Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா?

எம்மை அசட்டை செய்பவரை நாம் அசட்டை செய்வதில் தவறு உள்ளதா? 83 members have voted

  1. 1. சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா?

    • ஆம்!
      58
    • இல்லை!
      25

Please sign in or register to vote in this poll.

Featured Replies

சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா?

எமது உணர்வுகளை மதிக்காது எம்மை வைத்து வியாபாரம் செய்யும் தமிழ் சினிமா உலகிற்கு நாம் உதவி செய்வது தகுமா?

வெளிநாடுகளில் வாழும் நாங்கள் தமிழ் சினிமாவைப் புறக்கணிப்பது, எமக்கு சாதகமான பலாபலன்களை தமிழீழத்தில் ஏற்படுத்துமா?

தாயகத் தமிழீழத்தில் எமது உறவுகள்படும் துன்பங்களைத் துடைப்பதற்கு வெளிநாடுகளில் வாழும் நீங்கள் உங்கள் சில சுகங்களை - பொழுதுபோக்குகளை விட்டுக் கொடுக்க, தியாகம் செய்ய தயாராக இருக்கிறீர்களா?

:angry:பாபா :angry: என்ற பெயரில் கோமாளிக் கூத்தாடிய ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தை புறக்கணித்து, தமிழ் சினிமா உலகம், தமிழகம் ஈழத் தமிழர் மீது பாரா முகமாக இருப்பதை கண்டிக்க தயாராக இருக்கின்றீர்களா?

உங்கள் விமர்சனங்களை, வாதங்களை இங்கே முன்வைத்து வெளிநாடுகளில் தாயகத்தை மறந்து தூங்கும் எமது உறவுகளைத் தட்டி எழுப்பிவிடுங்கள்!

Ignorance of Tamil film actors towards Sri Lankan Tamil’s crisis should be given a lesson to open their eyes

Dear friends,

All these times the Sri Lankan Tamil expatriates

whom are living all around the world have been being contributed enormously towards the Indian Tamil film industry to sustain in their difficult time and also to grow in crores worth of payments are being earned by those top actors.

Even though none of the top actors, except a very few, have never given a single thought or voiced against Sri Lankan government’s genocide and atrocities to the innocent Tamils who are living in Tamil Eelam.

In this circumstances if we all expatriates get together and boycott the film called Sivaji acted by Rajni Kanth directed by Shanker and produced by AVM Saravanan (these 3 people are super star, super director and super producer respectively) costing them over 100 crores to produce and believing themselves most of the money can be recovered from Sri Lankan expatriates living all around the world.

We should all aware that by boycotting this film will give them a chance to realise to open their blind eyes towards

our grievances.

Don’t you all think that by seeing that film can be thrilled only for a few hours, but in the meantime by boycotting this film will give a real chance for the whole Tamil cinema industry to open their blind eyes and to lead their millions of fans to support our cause.

Please, please, please send this email to every one of your Tamil contacts all around the world and get some printouts and distribute to the people as maximum as you

can.

If we don’t seize this great opportunity at this very difficult time then we may not have the same again. And the history won’t ever forgive us. Once again please act as fast as you can.

Tamil Expatriates Association

  • Replies 135
  • Views 15.4k
  • Created
  • Last Reply

ஆம் நான் தயார், தமிழர் துயரம் தீரும் வரை சிவாஜி படத்தை திரையரங்கிலோ, வீசிடியிலோ நான் பார்க்க மாட்டேன்!

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி படம் என்ன தமிழ் படங்களையே பார்க்க மாட்டேன்

சிவாஜி படம் என்ன தமிழ் படங்களையே பார்க்க மாட்டேன்

கப்பியக்கா சும்மா டூப்பெல்லாம் விடக் கூடாது

:(

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதாணுங்கோ படங்கள் எல்லாம் பார்ப்பது இல்லை. பாடல்கள் மட்டும் நல்லா கேட்பேன்.

நல்லவேளை பாடல்களை புறக்கணிக்கும் படி ஏதும் வாக்குகள் நடக்கவில்லை

உண்மைதாணுங்கோ படங்கள் எல்லாம் பார்ப்பது இல்லை. பாடல்கள் மட்டும் நல்லா கேட்பேன்.

நல்லவேளை பாடல்களை புறக்கணிக்கும் படி ஏதும் வாக்குகள் நடக்கவில்லை

மாட்டிகிட்டீர் மாப்பு வரட்டும் சிவாஜி பாடல்களை புறக்கனிகிறீர்களா என்று வாக்கெடுப்பு நடத்தலாம் :(

  • தொடங்கியவர்

கருத்துக் கணிப்பில் பங்குபற்றும் யாழ் கள உறவுகள் தயவு செய்து நீங்கள் கருத்துக் கணிப்பில் குறிப்பிட்ட ஒரு தெரிவை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் கூறிவிடுங்கள். அப்போதுதான் எமது பிரச்சனைகளை மற்றவர்களும் அறிந்து, அது சம்மந்தமாக நாம் ஆராய முடியும்.

நன்றி!

தமிழ்மக்களை எப்படி ஏமாற்றுவது என்று தெரிந்து வைத்து டைரக்டருரன் சேர்ந்து புளுடாவிட வரப்போகிறார். அந்த காலத்தில நான் 5 ம் வகுப்பு சென் ஜோன்ஸ் கல்லூரி என்றா கண்டிப்புக்கு பேர் போன பள்ளிக்கூடம். அப்ப மறைந்த கண்டிப்பான குண்டியில ஆளுக்கேற்ற வகையில பிரம்பு வைத்து அடிக்கும் அதிபர் ஆனந்திராஜா இருந்த காலம். எம்.ஜி.ஆர் படமெண்டா முதல் இரவு தியேட்டரின் முகப்பினை பார்ர்க நான் எப்படியும் ருயூசன் சாக்குச் சொல்லி சைக்கிளில் கிழம்பி விடுவேன். அனா முதல் சோ என்பது விடியற்காலை 1 மணி. என்னால பாக்க முடியாது எண்டு மாத்திரம் தெரியும்.

வீட்டை கண்ணுக்கு மிளகாய் தூள் போட்டு கட்டி வைத்து அடிக்குங்கள் படிக்காட்டி. ஆகவே கள்ளமாக பொய் சொல்லிவிட்டு கட் அவுட் ஏத்தும் போதாவது எம்.ஜி.ஆரினை பார்க்க வேண்டும் என்று 1974 களில் புரப்பட்டுவிடுவேன். அப்படி ஒரு தனிக்கவர்ச்சி எம்.ஜி.ஆர் மேல எனக்கு. ஒரு நாள் நான் முதல் சோ பார்த்தே ஆகவேண்டும் என்று விடியற்காலை வருடா வருடம் பாடச்சாலை திருக்கேதீஸ்வர தல யாத்திரை போக இருந்த நேரம் பார்த்து பள்ளி மாணவர்கள் சிலருடன் புளுடாவிட்டு இரண்டு நாள் யாழ்பாண சிறீதர் தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்ப்பதற்காக தொடர்ந்து 8 சோ இரண்டு நாட்கள் பார்த்த பெருமையை என்னவென்று சொல்வது இன்று வரை எம்.ஜி.ஆர் என்னுடன் தான் வாழ்கிறார். மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும் என்று சொன்னவருடன் ரஜனி யை வைத்து ஓப்பிடமுடியாது என்பது என் வாதம். இருக்கும் போது ரஜனி எம் தமிழர்களுக்காக ஒரு சின்ன குரல் கொடுத்தாரா? படத்தில மட்டும் தூள்கிளப்புவார். பறந்து பறந்து வசனம் கதைப்பார்.

அட வீரப்பன் கூட அப்படி ஒரு மரியாதை கொடுத்து நக்கீரனினுக்கு பேட்டி கொடுத்து அப்படி ஒரு தமிழர் உறவினை காட்டி கதத்திருக்கேக்க இவர் ராஜ்குமாருக்கு குண்டி கழுவின ஆள். இவருக்கு குடுக்கிற காசை நான் கஸ்டப்பட்ட ஒரு தமிழனுக்கு கொடுப்பனே ஒழிய அவருடைய ஸ்டன்ட பார்க்க கொடுக்கமாட்டன். அட நம்ம வாத்தியார் நீங்க எங்க இவங்கள் எங்கே. :angry:

  • கருத்துக்கள உறவுகள்

நாம கோடம்பாக்கத்தில் இருந்து வரும் தற்கால தமிழ்ப் படங்களைப் பார்க்கிறதில்ல.. சிவாஜியும், கத்தரிக்காயையும்..

ஆனா நம்ம விசிலடிச்சான் கூட்டங்கள் கால்கடுக்கக் காத்திருந்து கட்டாயம் பார்ப்பார்கள். Ilford மற்றும் Wandsworth இல் உள்ள CineWorld சினிமாக்களில் கூட்டம் அலைமோதும். இதையெல்லாம் நிறுத்தவேண்டுமானால் பிரதியாக வேறு நல்ல சினிமாவைப் பார்க்கும் நிலைக்கு நம்மவர்களைக் கொண்டுவரவேண்டும். இதெல்லால் தற்போதைக்கு நடக்காது..

எப்போதும் நான் பச்சைத் தமிழன். இப்போ நான் வெள்ளைத் தமிழன்

:( .

Edited by kirubans

நான் எனது மனசாட்சிக்கு விரோதமில்லாம சொல்லுகிறேன் சிட்னியில முதல் காட்சியில் முதல் ஆளா நின்று விசில் அடிக்கிறது நானாக தான் இருக்கும்.

நன்றி வணக்கம்

உண்மையை சொன்னால் சிவாஜி திரைப்படத்தையோ அல்லது ஒட்டுமொத்த இந்திய திரைப்படங்களையோ நான் எந்த வடிவிலும் பார்க்கவே மாட்டேன் என்று உறுதிபட கூற முடியவில்லை.

எங்களுடைய எதிர்ப்பை காண்பிப்பதற்காக திரையரங்கில் பார்ப்பதை தவிர்த்தாலும் டிவிடி வடிவில் பார்க்க கூடிய சாத்தியம் நிறையவே உண்டு.

10 வருடங்களாக திரை அரங்கில் சென்று பார்த்ததில்லை . அனால் கள்ள வீடியோசிடி யில் பார்ப்பேன்.

திரையில் சென்று பார்ப்பதால் திரைப்படங்களை இறக்குமதி செய்து திரையில் ஓடுபவர்கள் உசாராக எல்லாபடங்களையும் திரையிடுகிறார்கள். அவர்கள் நட்டம் அடைந்து படம் ஓடினால் நட்டம் என்ற நிலை வர வேண்டும்.

சிவாஜி திரைப்படத்தை புறக்கணிக்கச் செய்வது என்பது மிகப் பெரிய வேலைத் திட்டம். ஆனால் இதை ஆரம்பத்திலேயே திட்டமிட்டிருக்க வேண்டும்.

தற்பொழுது வெளிநாட்டில் உள்ள எம்மவர்கள் சிவாஜி படத்திற்காக பெரும் தொகைப் பணத்தை முன்பணமாகக் கட்டியிருக்கக் கூடும்.

ஆகவே இது குறித்து சரியாக அறிந்து கொள்ள வேண்டும். கனடாவில் இப்படி ஒரு புறக்கணிப்பினால் நட்டப்பட்ட ஒரு ஈழத் தமிழர் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன்.

ஆகவே புறக்கணிப்புக்கு நேரம் பிந்திவிட்டதா என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் பெரும் எடுப்பில் இதைச் செய்து தமிழ்நாட்டுத் திரையுலகினருக்கு சில செய்திகளை சொல்லலாம்.

இணையத்திலும், விசிடியிலும் சிவாஜி பார்க்கலாம். அதனால் அவர்களுக்கு நட்டம்தான் ஏற்படும்.

புறக்கணிப்பை விட இன்னுமொன்று முக்கியமானது.

எமக்கு ஆதரவாக உள்ள தமிழகத் திரையுலகினரின் படங்களை நாம் திரையில் சென்று பார்த்து அவர்களுக்கு வரவேற்புக் கொடுக்க தயாராக இருக்கிறோமா?

உதாரணமாக சீமான், சத்தியராஜ், தங்கர்பச்சான் போன்றவர்களின் படங்களை வரவேற்கத் தயாரா?

நான் எனது மனசாட்சிக்கு விரோதமில்லாம சொல்லுகிறேன் சிட்னியில முதல் காட்சியில் முதல் ஆளா நின்று விசில் அடிக்கிறது நானாக தான் இருக்கும்.

நன்றி வணக்கம்

உண்மையை சொன்னதற்கு நன்றி.

நீங்கள் மட்டுமல்ல பலரின் நிலையும் இதுதான். தாயகத்தமிழரிடம் உயிரை தியாகம் செய்யக் கேட்கும் துணிவுள்ள புலத்தமிழர் தங்கள் பொழுதுபோக்கை கூட தியாகம் செய்யக் தயாரில்லை என்பதே உண்மை!

ஸ் ஸ் ஸ் ஸ்

post-3802-1174731951_thumb.jpg

சிவாஜி திரைப்படத்தை புறக்கணிக்கச் செய்வது என்பது மிகப் பெரிய வேலைத் திட்டம். ஆனால் இதை ஆரம்பத்திலேயே திட்டமிட்டிருக்க வேண்டும்.

தற்பொழுது வெளிநாட்டில் உள்ள எம்மவர்கள் சிவாஜி படத்திற்காக பெரும் தொகைப் பணத்தை முன்பணமாகக் கட்டியிருக்கக் கூடும்.

ஆகவே இது குறித்து சரியாக அறிந்து கொள்ள வேண்டும். கனடாவில் இப்படி ஒரு புறக்கணிப்பினால் நட்டப்பட்ட ஒரு ஈழத் தமிழர் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன்.

ஆகவே புறக்கணிப்புக்கு நேரம் பிந்திவிட்டதா என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் பெரும் எடுப்பில் இதைச் செய்து தமிழ்நாட்டுத் திரையுலகினருக்கு சில செய்திகளை சொல்லலாம்.

இணையத்திலும், விசிடியிலும் சிவாஜி பார்க்கலாம். அதனால் அவர்களுக்கு நட்டம்தான் ஏற்படும்.

புறக்கணிப்பை விட இன்னுமொன்று முக்கியமானது.

எமக்கு ஆதரவாக உள்ள தமிழகத் திரையுலகினரின் படங்களை நாம் திரையில் சென்று பார்த்து அவர்களுக்கு வரவேற்புக் கொடுக்க தயாராக இருக்கிறோமா?

உதாரணமாக சீமான், சத்தியராஜ், தங்கர்பச்சான் போன்றவர்களின் படங்களை வரவேற்கத் தயாரா?

ஒரு நாளைக்கு 5 பேர் என்ற வீதத்தில் தாயகத்தில் தமிழர் இந்தப் போராட்டத்தால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் சில புலம் பெயர் பணக்கார முதலாலிமார் தற்கொலை செய்வது ஒன்றும் பெரிய இழப்பில்லை.

எப்படி என்றாலும் பார்ப்பதில் குறியாக இருக்கிறீர்களே? இது முடிவல்ல ஆரம்பம்! இங்கு ஒரு நண்பர்

குறிப்பிட்ட படி அனைத்து இந்தியப் படங்களையும் புறக்கணிப்போம். தீர்வு கிடைக்கும் வரை!

நிங்கள் குறிப்பிட்டது போன்று நன்கு திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்க வேண்டும்.

அது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

நிங்கள் குறிப்பிட்டது போன்று நன்கு திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்க வேண்டும்.

அது எப்படி?

சிங்கள மொழியில் நல்ல தரமான படங்கள் வருகின்றன. நாம் எல்லோரும் சிங்கள் மொழியைக் கற்று சிங்களப் படங்களைப் பார்க்கத் தொடங்குவோம்.. :(

சில படங்கள்..

Sulanga Enu Pinisa (The Forsaken Land)

Saroja

Purahanda Kaluwara (Death On A Full Moon Day)

உண்மையை சொன்னால் சிவாஜி திரைப்படத்தையோ அல்லது ஒட்டுமொத்த இந்திய திரைப்படங்களையோ நான் எந்த வடிவிலும் பார்க்கவே மாட்டேன் என்று உறுதிபட கூற முடியவில்லை.

எங்களுடைய எதிர்ப்பை காண்பிப்பதற்காக திரையரங்கில் பார்ப்பதை தவிர்த்தாலும் டிவிடி வடிவில் பார்க்க கூடிய சாத்தியம் நிறையவே உண்டு.

உண்மைதான் நேற்று வரை எப்போது சிவாஜி வெளிவரும் பார்க்கலாம் என்றிருந்து விட்டு திடிரென பார்க்கக் கூடாது என்று சில லூசுப்பயல்கள் கூறும் போது அசாத்தியமாகத்தான் தெரியும்.

யாழ்ப்பாணத்தில் பாதை மூடிய போதும் கூட "எல்லாச் சனமும் சாகப்போகுது" என்று நாம் ஒப்பாரி வைக்க, இறந்தவர்கள் போக எஞ்சியவர்கள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.

இந்திய படத்தயாரிப்பாளர்கள் கூட இதனை கேட்டு விட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்கள் "இவங்களை நம்பியா நாம் படம் எடுக்கிறோம், இவங்கள் இப்படி எத்தனை நாளைக்கு கத்துவாங்கள்" என்று.

எனக்குக் கூடச் சிரிப்பாகதான் இருக்கிறது, இந்தக் கேவலத்தில் நாமா போராட்டத்திற்கு அர்பணிப்புகளை செய்யப்போகிறோம் என்று?

நீண்டகாலாகவே நான் ரஜனியின் படங்களை திரையில் சென்று பார்ப்பதில்லை.

திரையில் சென்று நாம் படம் பார்ப்பதால், அவர்களுக்கு வருமானம்தான் வருகிறது. இணையத்தில் பார்ப்பதால் அவர்களுக்கு நட்டம் ஏற்படும்.

ஆகவே நான் சிவாஜி படத்தை இணையத்தில் பார்ப்பதை ஆதரிக்கிறேன்.

இதன் மூலம் தமிழ்நாட்டுத் திரையுலகினருக்கு நட்டம் ஏற்படுத்தின மாதிரியும் இருக்கும். சிவாஜி படம் பார்க்க வேண்டும் அடம்பிடிப்பவர்கள் படத்தை பார்த்த மாதிரியும் இருக்கும்.

ஆனால் புறக்கணிப்பதை விட எமக்கு ஆதரவான தமிழின உணர்வுள்ள திரையுலகினருக்கு கை கொடுப்பதே முக்கியம்.

இதன் மூலம் திரையுலகம் என்ற மாபெரும் சக்தியை நாம் எமக்கு ஆதரவாக செயற்படுவதற்கு தூண்ட முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இருக்கிற நாம் எல்லாவற்றுக்கும் ஒரு மன்னிப்பு வைத்திருக்கிறோம் அதாவது

1.விளையாட்டு வேறு அரசியல் வேறு

2.வியாபாரம் வேறு அரசியல் வேறு

3.ஆத்மிகம் வேறு அரசியல் வேறு

4.கேளிக்கை நிகழ்ச்சிகள் வேறு அரசியல்வேறு

அது போல சினிமா வேறு அரசியல் வேறு என்று போட்டு பார்த்துவிட்டு போவீனம்.இதுக்கு போய் அலட்டிக்கலாமா.

சிவாஜி படமென்றில்லாமல் சகல திரைபடங்களையும் திருட்டு விசிடியில் பாத்து சகல திரைப் படங்களையும் பகிஷ்கரிப்போம்

திரையில் படம்? ம்ம் நினைவு தெரிந்து இந்தியாவில் அந்நியன் பார்க்க போய் (ட்ரைவ் இன் தியட்டர்) எரிச்சல் அடைந்து தூங்கி வழிந்த அனுபவம் மட்டும்.

திரைபடங்களில் அவ்வளவு நாட்டம் இல்லை

அதனால் சிவாஜியும் அதே நிலைதான்

  • கருத்துக்கள உறவுகள்

திரையில் படம்? ம்ம் நினைவு தெரிந்து இந்தியாவில் அந்நியன் பார்க்க போய் (ட்ரைவ் இன் தியட்டர்) எரிச்சல் அடைந்து தூங்கி வழிந்த அனுபவம் மட்டும்.

திரைபடங்களில் அவ்வளவு நாட்டம் இல்லை

அதனால் சிவாஜியும் அதே நிலைதான்

எப்ப போனீங்கள்?

;)

சிவாஜி படமென்றில்லாமல் சகல திரைபடங்களையும் திருட்டு விசிடியில் பாத்து சகல திரைப் படங்களையும் பகிஷ்கரிப்போம
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் நடிகர் சங்கம் நிதி சேகரித்து ஈழத்து அகதிகளுக்கு உதவ முன்வந்ததை பாராட்டியதும் இங்குதான். அது நடந்துதோ இல்லையோ இறைவனுக்குத்தான் தெரியும்.

புறக்கணிப்போம் சிறீலங்கா வெறும் பக்கங்களை நிரப்பும் எழுத்துக்களாகவே உள்ளன. யதார்த்த உலகில் அவை எந்த மாற்றத்தையும் தந்ததாகத் தெரியவில்லை.

சனம் பார்க்காவிட்டாலும் மூச்சுக்கு மூந்நூறு தடவை தமிழ் தேசியம் உச்சரிக்கும் ஐபிசியும் ரிரிஎன்னும்.. இன்னும் புலம்பெயர் தமிழர்கள் நாடும் சன்ரீவியும் நிச்சயம் பார்க்கத் தூண்டும்..! அந்த வகையில் இந்தப் புறக்கணிப்பு சும்மா சில பேர் வருடா வருடம் தங்களை விளம்பரப்படுத்த நடத்தும் இணையக் கூத்து..!

வேணுன்னா ஒரு பேப்பரும் இன்னும் சில ஓசிப்பேப்பர்களும் இவற்றை பிரசுரிக்கலாம். அவை வழமை போல குப்பைத் தொட்டிக்குள் போகுமே தவிர மக்களை சிந்திக்க வைக்க முடியாது.

போராட்ட காலத்தில் புலிகள் எத்தனையோ விடயங்களை மக்களோட கூட இருந்து எடுத்துச் சொல்லியும் செவிடன் காதில ஊதின சங்கு போல எப்படா கிளாலி "போட்" ஓடும் என்று காத்திருந்து ஓடிவந்த தமிழர்களிடம்... இப்போ போய்..புறக்கணின்னா.. நடக்கிற காரியமா. அதிலும் பேசாம படத்தைப் பார்த்திட்டு அங்கினை தமிழ் நடிகர் சங்கத்திடம் உள்ள கொஞ்ச நெஞ்ச ஈழ அகதிகள் தொடர்பான நல்லெண்ணத்தையாவது கட்டிக்காத்துக்குங்க.

இந்தியத் தமிழர்களை விட இந்தியச் சினிமா மூலம் வியாபாரம் செய்து வருமானம் ஈட்டுபவர்கள் புகலிடத்தில் உள்ள ஈழத்தை விட்டு ஓடிவந்த தமிழர்களே. அவர்களின் பிரதான பொழுதுபோக்கு அம்சமே தென்னிந்திய சினிமா தன். அது அவர்களின் வாழ்வியல் இலட்சியமாகி விட்டது.அதை விட்டா வேற ஒன்றும் ஆகாது..! நம்மட ஆக்களை ஒற்றுமைப் படுத்தி சிந்திக்க வைச்சு ஒரு காரியம் நடத்த முடியும் என்றால் இப்ப நாங்க எல்லாம் தமிழீழத்தில சுதந்திரமா வாழ்ந்திட்டு இருப்பம். போங்கடா நீங்களும் உங்க ஈழமும் கனடா லண்டன் அவுஸ்திரேலியா ஐரோப்பா போனாக்காணும்.. அங்கதான் சொர்க்கமே இருக்கென்று நினைக்கிற எம்மவர் மத்தியில்... இவை.. நல்ல பலனை அளிக்கும்..???! பகற்கனவு..! :(

சிந்தித்துப் பாருங்க.. இந்திய விடுதலைக்காகப் போராடியவர்கள் அகதியாக உலகெங்கும் ஓடி இருந்தால்.. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்குமா..! போராட்டம் ஒன்று வெற்றி பெற வேண்டின் மக்களுக்கு சொந்ததேசத்தின் மீது மற்றுதல் இருக்க வேண்டும். நம்மவர்கள் மத்தியில் உள்ள தாயகப்பற்று என்பது நான் நல்லா சுகபோகமா இருக்கனும் அப்புறம் நாட்டைப் பற்றிப் பார்ப்பம். அப்படியான ஒரு அற்புதமான பற்று. இப்படியான நிலையில்.. போராட்டங்கள்.. வெற்றி காணும்..???! கண்டால் அதுதான் உலக சாதனையா இருக்கும். இன்றைய அமெரிக்க முதலாளித்துவ சனநாயக சர்வாதிகார உலகு போராட்டங்களை வசதி வாய்ப்புக்களை பணத்தைக் காட்டியே அதிகம் நசுக்கி உள்ளது. எம்மவர்கள் வசதி வாய்ப்புக்கு வாய்பிளக்கும் நிலையில்.. அவர்களை தாய் நாட்டுப் பற்று.. பற்றிக் கொள்ளும்???. விளம்பரம் தேட புகழ் தேட உச்சரிக்கப்படும். ஆனால் நிச்சயமா எம்மவர் பலருக்கு அர்ப்பணிப்புள்ள மனப்பான்மை கிடையவே கிடையாது...! அப்படி இருக்க இவை தேவை தானா..??! :(

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.