Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தவறான சிகிச்சை தொடர்பில் நீதிமன்றை நாடி நீதியை பெறுங்கள் – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

Featured Replies

தவறான சிகிச்சை தொடர்பில் நீதிமன்றை நாடி நீதியை பெறுங்கள் – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

sathiyamoorthy.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தவறான சிகிச்சை முறை தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து நீதிமன்றை நாடி நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்தார். அதன் போது அண்மையில் நொதேர்ன் வைத்திய சாலையில் கற்ராக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது ஏற்பட்ட கிருமி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் கேட்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

குறித்த சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யா.போதனா வைத்திய சாலையில் தொடர்ந்து உரிய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அவர்களுடைய கண் பார்வை தொடர்பிலான எந்தவிதமான அறிக்கைகளும் இன்னமும் கிடைக்க பெறவில்லை.அவர்களுக்கு என்ன விதமான விளைவுகள் ஏற்படும் என்பது கூட தற்போது கூற முடியாது. அவர்கள் கடுமையான கிருமி தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சையின் பின்னர் திருப்பி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளானர். மூவர் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை பாதிக்கபப்ட்டவர்களுக்கு பரிகாரம் வழங்கப்பட்டே ஆக வேண்டும். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த தனியார் மருத்துவ மனைக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.

அத்துடன் தவறான சிகிச்சை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும். அதனூடாக நீதிமன்றை நாடி பாதிக்கப்பட்வர்கள் நீதியை பெற்றுக்கொள்ள முடியும். என மேலும் தெரிவித்தார்.

அண்மையில் யாழில் உள்ள நொதேர்ன் வைத்தியசாலையில் கற்ராக் சத்திர சிகிச்சை மேற்கொண்ட ஒன்பது பேருக்கு கண்ணில் கிருமி தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஐவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு ஒரு கண்ணின் பார்வை முற்றாக பறிபோன நிலையில் கிருமி தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தமையால் ஒரு கண் அகற்றப்பட்டு உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/48102

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் உறவு ஒருவர் கடந்தகாலங்களில் இவ்வைத்தியசாலைபற்றி நான் கருத்தெழுதியபோது எதுக்கு உங்களுக்கு யாழ் நொதேர்ண் வைத்தியசாலையில் இவ்வளவு காண்டு தனிப்பட்ட பிரச்சனை ஏதாவது இருக்கோ என நக்கலாகக் கேட்டவர். இப்போ அனுபவியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Elugnajiru said:

யாழ் களத்தின் உறவு ஒருவர் கடந்தகாலங்களில் இவ்வைத்தியசாலைபற்றி நான் கருத்தெழுதியபோது எதுக்கு உங்களுக்கு யாழ் நொதேர்ண் வைத்தியசாலையில் இவ்வளவு காண்டு தனிப்பட்ட பிரச்சனை ஏதாவது இருக்கோ என நக்கலாகக் கேட்டவர். இப்போ அனுபவியுங்கள்

கிழக்கில் கூட ஒரு தாய்  தாய் இறந்தே விட்டார் இத்தனைக்கும் காரணம் பணம் மற்றும் தன்னிடம்  வரும்  பெண்களை  தனியார் வைத்தியசாலையில் வைத்தே பிரசவம் பார்க்கிறார்கள் 

பணத்தேடல் என்பது மோசமாக இருக்ககின்றது. இதுக்கு பல கரணங்கள் இருக்கின்றது. போரில் இருந்து இழந்ததை மீள கட்டியெழுப்புதல். விலைவாசி ஏற்றம்.வெளிநாட்டு பணவருவாயால் ஏற்படும் சமநிலை அற்ற தன்மை என விரிந்து கிடக்கின்றது. மருத்துவத்தின் ஊடாக பணம் பறித்தல். வாள்வெட்டு கொலை கொள்ளை களவுகளின் பெருக்கம், கஞ்சாக் கடத்தல்களில் ஈடுபடுதல்,  நம்பிக்கை மேசடிகள் ஏமாற்றுதல்கள் என பணத்தேடல் என்பது பல பாதைகளை அடிப்படை அறத்தை மீறி உருவாக்குகின்றது. இதனால் சமூகச் சிதைவும் நம்பிக்கையற்ற தன்மையும் என்னும் விரிவாகும். மனவளம் வக்கிர நிலைநேக்கி மேலும் செல்லும். நாற்பதாயிரம் போராளிகள் இனத்திற்காக உயிர்த்தியாகம் செய்து பத்தாண்டுகளில் பணத்தேடலுக்காக ஒருவனை ஒருவன் வேட்டையாடும் நிலை. 

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் பாதிப்பிற்குள்ளான நோயாளரின் கண் அகற்றப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இது சாத்தியம்.பணமும் தேவையில்லை.இலங்கையில் இது சாத்தியமா?பிரக்கிராசி மற்ற பக்கத்தில் பெரிய தொகையை வாங்கி விட்டு தனது தரப்பை ஏமாற்றிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இத வினைகளுக்கான விதை ஈழத்தில் முள்ளிவாய்காலில் அவலம் நடந்தபோதே விதைத்தாகி அது முளைவிட்டு பெரிய விருட்சமாகி யாழ்ப்பாணத்தை அச்சுறுத்துகிண்றது. உங்களுக்குத் தெரியுமா இரவில் மிகவும் துணிச்சலாக முகமூடி போட்டுக்கொண்டு கத்தி பொல்லு வாள்களுடன் வீடுகளுக்குள் இறங்கி கழுத்தில் கத்தியைவைத்து எந்தவித பதற்றமுமில்லாது ஒளிச்சுவைத்திருக்கும் நகை பணம் முதலியவைகளை எடு இல்லையேல் கொலைவிழும் என மிரட்டிக் களவெடுக்கும் சூழ்நிலைக்குக் குடாநாடு கூடாநாடாகிப்போய்விட்டது. 

தனது இனத்தின் ஒருபகுதி அழிதல்கண்டு எதிர்ப்புத்தெரிவிக்காது சொக்கட்டான் பந்தல்போட்டு சமத்தியவீடு பிறந்தநாள் வீடு கலியானவீடு கொண்டாடியவர்கள் எல்லோரும் இப்போது அனுபவிக்கினம் அனுபவியுங்கோ. இவர்களில் கொண்டவனும் கொடுத்தவனும் ஒருவிதத்தில் சுயநலவாதிகள் கூட்டத்தவரே. தெருப்பொறுக்கி மொள்ளைமாரி கொள்ளைக்காரன் பொம்ம்பிளைப்பொறுக்கி முடிச்சவுக்கி ஆகியோருக்கு வாய்தா வாங்கவும் பிணை எடுத்துவிடவுமே யாழ் குடாவின் பிரக்கிராசிமார் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலையினம். இவர்களது பொம்பிளைப்பிள்ளைகளது உடம்பில இவர்களால் பிணை எடுத்துவிடுபவர்கள் கைவைத்தால்தான் இவர்கள் அடங்குவினம் இதில் யாழ் மாநகரசபை அங்கத்தவர் ரெமீடியஸ் எனும் பிரக்கிராசி முதன்மையானவர்.

யாழ் கூடா நாட்டிலிருந்து இன்னமும் நல்ல செய்திகள் காத்திருக்கு.

இதில் கொள்ளையடிப்பவர்களில் அனேகர் அடிச்சபணத்தில் வெளிநாடுகளுக்குத் தப்பிவருகினம் பிறகென்ன வெளிநாட்டுக்கு வந்திட்டால் யாழ் கூடாநாட்டின் அப்பன் ஆத்தை தங்கட பெண்பிள்ளைகளை இருபத்தி ஐந்துவயது கூடிய தலையில் வழுக்கைவிழுந்த மாப்பிள்ளைமாருக்கு கண்ணைமூடிக்கொண்டு பொம்பிளை கொடுப்பினம் அப்பதானே பிள்ளைப்பேறு பாக்கப்போகிறம் என சர்க்குத்தூளுடன் வெளிநாட்டுக்கு அவர்களும் ஒரு ரவுண்டு வரலாம்.

வருகிற மாமியார்கள் கவனம் உங்கள் மகளின் மாப்பிள்ளை உங்களைவிட ஓரிரு வயது கூடுதலாக இருக்கலாம். பிறகு மாமா பாவம்.

கொசுறுச்செய்தியாக சன்னா குறூப் பிரசன்ன இப்போ சுவிசில அசைலம் அடிச்சுட்டதாக் கேள்வி. சுவிசில் வாழும் ஈழத்தமிழர்கள் உங்கள் பொம்ம்பிளைப்பிள்ளைகளை தனியாகக் கடைத்தெருவுக்கு விடாதையுங்கோ சன்னா குறூப் ஆவா குறூப் தலைகள் எல்லாம் இப்ப சுவிஸிலதான் தஞசமடைஞ்சிருக்கினம்.

  • தொடங்கியவர்

கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட யாழ். தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை


கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட யாழ். தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை 
 

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டு, கண் பார்வையை இழந்த 9 பேர் சார்பாக, குறித்த வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையை அடுத்து, நோய்வாய்ப்பட்டு கொழும்பு கண் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட மூவர் இன்று (04) சிகிச்சைகளின் பின்னர் வௌியேறினர்.

கண் சத்திரசிகிச்சையினால் பாதிக்கப்பட்டவர்களுள் ஆறு பேர் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர். எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

ஒன்பது பேரின் கண் பார்வையை இழக்கச் செய்த யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/11/கண்-சத்திரசிகிச்சை-மேற்க/

  • கருத்துக்கள உறவுகள்

தவறிழைக்கும் 10 டாக்குத்தர்மாரின் பட்டத்தை பறிச்சிட்டு வீதியில விட்டால் எல்லாம் ஒழுங்கா நடக்கும். இப்படி இறுமாப்பு.. எடுப்புக் கதையள் வெளில வராது. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
On 3.11.2017 at 3:59 AM, சண்டமாருதன் said:

பணத்தேடல் என்பது மோசமாக இருக்ககின்றது. இதுக்கு பல கரணங்கள் இருக்கின்றது. போரில் இருந்து இழந்ததை மீள கட்டியெழுப்புதல். விலைவாசி ஏற்றம்.வெளிநாட்டு பணவருவாயால் ஏற்படும் சமநிலை அற்ற தன்மை என விரிந்து கிடக்கின்றது. மருத்துவத்தின் ஊடாக பணம் பறித்தல். வாள்வெட்டு கொலை கொள்ளை களவுகளின் பெருக்கம், கஞ்சாக் கடத்தல்களில் ஈடுபடுதல்,  நம்பிக்கை மேசடிகள் ஏமாற்றுதல்கள் என பணத்தேடல் என்பது பல பாதைகளை அடிப்படை அறத்தை மீறி உருவாக்குகின்றது. இதனால் சமூகச் சிதைவும் நம்பிக்கையற்ற தன்மையும் என்னும் விரிவாகும். மனவளம் வக்கிர நிலைநேக்கி மேலும் செல்லும். நாற்பதாயிரம் போராளிகள் இனத்திற்காக உயிர்த்தியாகம் செய்து பத்தாண்டுகளில் பணத்தேடலுக்காக ஒருவனை ஒருவன் வேட்டையாடும் நிலை. 

மிகுந்த அக்கறையோடு இந்திய அரசைக்கையாண்டு  ஒரு தனித்துவமான பண்பாட்டுவிழுமியங்களைக்கொண்ட  தமிழ் - சிங்கள தேசங்களை 2009வரை எம் தலைவன் காத்துவந்தான் என்பதைச் சிங்களவரும் உணரும் காலம் வரும்.  இற்றைய இந்தத் துர்பாக்கிய நிலைக்குத் தனியே  உள்ளகச் சூழல் மட்டுமல்லக் கரணியம். இந்தியப் பாதிப்புக்களும் கரணியமாக உள்ளது. இதனைக் கையாள்வது வெறுமனே சட்டத்தால் மட்டும் சாத்தியமாகாது. தாயகத்திலே ஒரு சிறந்த உட்கட்டமைப்பாக நீதியைக் காகக்கும் வகையிலும்  கிராமங்கள்தோறும் அந்தக் கிராமத்தவரைக்கொண்டே கண்காணிப்புக்குழுக்களையும் இணக்கசபைகளையும்  நிறுவிக் குமுகாயப் பாதுகாப்பை  உறுதிப்படுத்தினர். இவற்றை சிங்கள அரசு சட்டத்தின் ஆட்சிக்குள்  அடங்காதெனச் சினம் கொள்ளலாம். ஆனால் மாகாண அரசுகள் இவைகுறித்தும் சிந்திக்க வேண்டும். 

குடும்ப உறவுகள் சிதைவுற்று பெரியோர்கள் முதியோரில்லங்களை அலங்கரிக்க இளைய குமுகாயம் வெறும் புத்தக அறிவோடு சிதைவுறுகிறது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள்  போன்றவற்றை கிராமங்கள்தோறும் ஓதும் நிலையைக் கட்டமைப்பதோடு, இவற்றுக்கான போட்டிகளை நடாத்தி விழிப்புணர்வை ஊட்டவேண்டும். மனவளம் பாதுகாக்கப்படுதல் மிக அவசியமாக முன்னெடுக்கவேண்டிய பணியாகும். அதேவேளை திரைத்துறைக் கதானாயகத்தன்மையின் போலித்தன்மையை தோலுரித்தக் காட்டவேண்டும். குமுகாயக் கட்டமைப்புகளே மனிதவிழுமியங்களின் முதலாவது கற்கைக்கூடங்களாகும்.  வெறுமனே அரசையும் சட்டத்தையும் கொண்டு எதையும் மாற்றிவிட முடியாது. குமுகாயத்தின் அடிமட்டத்திலிருந்து இவைகுறித்தான சிந்தனை கட்டமைக்கப்பட்டால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.