Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாக்கும் நாய்க்கு பாசத்துடன் வளைகாப்பு நடத்திய மதுப்பிரியர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாக்கும் நாய்க்கு பாசத்துடன் வளைகாப்பு நடத்திய மதுப்பிரியர்கள்

e1e110.jpg

சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாத்து வந்த பெண் நாய் கருவுற்றதை தொடர்ந்து அதற்கு வளைகாப்பு நடத்தி நெகிழச் செய்து உள்ளனர் மதுப்பிரியர்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை அருகே மதகுபட்டி ஊராட்சியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதன் அருகில் தனியார் பார் ஒன்றும் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பாரில் ஆதரவற்ற பெண் நாய்க்குட்டி ஒன்று தஞ்சம் அடைந்தது. பாரில் குடிப்பிரியர்கள் தின்றுபோடும் மீதமுள்ள உணவு வகைகளை உண்டு வளர்ந்த நாய் பாருக்கு விசுவாசமாக காவல் காக்கும் பணியை தொடங்கியது.

இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதும் கடை வாசலில் படுத்துக்கொண்டு, கடையை காவல் காக்க தொடங்கியது. நாயின் விசுவாசமான காவல் பணியை பார்த்து வியப்படைந்த பார் ஊழியர்கள் அதற்கு கருத்தம்மா என்று செல்லமாக பெயர் வைத்து அழைத்து வருகின்றனர், இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த நாய் கருவுற்றதை அறிந்த ஊழியர்கள் தங்கள் நன்றியை காட்ட அதற்கு வளைகாப்பு நடத்த தீர்மானித்தனர். இதனால் நேற்று காலை அப்பகுதியில் உள்ள நண்பர்கள், வாடிக்கையாளர்களுக்கு வளைகாப்பு நடத்தவுள்ளதை தெரிவித்தனர். சிலர் அதை கேலி செய்தாலும் ஒரு சிலர் அதற்கு மனமுவந்து பணம் கொடுத்த உதவி செய்தனர். காலையில் அந்த நாயை குளிப்பாட்டி துண்டு, மாலைகள்,மல்லிகைப்பூ அணிவித்து சந்தனம், குங்குமம் நெற்றியில் இட்டு கால்களில் வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நடத்தி உள்ளனர். வளைகாப்பு நிகழ்சிக்கு வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மேலும் வந்திருந்தவர்களுக்கு மதுவுடன், பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது. இது குறித்து வளைகாப்பு நடத்திய பழனி, மணிகண்டன்,ரமேஷ் இளமதி கூறுகையில், ஊருக்கு வெளியே உள்ள டாஸ்மாக் கடையில் லட்சக்கணக்கில் சரக்குகளும் பணமும் இருக்கும். இரவு நேரங்களில் இவற்றை பாதுகாக்க ஆட்கள் சென்று வந்தனர். இந்த நாய் வந்ததில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் இங்குள்ள கடைக்கும், பாருக்கும் அருகில் யாரும் நுழையவே முடியாது. அந்த அளவுக்கு சிறப்பான காவல்பணியை செய்துவந்தது. அதனால் தான் இதற்கு நன்றி கடனாக மனிதர்களின் முதல் பிரசவம் நல்ல படியாக நடக்க வளைகாப்பு செய்வது போல செய்தோம் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: தட்ஸ்தமிழ்
டிஸ்கி:
 இதெல்லாம் உருப்படுமா சனியள்கள் !

 

  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் இன்னும் சாகவில்லை, இன்றும் அது மதுப் பிரியர்களிடம் பீர் போல் பொங்கி வழிவதை பார்க்க இதயம் நெகிழ்கின்றது, மனிதனிடமுள்ள நாயாபிமானம் இன்னும் மறையவில்லை என்பதையே மேலுள்ள நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகின்றது.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

மனிதம் இன்னும் சாகவில்லை, இன்றும் அது மதுப் பிரியர்களிடம் பீர் போல் பொங்கி வழிவதை பார்க்க இதயம் நெகிழ்கின்றது, மனிதனிடமுள்ள நாயாபிமானம் இன்னும் மறையவில்லை என்பதையே மேலுள்ள நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகின்றது.....!  tw_blush:

அண்ணா.... அண்ணா ! இவர்கள் தம்மனைவியருக்கு இப்படி வளைகாப்பு நடத்தியிருப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nochchi said:

அண்ணா.... அண்ணா ! இவர்கள் தம்மனைவியருக்கு இப்படி வளைகாப்பு நடத்தியிருப்பார்களா?

மனைவிக்கு அவர் பிறந்த வீட்டில் செய்வார்கள் நொச்சி....., மனைவியருக்கு என்றால் செய்ய கட்டுபடியாகாது.....! நமது நாட்டில் வளைகாப்பு செய்யிற வழக்கமில்லை. இப்ப எப்படியோ தெரியாது......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, suvy said:

மனைவிக்கு அவர் பிறந்த வீட்டில் செய்வார்கள் நொச்சி....., மனைவியருக்கு என்றால் செய்ய கட்டுபடியாகாது.....! நமது நாட்டில் வளைகாப்பு செய்யிற வழக்கமில்லை. இப்ப எப்படியோ தெரியாது......!  tw_blush:

அனேகமாக வந்திருக்கும். அதுக்குத்தானே துணைத்தூதர் யாழிலை இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மேலும் வந்திருந்தவர்களுக்கு மதுவுடன், பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது.

இவையள்  என்னத்துக்கு  நாய்க்கு  வளைகாப்பு  செய்தவையள்  எண்டது  எனக்கு  ஓடிவிளங்கிட்டுது. :grin:

தண்ணியடிக்கிறதுக்கு எப்பிடியெல்லாம் காரணத்தை தேடுறாங்களப்பா?  tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்

 உங்களுக்கு அது விளங்கிட்டுது 

எனக்கு இன்னமும் ...
கடையை காப்பதில் கண்ணாய் இருந்த 
பெண் நாய் எப்படி கரு உற்றது என்பது 
இன்னமும் விளங்கவில்லை.

இப்ப வளை காப்பு மட்டும் வந்துட்டுது. 
எனக்கு அதுதான் பயமாய் இருக்குது 

  • கருத்துக்கள உறவுகள்

நாய் கருவுற்றதை முதலில் கண்டுபிடித்த அந்த நியூட்டன் யார்? வீட்டில் இருந்த மனைவியின் வளையல் காப்பை அடைவுவைத்த காசில் நாய்க்கு வளைகாப்பு நடத்துவது தமிழர்களின் பண்பாட்டின் பெருமையை காட்டுகிறது! அது சரி நாய் ஏன் ஒருமாதிரி நிக்குது? பருக்கிட்டாங்கள்போல!

  • கருத்துக்கள உறவுகள்
On 12/28/2017 at 12:00 AM, suvy said:

மனைவிக்கு அவர் பிறந்த வீட்டில் செய்வார்கள் நொச்சி....., மனைவியருக்கு என்றால் செய்ய கட்டுபடியாகாது.....! நமது நாட்டில் வளைகாப்பு செய்யிற வழக்கமில்லை. இப்ப எப்படியோ தெரியாது......!  tw_blush:

 

On 12/28/2017 at 12:23 AM, nochchi said:

அனேகமாக வந்திருக்கும். அதுக்குத்தானே துணைத்தூதர் யாழிலை இருக்கின்றார்.

என்ன வளைகாப்பா இப்ப பெண் பிள்ளைகளின் 21 வது பிறந்த நாள்  கீ பேர்த்டே எனவும் பிள்ளைத்தாச்சி பெண்களை வைத்து வளைகாப்பு நிகழ்வும் ஊரில் களை கட்டுகிறது முகநூலில் படங்கள் இருக்கிறது ஆனால் அது குடும்பம் சார்ந்த்தால் இணைக்க கூடாது அது அழகில்லை சகலுதும் இறக்குமதியாகிவிட்டது ஈழத்தில் பேச்சு மொழியும் மிக்சர் ஆகிவிட்டது  இங்கிலிஸ் வித் தமிழ் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.