Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் உதயமானது புதிய அரசியல் கட்சி

Featured Replies

யாழில் எம்.ஜி. ஆர் நினைவாகத் "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி" எனும் பெயரில் புதிய கட்சி அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய முன்றலில் அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவையின் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள், மற்றும் முன்னாள் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜாவின் 18ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று இடம்பெற்றது.

இதன் போது கட்சியின் செயலாளர் இரவு 07.30 மணியளவில் புதிய கட்சி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பைப் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதன்படி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆரின் தீவிர இரசிகருமான செல்லையா விஜயரட்ணம் கட்சியின் தலைவராகவும்,

அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜா விஜயகாந்த் கட்சியின் செயலாளர் நாயகமாகவும், இ.வசந்த் கட்சியின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

மேலும் "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி" கட்சியின் செயலாளர் நாயகமாகத் தெரிவாகியுள்ள பொன்மதிமுகராஜா விஜயகாந்த்,

"இந்த மண்ணுக்கும் எமது மக்களுக்கும் என்றும் எனது உயிர் மூச்சுள்ள வரை உயிரைத் துச்சமென மதித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாக ஏற்றுக் கொண்டு செயற்பட ஆரம்பிக்கிறேன்" என மேடையில் வைத்து வழங்கிய உறுதி மொழி வழங்கினார்.

முன்னதாகத் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், அண்மையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மற்றும் முன்னாள் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜாவின் உருவப் படங்களிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செல்லையா விஜயரட்ணம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் ஈழத்தின் பிரபல பாடகரான சுகுமாரும் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, நினைவுரைகளை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செல்லையா விஜயரட்ணம் ஆகியோர் நிகழ்த்தினர்.

625.0.560.320.500.400.197.800.1280.160.95.jpg

625.0.560.320.500.400.197.800.1280.160.95.jpg

625.0.560.320.500.400.197.800.1280.160.95.jpg

625.0.560.320.500.400.197.800.1280.160.95.jpg

625.0.560.320.500.400.197.800.1280.160.95.jpg

 

 

http://www.tamilwin.com/politics/01/129528?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.320.500.400.197.800.1280.160.95.jpg

கூ ட்டத்துக்கு  வந்த... ஆட்களை  விட, வெறும்   கதிரைகள்தான்.... அதிகமாக இருக்கு.
ஆரப்பா.... ஒருத்தன், ஜாலியா... நித்திரை கொள்ளுறான். ஒருக்கா... அவரை தட்டி எழுப்பி விடுங்கோவன்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Quote

உயிரைத் துச்சமென மதித்து

டாங்ஸ்சுங்க.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு வேட்டி வெளிநாடு போக ஆசைப்படுது போல ....மெதுவாக ஒரு கட்சியை தொடர வேண்டியது 
பிறகு ஊரில ஆடு துரத்துகிறது ...மாடு துரத்துகிறது என்று போய் கரடி விட்டு அசைலம் அடிக்க உதவியாக இருக்கும் 

அடேங்கப்பா எவ்வளவு சனம். நெரிசல் தாங்க முடியல்ல.

நாற்காலிக்கு ஆசைப்பட்டவர்கள் பெருமளவு நாற்காலிகளுடன் கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

நாற்காலிக்கு ஆசைப்பட்டவர்கள் பெருமளவு நாற்காலிகளுடன் கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

போடப்பட்ட நாற்காலிகளும் பெறுமதியானவை தான்

அவை கட்சியிடம் பசையும் இருக்கு என்ற செய்தி சொல்லுது..

  • கருத்துக்கள உறவுகள்

பொன் மதிமுகராஜா. ஆரம்ப கால இளைஞர் பேரவையில் அங்கம் வகித்தவர். இவர் அனைத்துலக எம். ஜி. ஆர் பேரவை தலைவராக இருந்தவர். அகில இலங்கை எம்.ஜி.ஆர் மன்றத்தலைவராகவும் இவரே இருந்தவர்.

நாற்காலி வாடகை அது. 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய கட்சியின் எதிர் பார்ப்பு நிறைவேற வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக போராளிகள் போன்ற கட்சிகளால் சாதிக்க முடியாதவற்றை எம்.ஜி.ஆர். பெயரை முன்வைத்து இந்த புதிய கட்சி மூலம் நிறைவேற்றலாம் என்பது தமிழின விரோத எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் எதிர்பார்ப்பு.

இந்த தமிழின விரோத செயல்களுக்கு தெற்காசியாவின் படுகொலைகளில் முன்னணி வகிக்கும் தமிழின விரோத எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் பெருமளவு நிதியுதவி செய்வதாக செய்திகள். 

On 12/28/2016 at 10:17 PM, விசுகு said:

போடப்பட்ட நாற்காலிகளும் பெறுமதியானவை தான்

அவை கட்சியிடம் பசையும் இருக்கு என்ற செய்தி சொல்லுது..

விசுகு அண்ணை! இவை இலங்கையில் கிடைக்கும் மிக மலிவான வார்ப்பப்பொருள் (பிளாஸ்டிக்) நாற்காலிகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கைக்கும் ரெம்பக் காதல். அது அதிகரிச்சுக்கிட்டே இருக்கும். ஒரு வீட்டிலேயே ஆளுக்கொரு கட்சி தானே. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.