Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியின் காதலனை பாலச்சந்திரன் எவ்வாறு கடத்திப் படுகொலை செய்தார்?

Featured Replies

 

 

இங்கிலாந்தில் தனது முன்னாள் மனைவியை திருமணம் செய்யவிருந்த இளைஞர் ஒருவரை திட்டமிட்டு படுகொலை செய்த ஈழத் தமிழர் ஒருவரின் வழக்கு விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் விவாகரத்துச் செய்த தனது முன்னாள் மனைவியை மறுமணம் முடிக்கவிருந்த இன்னொரு ஈழத்தமிழரை பொறாமையின் காரணமாக ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவர் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளார். இதற்கென அவர் பிரத்தியேகமாக ஆட்களை நியமித்து சிவானந்தன் சுரேன் என்னும் அவரைக் கடத்தி சித்திரவதையின் மூலம் படுகொலை செய்துள்ளார் என்று அறியப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இந்த வருடம் ஜனவரி மாதம் முதற்பகுதியில் சுரேன் என்பவரது சடலம் தலையில் பாரிய காயங்களோடு மீட்கப்பட்டது. இது குறித்த விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரானா ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

இதன்படி சிவானந்தன் சுரேன் என்பவர் தனது மனைவியைத் திருமணம் செய்து தனக்குப் போட்டியாக வரப்போகிறார் என்ற மனோநிலையில் அவரைக் கடத்திக் கொலை செய்ய ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கமைய மூவர் இணைந்து 12 மணி நேரமாக சுரேனைக் கடத்தி வைத்திருந்து தொடர்ச்சியாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல்களின் பின்னர் சுரேன் கொல்லப்படார்.

கொல்லபட்ட சுரேனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கிட்டத்தட்ட 39 காயங்கள் காணப்பட்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது உச்சந்தலையில் மோசமான காயங்கள் காணப்பட்டுள்ளதுடன் அவர் கண்ணும் கடுமையாகச் சிதைக்கப்பட்டுள்ளது.

இதனால் சுரேன் நீண்ட கால வன்முறைக்கமையவே கொல்லப்பட்டார் எனவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாலச்சந்திரனின் மனைவியான ரகுபதியும் சுரேனும் ஏற்கனவே பல வருடங்களின் முன் இலங்கையில் அறிமுகமாகியுள்ளனர். பின்னர் முக நூல் வாயிலாக தம்மை மீண்டும் அறிமுகப்படுத்தியதோடு இருவருக்கும் இடையில் தொடர்பு இருந்துள்ளது. ரகுபதியின் கணவரான பாலச்சந்திரன் ரகுபதியை தவறான நடத்தையுள்ளவர் என்று விவகரத்துக்கு முடிவெடுத்தார். ரகுபதியும் தனது மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்கு முடிவு கட்ட விவாகரத்துக்கு தயாரானார். பின்னர் அவர்களுக்கு விவாகரத்து உறுதியானது.

 

இதன் பின்னரே சுரேனுக்கும் ரகுபதிக்கும் உள்ள தொடர்பை வைத்து சுரேனை பழிவாங்க பாலச்சந்திரன் திட்டமிட்டார் என்று கூறப்படுகிறது.

http://www.canadamirror.com/uk/04/131355

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுபதியின்ரை தேவையில்லாத வேலையாலை எவ்வளவு சீரழிவு.....நானெண்டால் ரகுபதியை..........:241_scorpion:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

ரகுபதியின்ரை தேவையில்லாத வேலையாலை எவ்வளவு சீரழிவு.....நானெண்டால் ரகுபதியை..........:241_scorpion:

அண்ணே எல்லாத்துக்கும் காரணம் முகபுத்தகம்... கலியாணம் கட்டியோர்  முகப்புத்தகம் பாவிப்பதை தடை செய்ய வேணும்....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ரகுபதியின்ரை தேவையில்லாத வேலையாலை எவ்வளவு சீரழிவு.....நானெண்டால் ரகுபதியை..........:241_scorpion:

 

8 hours ago, putthan said:

அண்ணே எல்லாத்துக்கும் காரணம் முகபுத்தகம்... கலியாணம் கட்டியோர்  முகப்புத்தகம் பாவிப்பதை தடை செய்ய வேணும்....

கனடாவில் இருந்து ஜெர்மனி ஊடாக சொரக்கத்துக்கு என்று 
எண்ணி வாங்கிய டிக்கெட் ........ உலகத்தில் இருந்தே  அனுப்பி விட்டது.
விதி எவ்வாறு சுற்றி வளைத்து வந்திருக்கிறது ? என்று எண்ணும்போது ....

தமிழ்சிறி அன்னார் ...
குமாரசாமி அண்ணர் 
விசுகு அண்ணர் 
மற்றும் நிழலி சாமி மாரை பற்றி எண்ணும்போதுதான் 
எந்த பத்த்ரிக்கையில் எப்படி படிக்க நேருமோ ?
என்று ஒரே அச்சமாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Maruthankerny said:

 

கனடாவில் இருந்து ஜெர்மனி ஊடாக சொரக்கத்துக்கு என்று 
எண்ணி வாங்கிய டிக்கெட் ........ உலகத்தில் இருந்தே  அனுப்பி விட்டது.
விதி எவ்வாறு சுற்றி வளைத்து வந்திருக்கிறது ? என்று எண்ணும்போது ....

தமிழ்சிறி அன்னார் ...
குமாரசாமி அண்ணர் 
விசுகு அண்ணர் 
மற்றும் நிழலி சாமி மாரை பற்றி எண்ணும்போதுதான் 
எந்த பத்த்ரிக்கையில் எப்படி படிக்க நேருமோ ?
என்று ஒரே அச்சமாக இருக்கிறது. 

தம்பி! என்ன வெருட்டுறீர் போல கிடக்கு...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

அண்ணே எல்லாத்துக்கும் காரணம் முகபுத்தகம்... கலியாணம் கட்டியோர்  முகப்புத்தகம் பாவிப்பதை தடை செய்ய வேணும்....

அடுத்தவன் எச்சில் இலைக்கு அலையுறதுகள் எப்படியும் பொறுக்கித்தான் ஆகுங்கள். ஊசி இடம் கொடாமல்.. நூல் நுழையாது. இதற்காகத்தான்.. எம் முன்னவர்கள்.. ஒருவனுக்கு ஒருத்தி எனும் ஒழுக்கப்பாட்டை.. கொண்டு வந்தார்கள். அது இன்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு.. ஏன் புரட்சி என்று சொல்லப்பட்டும் சிதறிகப்பட்டு வரும் நிலையில்.. இவை எதிர்பார்க்கப்பட கூடியன தான்.சொந்த இனத்துக்குள்ளேயே அதிகம்...போட்டி போறாமை மிகுந்த எம் தமிழர் மத்தியில். 

எமது சமூகக் கட்டமைப்பு முழுவதும் மாற்றி அமைக்கப்பட்டால் அன்றி உதுகளை திருத்த ஏலாது. tw_blush:

  • தொடங்கியவர்
22 hours ago, nedukkalapoovan said:

"எச்சில் இலைக்கு" 

"எச்சில் இலை" -  தவிர்த்திருக்கக்கூடிய சொற்பதம்.........கணவன் மார்கள்  "எச்சில் இலைகள்" இல்லையா? 

 

Edited by kayshan

  • 4 weeks later...
On 13.7.2017 at 10:59 AM, குமாரசாமி said:

ரகுபதியின்ரை தேவையில்லாத வேலையாலை எவ்வளவு சீரழிவு.....நானெண்டால் ரகுபதியை..........:241_scorpion:

மகிழ்சசி அற்ற திருமண வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்து விவாகரத்து உறுதியாகிய பின்னர் ஆணோ, பெண்ணோ புதிய துணையை தேடுவது எவ்வாறு தவறாகும். ஒருவரை கொலை செய்யும் குற்றச்செயலை ஆதரிக்கிறீர்கள்.யாருக்கும் எந்த குற்றமும் செய்யாமல் தனக்கு விருப்பமான துணையை தேர்ந்தெடுத்த ரகுபதியை குற்றம் சாட்டுகிறீர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.