Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்..👍

90520489_623688784876283_298514314564730

கோரோனோ - நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ரின் பீர்.☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட இப்படி ஒரு காட்சியை மின்னேரிய சரணாலயத்தில் பார்த்து வீடியோவும் பிடித்து வைத்திருக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für நிம்மதி

உடலுக்கு உழைப்பு அவசியம்.
உடலுக்கு அமைதியையும்
மனதிற்கு உழைப்பையும்
தேடிக்கொண்டிருக்கின்றாயே மனிதா.


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, hat and closeup

எலிசபெத் மகாராணியின்... உடைக்கு ஏற்ற  நிறத்தில் உள்ள, கொரோனா முகமூடிகள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

whatsapp ல் வந்தது....

சீனாவில் தொடங்கி  இத்தாலி, ஸ்பெயின், ஐேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா வரை சென்ற கரோனா சீனாவின் அண்டை நாடான ரஷ்யா, பாக்கிஸ்தான், வியட்னாம், லாவோஸ் பூட்டான் கசகஸ்தான் மொங்கோலி மற்றும் வடகொரியாவுக்கு பரவவில்லை? ஏன்?

(தம்பி ஜெயாஸ் ராஜா எனது கடந்த பதிவில் இட்ட கருத்தோடு விரிவாக்கித் தருகின்றேன்.)

காரணம் இவை சீனாவின் நட்பு நாடுகள். அதனால் வைரஸ் அங்கு போகாது. அமெரிக்க அதிபர் பதவியேற்ற பின்பு சீனா செய்து வந்த பல பொருளாதார குற்றங்களை வெளிப்படுத்தி சீன நிறுவனங்கள் மீது பல தடைகளை விதித்தார். இதற்கு பல நாடுகள் ஆதரவு தந்தனர். ஐரோப்பிய நாடுகள் கூட இங்குள்ள நிறுவனங்களை சீனர்கள் வாங்குவதற்கு பல தடைகளை கொண்டுவந்தனர்

சீனாவின் முதலீடு இல்லாத நாடுகளே கிடையாது. ஆனால் சீனாவில் அந்நிய முதலீடுகள் மிகமிகக் குறைவு. எனவே சீனாவை அந்நிய சந்தைகளுக்கு திறந்துவிட அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் நிர்பந்தம் செய்ததால் வேறு வழியில்லாமல் சீனா ஒப்பந்தம் செய்தது. அதன்படி சீனாவின் வூகான் மாகாணத்தை அந்நிய முதலீடுகளுக்கு திறப்பதாக சீனா கூறியது.

ஆனால் அதே வூகானில் தான் கரோனா பரவியது. ஏன் ?

கரோனா பீதியால் அந்நிய நிறுவனங்கள் இனி சீனாவுக்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள். அதுதான் சீனாவின் திட்டம். 

அதாவது வேறு எந்த நாடும் எங்கள் நாட்டில் தொழில் தொடங்கி லாபத்தை எடுத்துச் செல்லக்கூடாது. நாங்கள் தான் உலகின் உற்பத்தி மண்டலமாக என்றும் இருப்போம் என்று சீனாவின் பேராசையால் வூகான் மாகாணத்தில்,  தான் உருவாக்கிய கரோனா வைரஸை திட்டமிட்டே பரப்பியது சீனா.

கனடாவில் உள்ள ஓர் பரிசோதனைக்கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் திட்டம் களவாடப்பட்டதாகவும் இஸ்ரேலிய பிரான்ஸ் உளவுத்துறைகளினிடையே ஓர் செய்தியும் உண்டு. இச்செய்தி எவ்வளவு தூரம் உண்மையானது என்பது தெரியாது. ஆனால் சில நாட்களுக்கு முன், கரோனா வைரஸின் சூத்திரதாரிகளை நாம் கண்டறிவோம் என சூளுரைத்திருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்

காட்டுத்தீ போல் வூகானில்(Wuhan) பரவிய கரோனா ஏன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங், Xiaogan, Xianning, Huanggang, Huangshi, Changsha, Hefai நகருக்குகளுக்கு  பரவாமலே ஐரோப்பிய_அமெரிக்க நாடுகளுக்கு பரவியது? 

முக்கியமாக ஸ்பெயின்,  இத்தாலிக்கு அளவுக்கதிகமாக பரவிய கரோனா கிறீக் நாட்டை சிறிதளவும் தாக்கவில்லையே!! கிறீக் இப்போது சீனா வசம். இவர்கள் நீண்ட கனவுகளில் உள்ளவை ஸ்பெயினும்,  இத்தாலியும்.

வூகானில் பரவிய கரோனா திடீரென சீனாவில் அடங்கியது எப்படி ?

கரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காத சூழலில் வூகான் நகரில் சீன அதிபர் எந்த உடல் கவசமும் இன்றி எப்படி அங்கு சென்று மருத்துவமனைகளை பார்வையிட்டார்?

அப்படியென்றால் ஏற்கனவே கரோனாவுக்கான மருந்தை சீனா தயாரித்து தன் வசம் வைத்துள்ளது. வைரஸை உருவாக்கியவன் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்காமலா அதை பரப்புவான் ?

அமெரிக்காவை ஒருநாளும் ராணுவத்தால் நாம் எதிர்கொள்ள முடியாது என கருதிய சீனா, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை பொருளாதார ரீதியாக சீர்குலைத்து பங்குச்_சந்தையை சரியவைத்து அதன் மூலம் அந்நாட்டு நிறுவனங்களை கைப்பற்ற சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் கரோனா !

அதாவது ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சியில் உள்ளபோது அந்நாட்டின் பங்குச்சந்தை மிகவும் குறைவாக இருக்கும். இதைப் பயன்படுத்தி சீனா அந்நாட்டின் பங்குகளை வாங்கிக்குவிக்கும். இதைத்தான் கிறீக் நாட்டின் பொருளாதாரம் விழுந்தநிலையில் இந்த யுக்தியை கையாண்டு முழுமையாக வெற்றிகண்டனர்

முதலில் தன்னை நட்பு நாடாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் சீனா அந்நாட்டிற்கு அதிக அளவில் கடன் கொடுக்கும். பிறகு அந்நாடு கடனை கட்டமுடியாமல் தள்ளாடும் போது அந்நாட்டுடைய வளங்களை தன்வசப்படுத்திக் கொள்ளும். 

இதற்கு சிறந்த உதாரணம் இலங்கை. முதலில் இலங்கைக்கு பல மில்லியன் டாலர்கள் கடன் கொடுத்து இலங்கையை கடனில் தள்ளியது. இலங்கை கடனை திருப்பி தரமுடியாமல் தள்ளாடிய போது இலங்கையில் உள்ள ஹம்மந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் டெப்ட்_ட்ராப் (debt trap)என்பார்கள். இலங்கையிலும் பல ஆபிரிக்க நாடுகளிலும் இந்த யுக்தியை பயன்படுத்தி முழு வளங்களையும் சுரண்டிக்கொண்டிருப்பதை நாம் காணமுடியும்

இந்தியாவில் செம்மரம் வெட்டப்பட்டு கப்பல் வழியாக கடத்தப்பட்டதும் தாது மணல் கடத்தப்பட்டதும் சீனாவிற்கு தான். இதுபோக பெரிய கும்பலை வைத்துக்கொண்டு உலகில் உள்ள பல அரிய விலங்குகளை கடத்தி கள்ளச்சந்தையில் அதை விற்பதும் சீனா தான்.

கரோனாவால் பல நாடுகளில் உள்ள பங்குச்சந்தை சரியும்போது சீனாவின் பங்குச்சந்தை உயருகிறதே? எப்படி ?

தொற்றுநோயை உருவாக்கிய சீனா, அதிசயமாக "மீண்டு" வந்துள்ளது, கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் இல்லை. இந்த நோய் குறித்த விளைவுகளையும் பீதியையும் உலகம் இப்போது உணரத் தொடங்குகிறது. முதலில் மீண்டது யார் ?? சீனாவே! இந்த வைரஸ் அமெரிக்காவுடனான வர்த்தக யுத்தத்தின் இழப்புக்கு பதிலளிக்கும் விதமாக சீன அரசாங்கத்தின் நடவடிக்கை என்று தெரிகிறது. குறிக்கோள்: உலகை மந்தநிலைக்குள் தள்ளுவது !!!

காட்சி தெளிவாக இல்லையா? அவை ஏற்கனவே வளர்ந்து வருகின்றன! உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் மதிப்பிழந்த எல்லாவற்றையும் சீனா வாங்கியது ... அதனுடன் சீனாவில் இருக்கும் உலகளாவிய நிறுவனங்களின் உரிமையாளர்களாகவும், சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களை பணம் இல்லாமல் சீனர்கள் உரிமையாளர்களாகவும் மாறுகின்ற நிலை இப்போது அங்கு உருவாகிவிட்டது.
இப்போதாவது சீனாவின் சூட்சமம் புரிகிறதா ?

இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க பொருளாதாரம் சரியும். அதன் விளைவாக பல நாடுகளில் உள்ள வங்கிகள் இறப்பு நிலையை அடையும். உயிர் கொடுக்க சீனர்கள் வருவார்கள். அதன்பின் பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும். இதுதான் சீனாவின் நீண்ட திட்டம்.
சிலர் கேட்கலாம் பில் கேட்ஸ் ஏற்கனவே 2015 ல் இதை முன்னறிவித்தார். எனவே சீன நிகழ்ச்சி நிரல் உண்மையாக இருக்க முடியாது. விடை என்னவென்றால்,  ஆம், பில் கேட்ஸ் கணித்தார்..ஆனால் அந்த கணிப்பு உண்மையான வைரஸ் வெடிப்பை அடிப்படையாகக் கொண்டது. 

இப்போது சீனாவும் வைரஸ் முன்கூட்டியே கணிக்கப்பட்டதாகக் கூறுகிறது. அதனால் அதன் நிகழ்ச்சி நிரல் அந்த கணிப்புடன் பொருந்தக்கூடியதாக இருக்கும். கடுமையான பொருளாதார சுருக்கத்தின் விளிம்பை எதிர்கொள்ளும் நாடுகளிலிருந்து இப்போது பங்குகளை வாங்குவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதே சீனாவின் பார்வை. பின்னர் சீனா தங்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வைரஸை அழிக்க ஒரு தீர்வைக் கண்டுபிடித்ததாக அறிவிக்கும். இப்போது சீனா தங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் மற்ற நாடுகளின் பங்குகளை வைத்திருக்கிறது, இந்த நாடுகள் விரைவில் தங்கள் எஜமானருக்கு அடிமையாகிவிடும் .

சற்று யோசித்துப் பாருங்கள் ...
உலகைக் கட்டுப்படுத்த சீனா ஒரு பெரிய திட்டமிட்ட விளையாட்டை விளையாடியதா? ஆம்.  இதைப் படித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காட்சி 1
சீனா நோய்வாய்ப்பட்டு, ஒரு "நெருக்கடியில்" நுழைந்து அதன் வர்த்தகத்தை முடக்குகிறது.

காட்சி II
சீன நாணயம் மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் எதுவும் செய்வதில்லை. 

காட்சி III
சீனாவை தளமாகக் கொண்ட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் நிறுவனங்களின் வர்த்தகம் இல்லாததால், அவற்றின் பங்குகள் அவற்றின் மதிப்பில் 40% வீழ்ச்சியடைகின்றன.

காட்சி IV
உலகம் மோசமாக உள்ளது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களின் 30-50 % பங்குகளை சீனா மிகக் குறைந்த விலையில் வாங்குகிறது.

காட்சி V
சீனா இந்த நோயைக் கட்டுப்படுத்தியுள்ளது மற்றும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறுவனங்களை வைத்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் மொத்தமாக 20,000 பில்லியன் டாலர் சம்பாதிக்க வேண்டும் என்று சீனா முடிவு செய்கிறார்கள். 

இதுதான் இவர்களது சீனாவை தளமாகக் கொண்ட ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரும் நிறுவனங்களை ஆட்டம் காணவைக்கும் திட்டம். இதை விரிவுபடுத்தி மற்றய நாடுகளிலும் அழகுபார்த்து குறுகிய காலத்தில் பல நிறுவனங்களை விழுங்கிக்கொள்வார்கள்.

இது மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இடதுசாரி அரசியல் கட்சிகளை உருவாக்கி நிதி அளித்து அங்கு அக்கட்சிகளை ஆட்சியில் வர உதவிசெய்து NEW WORLD ORDER என்ற முறையை கொண்டு வர முயற்சிப்பதும் சீனா தான்.
 
இதை ஆபிரிக்க நாடுகளில் நன்கு காணமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமோகமாய் முட்டை  சேகரிக்கும் அழகான பெட்டை. இயற்கையுடன் இணைந்த நிறைவான வாழ்வு......! 😁  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200326-182231.png

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

20200326-182231.png

 

சிரித்து... வயிறு நோகுது. :grin: :grin:
தமிழக அரசியல் மீம்ஸ் பகுதிக்காக...  இந்தப் படத்தை எடுக்கின்றேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருவம் ஒரு பிரச்சினையே  இல்லை......கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Cumbre del Clima 2019: ¿Qué es el Protocolo de Kioto? – GDS Noticias

சத்தியம் பொய்யாகும்!
 தருமம் தலைசாயும்!
அறநெறிகள் அலைமோதும்! 
அதர்மம் அரசாளும்!
பருவ நிலை மாறும்! 
பசுமைக்குப் பஞ்சம் வரும்!
வறுமை சதிராடும்! 
மண்ணுலகே நரகாகும்!

அது முத்திய கலியின் அடையாளம்!
அதன் முடிவே கல்கி அவதாரம்!

எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்!
என்னும் நிலைமை வரும்-அது
பிஞ்சுக் குழந்தைகள் உண்ணும் உணவிலும்
பெரிதும் கலந்து விடும்!⁠
அருந்தும் மருந்தில் நஞ்சைக் கலக்கி
அழகுச் சிமிழில் அடைத்து மயக்கி
விற்பனை செய்பவர் வளமடைவார்-பெரும்
வியாபாரிகள் எனும் பெயரடைவார்!
மானாட்டம் மயிலாட்டம் மலராட்டம் கொடியாட்டம்
மகிழ்வூட்டும் பரதக்கலை-கண் வழியே
மனங்காட்டும் புனிதக்கலை-மாறி
நாயாட்டம் பேயாட்டம் நரியாட்டம் கரியாட்டம்
வெறியூட்டும் அங்கங்களைத்-தெளிவாக
வெளிக்காட்டும் புதியகலை!

   sticker_13778495_22233958

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக குரங்குகள் எப்போதும் தன் குட்டியை தன்னுடனேயே வைத்திருக்கும்....மனிதர்களிடம் கொடுக்காது.இங்கு ஒரு குரங்கு தன் குட்டியை இந்தத் தாயிடம் குடுத்து வாங்குது."அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள்"  🐒 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்து நிறைந்த ராகி புட்டு ரெசிபி ...

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

இதுக்கும் கொர்னோவுக்கும்  சுடுதண்ணிதான் மருந்து .வீட்டில் இருந்தால் கண்டதையும் சாப்பிட சொல்லும் கொரனோ  கலவரம் முடிய வீட்டு வாசலால் வரக்கூடியமாதிரி  அளவு இருக்கனும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சத்து நிறைந்த ராகி புட்டு ரெசிபி ...

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

புட்டும் கடலை கறியும் விளாசுது . அண்ணி நல்லா சமைப்பா போல தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

புட்டும் கடலை கறியும் விளாசுது . அண்ணி நல்லா சமைப்பா போல தெரியுது.

இது, அண்ணையின்  கைப்பக்குவம்.  :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😂 அண்ணை போர்டர் (குசினி) க்ரோஸ் பண்ணமாட்டாரே ?

Edited by nilmini
text
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சத்து நிறைந்த ராகி புட்டு ரெசிபி ...

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

ஓஓஓ
நம்பீட்டன்.
ஐயாவுக்கு இவ்வளவு தேங்காய்ப் பூவும் சேர்த்து போட்டு அவித்து தந்தவையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

 

8 hours ago, பெருமாள் said:

இதுக்கும் கொர்னோவுக்கும்  சுடுதண்ணிதான் மருந்து .வீட்டில் இருந்தால் கண்டதையும் சாப்பிட சொல்லும் கொரனோ  கலவரம் முடிய வீட்டு வாசலால் வரக்கூடியமாதிரி  அளவு இருக்கனும் . 

எனக்கு ஒரு சந்தேகம், சுடுதண்ணிய கொதிக்க கொதிக்க கேத்திலோட  கொண்டுவந்து  தலையில ஊத்தணுமா அல்லது தொண்டையில் ஊத்தணுமா டெல்  மீ  ப்ளீஸ் .....!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

 

எனக்கு ஒரு சந்தேகம், சுடுதண்ணிய கொதிக்க கொதிக்க கேத்திலோட  கொண்டுவந்து  தலையில ஊத்தணுமா அல்லது தொண்டையில் ஊத்தணுமா டெல்  மீ  ப்ளீஸ் .....!  🤔

தொண்டையிலை ஊத்துனா கொர்னோவை  அழித்த  மனிதர் என்ற பெயர் எடுக்கலாம் தலையில ஊத்துற வேலையை வீட்டுக்காரம்மா பார்த்துக்கொள்ளுவாங்க வீட்டுக்கு வீடு  வாசல்படியுங்க .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

புட்டும் கடலை கறியும் விளாசுது . அண்ணி நல்லா சமைப்பா போல தெரியுது.

அம்மாவின்ரை சமையல் மாதிரி வராது.....ஆனால் அண்ணியும் நல்லாய் சமைப்பா..😁
 

8 hours ago, தமிழ் சிறி said:

இது, அண்ணையின்  கைப்பக்குவம்.  :grin:

பிளானிங் முழுக்க எஞ்சினியர் குமாரசாமி. 🕵🏾‍♂️
மேசன் வேலை எல்லாம் அவையள்.👩🏾‍🍳

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.