Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவிலிருந்து யாழில் தொழிற்சாலை அமைத்த ஒருவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலிருந்து யாழில் தொழிற்சாலை அமைத்த  ஒருவர்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த தொழிலதிபர் எமது மக்களுக்கு எது அவசியம் என்பதை அழகாக சொல்லியுளார்.. சந்தோசமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுங்கள், பணத்தை அனுப்பாதீர்கள்.... உண்மையான வார்த்தை......!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, suvy said:

தொழில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுங்கள், பணத்தை அனுப்பாதீர்கள்.... உண்மையான வார்த்தை......!  tw_blush:

விடியப்பறம் மிஸ்கோல் போட்டு தட்டியெழுப்பி  மோட்டச்சைக்கிள் வாங்கிறதுக்கும்....பல்லுக்கு கிழிப்பு போடுறதுக்கும் காசுவேணுமெண்டு திருப்பள்ளி எழுச்சி பாடுற சனத்துக்கு என்ன செய்யலாம் சுவியர்? :grin:

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இதை தான்  நான் கன காலம் சொல்லி வருகிறேன் நிட்சயம் குடும்ப பெண்களுக்கான நல்ல தொழில் இன்னும் பல ர் முன் வரவேண்டும்  இதே மாதிரி சிறிய  தொழில் சாலைகள் அமைக்க 

  • 7 months later...

"உங்கள் ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினையுங்கள். நான் எனது ஊர் உடுப்பிட்டிக்குச் செய்வது போல நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஊருக்குச் செய்யுங்கள். தமிழர் தாயகங்கள் தன்னிறைவு அடையும்" என்று சொன்ன வைரமுத்து சொர்னலிங்கம் என்கின்ற உடுப்பிட்டியின் மண்ணின் மைந்தனுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். இப்படியான முன்னெடுப்புகளே இன்று எமக்குத் தேவை. இருப்பினும் தம்பியன் சில விடயங்களை ஐயாவுக்கு நினைவுபடுத்த வேண்டும். போராட்ட காலத்தில் புலம்பெயர்ந்து தமது பொருண்மியத்தைச் சிறப்புற வளப்படுத்தியோரில் பெருமளவானோர் யாழ் மாவட்டத்தவர். 1990 களில் தொடர்ச்சியான இனப்படுகொலைகளைச் சந்தித்து போராட்டக் களங்களில் தம்மை ஆகுதியாக்கி போராட்டப் பங்களிப்பில் பெரிதாய் நிற்கும் தென் தமிழீழத்தின் குக்கிராமங்களுக்கும் இதே அறிவுரையைச் சொல்லி விட முடியாது. தென் தமிழீழ மக்களுக்கும் வன்னி மக்களுக்கும் இப்படி அறிவுரை சொல்லேலாது..(நான் எனது ஊரிற்குச் செய்வது போல உங்கட உங்கட ஊரிற்குச் செய்யுங்க??) போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் தமிழீழ எல்லைக் கிராமங்களிலும் எங்களது பொருண்மியத் திட்டங்களைச் செய்ய வேண்டும். தற்சார்பை வளர்ப்பதுடன் சில பொருட்களில் மிகை உற்பத்தி செய்து வெளிநாட்டுச் சந்தைகளில் வணிகமாற்ற ஏற்பாடு செய்யும் வகையில் பொருண்மியத் திட்டங்களைச் செய்ய வேண்டும். தனி மரம் தோப்பாகாது. இது பற்றிச் சிந்தனைக் குழாங்கள் அமைத்து கட்டமைப்பு ரீதியில் வேலை செய்யப் பழகினாலே எமது தாயகத்திற்கானதாயிருக்கும். ஐயா போன்றவர்கள் இவற்றை உள்வாங்கி மேன்மேலும் சிறப்புற இனக் கடமையாற்ற வேண்டும்.

மீன்பிடிக்கக் கற்றுக் கொடுங்கள். மீனைப் பிடித்துக் கொடுக்காதீர்கள் என்பது மட்டும் எமது வலுவிழந்த நிலையில் போதுமானதல்ல. மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதோடு மீன் பிடிக்கும் படகு மற்றும் கருவினையும் கொடுங்கள். இல்லையென்றால் கிறீஸ் கம்பத்தில் ஏறச் சொல்லி கம்பெடுத்து அடிப்பது போன்றதே....வெறுங் கையால முழம் போடேல்லாது பாருங்க

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2018 at 3:07 AM, தம்பியன் said:

" போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் தமிழீழ எல்லைக் கிராமங்களிலும் எங்களது பொருண்மியத் திட்டங்களைச் செய்ய வேண்டும். தற்சார்பை வளர்ப்பதுடன் சில பொருட்களில் மிகை உற்பத்தி செய்து வெளிநாட்டுச் சந்தைகளில் வணிகமாற்ற ஏற்பாடு செய்யும் வகையில் பொருண்மியத் திட்டங்களைச் செய்ய வேண்டும். தனி மரம் தோப்பாகாது. இது பற்றிச் சிந்தனைக் குழாங்கள் அமைத்து கட்டமைப்பு ரீதியில் வேலை செய்யப் பழகினாலே எமது தாயகத்திற்கானதாயிருக்கும். ஐயா போன்றவர்கள் இவற்றை உள்வாங்கி மேன்மேலும் சிறப்புற இனக் கடமையாற்ற வேண்டும்.

மீன்பிடிக்கக் கற்றுக் கொடுங்கள். மீனைப் பிடித்துக் கொடுக்காதீர்கள் என்பது மட்டும் எமது வலுவிழந்த நிலையில் போதுமானதல்ல. மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதோடு மீன் பிடிக்கும் படகு மற்றும் கருவினையும் கொடுங்கள். இல்லையென்றால் கிறீஸ் கம்பத்தில் ஏறச் சொல்லி கம்பெடுத்து அடிப்பது போன்றதே....வெறுங் கையால முழம் போடேல்லாது பாருங்க

 

  • 2 weeks later...
On 5/4/2017 at 3:42 AM, குமாரசாமி said:

விடியப்பறம் மிஸ்கோல் போட்டு தட்டியெழுப்பி  மோட்டச்சைக்கிள் வாங்கிறதுக்கும்....பல்லுக்கு கிழிப்பு போடுறதுக்கும் காசுவேணுமெண்டு திருப்பள்ளி எழுச்சி பாடுற சனத்துக்கு என்ன செய்யலாம் சுவியர்? :grin:

எதையும் சொந்தமாக உழைத்து வாங்கினால் தான் கவுரவம் என்று சொல்லிவிடுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2018 at 3:09 AM, போல் said:

எதையும் சொந்தமாக உழைத்து வாங்கினால் தான் கவுரவம் என்று சொல்லிவிடுங்கள்!

ஒரு உன்மை ஒன்றையும் சொல்ல வேண்டும் எவ்வளவு சம்பாதித்தாலும் செலவு என்பது அதிகமாக தான் இருக்கிறது இலங்கையில் உலக அளவில் ஏற்படும் பொருளாதார தளம்பலா என்று தெரியவில்லை தேங்காய் 100 ரூபா கிழக்கில்  உப்பு பை 50 ரூபா 

On 5/4/2017 at 3:42 AM, குமாரசாமி said:

விடியப்பறம் மிஸ்கோல் போட்டு தட்டியெழுப்பி  மோட்டச்சைக்கிள் வாங்கிறதுக்கும்....பல்லுக்கு கிழிப்பு போடுறதுக்கும் காசுவேணுமெண்டு திருப்பள்ளி எழுச்சி பாடுற சனத்துக்கு என்ன செய்யலாம் சுவியர்? :grin:

பணக்கார பிள்ளைகள் போல் இருக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பணக்கார பிள்ளைகள் போல் இருக்கு 

100 ஈரோ அனுப்பினால் தெரிஞ்ச ஆள் எண்டுவினம்......
200 ஈரோ அனுப்பினால் கலோ எண்டுவினம்........
300 ஈரோ அனுப்பினால் சொந்தம் எண்டுவினம்........
400 ஈரோ அனுப்பினால் முறை சொல்லி கூப்பிடுவினம்......
500 ஈரோ அனுப்பினால் அன்புமழை பொழிவினம்.......
600 ஈரோவுக்கு மேலை அனுப்பினால் தெய்வத்துக்கு சமன் எண்டுவினம்..
 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

100 ஈரோ அனுப்பினால் தெரிஞ்ச ஆள் எண்டுவினம்......
200 ஈரோ அனுப்பினால் கலோ எண்டுவினம்........
300 ஈரோ அனுப்பினால் சொந்தம் எண்டுவினம்........
400 ஈரோ அனுப்பினால் முறை சொல்லி கூப்பிடுவினம்......
500 ஈரோ அனுப்பினால் அன்புமழை பொழிவினம்.......
600 ஈரோவுக்கு மேலை அனுப்பினால் தெய்வத்துக்கு சமன் எண்டுவினம்..
 

காசுக்கான கூட்டம் போல் இவையள்  

On 3/12/2018 at 6:51 PM, தனிக்காட்டு ராஜா said:

ஒரு உன்மை ஒன்றையும் சொல்ல வேண்டும் எவ்வளவு சம்பாதித்தாலும் செலவு என்பது அதிகமாக தான் இருக்கிறது இலங்கையில் உலக அளவில் ஏற்படும் பொருளாதார தளம்பலா என்று தெரியவில்லை தேங்காய் 100 ரூபா கிழக்கில்  உப்பு பை 50 ரூபா

மறுக்கவில்லை ராஜா!

இதற்கொரு நீண்டகால தீர்வாக நாம் வீட்டு தோட்டங்களை உருவாக்குவது நல்லதென நினைக்கிறேன்!

வீட்டில் 5-6 தென்னை, 2-3 முருங்கை, 1-2 எலுமிச்சை, 1-2 தோடை, 1 கறிவேப்பிலை, 2-3 பப்பாசி, 1-2 மாதுளை மரங்கள் போன்றவற்றையும்,  மற்றும் சில பச்சைமிளகாய், தக்காளி, அவரை, வல்லாரை, கத்தரி, வெண்டிக்காய், ..... போன்றவற்றையும், மற்றும் தூதுவளை, பசளி, கற்பூரவள்ளி, துளசி, இஞ்சி போன்றவற்றையும் பயிரிடுவது ஒன்றும் கடினமானது அல்ல.   

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2018 at 8:17 PM, போல் said:

மறுக்கவில்லை ராஜா!

இதற்கொரு நீண்டகால தீர்வாக நாம் வீட்டு தோட்டங்களை உருவாக்குவது நல்லதென நினைக்கிறேன்!

வீட்டில் 5-6 தென்னை, 2-3 முருங்கை, 1-2 எலுமிச்சை, 1-2 தோடை, 1 கறிவேப்பிலை, 2-3 பப்பாசி, 1-2 மாதுளை மரங்கள் போன்றவற்றையும்,  மற்றும் சில பச்சைமிளகாய், தக்காளி, அவரை, வல்லாரை, கத்தரி, வெண்டிக்காய், ..... போன்றவற்றையும், மற்றும் தூதுவளை, பசளி, கற்பூரவள்ளி, துளசி, இஞ்சி போன்றவற்றையும் பயிரிடுவது ஒன்றும் கடினமானது அல்ல.   

ம் உன்மைதான் இருந்தாலும் எங்கள் ஊரில் நிலப்பற்றாக்குறை . நிலம்   இருக்கும் இடங்களில் பயிர்கள் செய்வது குறைவாக இருக்கிறது  இன்று நாங்கள் வளர்த்த அனைத்து தென்னை மரங்களிலும்  கடற்படை தேங்காய் பறிக்கிறது பல்லு குத்த கூட ஈர்க்கில் இல்லை எங்களுக்கு  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.