Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம்?

Featured Replies

உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம்?

இதன் நோக்கம் யாழ் கள நண்பர்களிடையே தமிழ் பழ மொழிகளின் பாவனையை அதிகரிக்கச் செய்வதாகும். சிரமமான பழமொழிகளிற்கு தயவு செய்து விளக்கத்தையும் கூறி விடுங்கள். உங்கள் வாழ்வனுபவத்தையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இதோ நான் ஆரம்பித்து வைக்கின்றேன் - எனக்கு மிகப் பிடித்தமான வாழ்பனுபவத்தில் கற்றுணர்ந்த பழமொழி:

மதியாதார் வாசல் மிதியாதே!

Edited by மாப்பிளை

  • தொடங்கியவர்

ஒருவரையும் காணவில்லை? :huh: அடுத்த பழமொழி

அடியாத மாடு படியாது!

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை ( சரியா நான் சொன்னது)

தாயிற்சிறந்தொரு கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடம்பன்கொடியும் (தமிழர்கள்)திரண்டால் மிடுக்கு

சிறுதுளி பெருவெள்ளம்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Edited by வியாசன்

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

கிட்டாதாயின் வெட்டென மற.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு (மோகண் அண்ணா பலருக்கு சொல்ல நினைக்கும் பழமொழி..கி கி கி) ;)

  • தொடங்கியவர்

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன :)

"நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன" இது உண்மையில் பழமொழியா அல்லது நம்மவர் விடும் பகிடியா? இதன் சரியான அர்த்தம் யாராவது நண்பர்களிற்குத் தெரியுமா? ஒரு உதாரணத்துடன் விளக்கினால் நன்றாக இருக்கும்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறு நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்!

கல்லானாலும் காதலன் Full ஆனாலும் புருசன்.

வடிவேலுவின் மொழி [கல்லானாலும் காதலன் Full ஆனாலும் புருசன்.] பழமொழியல்ல; புதுமொழி. :)

1. கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை.

2. எள் எண்ணைக்கு காயுதாம் எலிப்புழுக்கை சேர்ந்த குற்றத்திற்கு காயுதாம்

வேறு சில... குலைநடுக்கம் என்பது தவறு. கொலை நடுக்கம் என்பதே சரி.அதே போல நிலவரம் என்பது தவறு. நிலைபரம் என்பதே சரி.

Edited by E.Thevaguru

  • கருத்துக்கள உறவுகள்

பழமொழிகளை மட்டுமல்ல, அவற்றின் பொருள் விளக்கத்தையும் எழுதுவது நன்றாக இருக்கும்.

வேறு சில... குலைநடுக்கம் என்பது தவறு. கொலை நடுக்கம் என்பதே சரி.அதே போல நிலவரம் என்பது தவறு. நிலைபரம் என்பதே சரி.

குலை நடுக்கம் என்பது தவறா? ஈரக்குலை நடுங்குதல் என்று சொல்வார்களே!

  • கருத்துக்கள உறவுகள்

தாயை சந்தையில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்கத் தேவை இல்லை

என்பார்கள்.இதையும் பழமொழியில் இருந்து முற்றாக நீக்க வேண்டும்

பழைய காலத்தில் இது பொருந்தி இருக்கலாம்.இப்போ அப்படி பார்க்க முடியாது.

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு (மோகண் அண்ணா பலருக்கு சொல்ல நினைக்கும் பழமொழி..கி கி கி) ;)

தூயா இந்த பழமொழி முடிவடைந்து விட்டதா? ஏனெனில் இதனுடன் சேர்த்து நற் பொண்டாட்டிக்கு ஒரு சொல்லு என்பார்கள்.எது சரி.

(1). ஆனையும் அடிசறுக்கும்!

(2). அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவார்களா?

(3). பொறுத்தார் பூமி ஆள்வார்

(4). அழுத பிள்ளை பால் குடிக்கும்.

(5). காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

(6). அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

(7). இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

(8). பேராசை பெரும் நட்டம்

(9). வெள்ளம் வருமுன்னர் அணை கட்ட வேண்டும்.

(10). பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.

Edited by Norwegian

(11). கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

(12). ஆழமறியாமல் காலை விடாதே

(13). புத்திமான் பலவான்.

(14). நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

(15). மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

(16). தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்

(17). கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

(18). மாரியல்லது காரியமில்லை

(19). ஐயர் வரும் வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா?

(20). வெறுங்கை முழம் போடுமா?

Edited by Norwegian

  • கருத்துக்கள உறவுகள்

பல்லக்கு ஏறுவதும் நாவாலே...பல் உடை படுவதும் நாவாலே..

கனவில் கண்ட பொருள் கைக்கு எட்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஓடும் புளியம் பழமும் போல் இரு

எந்தவொரு விடயத்திலும் ஒட்டி ஊறி விடாதே. புளியம் பழமும் அதன் ஓடும் போல் ஒன்றாக இரு. ஆனால் ஒட்டி இராதே. அதிகம் ஒட்டினால் இழப்புக்களைத் தாங்குவது மகா கடினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

2. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

3. ஈட்டி எட்டிய மட்டும் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

4. ஆடிற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடிற மாட்டை பாடித்தான் கறக்கணும்.

5. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

என்ன Norwegian பல பழமொழிகளை எழுதவேண்டும் என்கின்ற ஆர்வத்தில் ஒரு பழமொழியை இருதடவைகள் எழுதிவிட்டீர்களா?

1.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவார்களா?

2.அரசன் அன்றே கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்!

3.அலை போதும்போதே தலை முழுகு; காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!

4.அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும்!

5.கிடைக்கப் போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்!

6.ஆழம் அறியாமல் காலை விடாதே!

7.ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே;

கேடு வரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே!

8.இனம் இனத்தை சேரும்!

9.எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற்போல்!

10.எரிகிற வீட்டீல் பிடுங்கின மட்டும் இலாபம்!

11.எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே; பிள்ளை பெறும் முன் பெயர் வைக்காதே!

12.எலி வளையானாலும் தனி வளை வேண்டும்!

13.ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு!

14.கடுகு போன இடம் ஆராய்வார்; பூசனிக்காய் போன இடம் தெரியாது!

15.கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே!

சின்னப் பாம்பென்றாலும் பெரிய தடியால் அடி.

சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா...

-----| சோனியின் குடுமி சும்மா ஆடுமா...

குறி வைக்க ஏற்ற இராம சரம்...

-----| குருவிக்கேற்ற இராமேச்சரம்...

வாலையில ஆடியவள் வயது வந்தும் ஆடுவாள்

முருக்குப்பெருத்து தூணுக்கு உதவாது

வண்டி கூழுக்கழுகிது, கொண்டை பூவுக்கழுகிது

பண்டிக்கு ஏன் நண்டுக்கறி (my own)

அகத்தி 1000 காய் காய்த்தாலும் பிறத்தி பிறத்தியே

நாய்க்கு ஏன் போர்த்தேங்காய்

பண்டிக்கு 12 குட்டி, மனுசனுக்கு 1 குட்டி (my own)

நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணி

வயிற்று வலிய நம்பினாலும், அக்பர் அலிய நம்பாத (my own)

சோனித் தொப்பியும், சட்டி அப்பமும் எப்பவும் ஒண்டு (my own) (eppa piralum endhu theriyaathu)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடிச்ச பழமொழி...

இருந்தாருக்கு இருந்தளு, நிண்டாருக்கு நிண்டளு!

  • தொடங்கியவர்

குரு இல்லா வித்தை குருட்டு வித்தை!

தொட்டுக்காட்டினால் ஒழிய சுட்டுப்போட்டாலும் வராது!

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்

மூஞ்சுறு தான் போக வழியை காணமாம், விளக்குமாறுடன் வெளிகிடுதாம்

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?

தவளையும் தன் வாயால் கெடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.