Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பயணத்திற்காக நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நூற்றுக்கு நூறு வீத ஆதரவு : சம்பந்தன்

Featured Replies

புதிய பயணத்திற்காக நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நூற்றுக்கு நூறு வீத ஆதரவு : சம்பந்தன்

 

 

புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர்.  அவர்களுக்கு நாம் நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குவதுடன் அதில் எவ்வி சந்தேகமுமில்லையென எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

sampanthan-maithri-ranil.jpg

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் தேசிய தீபாவளி விழா இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர்.  

அவர்களுக்கு நாம் நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குவதுடன் அதில் எவ்வி சந்தேகமுமில்லை. 

இது புனித பயணமாகும். இந்த பயணத்தில் அவர்கள் இருவரும் வெற்றிகாண வேண்டும். 

இவ்வருட திபாவளி நிகழ்வை விடவும் அடுத்த வருடம் திபாவளி பண்டிகை மிகவும் சிறப்பான சூழலில் மகிழ்ச்சியுடன் நடைபெறும் என இவ்வடத்தில் நான் கூற விரும்புகின்றேன். 

பிளவுப்படாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டுக்குள் அனைத்து இனத்தவர்களும் சமஉரிமையுடன் வாழும் வகையில் அந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அவ்வாறான அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலமாக நாங்கள் எல்லோரும் ஒரு நாட்டு மக்களாக வாழ முடியும். அத்துடன் நாம் இலங்கையர் என்று பெருமையுடன் கூறி கொள்வதற்கு நாம் விரும்புகின்றோம். எமது மக்களும் அதனை விரும்புகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/25837

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக் கெட்டு 70 வருடமாச்சு. இன்னுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

இவ்வருட திபாவளி நிகழ்வை விடவும் அடுத்த வருடம் திபாவளி பண்டிகை மிகவும் சிறப்பான சூழலில் மகிழ்ச்சியுடன் நடைபெறும் என இவ்வடத்தில் நான் கூற விரும்புகின்றேன். 

இன்னுமா இந்தாளை சனம் நம்புது ....?
முடியலை தலீவா ஏற்கனவே 2016 புத்தாண்டை தீர்வுடன் மக்கள் கொண்டாடிவிட்டனர் .இப்போது புது கப்சாவுடன் தலீவர் வெளிக்கிட்டிருக்கிறார் 
அதுசரி காசா பணமா    ஒரு புளோவில அள்ளி விடவேண்டியதுதானே யாரும்   சண்டைக்குவந்தால் சொந்தக்கருத்து என்று பிளேட்டை மாத்தவேண்டியது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sampanthan-maithri-ranil.jpg

இவ்வளவு நடந்தும்....இன்னும் கையெடுத்து கும்புட்டுக்கொண்டு திரியுது. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் முகத்தில் ஈயும் ஆடவில்லை  விறைச்சுப்போய் நிற்கிறார்கள் இந்தாள் விழுந்து கும்பிடுவதை பாத்தால் பிச்சை கேக்கிறமாதிரி இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

அவர்கள் முகத்தில் ஈயும் ஆடவில்லை  விறைச்சுப்போய் நிற்கிறார்கள் இந்தாள் விழுந்து கும்பிடுவதை பாத்தால் பிச்சை கேக்கிறமாதிரி இருக்குது.

பாக்க எனக்கே பாவமாய்க் கிடக்குது...!:mellow:

  • தொடங்கியவர்

அடுத்த தீபாவளிப் பண்டிகை மகிழ்வான சூழலில் நடக்கும்

அடுத்த தீபாவளிப் பண்டிகை மகிழ்வான சூழலில் நடக்கும்
SHARES0
 

இந்­தத் தீபா­வ­ளிப் பண்­டி­கை­யை­விட அடுத்த ஆண்டு தீபா­வ­ளிப் பண்­டிகை மிக­வும் சிறப்­பான – மகிழ்ச்சி­யான சூழ­லில் நடை­பெ­றும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே, இன்­றைய தேசிய தீபா­வ­ளிப் பண்­டி­கை­யில் கலந்து கொள்­கின்­றேன்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

தேசிய தீபா­வளி பண்­டிகை விழா அல­ரி­மா­ளி­கை­யில் நேற்று இரவு நடை­பெற்­றது. கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் கலந்­து­கொண்­டார்.

அவர் அங்கு உரை­யாற்­று­கை­யில் மேலும் தெரி­வித்­த­தா­வது:
நீண்­ட­கா­ல­மாக எமது நாடு இரு­ளில் இருந்­தது. 2015ஆம் ஆண்டு தை மாதம் 8ஆம் திகதி ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட பிறகு நாடு இரு­ளில் இருந்து வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.

தற்­போது புதிய பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளது. எல்­லோ­ரும் ஒற்­று­மை­யாக, சமத்­து­வ­மாக வாழும் சூழலை உரு­வாக்­கு­வதே அந்­தப் பய­ண­மா­கும்.

அந்­தப் பய­ணத்தை வழி­ந­டத்­து­வ­தற்­காக சன­நா­யக அடிப்­ப­டை­யில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்­க­வும் இங்கே அமர்ந்­துள்­ள­னர்.

அவர்­கள் வெளிவேறு கட்­சி­களைச் சார்ந்­த­வர்­கள். நீண்ட காலம் ஒற்­று­மைப்­ப­டா­மல் ஒரு­வரை ஒரு­வர் எதிர்த்து அர­சி­யல் செய்து வாழ்ந்­த­வர்­கள். ஆனால் இன்று ஒன்­றாக இணைந்து நாட்­டைப் புதிய பாதைக்கு இட்டு செல்­வ­தற்­காக ஒற்­று­மை­யாக இணைந்து செயற்­ப­டு­கின்­ற­னர்.

அவர்­க­ளுக்கு என்­னு­டைய வாழ்த்­து­களை தெரி­விக்­கின்­றேன். அவர்­கள் இரு­வ­ரும் இந்­தப் பய­ணத்­தில் வெற்­றி­ய­டையவேண்­டும்.

எமக்­காக மாத்­தி­ர­மல்ல, இந்த நாட்­டிற்­கா­க­வும் அனைத்து மக்­க­ளுக்­கா­க­வும் வெற்­றி­வாகை சூட­வேண்­டும். அந்­தப் பய­ணத்­தில் வெற்றி காணும் முக­மாக புதிய அர­ச­மைப்­பைத் தயா­ரிப்­ப­தற்­கான முயற்­சி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அந்த முயற்­சி­யி­லும் நாம் வெற்­றி­காணவேண்­டும்.

ஒரு­மித்த நாட்­டுக்­குள், பிள­வுப்­ப­டாத, பிரிக்­கப்­பட முடி­யாத நாட்­டுக்­குள் அனைத்து இனத்­த­வர்­க­ளும் சமத்­து­வ­மாக வாழும் வகை­யில் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­படவேண்­டும்.

அவ்­வா­றான அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தன் மூல­மாக நாங்­கள் எல்­லோ­ரும் ஒரு நாட்டு மக்­க­ளாக வாழ முடி­யும். நாம் இலங்­கை­யர் என்று பெரு­மை­யு­டன் கூறிக் கொள்­வ­தற்கு விரும்­பு­கின்­றோம். எமது மக்­க­ளும் அதனை விரும்­பு­கின்­ற­னர்.

அந்­தப் பய­ணத்தை நோக்­கியே நாம் நகர்ந்த வண்­ணம் உள்­ளோம். அந்­தப் பய­ணத்தை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சுக்கு நூற்­றுக்கு நூறு வீதம் நாம் ஆத­ரவு வழங்­கு­வோம்.

அதில் எந்­த­வொரு சந்­தே­க­மும் கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இது ஒரு புனி­த­மான பய­ண­மா­கும். அந்­தப் பய­ணத்தை வெற்­றிக்­கொள்ள வேண்­டும். அந்த வெற்­றி­யின் ஊடாக இந்த நாடு முன்­னேறவேண்­டும்.

நாட்­டில் வாழும் இந்­துக்­கள், இஸ்­லா­மி­யர்­கள், கிறிஸ்­த­வர்­கள் மற்­றும் பௌத்­தர்­கள் ஒற்­று­மை­யாக வாழ்ந்து சுபீட்­சம் அடைய வேண்­டும். இந்த நாட்­டின் இருள் நீங்கி வெளிச்­சம் ஏற்­படவேண்­டும் என்று பிராத்­திக்­கின்­றேன் – என்­றார்.

இதே­வேளை, 2016ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 28ஆம் திகதி அல­ரி­மா­ளி­கை­யில் நடை­பெற்ற தேசிய தீபா­வ­ளிப் பண்­டி­கை­யில் உரை­யாற்­றிய இரா.சம்­பந்­தன், நல்­லாட்­சி­யில் தமிழ் மக்­க­ளுக்­கான வெளிச்­சம் தென்­ப­டத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. அடுத்த ஆண்டு தீபா­வளி திரு­நா­ளுக்கு முன்­னர் இந்த வெளிச்­சம் நிரந்­த­ர­மாக அமை­யும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

http://newuthayan.com/story/37411.html

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

பாக்க எனக்கே பாவமாய்க் கிடக்குது...!:mellow:

அவர்கள் எப்பவும்   தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாய் இருக்கிறார்கள்.  இந்தாள்தான் அப்பப்ப தன்ர எண்ணத்துக்கு ஒவ்வொரு கரடி விட்டு தன்னைத்தானே ஏமாற்றுது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஸாரி ..தலையங்கத்தில் தவறு

அது 
"புதிய பயணத்திற்காக நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நூற்றுக்கு நூறு வீத ஆதரவு : சம்பந்தன்"  - 

அல்ல 

"புதிய பணத்திற்காக நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நூற்றுக்கு நூறு வீத ஆதரவு : சம்பந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für குத்துக்கரணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, நவீனன் said:

நீண்­ட­கா­ல­மாக எமது நாடு இரு­ளில் இருந்­தது. 2015ஆம் ஆண்டு தை மாதம் 8ஆம் திகதி ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட பிறகு நாடு இரு­ளில் இருந்து வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.

தற்­போது புதிய பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளது. எல்­லோ­ரும் ஒற்­று­மை­யாக, சமத்­து­வ­மாக வாழும் சூழலை உரு­வாக்­கு­வதே அந்­தப் பய­ண­மா­கும்.

அந்­தப் பய­ணத்தை வழி­ந­டத்­து­வ­தற்­காக சன­நா­யக அடிப்­ப­டை­யில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்­க­வும் இங்கே அமர்ந்­துள்­ள­னர்.

அவர்­கள் வெளிவேறு கட்­சி­களைச் சார்ந்­த­வர்­கள். நீண்ட காலம் ஒற்­று­மைப்­ப­டா­மல் ஒரு­வரை ஒரு­வர் எதிர்த்து அர­சி­யல் செய்து வாழ்ந்­த­வர்­கள். ஆனால் இன்று ஒன்­றாக இணைந்து நாட்­டைப் புதிய பாதைக்கு இட்டு செல்­வ­தற்­காக ஒற்­று­மை­யாக இணைந்து செயற்­ப­டு­கின்­ற­னர்.

அவர்­க­ளுக்கு என்­னு­டைய வாழ்த்­து­களை தெரி­விக்­கின்­றேன். அவர்­கள் இரு­வ­ரும் இந்­தப் பய­ணத்­தில் வெற்­றி­ய­டையவேண்­டும்.

அவர்கள் எதற்காக ஒன்றிணைந்தார்கள் என்பது எனக்கு இன்றுதான் தெரியும். தகவலுக்கு நன்றி சம்பந்தன் ஐயா. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.