Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மாம்பூவே சிறு மைனாவே.....!  😁

  • Replies 2.9k
  • Views 247k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கம்பன் ஏமாந்தான்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : குமுதம் (1961)

இசை : K V மகாதேவன்.

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்..

பல்லவர் கோன் கண்ட மல்லைப் போல
பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை
கல்லிலே கலைவண்ணம் கண்டான்..

பெண்ணொன்று ஆணொன்று செய்தான்
அவர் பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்
கண்ணான இடம் தேடி வந்தோர்
என் கண்ணோடு கண்ணே உன் கண் வைத்து பார்ப்பாய்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்..

பருவத்தில் இள மேனி பொங்க
ஒரு பக்கத்தில் இன்னிசை மேளங்கள் முழங்க
அரங்கேறி நடமாடும் மங்கை போல
அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்..

உடலாலும் மனதாலும் உன்னை
என் உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே
கடல் வற்றி போனாலும் போகும்
கொண்ட கடமையும் ஆசையும் மாறாது நாளும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்..
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்..

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

கம்பன் ஏமாந்தான்.....

சுவி கம்பன் மட்டுமா?
காலம் காலமாக நாங்களும் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஓடிவதுபோல் இடை இருக்கும் ......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பார் மகளே பார் ( 1963 )

இசை : விஸ்வநாதன் -- ராமமூர்த்தி

பாடியவர்கள்: PB சீனிவாஸ் -- P சுசீலா 

 மதுரா நகரில் தமிழ் சங்கம் அதில்
மங்கல கீதம் முழங்கும்
கவி மன்னனின் காவியம் பொங்கும் அதில்
காதலர் உள்ளம் மயங்கும் (மதுரா)

மிதிலா நகரில் ஒரு மன்றம்
பொன் மேனியள் ஜானகி தங்கம்
மணி மாடத்திலே வந்து தோன்றும்
மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்

ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே (மதுரா)

பிருந்தாவனம் என்பது தோட்டம் அதில்
பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்
வரும் கண்ணனின் மார்பினில் ஆட்டம்
பெரும் காதலிலே களியாட்டம்

எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்
உயர் காதலிலே அவன் மன்னன் (மதுரா)
அந்தக் காட்சிகள் மாறியதேனோ
நம் காதலை நாம் பெறத்தானோ
அந்த தேவ மகள் இவள் தானோ
மன்னன் திரும்பவும் வந்துவிட்டானோ
நாம் இன்பதில் ஆடிடும் மலர்கள்
நல் இன்னிசை பாடிடும் குயில்கள் (மதுரா)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் சிரித்தால்  என்ன இங்கு யார் அழுதால் என்ன......!  

Edited by suvy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஓஹோ எந்தன் பேபி .....!   😊

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மிஸ்ஸியம்மா(1955)

பாடியவர் : ஏ.எம்.ராஜா, பி.சுசீலா

இசை : ராஜேஸ்வர ராவ்

வரிகள் : டி.என்.ராமையா தாஸ்

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

ஏனோ ராதா இந்த பொறாமை?
யார்தான் அழகால் மயங்காதவரோ?
ஏனோ ராதா இந்த பொறாமை?
யார்தான் அழகால் மயங்காதவரோ?

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

புல்லாங்குழலிசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா?
புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா?

ராகத்திலே அனுராக மேவினால்
ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா?
ராகத்திலே அனுராக மேவினால்
ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா?

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா?
கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா?

ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ?

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?
யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சுகம் எங்கே (1954)

பாடல் : கண்ணதாசன்

இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் : கே.ஆர். ராமசாமி, ஜிக்கி

கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே......(கண்ணில்)

தொல்லை மாந்தர் சூழும் நாட்டில்
சுகம் எங்கே அடிமை வாழ்வில்
இல்லையென்பார் இல்லையென்னும்
இன்ப நாளைக் காண்போமா....(கண்ணில்)

உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில்
சிறிதும் இன்பம் இல்லையே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில்
காணும் யாவும் தொல்லையே

மனிதர் வாழ்வை மனிதர் பறித்து
வாழுங் காலம் மாறுமா
இனியும் நாட்டில் ஏழை செல்வன்
பேதம் யாவும் வாழுமா......
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணே உனது காட்சியே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில்
காணும் யாவும் தொல்லையே......(கண்ணில்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம்  : பரிசு (1963)

இசை : கே.வி மகாதேவன்

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் : டி.எம் சவுந்தரராஜன் & பி. சுசீலா

கூந்தல் கருப்பு!
குங்குமம் சிவப்பு!
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ!

கூந்தல் கருப்பு!
குங்குமம் சிவப்பு!
கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ!

இன்று முதல் நீ என் உரிமை - என்
இதயத்து மாளிகை உன் உரிமை!
ஒன்றிய உள்ளம் வாழிய என்று
சொன்னது கோயில் மணியோசை!

சந்தன மேடை!
மேடை!
மல்லிகை வாடை!
வாடை!
கொஞ்சிடும் அழகே
மங்கலம்! மங்கலம்!

தங்கிய தங்கம்!
தங்கம்!
தந்தவர் சிங்கம்!
சிங்கம்!
தங்கிடும் கையில்
மங்கலம்! மங்கலம்!

என்ன வந்தாலும்
எது நடந்தாலும்
இணைந்திருப்பேன் நான் உன்னுடனே!

துன்பம் வந்தாலும்
துயரம் வந்தாலும்
தொடர்ந்திருப்பேன் நான் உன்னிடமே!

கூந்தல் கருப்பு!
குங்குமம் சிவப்பு!
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஓஹோ ... ஓ .ஓடும் எண்ணங்களே......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் :  மக்களை பெற்ற மகராசி(1957)

பாடியவர்கள் : சீனிவாஸ் & சரோஜினி

இசை : K V மகாதேவன்

வரிகள் : மருதகாசி

பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
உண்மைக் காதல் மாறிப் போகுமா?
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
உண்மைக் காதல் மாறிப் போகுமா?
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?

ஆண்...  ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
உண்மைக் காதல் மாறிப் போகுமா?
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
உண்மைக் காதல் மாறிப் போகுமா?
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

பெண் : முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ?
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ

ஆண் : சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா?
சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா

பெண் : பகையாலே காதலே அழியாது கண்ணா

ஆண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே.. ! பாரிலே
.
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
உண்மைக் காதல் மாறிப் போகுமா?
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
ஆண் : என்னாவியே கண்ணே உன் போலவே
மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா?

பெண் : இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
என்னாசை கண்ணா நீயென் தெய்வமே

ஆண் : அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்

பெண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம்

நாளுமே..! பாரிலே..!
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
உண்மைக் காதல் மாறிப் போகுமா?
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

  • கருத்துக்கள உறவுகள்

படம்: இரும்புத் திரை(1960)
இசை: S V வெங்கடராமன்
குரல்: P லீலா, T M .சௌந்தரராஜன்
வரிகள்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?
என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?
ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனோ ?

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

 

படம் : தெய்வபலம் (1959)

இசை : ஜி அஸ்வத்தாமா

வரிகள் :மருதகாசி

பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ் & எஸ் ஜானகி

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்
அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்
இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய்
குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய்
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ
விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ
குரும்புகள் ஏனோ என்னிடம்
குரும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இசைபாடும் தென்றலோடு விளையாடும் வெண்ணிலாவே....!  🌔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு மாப்பிள்ளை யாரோ......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை
வரிகள்: வாலி
இசை: எம்.எஸ் விஸ்வநாதன்
பாடியோர்: பி.சுசீலா, பி.பி. ஸ்ரீநிவாஸ்

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?

மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன - அவன்
வருகையினால் இந்த இதழ்களின் மீது புன்னகை விளைந்ததென்ன?
பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ? - ஒரு
தலைவனை அழைத்துத் தனியிடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ?
தருகின்ற மனதல்லவோ?

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

கைவிரலாலே தொடுவதிலே இந்தப் பூமுகம் சிவந்ததென்ன? இரு
கைகளினால் நீ முகம் மறைத்தாலே வையகம் இருண்டதென்ன
செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன - என்னை
அருகினில் அழைத்து இருகரம் அணைத்து மய்க்கத்தைக் கொடுப்பதென்ன?
மயக்கத்தைக் கொடுப்பதென்ன?

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பெரிய இடத்து பெண் ( 1963 )

வரிகள் : கண்ணதாசன்

இசை : விஸ்வநாதன் -- ராமமூர்த்தி

பாடியவர்கள் : TMS & P சுசீலா L R ஈஸ்வரி

கட்டோடு குழலாட ஆட-ஆட
கண்ணென்ற மீனாட ஆட-ஆட
கொத்தோடு நகையாட ஆட-ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு! (கட்டோடு)

பாவாடை காற்றோடு ஆட-ஆட
பருவங்கள் பந்தாட ஆட-ஆட
காலோடு கால்பின்னி ஆட-ஆட
கள்ளுண்ட வண்டாக நீ ஆடு! (கட்டோடு)
முதிராத நெல்லாட ஆட-ஆட
முளைக்காத சொல்லாட ஆட-ஆட
உதிராத மலராட ஆட-ஆட
சதிராடு தமிழே நீ ஆடு! (கட்டோடு)

தென்னை மரத் தோப்பாகத்
தேவாரப் பாட்டாகப்
புன்னை மரம் பூச்சொரிய
சின்னவளே நீ ஆடு!

கண்டாங்கி முன்னாட
கன்னி மனம் பின்னாட
கண்டு கண்டு நானாட
செண்டாக நீ ஆடு! (கட்டோடு)

பச்சரிசிப் பல்லாட
பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட
வட்டமிட்டு நீ ஆடு!
வள்ளி மனம் நீராடத்
தில்லை மனம் போராட
ரெண்டு பக்கம் நானாட
சொந்தமே நீ ஆடு! (கட்டோடு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கண்ணோடு கண் கலந்தால்.....!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நீயல்லால் தெய்வம் இல்லை.....!  🌺

  • கருத்துக்கள உறவுகள்

படம்:காசேதான் கடவுளடா(1972)

பாடியோர்:சவுந்தரராஜன் ,வீரமணி

வரிகள்:வாலி

இசை: MS விஸ்வநாதன்

ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா
வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா

காலனை உதைத்த என்னப்பனே – உன்னை
காலால் உதைத்தான் கண்ணப்பனே… ஏ..ஏ… மகாதேவா
காலனை உதைத்த என்னப்பனே – உன்னை
காலால் உதைத்தான் கண்ணப்பனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
பாம்பை அடிக்கும் ஆண்டவனே.. (அடேய்)
பம்பை அடிக்கும் ஆண்டவனே
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
பம்பை அடிக்கும் ஆண்டவனே
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
சைவப்பொருளாய் இருப்பவனே…. ஏ..ஏ…
சைவப்பொருளாய் இருப்பவனே அன்று ஓட்டல் கறியை கேட்டவனே
பிள்ளைக்கறியை கேட்டவனே…
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
காட்சி பொருளாய் நின்றவனே
அன்று சாட்சியை சொல்ல வந்தவனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே

ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
ஹர ஹர சிவ சிவ அரோகரா…

மகனிடம் பாடம் படித்தவனே
அன்று காமனை கண்ணால் எரித்தவனே..ஏ..ஏ..
மகனிடம் பாடம் படித்தவனே
அன்று காமனை கண்ணால் எரித்தவனே
மல கசாயத்தை குடித்தவனே….
மகா விஷத்தை குடித்தவனே
தில்லை வெளியில் ஆடி முடித்தவனே
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
நானும் கூட உன்பிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை

ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா
வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பேரை சொல்லலாமா கணவன் பேரை சொல்லலாமா .....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கணவனே கண் கண்ட தெய்வம் (1955)

பாடியோர் : சுசீலா

இசை :ராமராவ் &ஹேமன் குமார்

வரிகள்:பாலசுப்ரமணியம்

எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆடுவதும் ஏனோ
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆடுவதும் ஏனோ
ஆசைதான் மீறுதே
யாரிடம் செல்வோம் கண்ணாலே கொள்ளை கொண்ட கள்வனும தானோ
எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி
ஏங்குறேன்
எந்தன் ஆசை நிறைவேறும் ஆசை விந்தை தானோ
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ

பாரினிலே எனக்கு நிகர் தான் யாரோ
கண்ணாலே கொள்ளை கொண்ட கள்வனும
நீ தானே
எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி
ஏங்குறேன்
எந்தன் ஆசை நிறைவேறும் ஆசை விந்தை தானோ
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆடுவதும் ஏனோ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.