Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனந்திக்கு மரியாதை செலுத்தாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலாளி!

Featured Replies

அனந்திக்கு மரியாதை செலுத்தாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலாளி!

 

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு மரியாதை வழங்காத வயதான காவலாளி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அவமானகரமான சம்பவமொன்று யாழ். மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் யாழ். மேலதிக செயலாளரின் அலுவலகத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், அங்கிருந்த காவலாளி அனந்தியைக் கவனிக்காததுபோல் கதிரையில் அமர்ந்திருந்தார்.

இதனை அவதானித்த அனந்தி, காவலாளியைப் பார்த்து , ‘ஐயா என்னை உங்களுக்குத் தெரிகிறதா என வினவியுள்ளார்’. அதற்கு அந்தக் காவலாளி ‘இல்லைப்பிள்ளை, எனக்குத் தெரியாது. நீ யாரம்மா? என வினவியுள்ளார்.

அதற்கு அனந்தி இவ்வாறான இடங்களில் வேலைசெய்யும் நீங்கள் பத்திரிகைகள் வாசித்து உங்களதுபொது அறிவினை வளர்த்துக்கொள்ளவேண்டுமெனத் தெரிவித்துவிட்டு அலுவலகத்திற்குள்ளே சென்றுவிட்டார்.

குறித்த காவலாளி தொடர்பாக அனந்தி பிரதம செயலாளரிடம் முறையிட்டதையடுத்து குறித்த காவலாளி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அனந்தி கருத்துத் தெரிவிக்கையில், குறித்த காவலாளி மரியாதையில்லாமல் என்னுடன் நீயெனக் கதைத்தார் . ஆகையால் நான் குறித்த பிரச்சனை தொடர்பாக பிரதம செயலாளரின் கவனத்திற்குக் கொண்டுசென்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு இன்னொருவர் மரியாதை செலுத்துவது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. அனந்தி அமைச்சர் என்ற காரணத்திற்காக காவலாளி எழுந்துநின்று மரியாதை செலுத்தவேண்டுமென்ற தேவையெதுவுமில்லை. அனந்திக்காக காவலாளியை வேலையை விட்டு நீக்கியது பிரதம செயலாளரின் தவறே.

http://inioru.com/அனந்திக்கு-மரியாதை-செலுத/

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி உண்மையாயின்!!!!!  ஆனந்தி சசிதரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

செய்தி உண்மையாயின்!!!!!  ஆனந்தி சசிதரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அனந்தி சசிதரன் தவறு செய்தால் எதற்காக ஆனந்தி சசிதரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்....?? மப்புறுப்பினராக இருக்கலாம் ஆனால் மப்பில் எழுதக்கூடாது சாமி அவர்களே.!! :grin:

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை வயதில் உள்ள ஒருவர் நீயென்று அழைத்தால் அது மரியாதை குறைவான வார்த்தை அல்ல, மகளென்ற நினைப்பில் அழைத்த வார்த்தையாவும் இருக்கலாம். அதுக்குமுதல் இந்த செய்தி எனக்கென்னமோ உண்மைமாதிரி தெரியல்ல, உறவுகளையும், துணைவனையும் இழந்து துணிச்சலுடன் ஒரு இராணுவத்துக்கு எதிராகவே நடுரோட்டில் இறங்கிபோராடிய அனந்தி, தன்னினத்தை சேர்ந்த ஒரு முதியவரை தரகுறைவாக நடத்தியிருப்பாரோ தெரியவில்லை!

உண்மையா இருந்தால் தண்டனைக்குரிய பழக்கவழக்கம்,, ஒருவேளை பொய் செய்தியாக இருந்தால் அது, அதனை பரப்பியவர்களின் தரங்கெட்ட பழக்கவழக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும்   கடந்து  போகும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

உண்மையா இருந்தால் தண்டனைக்குரிய பழக்கவழக்கம்,, ஒருவேளை பொய் செய்தியாக இருந்தால் அது, அதனை பரப்பியவர்களின் தரங்கெட்ட பழக்கவழக்கம்!

தமிழின ஆயுதப் போராட்டம் பின்னடைவு ஏற்பட்டதற்குச் சில ஊடகங்களும் துணைபோயுள்ளதை மறுக்க முடியாது.  

இந்த கதிரையால மனுசருக்கு எத்தனை பிரச்சனை! :2_grimacing:

  • கருத்துக்கள உறவுகள்

சில ஊடகங்களின் பொறுப்பு அற்ற தன்மை எங்களை கோமணத்துடன்  திரிய வைக்குது.

 

Edited by பெருமாள்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

குப்பை,   கோபுரம் என்பன எப்படி சிலருக்கு மூளையில் உதிக்கின்றன என தெரியவில்லை(may be by defaulttw_blush:). கூட்டமைப்புடன் இருக்கும் போது (பல உறுப்பினர்கள்)  அவர்களை விமர்சிக்காதவர்கள் அவர்கள் கூட்டமைப்பை விட்டு விலகியதும் வாய்க்கு வந்தபடி திட்டுவது எப்படி தகும். கூட்டமைப்பில் உள்ளவர்கள் கண்கூடாக பிழை விடும் போதும் அவர்களை விமர்சிக்காது அமசடக்காக இருப்பது எத்தகைய ஜனநாயகம் என  தொப்பிக்கு உரியவர்கள்  விளக்கமளித்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.