Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைத்தியர்கள் இன்மையால் யாழில் மாணவி பலி..!

Featured Replies

யாழ்.நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையினையும், வைத்திய வசதிகள் இல்லாமையினையும் கண்டித்தும், வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரியும் நெடுந்தீவில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றய தினம் ர.டிலாஜினி என்ற 18 வயது மாணவி திடீர் சுகயீனமுற்ற நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை. மேலும் உடனடி வைத்திய உபகரணங்களும் இல்லாத நிலையில், குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/120936?ref=morenews

  • தொடங்கியவர்

யாழ். மருத்துவர் சமூகமே நெடுந்தீவு மாணவி மரணத்துக்கு பொறுப்புக் கூறவேண்டும்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவி டிலாஜினி ரவீந்திரன் கடந்த புதன்கிழமை அன்று கடும் நோயில் வீழ்ந்து நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

டிலாஜினியின் மரணம் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள அனைத்து ஊடகங்களும் குறித்த மாணவியின் மரணத்துக்கான மூல வேரைக் கண்டறியாமல் எழுந்தமானமாகவே செய்திகளை வெளியிட்டுள்ளன.

அதாவது கிளைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை. மாறாக, 'இப்படித்தான் செய்தி அறிக்கை இடுவோம்' எனில் அது இன்னும் பல உயிர்களை காவுகொள்ளத்தான் போகிறது.

இது யாருக்குத்தான் மகிழ்ச்சி தரும்? இதனால் தமிழ் சமூகத்துக்கு என்ன பயன்? இப்போதும்கூட, எல்லோரும் உயிரிழந்த மாணவி டிலாஜினி ரவீந்திரன் தொடர்பில் அனுதாப செய்திகளையே வெளியிட்டவாறு உள்ளனர்.

ஆனால் உண்மையில் தவறு எங்கே நடந்துள்ளது? எங்கே குறைபாடு உண்டு?

மாணவியின் உயிரைப்போல இன்னும் பல மனித உயிர்களைக் காவுகொள்ள காத்துக்கிடக்கிறது நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை.

இதற்கு உரிய தீர்வைக் காண்டு, இதன் அசைவும் - விளைவும் மண் பயனுறுதலாகவே அமையட்டும். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தின் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மாணவியான டிலாஜினிக்கு கடந்த புதன்கிழமை பாடசாலையிலேயே நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அன்றைய பாடசாலை கற்றலை இடைநடுவில் நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்ற டிலாஜினி, தனது அம்மம்மாவின் மடியில் தலை சாய்த்து சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார்.

சிறிது நேரத்துக்குப் பின்னர் உணவருந்தி விட்டு, அம்மம்மாவிடம் கோப்பியும் வாங்கிக் குடித்துள்ளார். ஆயினும் மூச்சிழுக்க சிரமப்பட்ட டிலாஜினியை ஆபத்தான நிலையில் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு பிற்பகல் 3.10 மணியளவில் கூட்டிச் சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு வைத்தியர் கடமையில் இருக்கவில்லை. குறித்த வைத்தியர் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையிலிருந்து நான்கு கிலோமீற்றர்கள் தூரத்துக்கு அப்பால் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றிலும் கடமையில் ஈடுபடுவது வழமையான செயற்பாடாகும்.

இத்தகைய இடர் நிலையில், மருத்துவத் தாதிமார் கூட சேவைக்கு அமர்த்தப்படாத நெடுந்தீவு வைத்தியசாலையில் கீழ்நிலை ஊழியர்கள் இருவரே கடமையில் இருந்துள்ளனர்.

மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டிலாஜினிக்கு உடனடியாக என்ன சிகிச்சையினை அளிப்பது? என்பது தொடர்பில் அங்கிருந்த கீழ்நிலை ஊழியர்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த பதட்டச்சூழலை அவதானித்த, அங்கு ஏனைய நோயாளிகள் போலவே தானும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த வயதான தாதி ஒருவர், தனக்கு உட்செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த சேலைன் மருந்தையும் கழட்டி எறிந்து விட்டு பதறி வந்து மாணவியை பரிசோதித்து மாணவியின் உடல் குளிர் ஏறியிருப்பதையும் உணர்ந்த பின்னர் மருத்துவரை எப்படியாவது அழையுங்கள் எனக் கூறியுள்ளார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடமையில் இருந்த மருத்துவருக்கு தகவல் வழங்கப்பட்டு ஒரு மணித்தியாலம் ஐந்து நிமிடங்களுக்கு பின்னர் தள வைத்தியசாலைக்கு வருகை தந்த மருத்துவர், மாணவி ஏலவே இறந்து விட்டதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியும் தனது மருத்துவ அறிக்கையில், மாணவிக்கு மாரடைப்பு வந்தே மரணம் சம்பவித்துள்ளதாக கூறியுள்ளார். மாணவியின் உடல் இன்று காலை நெடுந்தீவில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தின் கலைப் பிரிவில் அரசியல், கிறிஸ்தவம், தமிழ் ஆகிய பாடங்களை கற்று வந்த டிலாஜினி இந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்தவர்.

கடந்த முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6A, 3B புள்ளிகளைப் பெற்று பாடசாலை சமூகத்துக்கு பெருமை சேர்த்தவர்.

இம்முறையும் டிலாஜினி A/L பரீட்சையில் திறமைச் சித்திகள் பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும், பிரதேசத்துக்கும் பெருமை சேர்ப்பார் என்று கல்விச்சமூகத்தினர் பெருத்த நம்பிக்கைகளோடு காத்திருந்தனர்.

சிறிய வயதிலேயே தந்தையாரும் நோயில் வீழ்ந்து இறந்துவிட, முன்னாள் கிராம சேவையாளரான தாயின் அரவணைப்பிலேயே டிலாஜினியும் அவரது சகோதரியும் வளர்ந்து வந்துள்ளனர். தற்போது டிலாஜினியின் அம்மம்மாவும், தாயும், தங்கையும் உள்ளார்கள்.

மாணவியின் மரணத்துக்கு வைத்தியசாலை நிர்வாகத்தை குற்றம் கூறியும், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் நிலவிவரும் மிகவும் மோசமான வளப்பற்றாக்குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தியும் நேற்றுக்காலை பிரதேச மக்களால் நெடுந்தீவு மாவிலி இறங்கு துறையில் இருந்து நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனை வரை கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் தராதரம் தான் என்ன?

4500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நெடுந்தீவில் இன்றுவரை நிரந்தரமான தள மருத்துவர் ஒருவர் இல்லை, மருத்துவத்தாதிகள் என்று எவரும் இல்லை, மருந்துக் கலவையாளர் இல்லை, பாதுகாப்பு உத்தியோகத்தர் இல்லை, தாய் - சேய் மகப்பேற்று, இரத்தவங்கி, விசக்கடி முதலுதவி சிகிச்சை என்று உடனடியாக வைத்தியசேவை வழங்கும் எந்த பிரிவும் - வளமும் அங்கு இல்லவே இல்லை.

பாம்புக்கடியால் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவோர், பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுவோர், ஒவ்வாமையால் பாதிக்கப்படும் குழந்தைகள் - சிறுவர்கள், வயோதிப கால நோய்களால் பாதிக்கப்படும் முதியவர்கள் என்று இந்த மக்களுக்கு அவசர - அடிப்படை சிகிச்சைகள் அளிக்கத் தேவையான வசதிகள் கூட இல்லாமல், அங்குள்ள ஊழியர்கள் மிகக்குறைந்த பௌதீக வளங்களோடு நாளாந்தம் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த வாரம் கூட நிறைமாதக் கர்ப்பிணித் தாயார் ஒருவர், குழந்தை பிறப்பில் ஏற்பட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக குறித்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை வழங்க முடியாத பௌதீக வளப்பிரச்சினைகளால் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்துள்ளார். அது விவரிக்க முடியாத மரண வலி. திக்... திக்... நிமிடங்கள்!

மருத்துவத்தில் அதி உன்னதமான தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டுள்ள 21 ஆம் நூற்றாண்டிலும் கூட இலங்கை மத்திய அரசால் குறித்த மக்களுக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்க முடியாமல் அவர்களது பெறுமதியான உயிருக்கு உலை வைக்கும் செயலை என்னவென்று சொல்வது?

தீவுப்பகுதி மக்களின் உயிர்கள் என்ன அவ்வளவு மலிவானவையா? இவர்களையும் மனிதர்களாகவே யாரும் மதிக்கவே இல்லையா?

அங்குள்ள மக்களுக்கு தகுந்த வகையில் வைத்தியசாலையின் பௌதீக, மனித வளங்களை கரிசனையோடு கையாண்டிருந்தால் மாணவி டிலாஜினி இன்று எம்மோடு உயிருடன் இருந்திருப்பார்.

தமிழ்ச்செய்தி உலகம் அவளது மரண செய்தியை அல்ல, A/L பரீட்சையில் திறமைச் சித்திகள் பெற்று பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த செய்தியை எழுதி எழுதி பக்கம் நிரப்பியிருக்கும். கதை கதையாம் காரணங்கள். கிளைகளை கலைவதை விடுத்து மூலவேரை பிடுங்குவோம் வாருங்கள்.

யாழ். மருத்துவர் சமூகத்தின் வறட்சி சிந்தனையே... மாணவியை கொன்றது.

எமது யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவர் சமூகத்தினர், 'எமது மண் - எமது மக்கள் - எமது மக்களின் வாழ்வும் வளமும் நிறைவும் என்ற நேசிப்போடு, தேசிய சிந்தனையோடு சேவையாற்ற மறுத்ததன் விளைவே' நெடுந்தீவு மாணவியின் மரணமாகும்.

இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கம் கருத்து தெரிவிக்கையில், 'நாங்கள் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்ற போது வடக்கு மாகாணத்தில் 37 வைத்தியசாலைகளுக்கு ஒரு மருத்துவரும் இருக்கவில்லை.

ஆனால், தொடர்ந்து நாங்கள் மத்திய அரசாங்கத்துடன் கதைத்ததன் பலனாக 13 வைத்தியசாலைகளுக்கு நிரந்தரமாக மருத்துவர்களை நியமித்து, அந்த எண்ணிக்கையை 24 ஆக குறைத்துள்ளோம்.

வடக்கு மாகாணத்தில் தற்போதும் 24 வைத்தியசாலைகளுக்கு ஒரு மருத்துவர் கூட இல்லை. ஆனால், நாங்கள் அந்த 24 வைத்தியசாலைகளுக்கும் ஓய்வு பெற்ற மருத்துவர்கள், சேவையை இடைநிறுத்தி விட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு நாட்டுக்கு மீளவும் திரும்பியுள்ள மருத்துவர்கள், மருத்துவ பல்கலைக்கழக படிப்பை முடித்து விட்டு

வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் மருத்துவர்கள் போன்றோரை ஒப்பந்த அடிப்படையில் நியமித்து சேவையை வழங்கி வருகின்றோம். மருத்துவர்களையோ, மருத்துவ தாதியரையோ நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு மட்டுமே உள்ளது.' என்றார்.

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் தற்போது கடமையில் உள்ள மருத்துவரும் ஓய்வு பெற்றவர். ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ சேவையை வழங்கி வருகின்றார் என்பதும் இங்கு உன்னிப்பாக கவனிப்புக்குரியது.

மாணவி டிலாஜினியின் மரணத்துக்கு மட்டுமல்ல, 'மானுடநேய உன்னத மருத்துவ சேவை கிடைக்கப்பெறாமல்' ஈழத்தில் நமது நிலத்தில் இன்னும் நிகழப்போகின்ற பல நூறு அநாவசிய மனித உயிரிழப்புகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட மருத்துவர் சமூகமும் முக்கிய பொறுப்பாளிகளாவார்கள்.

மக்களின் வரிப்பணத்தை இலட்சக்கணக்கில் செலவழித்து இலவச கல்வி வழங்கப்பட்டே ஒரு மருத்துவர் உருவாக்கப்படுகின்றார். யாழ்ப்பாணம் மருத்துவப் பல்கலையில் இருந்து பட்டம் பெற்று வருடாந்தம் 135 மருத்துவர்கள், சமுகத்துக்கு மானுடநேய மருத்துவசேவையை வழங்குவோம் என்று புறப்பட்டு வருகின்றார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு வருடமாவது எமது தமிழ் மக்களுக்காக நெடுந்தீவு போன்ற மிகவும் பின்தங்கிய பல கஷ்ட பிரதேசங்களில் சேவை செய்ய வேண்டுமென்று வைராக்கியம் வளர்த்திருந்தால், தூர நோக்கு தூய சிந்தனை கொண்டிருந்தால் எமக்கு இப்படி ஒரு மருத்துவ அவலம் நிகழ்ந்திருக்காது.

இவ்வருடம் கூட இங்கிருந்து வெளியேறிய மருத்துவ மாணவர்களில் ஒருவர் தானும் நெடுந்தீவு போன்ற பின்தங்கிய பல கிராமங்களில் வைத்திய சேவையை, எமது மண் - எமது மக்கள் - எமது மக்களின் வாழ்வும் வளமும் நிறைவும் என்ற நேசிப்போடு, தேசிய சிந்தனையோடு வழங்க விண்ணப்பிக்கவில்லை என்பது அவமானம்.

சகல சௌபாக்கியங்களும் நிறைந்து கிடக்கும் நகர்ப்புற மருத்துவமனைகளில் மட்டுமே 'பழம் தின்று கொட்டை போடுவோம்' என்ற சொகுசு வாழ்க்கை மோகமே 'நமது மண், நமது மக்கள் என்கிற தேசிய சிந்தனையை - மானுடநேய மருத் சேவை வழங்கும் மனப்பான்மையை' இல்லாமல் செய்து விட்டது. இந்த சிந்தனை வறட்சி இன்னும் எத்தனை மக்களின் உயிர்களை காவு கொள்ளப் போகின்றதோ?

http://www.tamilwin.com/community/01/121076?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில்  வைத்திய  வசதி  இல்லை என்பது ... செய்தி.
அதே...  இடத்தில், பிறந்து வளர்த்த தமிழன், இன்று  உலகம் போற்றும் மனிதன்.

ஆழ்ந்த  அஞ்சலிகள் .....

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்.நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில்  வைத்திய  வசதி  இல்லை என்பது ... செய்தி.
அதே...  இடத்தில், பிறந்து வளர்த்த தமிழன், இன்று  உலகம் போற்றும் மனிதன்.

ஆழ்ந்த  அஞ்சலிகள் .....

இங்க படித்த ஆதள் இங்கே வேலைபார்க்க விரும்புவதில்லை ஆகையால் இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் இருக்கிறது

ஆரம்பத்தில் படித்து நல்ல வைத்தியராவேண்டும் என்பது பிறகு செலவழித்த காசை எடுக்க வேன்டும் என்பது ( எங்க ஊருக்கு நல்ல சேவை செய்ய வேண்டும் என்பது )

நெஞ்சு வலி என்று கொண்டு சென்றதாக கேள்விப்பட்டேன்  அந்த மாணவிக்கு சிகிச்சை செய்ய ஆள் இன்மையால் இறந்து போனதாக கேள்வியுற்றேன் 

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாணவிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

அண்மையில் ஒரு யாழ்ப்பாண வைத்தியர் லண்டனில்.. ஆஸ்பத்திரில சந்திச்சார். 

அவரும் அவருடன் கூட வேலை செய்யும் வெள்ளை இன டாக்டர்களும் இருந்தார்கள். 

இவர் உடன் பீற்றர் வாசிக்க தொடங்கினார். சொறீலங்காவில் டாக்டர் ஆவது கடினம். வெட்டுப்புள்ளி அதுஇதென்னு. தன்ர திறமைகளை எல்லாம் கொட்டிக் கொண்டிருக்க.. அந்த வெள்ளை கேட்டிச்சுது.. இவ்வளவு கஸ்டப்பட்டு உங்கட அரசாங்கம் இலவசமா உங்கட மக்களுக்கு சேவை செய்யத் தானே படிப்புக்குது.. ஏன் அங்க சேவை செய்ய நீங்க விருப்பப்படவில்லை என்று. நாங்க இங்க இப்ப லோனில தான் படிக்கிறம். முந்தி தான் மருத்துக் கல்வி இங்கும் இலவசம். இப்ப காசுன்னு. 

எங்கட வைத்தியர் கப் சிப் ஆகிட்டார்.

எங்கட ஆக்கள் வைத்தியப் படிப்பு படிப்பது.. வெளிநாட்டுக்கு வரவும்.. கொழுத்த சீதனம்.. வசதிகளோடு கல்யாணம் கட்டவுமே தவிர... சேவை மனப்பான்மை என்பது அவர்களில் பலருக்கு சொந்த நாட்டிலும் இல்லை நாட்டுக்கு வெளியிலும் இல்லை.

அண்மையில்.. முகாமைத்துவ பிரிவில் அவதானித்த படி.. எங்கட தமிழ் ஜி பி மார்.. பண்ணுற தப்புத் தாளங்கள் அடிக்கடி.. அவதானிக்கப்பட்டிருக்குது. 

 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
6 minutes ago, nedukkalapoovan said:

எங்கட ஆக்கள் வைத்தியப் படிப்பு படிப்பது.. வெளிநாட்டுக்கு வரவும்.. கொழுத்த சீதனம்.. வசதிகளோடு கல்யாணம் கட்டவுமே தவிர... சேவை மனப்பான்மை என்பது அவர்களில் பலருக்கு சொந்த நாட்டிலும் இல்லை நாட்டுக்கு வெளியிலும் இல்லை.

முக்கியமாக நந்தி அவர்கள், அவரைப் போன்ற பலர் உயிரைக் கொடுத்து போராடி பலரை யாழ் மருத்துவ வளாகத்தில் வைத்தியர்களாக உருவாக்கிவிட, 90% ஆனவர்கள் படித்து படம் பெற்றதும் அடுத்த கணமே ஓடியது தெற்கு நோக்கியும், பின்னர் அங்கிருந்து வெளிநாடுகள் நோக்கியும் தான். 

இவ்வளவு கேவலமான மன நிலை உடைய வேறு படித்த மக்களை நான் கண்டதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

டிலாஜினியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

On 15/10/2016 at 8:13 AM, போல் said:

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் தற்போது கடமையில் உள்ள மருத்துவரும் ஓய்வு பெற்றவர். ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ சேவையை வழங்கி வருகின்றார் என்பதும் இங்கு உன்னிப்பாக கவனிப்புக்குரியது.

மாணவி டிலாஜினியின் மரணத்துக்கு மட்டுமல்ல, 'மானுடநேய உன்னத மருத்துவ சேவை கிடைக்கப்பெறாமல்' ஈழத்தில் நமது நிலத்தில் இன்னும் நிகழப்போகின்ற பல நூறு அநாவசிய மனித உயிரிழப்புகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட மருத்துவர் சமூகமும் முக்கிய பொறுப்பாளிகளாவார்கள்.

மக்களின் வரிப்பணத்தை இலட்சக்கணக்கில் செலவழித்து இலவச கல்வி வழங்கப்பட்டே ஒரு மருத்துவர் உருவாக்கப்படுகின்றார். யாழ்ப்பாணம் மருத்துவப் பல்கலையில் இருந்து பட்டம் பெற்று வருடாந்தம் 135 மருத்துவர்கள், சமுகத்துக்கு மானுடநேய மருத்துவசேவையை வழங்குவோம் என்று புறப்பட்டு வருகின்றார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு வருடமாவது எமது தமிழ் மக்களுக்காக நெடுந்தீவு போன்ற மிகவும் பின்தங்கிய பல கஷ்ட பிரதேசங்களில் சேவை செய்ய வேண்டுமென்று வைராக்கியம் வளர்த்திருந்தால், தூர நோக்கு தூய சிந்தனை கொண்டிருந்தால் எமக்கு இப்படி ஒரு மருத்துவ அவலம் நிகழ்ந்திருக்காது.

இவ்வருடம் கூட இங்கிருந்து வெளியேறிய மருத்துவ மாணவர்களில் ஒருவர் தானும் நெடுந்தீவு போன்ற பின்தங்கிய பல கிராமங்களில் வைத்திய சேவையை, எமது மண் - எமது மக்கள் - எமது மக்களின் வாழ்வும் வளமும் நிறைவும் என்ற நேசிப்போடு, தேசிய சிந்தனையோடு வழங்க விண்ணப்பிக்கவில்லை என்பது அவமானம்.

சகல சௌபாக்கியங்களும் நிறைந்து கிடக்கும் நகர்ப்புற மருத்துவமனைகளில் மட்டுமே 'பழம் தின்று கொட்டை போடுவோம்' என்ற சொகுசு வாழ்க்கை மோகமே 'நமது மண், நமது மக்கள் என்கிற தேசிய சிந்தனையை - மானுடநேய மருத் சேவை வழங்கும் மனப்பான்மையை' இல்லாமல் செய்து விட்டது. இந்த சிந்தனை வறட்சி இன்னும் எத்தனை மக்களின் உயிர்களை காவு கொள்ளப் போகின்றதோ?

முற்றிலும் உண்மை போல்
மருத்துவம் மட்டுமன்றி நெடுந்தீவில் பல பாடங்களுக்கு ஆசிரியர்களும் தட்டுப்பாடு.

பல காலமாக ஆங்கில ஆசிரியர் இல்லாதிருந்தது நெடுந்தீவு. இப்போது யாரோ ஒரு புண்ணியவான் (பெண்) கிழமையில் இரண்டு நாட்கள் சென்று படிப்பிக்கின்றார். இதில் எல்லாவற்றிற்கும் மற்றவர்களை நம்பாமல் நாமும் ஏதாவது செய்ய வேண்டும். புலம்பெயர் சமூகம் இப்படியானவற்றில் கவனம் செலுத்தி ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யலாம். அப்படி ஏதாவது செய்யுமிடத்து ஒரு காலத்தில் புலம் பெயர் வாழ்வை மேற்கொண்டிருந்த எனது பங்கும் நிச்சயம் இருக்கும்.
 

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.