Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சரினால் வைபவ ரீதியாக திறந்து வைப்பு

Featured Replies

மன்னார் - கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இன்று (2) காலை நடைபெற்றுள்ளது.

3.51 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த 'கீரி சுற்றுலா கடற்கரை' அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, மன்னார் நகர சபையின் முன்னாள் உப தலைவர், உறுப்பினர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன், மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜே.துரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.பற்றிக் டிறஞ்சன், மன்னார் நகர சபையின் அலுவலர்கள், மாதர், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/development/01/144408?ref=home-top-trending

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சுற்றுலா வருகிறோம்.! கடற்கரை எங்கேயப்பா.....????

Bildergebnis für கடற்கரை

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்களின்ற படத்தைக் காட்டுகினம்.

கடற்கரையைக் காணமே.

கீரிமலை எண்டு நினைச்சன். உது மன்னார்ப் பக்கமா கீரியாமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

நாங்கள் சுற்றுலா வருகிறோம்.! கடற்கரை எங்கேயப்பா.....????

 

22 minutes ago, Nathamuni said:

ஆக்களின்ற படத்தைக் காட்டுகினம்.

கடற்கரையைக் காணமே.

எல்லா இணையங்களிலும்.... ஆட்களின் ஒரே படத்தை தான் போட்டிருக்கின்றார்கள்.
ஒரு இணையத்துக்காவது.... கடற்கரையின் படத்தை போட வேண்டும் என்று, மூளை  வேலை செய்ய வில்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

ஆக்களின்ற படத்தைக் காட்டுகினம்.

கடற்கரையைக் காணமே.

கீரிமலை எண்டு நினைச்சன். உது மன்னார்ப் பக்கமா கீரியாமே.

3.51 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த 'கீரி சுற்றுலா கடற்கரை' அமைக்கப்பட்டுள்ளது.

35  லட்சம் ரூபாயில

அமைச்சர்கள்  அதிகாரிகளின்  பங்கு போக மீதி

5 லட்சம்

அதில் தான் மேடை  போட்டிருக்கு...

உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை..tw_dissapointed_relieved:

4 hours ago, போல் said:

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதுதான் அந்த 35 லட்சத்தில லட்சணமா கட்டினதாம் // இதுக்கு வேற ஒரு திறப்பு விழா

அவனவன்  35 லட்சத்தில அழகான வீடே கட்டுறாங்கள்.

4 hours ago, போல் said:

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

கடற்கரைக்கு போற பாதையை கூட திருத்த முடியாத புண்ணியவான்கள்.

ஆனா பொக்கட் மட்டும் நிரம்பி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இதுதான் அந்த 35 லட்சத்தில லட்சணமா கட்டினதாம் // இதுக்கு வேற ஒரு திறப்பு விழா

அவனவன்  35 லட்சத்தில அழகான வீடே கட்டுறாங்கள்.

கடற்கரைக்கு போற பாதையை கூட திருத்த முடியாத புண்ணியவான்கள்.

ஆனா பொக்கட் மட்டும் நிரம்பி இருக்கும்.

ஆகா...

கிளம்பப் போறாரய்யா... கிளம்பப் போறார்.

காமராவையும் தூக்கிக் கொண்டு, படம் பிடிச்சுப் போடுறன் எண்டு கிளம்பப் போறாரய்யா.. :grin: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, போல் said:

3.51 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த 'கீரி சுற்றுலா கடற்கரை' அமைக்கப்பட்டுள்ளது.

படங்களை பார்க்க மில்லியன் செலவழிச்ச மாதிரி தெரியேல்லையே. சிலநேரம் கணக்கிலை பிழை விட்டுருப்பினம் :cool:

  • தொடங்கியவர்

அழகியல் நுட்பங்களுடன், நேர்த்தியான, தரமான, மனத்துக்கினிய  கட்டமைப்புக்களை மேற்கொள்வதில் பொறுப்பிலுள்ள தமிழ் அதிகாரிகள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் ஆலோசாகர்கள் இன்னமும் அரிவரியில் தான் உள்ளார்கள்! இன்னும் சொல்லப்போனால் சற்றும் பொறுப்பற்றவர்களாவே உள்ளார்கள்.

இவர்கள் உருவாக்கும் கட்டமைப்புகளில் தரம், நேர்த்தி, அழகியல் நுட்பங்கள், நீண்டகால சிந்தனை மிகவும் மலினமானதாகவே உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

அழகியல் நுட்பங்களுடன், நேர்த்தியான, தரமான, மனத்துக்கினிய  கட்டமைப்புக்களை மேற்கொள்வதில் பொறுப்பிலுள்ள தமிழ் அதிகாரிகள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் ஆலோசாகர்கள் இன்னமும் அரிவரியில் தான் உள்ளார்கள்! இன்னும் சொல்லப்போனால் சற்றும் பொறுப்பற்றவர்களாவே உள்ளார்கள்.

இவர்கள் உருவாக்கும் கட்டமைப்புகளில் தரம், நேர்த்தி, அழகியல் நுட்பங்கள், நீண்டகால சிந்தனை மிகவும் மலினமானதாகவே உள்ளது!

உண்மை போல். நினைக்க வெறுப்புத்  ஏற்படுகின்றது.
ஆரம்ப அறிவு தான் இல்லா விட்டாலும், இப்படியான இடங்களின் முன் மாதிரி படங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றது. அதனைப் பார்த்தாவது... ஓரளவுக்கு ஒழுங்காக செய்வோம் என்ற பொறுப்புணர்வு கூட இல்லாமல் இருக்கின்றார்கள். tw_angry:

Edited by தமிழ் சிறி

2 hours ago, போல் said:

அழகியல் நுட்பங்களுடன், நேர்த்தியான, தரமான, மனத்துக்கினிய  கட்டமைப்புக்களை மேற்கொள்வதில் பொறுப்பிலுள்ள தமிழ் அதிகாரிகள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் ஆலோசாகர்கள் இன்னமும் அரிவரியில் தான் உள்ளார்கள்! இன்னும் சொல்லப்போனால் சற்றும் பொறுப்பற்றவர்களாவே உள்ளார்கள்.

இவர்கள் உருவாக்கும் கட்டமைப்புகளில் தரம், நேர்த்தி, அழகியல் நுட்பங்கள், நீண்டகால சிந்தனை மிகவும் மலினமானதாகவே உள்ளது!

மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய சட்டத்தரணி, சமூகத்தில் போலி கெளரவம் கொழுத்த சீதனத்திற்காக டாக்டர் எஞ்ஜினிர் ஆகிய துறைகளிலேயே அதிக கவனம் செலுத்தி தன்னை கல்விச் சமூகமாக வேறு தன்னைத்தானே  தம்பட்டம் அடிக்கும்  ஒரு சமுதாயத்திடம் இதை விட எதை எதிர்பார்கக முடியும்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

பாசிக்குடா,மற்றும் செல்வசந்நிதி கோவிலுக்கு பக்கத்தில இருக்கிற பீச் களின் நிலைதான் இதுக்கும் வருமோ?

4 hours ago, தமிழ் சிறி said:

உண்மை போல். நினைக்க வெறுப்புத்  ஏற்படுகின்றது.
ஆரம்ப அறிவு தான் இல்லா விட்டாலும், இப்படியான இடங்களின் முன் மாதிரி படங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றது. அதனைப் பார்த்தாவது... ஓரளவுக்கு ஒழுங்காக செய்வோம் என்ற பொறுப்புணர்வு கூட இல்லாமல் இருக்கின்றார்கள். tw_angry:

ஒழுங்கா செய்தால், அவர்கள் எப்படி ஆட்டையைப் போடுறது.

 

6 hours ago, போல் said:

அழகியல் நுட்பங்களுடன், நேர்த்தியான, தரமான, மனத்துக்கினிய  கட்டமைப்புக்களை மேற்கொள்வதில் பொறுப்பிலுள்ள தமிழ் அதிகாரிகள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் ஆலோசாகர்கள் இன்னமும் அரிவரியில் தான் உள்ளார்கள்! இன்னும் சொல்லப்போனால் சற்றும் பொறுப்பற்றவர்களாவே உள்ளார்கள்.

இவர்கள் உருவாக்கும் கட்டமைப்புகளில் தரம், நேர்த்தி, அழகியல் நுட்பங்கள், நீண்டகால சிந்தனை மிகவும் மலினமானதாகவே உள்ளது!

அரசியல்வாதிகளுக்கு + அதிகாரிகளுக்கு அறிவார்ந்தவர்களை உள்வாங்கினால் ஆட்டையைப் போடமுடியாது என்ற பயம்.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா :grin:

1 hour ago, Surveyor said:

ஒழுங்கா செய்தால், அவர்கள் எப்படி ஆட்டையைப் போடுறது.

ஆட்டையை போட்டாலும் கோத்தா கோத்தாதான் 

அதுக்கு உதாரணம் பண்ணை கடற்கரை + கல்லடி கடற்கரை + காங்கேசன்துறை கடற்கரை.

அதைக்கூட பராமரிக்க முடியாமல் நாசமாக்கும் நம்மவர்கள் + நம்ம அரசு

 

பண்ணை கடற்கரை + கோட்டை அழகாகவே நிர்மாணிக்கப்பட்டது + நிர்மாணிக்கப்படுகிறது. ஆனால் அங்கு குப்பை போட ஒரு வாளி இல்லை. சுற்றிவர குப்பை + பொலித்தீன் பைகள்.

 

யாழ்நகரில் பொலித்தீனுக்கு தடையாம் // நேற்று மதியம் ஒரு புகழ்பெற்ற சைவ உணவகத்தில சாப்பாடு வாங்கியிருந்தேன். மொத்தமாக ஒன்பது பொலித்தீன் பைகள் + ஒரு  பொலித்தீன் தாள் 

எங்கே போய் முட்டினாலும் நம்ம நிலை இதுதான் இப்போது.

// மன்னார் - கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. //

இன்னும் மூன்று கிழமைகளின் பின்னர் பாருங்கள் - கட்டாக்காலி நாயும் ஆடும் மாடும்தான் இங்கு படுத்திருக்கும். கட்டினமா திறந்தமா ஆட்டையை போட்டமா என்று அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் போய்விடுவார்கள் - கீரி கிளிஞ்சுபோய் உட்காந்திருக்கும்.

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

 

அரசியல்வாதிகளுக்கு + அதிகாரிகளுக்கு அறிவார்ந்தவர்களை உள்வாங்கினால் ஆட்டையைப் போடமுடியாது என்ற பயம்.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா :grin:

ஆட்டையை போட்டாலும் கோத்தா கோத்தாதான் 

அதுக்கு உதாரணம் பண்ணை கடற்கரை + கல்லடி கடற்கரை + காங்கேசன்துறை கடற்கரை.

அதைக்கூட பராமரிக்க முடியாமல் நாசமாக்கும் நம்மவர்கள் + நம்ம அரசு

 

பண்ணை கடற்கரை + கோட்டை அழகாகவே நிர்மாணிக்கப்பட்டது + நிர்மாணிக்கப்படுகிறது. ஆனால் அங்கு குப்பை போட ஒரு வாளி இல்லை. சுற்றிவர குப்பை + பொலித்தீன் பைகள்.

 

யாழ்நகரில் பொலித்தீனுக்கு தடையாம் // நேற்று மதியம் ஒரு புகழ்பெற்ற சைவ உணவகத்தில சாப்பாடு வாங்கியிருந்தேன். மொத்தமாக ஒன்பது பொலித்தீன் பைகள் + ஒரு  பொலித்தீன் தாள் 

எங்கே போய் முட்டினாலும் நம்ம நிலை இதுதான் இப்போது.

// மன்னார் - கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. //

இன்னும் மூன்று கிழமைகளின் பின்னர் பாருங்கள் - கட்டாக்காலி நாயும் ஆடும் மாடும்தான் இங்கு படுத்திருக்கும். கட்டினமா திறந்தமா ஆட்டையை போட்டமா என்று அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் போய்விடுவார்கள் - கீரி கிளிஞ்சுபோய் உட்காந்திருக்கும்.

 

உதுக்குத்தான் சொல்லுறது சட்டம்/ஒழுங்குகள்/தண்டனைகள் எல்லாம் கடுமையாய்  இருக்கோணுமெண்டு....

சட்டங்களும் அரசுகளும் அரசியல்வாதிகளும் ஒழுங்காய் இல்லாட்டி முன்னேறின மேலைத்தேய நாடுகளும் உப்புடித்தான் இருந்திருக்கும்..
வெள்ளையனோ...கறுப்பனோ....இந்தியனோ...ஜப்பான்காரனோ பிறக்கும் போது எல்லாரையும் போலை சர்வசாரணமாய்த்தான் பிறக்கிறான். அவன் வளரும் போதுதான் நாடும் சட்டங்களும் பழக்கவழக்கங்களும்  எப்படி வாழோணுமெண்டதை தீர்மானிக்குது.
இலங்கையிலையும் சட்டங்களை கடுமையாக்கி அரசியல்வாதிகளை/மக்களை திருத்தியெடுக்க வேணும். சட்டம்/தண்டனை எண்டால் வயித்தை கலக்கிற அளவுக்கு பயம் வரவேணும்.

அப்பத்தான் அடுத்த இல்லை அதுக்கு அடுத்த சந்ததியாவது சிங்கப்பூர் மாதிரி வாழ சந்தர்ப்பம் கிடைக்கும்.

நமக்குத்தான் கட்டுப்பாடு சட்டங்கள் பிடிக்காதே......:grin:

இற்றைக்கு முன் ஒரு 30 வருடகாலம் தமிழ்மக்களும் அரசியல்வாதிகளும் ஒழுங்கு கடமையுணர்ச்சியுடன் இருந்தார்கள் எனவும்...சட்டமும் ஒழுங்குகளும் திறமையாக கடைப்பிடிக்கப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

பெரும்பாலான மக்களும் அதை நினைவுகூர ஆரம்பித்து விட்டார்கள்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஐீவன் சிவா என்றாலும் கீரி கடற்கரையைப் படம்போட்டு எங்கள் ஏக்கத்தைப் போக்குவார் என்று எதிர்பார்த்தேன். ம் ம்...... :(

2 hours ago, Paanch said:

ஐீவன் சிவா என்றாலும் கீரி கடற்கரையைப் படம்போட்டு எங்கள் ஏக்கத்தைப் போக்குவார் என்று எதிர்பார்த்தேன். ம் ம்...... :(

கடந்த வருடங்களில்  நான் மடு திருக்கேதீஸ்வரம் சில தடவைகள் போய் வந்திருந்தாலும் எனது பாட்டில் மன்னார் + முல்லைத்தீவு பகுதிக்கு இதுவரை போகவில்லை. போகணும் -- அதுக்கு நிறைய நேரம் தேவை. அப்போது உங்கள் ஆசை + எனது ஆசை நிறைவேறலாம். :grin:

ஐீவன் சிவா என்றாலும் கீரி கடற்கரையைப் படம்போட்டு எங்கள் ஏக்கத்தைப் போக்குவார் என்று எதிர்பார்த்தேன். :grin::grin:

Bilderesultat for கீரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.