்கிறதா வெள்ளாடு? கண்கள் சிவந்திருக்கக் கூடும் அவருக்கு. ‘‘கட்ச் வேறு, காஷ்மீர் வேறு. எல்லைக்குள் நுழைந்த அவர்களை அடித்து விரட்டுங்கள்’’ என்று உத்தரவிட்டார். அதற்காகவே காத்துக்கொண்டிருந்த இந்திய ராணுவம், ஊடுருவல்காரர்கள் மீது தாக்குதலைத் தொடங்கியது. ஆசையுடன் வந்த அத்தனை பேரும் சிறுசிறு சாகசங்களை மட்டும் நிகழ்த்திக் காட்டிவிட்டு, வீழ்ந்துவிட்டனர். அத்தோடு ஆபரேஷன் ஜிப்ரால்டர் அஸ்தமனமானது.

55e025d3a8084_12375.jpg

கட்ச் வளைகுடாவில் பின்வாங்கிய இந்திய ராணுவம் காஷ்மீர் என்றதும் கொதித்தெழுந்தது எப்படி என்று ஆச்சரியப்பட்டுப்போனார் அயூப்கான். ஆனாலும், அவர் அதிர்ந்துபோகவில்லை. ஆபரேஷன் க்ராண்ட்ஸ்லாம் என்ற அடுத்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். ஆம், பயங்கரவாதிகள் மட்டுமல்ல, பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் தாங்கள் அணிந்திருந்த முகமூடிகளை எல்லாம் கழற்றிவீசிவிட்டு, போர் நிறுத்தக் கோட்டைத் தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்தனர்.

கனரகத் துப்பாக்கிகள், பீரங்கிகள் சகிதம் வந்த அவர்கள் 1965 செப்டம்பர் முதல் தேதியன்று தாக்குதலைத் தொடுத்தனர். அமெரிக்க நாட்டு பேட்டன் டாங்குகள் கொண்ட படையினர் நடத்திய தாக்குதல் காரணமாக 30 சதுர மைல் அளவுக்கான நிலப்பரப்பு பாகிஸ்தான் வசம் சென்றது.

அவர்களுடைய அடுத்த இலக்கு, ஆக்நூர் பாலம். அதைக் கைப்பற்றிவிட்டால் ஜம்மு- காஷ்மீர் - பஞ்சாப் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படும். அது அபாய அறிகுறி என்பது இந்திய ராணுவத்துக்குப் புரிந்தது. அதைத் தடுப்பதற்கு ஆகவேண்டிய அத்தனை முயற்சிகளையும் எடுத்தது இந்திய ராணுவம். இருதரப்புமே விமானத் தாக்குதலைத் தொடுத்தன.

இந்தியா தொடுத்த வேம்பயர் விமானத் தாக்குதலை ஸேபர் ஜெட் விமானம் கொண்டு எதிர்கொண்டது பாகிஸ்தான். இருதரப்பும் சளைக்காமல் போரிட்டன. அப்போது, யுத்த வியூகத்தில் சிறு மாற்றத்தைச் செய்தது இந்தியா. அது பெருவெடிப்பாக மாறியது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இரண்டாம் யுத்தத்தின் ஆகப்பெரிய திருப்புமுனை அது!

(பதற்றம் தொடரும்)

 

 

 

http://www.vikatan.com/news/coverstory/69683-history-behind-indo-pak-war-series-3.art

  • தொடங்கியவர்

ஜெய் ஜவான்: சுற்றி வளைக்காத சுளீர் பதிலடி..! - எரியும் எல்லைக்கோடு! 4 - ஆர்.முத்துக்குமார்

pakisss_15354.jpg

Fioooooo_13118.jpg

ட்ச் பகுதியில் கையாண்ட யுக்தியைக் காஷ்மீர் முனையிலும் பயன்படுத்தி வெற்றிக்கனியைச் சுவைக்கும் கனவோடு வந்திறங்கியது பாகிஸ்தான் ராணுவம். ஆனால், அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது இந்தியா.

‘‘ஒருபக்கம், ஆக்நூரில் யுத்தம் நடந்துகொண்டிருக்கட்டும்... இன்னொரு பக்கம், லாகூர் நோக்கி ஒரு படை செல்லட்டும்’’ என்று உத்தரவிட்டார் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. ஆம், நீட்டுகின்ற வாலை ஒட்ட நறுக்குவது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்திருந்தார் சாஸ்திரி. அந்த வேகத்தில் உருவான முழக்கம்தான், ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’. ‘‘அப்படியே ஆகட்டும்’’ என்று சொல்லி, லாகூர் நோக்கி ஆவேசத்துடன் அணிவகுக்கத் தொடங்கியது இந்திய ராணுவம்.

 

 

மெய்யான அதிரடி என்றால் இதுதான். ‘லாகூரைப் பிடிக்க வருகிறார்கள்’ என்றதும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களைப் பதற்றம் பற்றிக்கொண்டது. என்ன நடக்கிறது எல்லையில்? ஊடுருவி வந்த எதிரிகளைத் தாக்குவது மட்டும்தானே இதுவரை இந்திய ராணுவம் செய்துவந்த காரியம். அதை நம்பித்தானே ஆயுதத்தையே தூக்கினோம். இப்போது என்ன ஆயிற்று அவர்களுக்கு? புதிதாக எல்லை கடந்துவந்து எதிரிகளைத் தாக்குகிறார்கள்… யார் கொடுத்த தைரியம்... எங்கிருந்து வந்த துணிச்சல்?

ஆவேசமான கேள்விகளை எழுப்பினாலும் அடுத்து என்ன செய்வது என்று அயூப்கானுக்கும் தெரியவில்லை. புட்டோவுக்கும் புரியவில்லை. காரணம், எல்லை கடந்த தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் எதையும் அவர்கள் செய்திருக்கவில்லை. சேணம் கட்டிய குதிரையாக காஷ்மீரை மட்டுமே குறிவைத்துச் சென்றிருந்ததன் விளைவு, அது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும், வருவதை எதிர்கொள்வதுதானே போரியல் நியதி. காஷ்மீர் எல்லையில் களப்பணியாற்றிவந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை லாகூர் பக்கம் திருப்பிவிட்டனர்.

iii_13334.jpg

6 செப்டம்பர் 1965. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது யுத்தம் பேருருவம் கொண்டது. ஆம், காஷ்மீர் எல்லை, பஞ்சாப் எல்லை என்ற இருமுனைகளிலும் யுத்த நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது. இருதரப்பிலும் பெருமளவு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்காவிடம் இருந்து வாங்கிவைத்திருந்த பேட்டர் எம் 47 மற்றும் 48 ரக பீரங்கிகளைப் பயன்படுத்தியது பாகிஸ்தான். பதிலுக்குத் தம் வசமிருந்த எம் 4 ஷெர்மன் ரக பீரங்கி கொண்டு எதிர்த்தாக்குதல் நடத்தியது இந்தியா.

போரில் யாருக்கு முன்னேற்றம், யாருக்குப் பின்னடைவு என்பன குறித்த ஆர்வமூட்டும் விவாதங்கள் இருநாடுகளிலும் இடைவிடாமல் நடந்துகொண்டிருந்தன... இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் இருந்தன. அதிக அளவிலான டாங்கிகள் பயன்படுத்தப்பட்ட யுத்தம் என்பதால், இந்த யுத்தத்தைக் கவலையுடன் கண்காணிக்கத் தொடங்கின உலக வல்லரசு நாடுகள்.

அவசரமாகக் கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் போர் நிறுத்தம் செய்வதற்கான யுக்திகள் குறித்து விவாதித்தது. இரண்டு நாடுகளும் தங்களுக்கான போர் நிறுத்த எல்லைக்கோட்டைத் தாண்டி வரக் கூடாது. குறிப்பாக, ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் வரவே கூடாது என்று வழமையான தீர்மானத்தைப் புத்தாக்கம் செய்து நிறைவேற்றியது.

தீர்மானம் நிறைவேற்றியதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச்செயலாளர் யூ தாண்ட் நேரில் வந்து இருநாட்டுத் தலைவர்களிடமும் பேசினார். முதலில், பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடம் பேசினார்... அடுத்து, இந்தியத் தரப்பிடம் பேசினார். ஆனால், கட்ச் வளைகுடாவை வளைத்த கதையும் காஷ்மீரைக் கபளீகரம் செய்த முயற்சியும் பேரன்புகொண்ட பிரதமர் சாஸ்திரியைப் பெருங்கோபம் கொண்டவராக மாற்றியிருந்தது. யுத்த நிறுத்தம் பற்றி மூச்சே விடவில்லை.

இது, பாகிஸ்தானைக் காட்டிலும் சீனாவுக்குத்தான் அதிக ஆத்திரத்தைக் கொடுத்ததுபோல. ‘இந்தியா, படைக்குவிப்பை நிறுத்தாவிட்டால், கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதற்கு இந்தியா தரப்பில் பதில் சொல்வதற்கு முன்னர் இங்கிலாந்தும் அமெரிக்காவும் எதிர்வினையாற்றின. ‘இருநாட்டுப் போரில் சீனா தலையிடும்பட்சத்தில் இங்கிலாந்தும் அமெரிக்காவும் இந்தியாவின் பக்கம் நிற்கவேண்டியிருக்கும்’ என்றன.

oneee_13132.jpg

ஒருவேளை, சீனாவே ஆதரவு கொடுத்தாலும், ஆயுதம் கொடுத்தாலும் யுத்தத்தைத் தொடர முடியும் என்றோ, வெற்றியை சுவாசிக்கமுடியும் என்றோ அயூப்கான் நம்பவில்லை. புட்டோவுக்கும் அது புரிந்திருந்தது. ஆகவே, பறக்கின்ற சமாதானக் கொடிக் கம்பங்களைப் பற்றிக்கொண்டு போர் நிறுத்தம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் அதை எப்படிச் செல்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தனர்.

அந்தச் சமயம் பார்த்து ஐக்கிய நாடுகள் சபை அடுத்த தீர்மானத்தை அவசரமாக நிறைவேற்றியது. 20 செப்டம்பர் 1965 அன்று நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானம் போர் நிறுத்தத்துக்கு இரண்டு நாட்கள் கெடு விதித்தது. அதற்காகவே காத்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்தது. சர்வதேச அழுத்தங்கள் ஒருபக்கம் இருந்தாலும், போர்க்களத்தில் கிடைத்த வெற்றி பிரதமர் சாஸ்திரியின் மனதை லேசாக்கியிருந்தது. ஆகவே, அவரும் இறங்கிவர இசைவு தெரிவித்திருந்தார்.

என்னதான் தோல்விமுகம் வந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் பேசினார் ஜுல்ஃபிகர் அலி புட்டோ. ‘‘பாகிஸ்தான் இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்கூட போரிடத் தயாராக இருக்கிறது. எல்லைகளைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராகவே இருக்கிறோம்” என்றார் அவர்.

அவர் எல்லை என்று சொன்னது காஷ்மீரையும் சேர்த்து என்பது எல்லோருக்கும் புரிந்த ஒன்று. அது சாஸ்திரிக்குப் புரியாதா என்ன… ஆகவே, அவருடைய எதிர்வினை சற்றுக் காட்டமாகவே இருந்தது. ‘‘இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் என்பதில் கேள்வியோ, சந்தேகமோ எழுப்ப எவரையும் அனுமதிக்க முடியாது என்பதே எங்கள் நிலை” - சுற்றி வளைக்காத சுளீர் பதிலடி.

bsf-jawan_650x400_61438236378_13441.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி முயற்சிகளின் பலனாக 22 செப்டம்பர் 1965 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருதரப்பு சேதங்களும் மதிப்பிடப்பட்டபோது பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. பாகிஸ்தான் தரப்பில் 3,000 முதல் 5,000 பேர் வரை மரணம் அடைந்திருந்தனர். அதைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான இந்திய வீரர்கள் களபலி ஆகியிருந்தனர். சுமார் 250 டாங்கிகளை இழந்திருந்தது பாகிஸ்தான். அதைவிடச் சற்றுக் கூடுதலான சேதம் இந்தியாவுக்கு. என்றாலும், யுத்தத்தின் மையப்பகுதி, இறுதிப் பகுதியில் இந்தியாவின் கையே ஓங்கியிருந்தது. சர்வதேச நாடுகள் தலையிடாமல் இருந்திருக்கும் பட்சத்தில், இந்தியா இன்னும் பல வெற்றிகளைப் பெற்றிருக்கக்கூடும்.

மற்போர் முடிந்ததும் சொற்போர் நடத்துவது இயல்பு. அன்றைய சோவியத் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார் சோவியத் பிரதமர் கோசிஜின். பேச்சுவார்த்தையின் பலனாக, ‘தாஷ்கண்ட் பிரகடனம்’ என்ற பெயரில் கூட்டறிக்கை வெளியானதும், அன்றிரவே பிரதமர் சாஸ்திரி மரணம் அடைந்ததும் வரலாறு.

சாஸ்திரியின் மரணம், இந்தியாவுக்கு இந்திரா காந்தி என்ற புதிய ஆட்சியாளரை அறிமுகம் செய்தது. அவர் பிரதமராகப் பதவியேற்ற ஆறாவது ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் உரசல் உச்சம் தொட்டது. அதற்கு முக்தி பாஹினி முகம் கொடுத்தது!

http://www.vikatan.com/news/india/69823-history-behind-indo-pak-war-series---4.art

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Image result

 

உரி ..உரி .. என்றால் என்ன ?

தயிர் மற்றும் மோர் நிரம்பிய பாத்திரங்களை பத்திரமாக பூனை மற்றும் இதர விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக எட்டாத உயரத்தில் கயிறுகட்டி தொங்க விடும் கயிற்றுக்கு பேர்தான் உரி .. அந்த உரியை அடிப்பது குறித்து தமிழ்சினிமாவில் வெண்ணிலா கபடிகுழு முதல் ரஜினிமுருகன்வரை வந்துள்ளது..! உரி அது எங்க பற்றி எரியுது ..? ஒரு வேளை ஜல்லிகட்டு போல இதையும் ஆப்பு அடித்துவிடுவார்களோ..!!!

டிஸ்கி :

எவன் எவங்க செத்தா நமக்கு என்ன!! பூமி பாரம் குறையட்டும் ..!!

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் எல்லைக்கோடு அண்டை நாடுகளாலும், மாநிலங்களாலும் தாக்கப்பட்டு சுரண்டப்படும்போது அதற்கு தூண்டுகோலாக, உதவிசெய்தவர்கள் வடக்கத்தியர்கள். அவர்களின் எல்லையைப் பற்றி தமிழர்கள் ஏன் கருத்தில்கொண்டு கவலைப்பட வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

 

Image result

 

உரி ..உரி .. என்றால் என்ன ?

 

உறி அடிக்கும் போது.... பார்த்துக் கொண்டு நிற்பவர்களின், மண்டையில் அடிக்காமல், 
உறியை... குறி வைத்து அடித்தால் மட்டுமே.... பரிசு கிடைக்கும்.

 

  • தொடங்கியவர்

அகதிகளால் வந்த அதிரடி யுத்தம்...! எரியும் எல்லைக்கோடு! - 5

1971_war_captured_pak_tank_Indian_troops

ராணுவ ரீதியாக இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த யுத்தம் என்று 1971 யுத்தத்தைத்தான் சொல்லவேண்டும். பாகிஸ்தானைத் தோற்கடித்ததோடு மட்டுமின்றி, அந்த நாட்டை இரண்டாகப் பிரித்து வங்கதேசம் என்ற புத்தம் புதிய தேசத்தையே உருவாக்கிக் கொடுத்த யுத்தம் அது. விநோதம் என்னவென்றால், இந்த யுத்தம் ஆரம்பித்தது என்னவோ உள்நாட்டுக்குள்தான். அது மெல்ல மெல்ல இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மூன்றாவது யுத்தமாகப் பரிணாமம் பெற்றது. சற்று விரிவாகப் பேசினால் புரியும்.

இந்தியாவிலிருந்து பிரிந்தது முதலே பாகிஸ்தான் என்ற தேசம் பூகோள ரீதியாக கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிளந்து கிடந்தது. பிரிந்துகிடந்ததில்கூட பிரச்னையில்லை. ஆனால் வளம், வாழ்வு, வளர்ச்சி என்பன போன்ற விஷயங்களில் இரு பகுதிகளுக்கும் இடையே பெரும் வித்தியாசம் நிலவியது.

மொழி ரீதியாகவும்கூட பிளவுகள் இருந்தன. கிழக்கு பாகிஸ்தானியர்கள் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள். மேற்கு பாகிஸ்தானியர்கள் உருது பேசும் முஸ்லிம்கள். அடிப்படை வசதிகள் தொடங்கி அத்தியாவசியக் கட்டமைப்புகள் வரை எல்லாவற்றிலுமே கிழக்கு பாகிஸ்தான் பகுதி ஒருவித பாரபட்சத்தையே எதிர்கொண்டிருந்தது. பள்ளிக்கூடம் கட்டிக்கொடுங்கள் என்று கேட்டால் பத்து மாதங்கள் கழித்துத்தான் என்ன, ஏது என்றே விசாரிக்கவே ஆள் அனுப்புவார்கள். உள்ளாட்சிப் பணிகள் பாதியில் நிற்கின்றன என்று கடிதம் எழுதினால், எட்டிப் பார்ப்பதற்கே எட்டு மாதங்கள் பிடிக்கும். நிதியுதவி என்றால் நிமிர்ந்துகூடப் பார்க்க மாட்டார்கள் ஆட்சியாளர்கள்.

இப்படி எல்லா விஷயங்களிலும் புறக்கணிப்பு, பாராமுகம் காட்டப்பட்டதன் காரணமாக கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்குள் ஒருவித உணர்ச்சிப்போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அதற்கு முகம் கொடுக்க விரும்பினார் ஷேக் முஜிபுர் ரஹ்மான். கிழக்கு பாகிஸ்தான் மக்களின் ஏகோபித்த தலைவர். அவர்களுடைய வளமான வாழ்க்கைக்கான நம்பிக்கை நட்சத்திரம். அந்தப் பிராந்தியத்தில் செல்வாக்கு நிரம்பிய கட்சியான அவாமி லீக்கின் தலைவர்.
Sheikh_Mujibur_Rahman_in_1950_12512.jpg
மனக் குமுறல்களை எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு வெளியே கொட்டி வீணாக்கிவிடாதீர்கள். விரைவில் தேர்தல் வருகிறது. அதில் உங்கள் உணர்வுகளைக் காட்டுங்கள். ஆட்சியாளர்களுக்குச் சொல்லவேண்டிய செய்திகளை தேர்தல் முடிவுகள் வழியாக அழுத்தமாகச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அவர் சொன்னது போலவே தேர்தல் வந்தது. அப்போது பாகிஸ்தான் ஆட்சியாளராக இருந்தவர் யாஹியா கான். ராணுவ ஆட்சியாளர். அதற்கு முன்பு பதவியில் இருந்த அயூப் கான் ஒப்படைத்துவிட்டுப்போன பதவி. பல ஆண்டுகள் பதவியில் இருந்த அவருக்கு ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தும் ஆசை வந்தது. ஆகவேண்டிய காரியங்களைச் செய்தார். திட்டமிட்டபடி தேர்தல்கள் நடந்துமுடிந்தன. வாக்குகளை எண்ணிப் பார்த்தபோது ஆச்சரியம் காத்திருந்தது.

பூகோள ரீதியாகவும் மனரீதியாகவும் பிரிந்துகிடந்தது போலவே தேர்தல் முடிவுகளின் வழியாகவும் இரண்டாகப் பிளந்துகிடந்தது பாகிஸ்தான். மேற்கு பாகிஸ்தானில் ஜுல்ஃபிகர் அலி புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானிலோ முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தது.

கூட்டிக்கழித்துப் பார்த்தபோது, அவாமி லீக் கட்சிக்கே ஆட்சி அமைக்கும் அளவுக்கான பெரும்பான்மை கிடைத்திருந்தது. அநேகமாக முஜிபுர் ரஹ்மானே ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் கடந்த கால் நூற்றாண்டாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த மேற்கு பாகிஸ்தானியர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. முஜிபுர் பதவியேற்பதற்கு முட்டுக்கட்டை போடத் தொடங்கினர். அதற்கு பாகிஸ்தான் அதிபர் யாஹியா கானின் ஆசியும் இருந்தது.

அதுதான் கிழக்கு பாகிஸ்தானியர்களைக் கொதிநிலைக்குக் கொண்டுசென்றது. அறுதிப் பெரும்பான்மையைவிட அதிகமான இடங்களைப் பிடித்தபிறகும் ஆட்சி அமைக்கத் தடை போடுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தயாராகினர். அதற்கு முன்னதாகக் கொஞ்சம் பேசிப் பார்த்துவிடலாம் என்று மேற்கு பாகிஸ்தானுக்குப் பயணமானார் முஜிபுர் ரஹ்மான்.

அங்கே, அதிபர் யாஹியா கானிடம் பேசினார். புட்டோ தொடங்கி பலரிடமும் பேசினார். ஆனால் எவரும் ஒத்துவருவதாகத் தெரியவில்லை. அப்படியென்றால், எங்களைத் தனியாகப் பிரித்துவிடுங்கள் என்றார் முஜிபுர். அதுதான் அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களுக்கான திருப்புமுனைப் புள்ளியாக அமைந்தது.

ஆதங்கத்தோடு வந்த முஜிபுர் ரஹ்மான் கிழக்கு பாகிஸ்தான் மக்களிடம் பேசத் தொடங்கினார். ஆற்றாமை வந்துவிட்டால் அக்கம் பக்கத்தில் புலம்புவது தவிர்க்கமுடியாது அல்லவா. அப்போது அவருக்கு நெருக்கமாக இருந்த இந்திய உளவுத்துறை அதிகாரிகள் சிலரிடம் கொஞ்சம் மனம்விட்டுப் பேசினார் முஜிபுர். விஷயம் யாஹியா கானின் கவனத்துக்குச் சென்றுவிட்டது.

கிழக்கு பாகிஸ்தானை முன்வைத்து உருவாகியிருக்கும் குழப்பக் குட்டையில் இந்தியா மீன்பிடிக்கத் தயாராகிவிட்டதோ என்று சந்தேகப்பட்டார். அதைத் தடுக்கும் முயற்சியாக, “ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறாய்” என்று சொல்லி முஜிபுரை அதிரடியாகக் கைது செய்து, மேற்கு பாகிஸ்தான் சிறையில் அடைத்தார் யாஹியா கான்.

அந்த நொடியில் கிழக்கு பாகிஸ்தானுக்குள் புரட்சி வெடித்தது. எங்கு பார்த்தாலும் பதற்றம். ரகளை. உரிமைக்குரல். ஆட்சிக்கு எதிராக ஆக்ரோஷம் நிரம்பிய கோஷம். மக்கள் சாலையில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரிகளில் இருந்து வெளியே வந்த மாணவர்களும் இளைஞர்களும் யாஹியா கானுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பினர். அவர்களை அடக்க வேண்டிய காவல்துறையோ கைகட்டி வேடிக்கை பார்த்தது. ஆம், காவலர்களும் கிழக்கு பாகிஸ்தானியர்கள்தானே… ஓரவஞ்சனையை அனுபவித்தவர்கள்தானே.. 

1962_war_pic_4_12578.jpg

காவலர்கள் கைகட்டி நிற்கிறார்கள். மருத்துவர்கள். வழக்கறிஞர்கள். ஆசிரியர்கள். படிப்பு வாசனை உள்ள அத்தனைபேரும் பிரச்னை செய்கிறார்கள். எனில், ராணுவத்தை அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவுக்கு வந்தார் அதிபர் யாஹியா கான். ஆம், சொந்த நாட்டு மக்கள் மீதே ராணுவத் தாக்குதல் நடத்தத் தயாரானார். ஒருவகையில் அது அவர்கள் மீது தொடுக்கும் யுத்தத்துக்குச் சமம். அதனாலென்ன என்று சொல்லி ராணுவத்தை அனுப்பிவைத்தார்.

இறங்கிய வேகத்தில் தாக்குதல். கண்மூடித்தனமான தாக்குதல் என்று சொல்ல முடியாது. நிச்சயமாகக் கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு நடத்திய தாக்குதல் அது. கிழக்கு பாகிஸ்தானியர்கள் யார், வங்காளிகள் யார் என்று துல்லியமாகத் தெரிந்துகொண்டு தாக்கினர். விரட்டி விரட்டிக் கைது செய்யப்பட்டனர் வங்காளிகள்.

அடி தாங்கமுடியவில்லை. திருப்பி அடித்தால் ஒழிய தப்பிக்க வழியில்லை என்ற நிலை. இத்தனைக்கும் கிழக்கு பாகிஸ்தானில் ஒரு ராணுவப்பிரிவு உண்டு, மேற்கில் உள்ளது போலவே. ஆனால் இது அதிருப்தி ராணுவம். அதன் தளபதியாக இருந்தவர் ஜியாவுர் ரெஹ்மான். முஜிபுர் ரஹ்மானின் நம்பிக்கைக்குரியவர். அவரைவிட ஒருபடி மேலே சென்று, புதிய பிரகடனம் ஒன்றை வெளியிட்டார் ஜியாவுர் ரெஹ்மான்.

‘வங்கதேசம் இனி விடுதலை பெற்ற தேசம்.’

பதற்ற நெருப்பு பற்றிக்கொண்டது கிழக்கு பாகிஸ்தானில். அதில் தெறித்து விழுந்த ஒரு பொறி, முக்தி பாஹினி. பங்களாதேஷ் என்ற தேசத்தை உருவாக்கவேண்டும் என்ற கனவில் இருந்து கருவான இயக்கம் அது. முழுக்க முழுக்க இளைஞர்களைக் கொண்ட இயக்கம். அதுவும் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள். வாருங்கள். ஒன்றிணைந்து எதிர்கொள்வோம். கிழக்கு பாகிஸ்தான் ராணுவம், பாரா மிலிட்டரி படை, முக்தி பாஹினி எல்லோரும் கரம் கோத்தனர். முக்கியமாக, வங்கதேச மக்கள்.

திருப்பி அடிக்கத் தயாரானது கிழக்கு பாகிஸ்தான். ஒரு பக்கமாகவே இருந்த தாக்குதல் இருதரப்பு யுத்தமாக மாறத் தொடங்கியது. என்னதான் சுதந்தர வேட்கையுடன் போரிட்ட போதும் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னால் முக்தி பாஹினியும் கிழக்கு பாகிஸ்தான் ராணுவமும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முழு வீச்சில் இறங்கியிருந்தது ராணுவம். ஆனாலும் யுத்தம் தொடர்ந்தது.

56701aae54562%20%281%29_12061.jpg
 

போரில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த மக்கள் எப்படியாவது தப்பிக்க விரும்பினர். அப்போது அவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு அகதி அவதாரம் எடுப்பது மட்டும்தான். புறப்பட்டுவிட்டனர் இந்தியாவை நோக்கி. மூட்டை முடிச்சுகளோடு. கண்ணீரால் நனைந்த கண்களோடு. நிலப்பரப்பை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் பாகிஸ்தானைவிட மிகப்பெரிய தேசம் இந்தியா. இருப்பினும் திடீர் இடப்பெயர்ச்சியை எந்த தேசமும் அவ்வளவு சுலபமாக எதிர்கொள்வது சாத்தியமில்லை. கிழக்கு பாகிஸ்தானில் இருந்து அலை அலையாக இந்தியாவுக்குள் நுழைந்தனர் அகதிகள்.

வருத்தத்தைச் சுமந்துகொண்டு வருபவர்களை விரட்டிவிடுவதற்கு இந்தியாவின் ஆன்மா தயாராக இல்லை. எல்லோரையும் உள்ளே அனுமதித்தது. ஆயிரம். பத்தாயிரம். ஐம்பதாயிரம். லட்சம். எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்து ஐம்பது லட்சத்தைத் தொட்டது. வருபவர்கள் வெறும் மூட்டை முடிச்சுகளோடு வரவில்லை. தொற்று நோய்களையும் தோளில் சுமந்துகொண்டு வந்தனர்.

அகதிகள் முகாமைப் பார்வையிடச் சென்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு பகீரென்று இருந்தது. பாகிஸ்தானில் உருவாகியிருக்கும் உள்நாட்டு யுத்தம் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான யுத்தமாகப் பரிணமித்துவிடுமோ என்று சந்தேகப்பட்டார். இறுதியில் அதுவே நடந்தது! 

(பதற்றம் தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/70113-history-behind-indo-pak-war-series-5.art

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நவீனன் said:

அப்போது அவருக்கு நெருக்கமாக இருந்த இந்திய உளவுத்துறை அதிகாரிகள் சிலரிடம் கொஞ்சம் மனம்விட்டுப் பேசினார் முஜிபுர்.

எங்கன்ட சம்பந்த்னுடனும் உந்த விளையாட்டுத்தான் நடக்குதோtw_tounge_wink:

  • தொடங்கியவர்

கார்கில் ஊடுருவல்... கொதித்தெழுந்த இந்தியா..! எரியும் எல்லைக்கோடு - 6

atal-bihari-vajpayee_650x400_81451028780

வாஜ்பாய் முதன்முறையாக ஆட்சிக்கு வந்திருந்த சமயம் அது. இந்திரா காந்தி காலத்தில் செய்ததுபோலவே தன்னுடைய ஆட்சிக்காலத்திலும் அணுகுண்டுச் சோதனையை நிகழ்த்தியிருந்தார் வாஜ்பாய். பொக்ரான் சோதனை பாகிஸ்தானுக்குப் பதற்றத்தைக் கொடுத்துவிட்டதுபோல. அதுவும் தன் பங்குக்கு அணுகுண்டுச் சோதனைகளை நடத்தி முஷ்டியை உயர்த்தியிருந்தது.

அப்போதும்கூட பாகிஸ்தானுடன் விரோதம் பாராட்ட வாஜ்பாய் அரசு விரும்பவில்லை. அவர்களுடன் இணக்கமாகச் செல்லவே விரும்பியது. அதன் வெளிப்பாடுதான் வாஜ்பாயின் லாகூர் ரயில் பயணமும்... லாகூர் பிரகடனமும். ஆனால், இந்தியாவுடன் அமைதிப் பேணுவதில் அங்கே சிலருக்கு அச்சங்கள் இருந்தன. முக்கியமாக, ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு.

இருதரப்புச் சமாதான முயற்சிகளின் மீது சண்டை முலாம் பூச விரும்பினார். அதற்கு அவர் தேர்வுசெய்தது அவர்களுக்கே உரித்தான அதே பழைய பாணி. ரகசிய ஊடுருவல். ஒருபக்கம், அமைதிப்பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் வேளையில்... இன்னொரு பக்கம், முதுகில் குத்தும் காரியத்தைத் தொடங்கினார் பர்வேஸ் முஷாரஃப். இந்தக் காரியம் 1999 மே மாத ஆரம்பத்தில் நடந்தது.

பாரம்பர்ய முறைப்படி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து தொடங்கியது ஊடுருவல். அங்கே தோளோடு தோள் உரசுவதுபோல சுமார் 160 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்ட நெடிய சாலை இருக்கிறது. குண்டும் குழியும்தான் கண்ணுக்கு வெளிச்சம். கல்லும் முள்ளும்தான் காலுக்கு மெத்தைபோல.

அந்தச் சாலையின் வழியாகத்தான் முஷாரஃபின் பாசத்துக்குரிய முஜாஹிதீன்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவத் தொடங்கினார்கள். மொத்தம் 5,000 பேர்; அசைவுகள் இருந்தன; ஆனால், அதிர்வுகள் இல்லை. அத்தனை நாசூக்கு; அத்தனை நேர்த்தி. பதுங்கிப் பதுங்கி நகர்ந்தனர், பாய்வதற்காக என்பதால். வழிநெடுக ஆங்காங்கே பல குன்றுகள் தென்பட்டன. குளிர் தாங்கமுடியாமல் இந்திய வீரர்கள் காலி செய்துவிட்டுச் சென்ற குன்றுகள் அவை. 10 பேருக்கு ஒரு குன்று. சில குன்றுகளில் 20-க்கும் மேல்.

257162_26407318_11097.jpg

திடீரென ஒருநாள் ரோந்துப் பணிக்காக வெளியே வந்த இந்திய ராணுவ வீரர்களின் கண்களில் அந்த ஊடுருவல் ஆசாமிகள் படவே வெலவெலத்துப் போய்விட்டது. எப்படி நடந்தது என்று யோசிப்பதற்குள் துப்பாக்கிச்சூட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலை. தாக்குதலின் தன்மையைப் பார்த்த பிறகுதான் அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பது இந்திய வீரர்களுக்குப் புரிந்துபோனது.

விஷயம் உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்குச் சென்றது. பிரதமர் வாஜ்பாய் தனது அமைச்சரவை சகாக்களான அத்வானி, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். கூடவே, முப்படைத் தளபதிகள். கார்கில் பகுதியில் மட்டுமல்ல, முஷ்கோக், ட்ராஸ், பட்டாலிக், டைகர் ஹில்ஸ் என்று அக்கம்பக்கத்துப் பகுதிகளிலும் நடந்திருப்பது தெரியவந்தது.

சற்று ஏறக்குறைய 600 பேர் ஊடுருவியிருந்தனர். இந்தியாவுக்குச் சொந்தமான 100-க்கும் அதிகமான முகாம்களைத் தம்வசப்படுத்தி இருந்தனர். முகாம்கள் அனைத்தும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால், ஒட்டுமொத்த காஷ்மீரும் உள்ளங்கைக்குள் வந்துவிட்ட உற்சாகத்தில், “சுமார் 120 சதுர மைல் பரப்பை நாங்கள் கைப்பற்றிவிட்டோம்” என்ற அறிவிப்பையும் செய்துவிட்டார்கள்.

27_11408.jpg

ஊடகங்களின் வழியே செய்தி கசிந்த நொடியில் இருந்தே இந்தியாவுக்குள் பதற்றம் ஆரம்பித்துவிட்டது. இங்கே பதற்றம் என்பது பயத்தின் வெளிப்பாடு அல்ல, ஆத்திரத்தின் அடையாளம். ‘பதிலடி கொடுத்தே தீரவேண்டும்’ என்ற கோஷம் நாடு முழுக்க எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. உண்மையில், அப்படியொரு யுத்தம் ஒன்றை நடத்தினால், அது பி.ஜே.பி-க்கு அரசியல் ரீதியாகப் பலன் கொடுக்கும் காரியம்தான்.

பிரதமர் வாஜ்பாயின் உத்தரவின்பேரில் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கார்கில் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். கூடவே, ராணுவ உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர். பிறகு, எல்லைப் பகுதிகளில் தான் பார்த்ததையும் தனக்குப் புரிந்ததையும் பிரதமர் வாஜ்பாயிடம் எடுத்துச் சொன்னார் அமைச்சர் ஃபெர்னாண்டஸ். அடுத்துச் செய்யவேண்டிய காரியங்கள் எல்லாம் துரிதகதியில் நடந்தன.

பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடியது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, இந்திய வீரர்களைத் தாக்கியவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் அனைவரையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று முடிவானது. உரிய ஆயுதங்கள் சகிதம் நடத்தப்பட இருந்த அந்தத் தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் விஜய்’ என்று பெயர் வைக்கப்பட்டது.

Yudh_Abhyas_2013,_2nd_Batallion,_5th_Gur

தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னால், “இந்தியப் பகுதிக்குள் நுழைந்திருப்பவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசின் அனுமதியோடும், அமெரிக்க ஆயுதங்களோடும் வந்திருக்கிறார்கள்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது இந்தியா. ஆனால், அதனை அடியோடு நிராகரித்த பாகிஸ்தான், “காஷ்மீர் இளைஞர்கள் தங்களுக்குச் சொந்தமான பகுதியை மீட்டெடுக்கத் தன்னெழுச்சியாகக் கிளர்ந்து எழுந்துள்ளனர். அதற்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை” என்றது. 

பின்னர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் வாஜ்பாய். ‘‘எல்லையில் என்ன நடக்கிறது... ஏன் உங்கள் ராணுவம் எங்களைத் தாக்குகிறது’’ என்று கேள்வி எழுப்பினார் வாஜ்பாய். ஆனால், ‘‘அப்படியான எந்தத் தாக்குதலையும் நாங்கள் செய்யவில்லை’’ என்று திட்டவட்டமாக மறுத்தார் நவாஸ் ஷெரீஃப்.

அதன்மூலம் பாகிஸ்தான் உண்மையை ஒப்புக்கொள்ளத் தயாரில்லை என்பது தெரிந்தது. கூடவே, பதிலடி தருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் புரிந்தது. ‘ஆபரேஷன் விஜய்’ ஆரம்பமானது. இத்தனைக்கும் வாஜ்பாய் அரசு அதிகாரபூர்வமான அரசு அல்ல... காபந்து அரசு. ஆனாலும், இந்தியாவை ஆபத்தில் இருந்து காபந்து செய்வதுதான் அரசின் பணி என்பதால், அந்த அரசுக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவுக்கரம் நீட்டின.

அந்த உற்சாகத்தில், “அத்துமீறி நுழைந்தவர்களை விரட்டி அடியுங்கள், முடியாவிட்டால் அடித்து விரட்டுங்கள்” என்று நேருவின் பாணியில் உத்தரவிட்டார் பிரதமர் வாஜ்பாய்! 

(பதற்றம் தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/70357-kargil-war-indo-pak-war-series-6.art

  • தொடங்கியவர்

நீர்... நதி... ரத்தம்..! எரியும் எல்லைக்கோடு..! - 7

Indian-Army-National-Flag-4_12595.jpg

டுருவல் நடந்திருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஆனாலும் அதைத் திட்டவட்டமாக மறுத்தது பாகிஸ்தான். எனில், தாக்குதலின் வழியாகத்தான் ஊடுருவலை உறுதிசெய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்தது இந்தியா. ‘‘ஆகட்டும்’’ என்று சொல்லிவிட்டார் அடல் பிஹாரி வாஜ்பாய். அதிரடியாகக் களத்தில் இறங்கியது இந்திய ராணுவம். 

26 மே 1999 அன்று இந்தியாவின் பீரங்கித் தாக்குதல்கள் வேகம் பிடித்தன. தாக்குதலில் வீரியம் அதிகமாக இருந்ததால் பாகிஸ்தான் ராணுவம் நேரடியாகக் களமிறங்கியது. இந்தியப் போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் காரணம் சொல்லி, இந்தியாவுக்குச் சொந்தமான மிக் ரக விமானம் ஒன்றையும், ஹெலிகாப்டர் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான் ராணுவம். அதன்மூலம் யுத்தமானது, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அதிகாரபூர்வ யுத்தமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது.

vajpayee_13083.jpgலாகூர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஈரம் காய்வதற்குள் இருதரப்பிலும் எழுந்த யுத்தம் இருநாட்டு ஆட்சியாளர்களையும் கவலைகொள்ளச் செய்தது. ஆனால், ஆரம்பித்துவைத்தது பாகிஸ்தான் என்பதால் பதிலடி கொடுத்ததில் தவறே இல்லை என்பது இந்தியாவின் வாதம். அனைத்துக்கும் அடிநாதமாக இருப்பவர் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரஃப் என்பது பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்குப் புரிந்தது.  உண்மையில், பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கும் இந்தியாவுடன் யுத்தம் நடத்துவதில் ஆர்வமில்லை. தனது ஒப்புதல் இல்லாமலேயே இந்தியாவுக்குள் ஊடுருவல் நடந்தது என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவும் அவருடைய அகந்தை இடம்கொடுக்கவில்லை. சாட்சிக்காரனுக்குப் பதில் சண்டைக்காரனிடமே பேசிவிடலாமே என்ற முடிவுக்கு வந்தார். இந்தியப் பிரதமர் வாஜ்பாயைத் தொடர்புகொண்டார். 
 

‘‘வேண்டாம், விமானத் தாக்குதல்கள். நிறுத்திக்கொள்ளலாம். போரை நிறுத்திப் பேச்சைத் தொடர்வோம்’’ என்றார். வெற்றி உறுதி என்ற நிலையில்தான் போரையே தொடங்கியது இந்தியா. அதை உறுதிசெய்வதுபோல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்குத் தாமாக முன்வந்து சமாதான ஓலை நீட்டினார். போதாது, உற்சாகம் தொற்றிக்கொண்டது வாஜ்பாய்க்கு. ‘‘போர் நிறுத்தத்துக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை’’ என்று உதட்டைப் பிதுக்கிவிட்டார் வாஜ்பாய்.

இந்தியாவில் கார்கில் யுத்தம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வலிய வந்து வம்பிழுத்த பாகிஸ்தானுக்குப் பலமான பதிலடி தரப்பட வேண்டும் என்ற கருத்து சராசரி இந்தியர்கள் மனத்தில் அழுத்தமாக உருவானது. இந்திய ராணுவம் தனது வீரத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்தியாக வேண்டிய தருணம் வந்திருப்பதாகக் கருதினர்.

இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்துகொண்டிருந்த வேளையில், ஐக்கிய நாடுகள் சபை களத்தில் இறங்கியது. இரு நாடுகளுக்கும் தனது தூதுவர்களை அனுப்புவதாகச் சொன்னார் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான். ஆனால், அதனை பிரதமர் வாஜ்பாய் ரசிக்கவில்லை. 


 

p16032001a_13597.jpg 

“அமைதியின் தேவை பற்றிப் பேசுவதற்கு ஆள் அனுப்புவதாக இருந்தால், அந்த நபர் செல்ல வேண்டியது பாகிஸ்தானுக்குத்தானே தவிர, இந்தியாவுக்கு அல்ல” - இதுதான் கோஃபி அன்னானுக்கு இந்தியா தரப்பில் கொடுக்கப்பட்ட பதில்.

‘கார்கில் யுத்தத்தை ஆரம்பித்துவைத்தது பாகிஸ்தான்’ என்பது சர்வதேச நாடுகளிடம் அழுத்தமாகச் சொல்லப்பட்டது. குறிப்பாக, லாகூர் ஒப்பந்தத்தின்படி இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்னைகளைப் பரஸ்பரம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஜி-8 நாடுகளின் மாநாட்டில் கோரிக்கை விடப்பட்டது. இனியும் போரைத் தொடராமல், தனது ராணுவத்தைத் திரும்பப்பெற வேண்டுமென பாகிஸ்தானை வலியுறுத்தியது ஐக்கிய நாடுகள் சபை. 

அடுத்து, அமெரிக்கா பேசியது. ‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையிலான யுத்தம் தெற்காசியப் பிராந்தியத்தின் அமைதியைச் சீர்குலைக்கிறது’’ என்று கவலைப்பட்டார் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன். அதேவேளையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பாகிஸ்தானுக்குச் சில அறிவுரைகளைக் கொடுத்தார். “அனைத்து பிரச்னைகளுக்கும் அடிப்படை பாகிஸ்தானின் ஊடுருவல்தான். பாகிஸ்தான் ராணுவத்தின் நார்தர்ன் லைட் இன்ஃபாண்ட்ரி படைப் பிரிவுதான் கார்கில் நடவடிக்கைக்குக் காரணம். ஆகவே, அந்தப் படைப் பிரிவையும் இன்னபிறரையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டார் பில் கிளிண்டன். அத்தோடு, தூதுக்குழு ஒன்றையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி, “பின்வாங்குங்கள்” என்று நெருக்கடி கொடுத்தார். 



அமெரிக்காவின் தலையீடு பாகிஸ்தானை யோசிக்கவைத்தது. அமெரிக்க அண்ணன் மிரட்டியதால், சீனத்து அண்ணனிடம் அபயம் கோர முடிவெடுத்தது. உடனடியாக சீனாவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அங்கு தமது நிலையை எடுத்துச் சொன்னார். ஒருவேளை, பாகிஸ்தானின் இறையாண்மைக்கு இந்தியாவால் ஆபத்து வந்தால், அதைத் தடுத்து நிறுத்த சீனா களமிறங்கும் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்தது சீனா. சீனாவின் ஆதரவு கொடுத்த தெம்பில் இந்தியாவைச் சற்றே மிரட்டிப் பார்த்தது பாகிஸ்தான். ஆம், இந்தியா யுத்தத்தைத் தொடரும்பட்சத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என்றது. ஆனால் இந்தியாவோ வெகு நிதானமாக எதிர்வினை ஆற்றியது.

“அணு ஆயுதம் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவானாலும்கூட, அதை இந்தியா முதலில் செய்யாது. ”அதன் அர்த்தம், “எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், நீங்கள் செய்தால் நாங்களும் செய்வதற்குத் தயங்கமாட்டோம்” என்பதுதான். அதிரடி எச்சரிக்கை விடுத்ததோடு நிற்கவில்லை, அதிரடி நகர்வுகளையும் நடத்தியது இந்தியா. யுத்தம் நடந்துகொண்டிருந்த கார்கில் பகுதியில் மட்டுமின்றி, பஞ்சாப் உள்ளிட்ட பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளை நோக்கி நகர்வதற்கும் ராணுவம் ஆயத்தமானது. அந்தத் தகவல் பாகிஸ்தானைச் சற்றே பயமுறுத்தியது. அந்தப் பதற்றத்துக்கு மத்தியில் கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றிய இந்திய ராணுவம், அந்த வெற்றியை வெகு விமரிசையாகக் கொண்டாடியது. அடுத்து, டைகர் ஹில்ஸ் பகுதியையும் திரும்பப்பெற்றது.
20clinton_13587.jpg
இந்தியா தனது வேகத்தை மேன்மேலும் அதிகப்படுத்திக்கொண்டிருக்க, பிரதமர் நவாஸ் ஷெரீஃபை அழைத்தார் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன். போர் நிறுத்தத்தின் அவசியத்தை உணர்த்தினார். அதனைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீஃப் இறங்கிவரத் தயாரானார். ஆனால், அதற்கு பாகிஸ்தானுக்குள் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. போராளிகளும் எதிர்க் கட்சிகளும், ‘‘போர் நிறுத்தம் கூடாது, ஒருகை பார்த்தே தீரவேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.


12 ஜூலை 1999 அன்று பாகிஸ்தான் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் நவாஸ் ஷெரீஃப், “காஷ்மீர் போராளிகள் கார்கிலைக் கைப்பற்றியதன் நோக்கம், காஷ்மீர் விவகாரத்தை நோக்கிச் சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திருப்புவதுதான். அது நிறைவேறிவிட்டது. அமெரிக்கா தனது தனிப்பட்ட ஆர்வத்தைச் செலுத்தும் என்று உத்தரவாதம் கிடைத்துள்ள நிலையில், அங்கே யாரும் இருக்கவேண்டிய அவசியமில்லை. எல்லை தாண்டிச் சென்ற அனைவரும் உடனடியாகப் பின்வாங்கிக்கொள்ள வேண்டும்” என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஊடுருவல்காரர்கள் பலரும் வெளியேறத் தொடங்கினர். ஆனால், ஒரு தரப்பினர் மட்டும், ‘‘வெளியேற முடியாது. கார்கில் எங்கள் பூமி. எதற்காக நாங்கள் வெளியேற வேண்டும்’’ என்று கேள்விகேட்டு, முரண்டுபிடித்தனர். அந்தச் சமயத்தில் இந்தியாவின் இரு முக்கிய அமைச்சர்களிடமிருந்து எச்சரிக்கைகள் வந்துசேர்ந்தன. 

“ஊடுருவல் கும்பலின் கடைசி நபர் வெளியேறுகின்றவரை இந்திய ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தும்” என்றார் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி. இன்னும் ஒருபடி மேலே சென்ற ராணுவ அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், “இந்திய எல்லைப் பகுதியிலிருந்து வெளியேற மறுத்து, யாரேனும் பேச்சுவார்த்தை.. பிரகடனம்.. இத்யாதி இத்யாதி என்றெல்லாம் பேசினால், அவர்களுடன் நாங்கள் பேசமாட்டோம். எங்கள் ராணுவ வீரர்களின் துப்பாக்கிதான் பேசும்” என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, 70 நாட்களைக் கடந்து நடந்துகொண்டிருந்த இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்தியாவுக்குக் கிடைத்த முக்கியமான யுத்த வெற்றிகளுள் ஒன்றாக கார்கில் பதிவாகிவிட்டது. யுத்தத்தில் கிடைத்த வெற்றியைத் தேர்தல் களத்துக்கும் பயன்படுத்தி வெற்றிபெற்றார் வாஜ்பாய். 

ஆயிற்று, 18 ஆண்டுகள். இன்றுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரிய அளவிலான யுத்தம் என்று எதுவும் உருவாகவில்லை. ஆனால், அதற்கான முயற்சிகள் ஏதும் நடக்கவில்லை என்று சொல்வதற்கில்லை. குறிப்பாக, காஷ்மீரை முன்வைத்து இந்தியாவுடன் போர் நடத்தத் தேவையான தருணங்களை பாகிஸ்தானே பலமுறை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, 2008 மும்பை தாக்குதலைச் சொல்லவேண்டும்.

தீவிரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல்தான் அது என்றாலும், அதன் பின்னணியில் பாகிஸ்தான், அதன் ஆட்சியாளர்கள், அதன் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியன இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. அப்போதும்கூட இருநாடுகளுக்கு இடையே யுத்தம் மூள்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனாலும், கடுமையான எச்சரிக்கைகளோடு நிறுத்திக்கொண்டது இந்தியா. 

IN27_MODI_NAWAZ_1916976f_13566.jpg

தற்போது மோடி தலைமையிலான ஆட்சி வந்திருக்கும் நிலையில் இந்தியா - பாகிஸ்தான் உறவு எப்படியிருக்கும் என்ற கேள்வி சர்வதேச அரங்கில் எழுந்தது. தனது பதவியேற்பு விழாவுக்கு நவாஸ் ஷெரீஃபை அழைத்தது, ஷெரீஃபின் பிறந்தநாளன்று பாகிஸ்தானுக்கே நேரில் சென்று வாழ்த்துச் சொன்னது என்று இணக்கமான சூழ்நிலைதான் இருபக்கமும் தெரிந்தது. ஆனால், அந்த இணக்கத்துக்கு உரி தாக்குதலின் வழியாக ஊறு விளைவித்திருக்கிறது பாகிஸ்தான். சர்ஜிக்கல் தாக்குதல் என்பது அதற்கான எதிர்வினைதான். விளைவு, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் உருவாகியிருக்கிறது.

சிந்து நதியில் நீரும் ரத்தமும் ஒரே சமயத்தில் பாயக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார் பிரதமர் மோடி. அதன் பொருள் வெளிப்படையானது. பாகிஸ்தானின் அடுத்தடுத்த செயல்பாடுகளைக் கொண்டுதான் எல்லைக்கோடு எரியுமா, குளிருமா என்பதைத் தீர்மானிக்க முடியும்!

(முற்றும்...)

http://www.vikatan.com/news/coverstory/70467-end-of-kargil-war-indo-pak-war-series-7.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.