Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியாவில் கோர விபத்து! – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!!

Featured Replies

வவுனியாவில் கோர விபத்து! – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!!

 
வவுனியாவில் கோர விபத்து! – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!!
 

வவுனியாவில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடை்நதனர்.

வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஹையேஸ் வாகனமும், கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனமும் விபத்துக்குள்ளாகின.

IMG_9761-750x400.jpg

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காந்தன் (வயது-56) என்பவர் சம்பவ இடத்தில் உயிரழந்தார். இவர் ஹையேஸ் வாகனத்தைச் செலுத்தி வந்தார் என்று கூறப்பட்டது. மேலும் மூவர் காயமடைந்தனர். அவர்கள் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

IMG_9772-750x400.jpg

விபத்துத் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

IMG_9753-750x400.jpg

 

http://newuthayan.com/story/17514.html

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விபத்து இன்னொரு தமிழன் பலி. போர்க்காலத்தில் கூட இப்படி பலி எடுப்பு நடந்ததாகத் தெரியவில்லை நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறை காலம். பலரும் மகிழ்வைத்தேடி இலங்கை செல்லும் வேளையில் அதிக அவதானம் தேவை.
சாலை விபத்திற்கு முதன்மைக் காரணம் போதை என்கின்றார்கள்

  • தொடங்கியவர்

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து ; சம்பவயிடத்திலேயே சுவிஸ் பிரஜை பலி

Published by Vijithaa on 2017-08-08 15:23:44

 

வவுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Spot_photo.jpg

வவுனியா இலங்கை போக்குவரத்து சபை  வீதிக்கு முன்பாக விமானநிலையத்திலிருந்து வவனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் மற்றும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக் கொண்டிருந்த லொறியுடன்  மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

IMG_9765.JPG

விபத்தில் வாகன சாரதியாக சுவிஸ்நாட்டைந் சேர்ந்த காந்தன்  என்பவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த மூவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

IMG_9762.JPG

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_9761.JPG

IMG_9757.JPG

IMG_9748.JPG

 

 
 

Tags

http://www.virakesari.lk/article/22880

  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறை இல்லாத காலங்களில் நடக்கும் விபத்துகள் விடுமுறைகால விபத்துக்கள் என்று பார்க்க முடியாது எல்லாத்திலும் சாவது தமிழனே நேற்றும் இயக்கச்சியில் ஒரு போராளி கிட்னி பழுதாய் மரணித்து உள்ளார் நம்ம தமிழ் ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே வீதியில் 40,50,70/km என்று வேக கட்டுப்பாட்டை வைத்தால் என்ன செய்வது?

தனியார் , அரச பேரூந்துகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்வதற்காக முன்னால் செல்லும் வாகானங்களை அவசரப்படுத்துவதும் எதிர் வரும் வாகானங்களுக்கான பாதையில் செல்வதும் நாளாந்தம் நடைபெறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

ஒரே வீதியில் 40,50,70/km என்று வேக கட்டுப்பாட்டை வைத்தால் என்ன செய்வது?

தனியார் , அரச பேரூந்துகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்வதற்காக முன்னால் செல்லும் வாகானங்களை அவசரப்படுத்துவதும் எதிர் வரும் வாகானங்களுக்கான பாதையில் செல்வதும் நாளாந்தம் நடைபெறுகிறது.

உன்மை ஒன்று போட்டிதன்மையே சேவை மனப்பாங்கு இல்லை இங்கே உள்ள இரு போக்குவரத்து  துறைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தனி ஒருவன் said:

உன்மை ஒன்று போட்டிதன்மையே சேவை மனப்பாங்கு இல்லை இங்கே உள்ள இரு போக்குவரத்து  துறைக்கும்

சனி இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு சென்று நேற்று இரவு திரும்பினோம். இங்கு வாகனம் ஓட்டுவது சவாலான மிகவும் ஆபத்தான விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

சனி இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு சென்று நேற்று இரவு திரும்பினோம். இங்கு வாகனம் ஓட்டுவது சவாலான மிகவும் ஆபத்தான விடயம். 

ம் ம் ஒரு சில வருடங்களுக்கு முன் சந்தியில் வந்த நான் கோர்ண் அடித்துவிட்டு நிற்க எனது பைக்கை கொழுவி இழுத்து சென்றுவிட்டது ஓட்டோ ஒன்று நான் பாய்ந்து கிழே  விழ  பெரு  விரல் நகம் போய்விட்டது நண்பர்கள் சூழ   பைக்கை திருத்தி கொடுத்தார் அந்த ஓட்டோ சாரதி  நாம் சரியாக ஓடினாலும்  பின்னே வந்து முட்டுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனி ஒருவன் said:

ம் ம் ஒரு சில வருடங்களுக்கு முன் சந்தியில் வந்த நான் கோர்ண் அடித்துவிட்டு நிற்க எனது பைக்கை கொழுவி இழுத்து சென்றுவிட்டது ஓட்டோ ஒன்று நான் பாய்ந்து கிழே  விழ  பெரு  விரல் நகம் போய்விட்டது நண்பர்கள் சூழ   பைக்கை திருத்தி கொடுத்தார் அந்த ஓட்டோ சாரதி  நாம் சரியாக ஓடினாலும்  பின்னே வந்து முட்டுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது 

 

Giveway & Roundabout களில் நிற்க மாட்டார்கள் தொடந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள், ஒரு தடவை பொலிஸ் வந்து சத்தம் போட்டது ஏன் நிற்கிறாய் என்டு.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனி ஒருவன் said:

ம் ம் ஒரு சில வருடங்களுக்கு முன் சந்தியில் வந்த நான் கோர்ண் அடித்துவிட்டு நிற்க எனது பைக்கை கொழுவி இழுத்து சென்றுவிட்டது ஓட்டோ ஒன்று நான் பாய்ந்து கிழே  விழ  பெரு  விரல் நகம் போய்விட்டது நண்பர்கள் சூழ   பைக்கை திருத்தி கொடுத்தார் அந்த ஓட்டோ சாரதி  நாம் சரியாக ஓடினாலும்  பின்னே வந்து முட்டுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது 

 

அரை மைலுக்கு ஒரு சென்றிபொயின்ட் இருந்து இறங்கு ஏறு வளைச்சு குலுக்கி எடுத்த பஸ்கள் புது ரோட்டை கண்டவுடன் தாங்கள் விமானம் என்று நினைத்து ஓடுகினம் போல் இருக்கு .

11 minutes ago, MEERA said:

Giveway & Roundabout களில் நிற்க மாட்டார்கள் தொடந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள், ஒரு தடவை பொலிஸ் வந்து சத்தம் போட்டது ஏன் நிற்கிறாய் என்டு.

வீதி ஒழுங்கு தெரியாத ஆளை போலிஸ் வேலைக்கு எடுத்து வைத்து இருக்கினம் ஆக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அரை மைலுக்கு ஒரு சென்றிபொயின்ட் இருந்து இறங்கு ஏறு வளைச்சு குலுக்கி எடுத்த பஸ்கள் புது ரோட்டை கண்டவுடன் தாங்கள் விமானம் என்று நினைத்து ஓடுகினம் போல் இருக்கு .

போட்டித்தன்மை அதிகம் தனியாருக்கும் அரசு பேருந்துக்கும்  யாழ்ப்பாணம் , வவுனியாவில் இருந்து வாரது இறைச்சிக்கு கோழி கொண்டுவருது போல்  தான் இருந்திச்சு ஏனென்றால் ஓட வேண்டிய இடத்தில்  ஓடாமல் உருட்ட வேண்டிய இடத்தில் ஓடுவார்கள்  எமனை அப்ப்டியே அண்ணாந்து பார்த்து கூப்பிடுவது போலே இருக்கும் பஸ்ஸிக்க இருக்கும் போது :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.