Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

Featured Replies


உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
 
 

article_1485435737-ssss.JPG

-சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், அ.அகரன்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியா, பிரதான தபாலகத்துக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வந்த, உண்ணாவிரதப் போராட்டம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியையடுத்து, கைவிடப்பட்டுள்ளது.

அந்த பிரச்சினைக் குறித்து, எதிர்வரும் 9ஆம் திகதி, கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பதாக அவர் வாக்குறுதியளித்துள்ளார்.

அன்றைய தினம், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அலரி மாளிக்கைக்கு வருமாறும் அவர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்கள் இந்த கலந்துரைாயடலில் கலந்துக்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் வாக்குறுதியையடுத்து, உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/190483/உண-ண-வ-ரதம-க-வ-டப-பட-டத-#sthash.4Jpt1kTy.dpuf
  • தொடங்கியவர்

உறுதிமொழி வழங்கி சாகும் வரையான உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்  அமைச்சர்  ருவான் விஜேவர்த்தன..!

 

காணாமல் போனோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இன்று மாலை முடித்து வைத்தார்.DSC_0056.jpg

காணாமல் போன உறவுகளினால் கடந்த திங்கள் கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று மாலை 6 மணியளவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நீராகாரம் வழங்கி முடித்து வைத்தார்.letter-of-missing.jpgDSC_0027.jpg

காணாமல் போனவர்களின் உறவினர்கள் 14 பேர் நான்காவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறு, சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்' ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.DSC_0359.jpg

இவர்களின் உடல் நிலை மோசமடைந்துவந்த நிலையில் நான்காவது நாளான இன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு அங்கு வருகைதந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உண்ணாரவிரதத்தை மேற்கொண்டு வந்தவர்களுடன்  கலந்துரையாடினார்.DSC_0318.jpg

இதன்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள், அருட்தந்தையர்கள் உள்ளிட்ட 16 பேர்கொண்ட குழுவினருடன் எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பு அலரி மாளிகையில் காலை 11மணிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், நீதித்துறை அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பேச்சுக்களை நடத்தி இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக எழுத்து மூலம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்உறுதி மொழி வழங்கியுள்ளார்.

இதையடுத்தே அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட இணங்கினர். அதன்பின்நீராகாரம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

DSC_0375.jpgDSC_0381.jpgDSC_0382.jpg

 

http://www.virakesari.lk/article/15891

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது நடந்தால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகியே உறுதி மொழி வழங்கும் முதல்நாடு இலங்கை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எரிகிற நெருப்பை எடுத்து விட்டு செல்கிறார்கள் பானையில் எதுவும் இல்லை tw_bawling:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தான் சிறைக் கைதிகளின் உண்ணாவிரதத்தையும் முடித்து வைத்து (உறுதிமொழியுடன்) அம்போ என விட்டு விட்டார்கள். அந்த பெருமை கூட்டமைப்பையும் சாரும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நல்லது நடந்தால் சந்தோசம்.

அதே

  • தொடங்கியவர்

கைவிடப்பட்டது போராட்டம்

01-718ac513d52bf090fddc055b56f7fa3b9425850b.jpg

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் எழுத்து மூல உறுதியை அடுத்து முடிவு

 ஓமந்தை,

வவு­னி­யாவில் காணாமல்போனோரின் உற­வி­னர்­க­ளினால் கடந்த நான்கு நாட்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­ வந்த உணவு தவிர்ப்பு போராட்டம் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்த்­த­னவின் எழுத்து மூல உறு­தி­மொ­ழியை அடுத்து நேற்று மாலை 6.10 மணி­ய­ளவில் கைவி­டப்­பட்­டது.

நேற்­றைய தினம் மன்­னாரில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றிற்கு சென்­றி­ருந்த பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்த்­தன அங்­கி­ருந்­த­வாறு வவுனியாவில் உண்­ணா­வி­ரதம் இடம்­பெற்ற இடத்­திற்கு வருகை தந்த நிலையில் உண்ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த  வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.  

அந்­த­வ­கையில் எதிர்­வரும் 9 ஆம் திகதி  பிர­தமர், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர், சட்­டமா அதிபர் உள்­ளிட்­ட­வர்­க­ளுடன் உணவு தவிர்ப்பில் ஈடு­பட்­ட­வர்­களில் 10 பேர் பேச்­சு­வார்த்தை நடத்த சந்­தர்ப்பம் அளிப்­ப­தாக   

இரா­ஜாங்க அமைச்சர் எழுத்­து­மூலம் உத்­த­ர­வாதம் அளித்­த­தை­ய­டுத்து உண்­ணா­வி­ரதப் போராட்டம் கைவி­டப்­பட்­டது.

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்த்­தன உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­விட்டு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் தொடர்­பினை ஏற்­ப­டுத்தி உரை­யா­டினார். அதன் பின்­னரே எழுத்­து­மூல உத்­த­ர­வாதம் அளிக்­கப்­பட்­ட­துடன் உண்­ணா­வி­ர­தமும் கைவி­டப்­பட்­டது.

கடும் மழை மற்றும் குளி­ருக்கு மத்­தியில் நீர் மற்றும் உணவு ஏது­மின்றி காணாமல் போனோரின் உற­வி­னர்கள் 4 நாட்­க­ளாக உணவு தவிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வந்­தனர். கடந்த திங்­கட்­கி­ழமை வவு­னியா கந்­த­சாமி கோவிலில் விசேட வழி­பாட்டில் ஈடு­பட்ட காணாமல் போனோரின் உற­வி­னர்கள் பேர­ணி­யாக வந்து வவு­னியா பிர­தான தபா­ல­கத்­திற்கு முன்­பாக உணவு தவிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

முற்­சக்­க­ர­வண்டி உரி­மை­யா­ளர்கள் மற்றும் சிவில் அமைப்­பு­களின் ஆத­ர­வுடன் இட­ம­பெற்ற உணவு தவிர்ப்பு போராட்டம் படிப்­ப­டி­யாக வியா­பித்து கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கில் சில மாவட்­டங்­க­ளிலும் அடை­யாள உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் நிலைக்கு சென்­றது.

 இரண்டாம் நாள் போராட்­டத்தின் பொது அர­சி­யல்­வா­திகள் மற்றும் காணாமல் போனோரின் உற­வுகள் உட்­பட பலரும் ஆத­ரவு தெரி­விக்க முன்­வந்­தீ­ருந்­தனர்.

உண்­ணா­வி­ரதப் போராட்டம் கார­ண­மாக சிலரின் உடல்­நிலை மோச­மா­கி­யது. வைத்­திய பரி­சோ­த­னைகள் மேற்­கொண்­டதில் சிலரின் உடல் நிலை மோச­ம­டை­வ­தாக வைத்­தி­யா்கள் தெரி­வித்­தி­ருந்த நிலை­யிலும் போராட்டம் தொடர்ந்­தது. வவு­னி­யாவில் தொடர்ச்­சி­யாக கடும் மழை பெய்து வந்­த­துடன் இரவு நேரத்தில் கடும் பணி­யு­மான கால­நிலை காணப்­பட்ட நிலை­யிலும் போராட்டம் தொடர்ந்­தது.

எனினும் நான்­கு­பேரின் உடல் நிலை மோச­ம­டைந்­துள்­ள­தாக வைத்­தி­யர்­களின் பரி­சோ­த­னையில் தெரி­விக்­கப்­பட்ட நிலையில் நான்காம் நாளான நேற்று போராட்டம் தீவிரம் அடைந்­தி­ருந்­த­துடன் உணவு தவிர்ப்பில் ஈடு­பட்ட 14 பேரும் தாம் மயங்கி விழும் சந்­தர்ப்­பத்தில் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லா­தீர்கள் என் கோரிக்­கையை முன்­வைத்­தீ­ருந்­தனர்.

 அத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உண்­ணா­வி­ரதம் இடம்­பெற்ற இடத்­திற்கு வருகை தந்து தமது ஆத­ரவை வழங்­கினர். நிலையில் முற்­சக்­க­ர­வண்டி உரி­மை­யாளர் சங்கம் காலை 9 மணிக்கு அமைதி பேர­ணி­யொன்­றினை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. யாழ் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மற்றும் வவு­னியா வளாக மாண­வர்­களும் போர­ணி­யொன்­றினை உணவு தவிர்ப்பில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு ஆத­ர­வாக நடத்­தி­யி­ருந்­தனர்.

 மேலும் இளை­ஞர்கள் சிலர் வவு­னியா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவை முற்­று­கை­யிட்­ட­துடன் உணவு தவிர்ப்பில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு தீர்வை கோரி­யி­ருந்­தனர். மற்­றும்­மொரு இளைஞர் அணி பேர­ணி­யொன்­றினை நகர மத்­தி­யி­னூ­டாக முன்­னெ­டுத்து உணவு தவிர்ப்பு இடம்­பெற்ற இடத்­திற்கு வந்து சேர்ந்­தனர்.

இவ்­வாறு உண்­ணா­வி­ரதம் தீவி­ர­ம­டையத் தொடங்­கி­ய­தை­ய­டுத்து மன்­னாரில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றிற்கு சென்­றி­ருந்த பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான விஜ­ய­வர்த்­தன வவு­னியா ஜோசப் படை முகா­முக்கு வானூர்­தி­யி­னூ­டாக வருகை தந்து ஏ9 வீதி வழி­யாக பாது­காப்பு வாக­னங்கள் புடை சூழ உண்­ணா­வி­ரதம் இடம்­பெற்ற இடத்­திற்கு வருகை தந்­தி­ருந்தார்.

அங்கு வந்த அவர் உணவு தவிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்ட 14 பேரு­டனும் சுமார் 45 நிமி­டங்கள் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். இதன்­போது அர­சாங்­கத்­தினால் அமைக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுக்கள், தமது அர­சாங்கம் காணாமல் போனோர் மற்றும் அர­சியல் கைதிகள் தொடர்பில் கொண்­டுள்ள அக்­கறை தொடர்­பாக உணவு தவிர்ப்பில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எடுத்­துக்­கூ­றினார். எனினும் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது பக்க நியா­யத்­தி­னையும் நீண்ட கால­மாக தாம் வைத்­துள்ள கோரிக்­கை­யி­னையும் எடுத்­துக்­கூ­றிய நிலையில் கருத்து பறி­மாற்­றங்கள் இடம்­பெற்­றன.

இந்­நி­லையில் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் தொடர்­பினை ஏற்­ப­டுத்தி உரை­யா­டினார். இத­னை­ய­டுத்து எதிர்­வரும் 9 ஆம் திகதி அலரி மாளி­கையில் இது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­படும் என இரா­ஜாங்க அமைச்­சர்ங அறி­வித்தார்.

எனினும் உணவு தவிர்ப்பில் ஈடு­பட்­ட­வர்கள் எழுத்து மூல­மான உத்­தி­ர­வாதம் தமக்கு தரப்­பட வேண்டும் என கோரினர். இதன்­பி­ர­காரம் அதற்கு இணக்கம் தெரி­வித்த பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் அங்­கி­ருந்த கிறிஸ்­தவ மத தலை­வ­ரிடம் கடி­தத்­தினை எழு­து­மாறு தெரிவித்தார் ,

இதனையடுத்து எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 11 மணிக்கு உணவு தவிர்ப்பில் ஈடுபட்டவர்களில் 10 பேருடன் பிரதமர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சட்டமா அதிபர் உட்பட 16 பேர் அலரி மாளிகையில் கலந்துரையாடலை நடத்துவதாக எழுத்து மூலமான உத்திரவாதம் வழங்கப்பட்டது.

அதனையடுத்து எழுத்துமூல எத்திரவாத பத்திரத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கையொப்பமிட்டு உணவு தவிர்ப்பில் ஈடுபட்டவர்களிடம் கையளித்ததுடன் நீராகாரத்தினையும்; அவர்களுக்கு வழங்கியிருந்தார். இதனையடுத்து உணவு தவிர்ப்பு போராட்டம் நான்காவது நாளன்று கைவிடப்பட்டது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-27#page-1

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனவர்களெல்லாம் வெளிநாட்டில் வாழ்கின்றனர் என்று ரனில் சொல்கிறார். பிறகெப்படி தீர்வு வரும்??

 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nunavilan said:

காணாமல் போனவர்களெல்லாம் வெளிநாட்டில் வாழ்கின்றனர் என்று ரனில் சொல்கிறார். பிறகெப்படி தீர்வு வரும்??

 

நல்ல காலம் வெளிநாட்டில் உள்ளவரெல்லாம் காணாமல் போனவர்கள் என்று சொல்லவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.