Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட மாகாண சபை குழப்பங்களுக்கும் தெற்கு அரசியலுக்கும் தொடர்பு: விக்னேஷ்வரன் அறிக்கை

Featured Replies

வட மாகாண சபை குழப்பங்களுக்கும் தெற்கு அரசியலுக்கும் தொடர்பு: விக்னேஷ்வரன் அறிக்கை 

 


வட மாகாண சபை குழப்பங்களுக்கும் தெற்கு அரசியலுக்கும் தொடர்பு: விக்னேஷ்வரன் அறிக்கை 
 

தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே வட மாகாண சபையைக் குழப்ப முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையில் இடம்பெறும் விடயங்களுக்கும் தெற்கு அரசியலுக்குமிடையிலான தொடர்பு குறித்து முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

வட மாகாண சபையையும் அதன் செயற்பாடுகளையும் திட்டமிட்ட வகையில் குழப்புவதன் மூலம் தமிழ் மக்களின் கவனத்தினைத் திசை திருப்புவதற்கு, அரசாங்கமும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் முனைந்து வருகின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தர வேண்டிய அரசாங்கம் அதனைச் செய்யாது காலத்தினை இழுத்தடிப்பதாக சி.வி.விக்னேஷ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தேச அரசியல் அமைப்பில் தமிழர் தரப்புக்கு அதிகாரங்களை முழுமையாகப் பகிர்ந்தளிக்காத விதத்தில் மாற்றங்களை உள்ளடக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி உட்பட பல்வேறு ஆக்கப்பூர்வமான அதிகாரப் பகிர்வினை தமிழர் தரப்பு எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அவற்றினை வழங்காது ஒரு அரைகுறைத் தீர்வினைத் திணிப்பதற்கு அரச தரப்பு முயன்று வருவதாக முதலமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சில தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் அரசின் இந்தப் போக்கிற்கு ஆதரவளித்து வருவதுடன் மக்களுக்கு இது தொடர்பிலான விடயங்களைத் தெளிவுபடுத்தாது மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேல் எதனையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது என்று சிலர் கூறி வருவது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவும் சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/06/106490/

  • கருத்துக்கள உறவுகள்

தெற்க்கின் பங்கு நிச்சயமாக உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, நவீனன் said:

வட மாகாண சபை குழப்பங்களுக்கும் தெற்கு அரசியலுக்கும் தொடர்பு: விக்னேஷ்வரன் அறிக்கை 

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இலங்கை தமிழின அரசியலுக்கு ஆப்பு வைப்பது தெற்கு அரசியல் தானே.

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கிந்தியர்களுக்கு ஏதும் தொடர்பு இல்லாது மாறி போஸ்ட் போடுவது எனக்கும் வருத்தமளிக்கிறது தோழர்கள் !! :cool:

  • கருத்துக்கள உறவுகள்

அனா உனா என்றவுடன் சிறிலங்கா அரசு சதி, சிறிலங்கா புலனாய்வுத்துறை சதி. கொஞ்சம் சென்றால் இந்திய உளவுத்துறை றோ சதி என்று கூறி தப்பிப்பதே எமக்கு பழக்கமாகி விட்டது.

எமக்குள் ஒற்றுமை இருந்தால் மற்றவர்கள் ஏன் புகுந்து குழப்பங்களை உருவாக்கப் போகின்றனர்?

முதலில் பிற தமிழ்க் கட்சிகளை தமிழரசுக் கட்சி மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் குரல்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். 

தமிழரசுக் கட்சி ஏதேச்சதிகாரமாக நடந்து கொண்டால் அடுத்த தேர்தலில் பெருமளவு ஆசனங்களை இழக்க வேண்டி வரும்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, nirmalan said:

அனா உனா என்றவுடன் சிறிலங்கா அரசு சதி, சிறிலங்கா புலனாய்வுத்துறை சதி. கொஞ்சம் சென்றால் இந்திய உளவுத்துறை றோ சதி என்று கூறி தப்பிப்பதே எமக்கு பழக்கமாகி விட்டது.

எமக்குள் ஒற்றுமை இருந்தால் மற்றவர்கள் ஏன் புகுந்து குழப்பங்களை உருவாக்கப் போகின்றனர்?

முதலில் பிற தமிழ்க் கட்சிகளை தமிழரசுக் கட்சி மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் குரல்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். 

தமிழரசுக் கட்சி ஏதேச்சதிகாரமாக நடந்து கொண்டால் அடுத்த தேர்தலில் பெருமளவு ஆசனங்களை இழக்க வேண்டி வரும்.

தமிழரசுக்கட்சி இழக்க வேண்டி வாற பெருமளவு ஆசனங்கள் எங்கை? ஆரோடை போய் சேரும்?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

தமிழரசுக்கட்சி இழக்க வேண்டி வாற பெருமளவு ஆசனங்கள் எங்கை? ஆரோடை போய் சேரும்?

அடுத்த தேர்தலில் UNP & SLFP இனருக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, MEERA said:

அடுத்த தேர்தலில் UNP & SLFP இனருக்கு 

பிறகென்ன வெற்றி தானே.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, MEERA said:

அடுத்த தேர்தலில் UNP & SLFP இனருக்கு 

 

3 minutes ago, குமாரசாமி said:

பிறகென்ன வெற்றி தானே.

விக்கி ஐயா இப்பவே சொல்லிட்டார்
மக்களை இறைவன் காப்பாற்றுவார்

1 hour ago, MEERA said:

அடுத்த தேர்தலில் UNP & SLFP இனருக்கு 

முஸ்லிம் , அவர்களை மறந்து விட்டீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதில் கிந்தியர்களுக்கு ஏதும் தொடர்பு இல்லாது மாறி போஸ்ட் போடுவது எனக்கும் வருத்தமளிக்கிறது தோழர்கள் !! :cool:

சரி... தோழரே.... இந்த, சிற்று வேஷன்  சாங்கை  கேளுங்களேன்.

 

  • தொடங்கியவர்

வட­மா­கா­ண ­ச­பையை குழப்­பு­வதன் மூலம் தமிழ் மக்­களின் கவ­னத்தை திருப்ப முயற்சி

p21-38766484341d0f2d5bbc5b6f280146b58d1a0e77.jpg

 

அர­சாங்­கமும் அவர்­க­ளோடு இயங்கும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் முஸ்­தீபு என்­கிறார் முதல்வர் சி.வி. 
(நமது நிருபர்)

வட­மா­கா­ண­ச­பை­யி­னையும் அதன் செயற்­பா­டு­க­ளையும் திட்­ட­மிட்ட வகையில் குழப்­பு­வதன் மூலம் தமிழ் மக்­களின் கவ­னத்தை திசை­தி­ருப்­பு­வ­தற்கு அர­சாங்­கமும் அவர்­க­ளோடு சேர்ந்து இயங்­கு­கின்ற தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் முனை­கின்­றனர். இது தொடர்பில் தமிழர் தரப்பு விழிப்­ப­டைதல் அவ­சி­ய­மா­ன­தாகும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி. வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.  

வட­மா­கா­ண­ச­பையில் இடம்­பெறும் சம்­ப­வங்­க­ளுக்கும் தெற்கின் அர­சி­ய­லுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்­குமா என்று முத­ல­மைச்­ச­ரிடம் கேள்வி எழுப்­பி­ய­போதே அவர் இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இது­கு­றித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:- 

 வடக்கு மாகா­ண­ச­பை­யி­னையும் அதன் செயற்­பா­டு­க­ளையும் திட்­ட­மிட்ட வகையில் குழப்­பு­வதன் மூலம் தமிழ் மக்­களின் கவ­னத்­தினைத் திசை திருப்­பு­வ­தற்கு அர­சாங்­கமும் அவர்­க­ளோடு சேர்ந்து இயங்­கு­கின்ற தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் முனைந்து வரு­கின்­றார்­களோ என்று எண்ண வேண்­டி­யுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­தி­னூ­டாக தமிழ் மக்­க­ளுக்­கு­ரிய அர­சியல் தீர்­வினைப் பெற்றுத் தர வேண்­டிய அர­சாங்கம் அதனைச் செய்து முடிக்­காது காலத்­தினை இழுத்­த­டித்து வரு­வ­தோடு உத்­தேச அர­சியல் அமைப்பில் தமிழர் தரப்­புக்கு அதி­கா­ரங்­களை முழு­மை­யாகப் பகிர்ந்­த­ளிக்­காத விதத்தில் மாற்­றங்­களை உள்­ள­டக்கும் செயற்­பாட்­டிலும் ஈடு­பட்டு வரு­கின்­றது. இதி­லி­ருந்து தமி­ழர்­க­ளு­டைய கவ­னத்­தினைத் திசை திருப்­பு­வ­தற்­கா­கவே அவர்கள் வட­மா­காண சபை­யினைக் குழப்ப முனை­கின்­ற­னரோ என்ற சந்­தேகம் எம்முள் பல­ரிடம் எழும்­பு­கின்­றது.

சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான ஆட்சி அதி­காரம், வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி உட்­பட பல்­வேறு ஆக்க பூர்­வ­மான அதி­காரப் பகிர்­வினை தமிழர் தரப்பு எதிர்­பார்த்­துள்ள வேளையில் அவற்­றினை வழங்­காது ஒரு அரை­குறைத் தீர்­வினைத் திணிப்­ப­தற்கு அரச தரப்பு முயன்று வரு­கின்­றது. இவ்­வி­ட­யங்­களைக் கையாளும் குறித்த சில தமிழ்த் தரப்பு அர­சி­யல்­வா­திகள் அரசின் இந்தப் போக்­கிற்கு ஆத­ர­வ­ளித்து வரு­வ­துடன் மக்­க­ளுக்கு இது தொடர்­பி­லான விட­யங்­களைத் தௌிவு­ப­டுத்­தாது மூடு மந்­திரம் போன்று அவற்றைக் கையாண்டு வரு­கின்­றனர். 13வது திருத்தச் சட்­டத்­திற்கு மேல் எத­னையும் தமிழ் மக்கள் எதிர்­பார்க்க முடி­யாது என்று சிலர் கூறி வரு­வது சந்­தே­கத்தை மேலும் வலுப்­ப­டுத்­து­கின்­றது.

இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் தமிழ் மக்­க­ளு­டைய கவ­னத்­தினைத் திசை­தி­ருப்பும் முக­மாக நன்கு திட்­ட­மிட்ட வகையில் வட­மா­கா­ண­ச­பையின் செயற்­பா­டு­களில் தொடர்ச்­சி­யாகக் குழப்­பங்­களை உரு­வாக்கி தமிழ் மக்­க­ளையும் தமிழ் அர­சியல் செயற்­பாட்­டா­ளர்­க­ளையும் எனது கவ­னத்­தி­னையும் திசை­தி­ருப்ப அரசும் அவர்­க­ளுக்குச் சார்­பான சில தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் முயன்று வரு­கின்­றனர் என்றே தோன்­று­கின்­றது. இதன் ஒரு அங்­க­மாக வட­மா­கா­ண­ச­பையின் உறுப்­பி­னர்கள் சிலரை பயன்­ப­டுத்தி வட­மா­கா­ண­ச­பையில் தொடர்ச்­சி­யான குழப்­பத்­தினை உரு­வாக்கி வரு­கின்­றனர். எனவே இது தொடர்பில் தமிழர் தரப்பு விழிப்படைதல் அவசியமானது. உத்தேச அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது பற்றி மக்கள் கவனம் செலுத்துதல் அவசியமானது. இல்லாதுபோயின் எமது கவனத்தினைத் திசைதிருப்பி வைத்துக்கொண்டு தாம் நினைத்ததை நிறைவேற்ற முனையும் சக்திகளுக்கு அது வாய்ப்பாக அமைந்து விடும். இத்தருணத்தில் எம்மிடையே விழிப்பு அவசியம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-29#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.