Jump to content

2020இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்! முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை அனுமதித்தது தவறு…


Recommended Posts

2020இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்! முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை அனுமதித்தது தவறு…

 

 

சிங்கள ஊடகத்தில் கோத்தபாய

Gota-and-MR-smiling.jpg?resize=600%2C450

 

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை பாரிய தவறு என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார்.

அங்கு பொதுமக்கள் மாத்திரம் நினைவுகூரப்படவில்லை என்றும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் அஞ்சலிக்கப்பட்டதாகவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர்வதற்கு அனுமயளித்திருக்கவே கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கள வானொலி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதற்கு அரசாங்கம் இடையூறு விளைத்திருக்க வேண்டும் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்று கூறிய அவர் இதனை தான் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அதில் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இதன்போது பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

எனினும் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவின் அனுமதி தேவைப்படுகிறது என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட்டால் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவின் உதவியும் அதிகமாக கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார். ஒன்றிணைந்த எதிரணித் தரப்பினர் உட்பட பலரது ஒத்துழைப்புக்களும் தனக்கு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் போட்டியிட்டால் தமிழ் மக்களின் வாக்குகளை உங்களால் பெறமுடியுமா என்று இதன்போது கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார் என்றும் தனக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்று கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டார்.

http://globaltamilnews.net/2018/80608/

Link to comment
Share on other sites

கோட்டாபய ராஜபக்ச போன்ற கொலைகார்கள் உளறுவதை தமிழர் கணக்கிலெடுக்கப் போவதில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

கோட்டாபய ராஜபக்ச போன்ற கொலைகார்கள் உளறுவதை தமிழர் கணக்கிலெடுக்கப் போவதில்லை! 

சிங்களவர் கணக்கில் எடுத்தால்? ?

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

சிங்களவர் கணக்கில் எடுத்தால்? ?

தனக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்று கோட்டாபய ராசபக்ச ஏன் நம்பிக்கை வெளியிட வேண்டும்.....?? அத்தடன் சிங்களவர் கணக்கில் புலிகளல்ல, புலி என்ற பெயரைக் கேட்டாலே அவர்களுக்கு வயிற்றைக் கலக்கும். :shocked: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

சிங்களவர் கணக்கில் எடுத்தால்? ?

தமிழர்களுக்கு உரிமை பிரச்னை இருக்கிறது, சிங்களத்தின் நற்ப்பண்புடனுனான , சகதோரத்துவ மனப்பான்மையுடன் தமிழர்களை நடத்துவதற்கு நாங்கள் ஆயத்தம், ஏன் ஈழத்தை தவிர எல்லாத்தையும் பகிர்வதத்திற்கு நாங்கள்  ஆயத்தம்.

ஆனால் இந்த சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து  எம்மால் எண்தோவூர் தீர்வையும்  சிங்கள பொதுமக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு நேரம், காலம், பொருள் வேண்டும், மிக  குறைந்த மனித உரிமை மீறல்களை பற்றி சர்வதேச சமுதாயம் எம்மை நெருக்கினால் கூட, சிங்கள மக்கள் எம்மை விரட்டி விடுவார்கள்.

இதற்கு   எல்லாம் காரணம் மகிந்த, கோத்தபாயா அணியின் பேரினவாதப் போக்கே. ஒரு பொது தமிழர்களை கைவிடமாட்டோம், மங்களவின் நேரடி கூற்றுப் படி.  

என்ற சிங்களத்தின், குறிப்பாக ரணில், சந்திரிகா, மைத்திரி, ராஜித, மங்கள, மாரப்பன்ன, ஆஸ்ட்டின் பெர்னாண்டோ, மிலிந்த மொரகொட போன்றோரின் காலத்தை இழுத்தடித்து, அது முடியவிட்ட்டால் சீனாவை காட்டி (அமெரிக்கா சாயல் ராணிலே இதனை அம்பாந்தோட்டையை முன்னின்று சீனாவிதிற்கு தரை வார்த்தது) கட்டமைக்கப்பட்ட முறையில் வடகிழக்கில் தமிழரின் பெரும்பான்மையை சிதைத்து,  சர்வதேச சமுதாயத்தின் கவனத்தில் இருந்து இந்தப் பிரச்சனையை அகற்றி விடலாம் என்ற கிணற்று தவளைக்  கனவு  வெகுவிரைவில் முடிவிட்ற்கு கொண்டு வரப்படும். இதற்கு கிந்தியாவின் மறை முக ஆசீர்வாதமும் உண்டு.

ஆனால், அம்பாந்தோட்டை சர்வதேச சமுதாயத்தின் நிரந்தர பிரச்சனையாக மாற்றிவிட்டது என்பதே யதார்த்தம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kadancha said:

தமிழர்களுக்கு உரிமை பிரச்னை இருக்கிறது, சிங்களத்தின் நற்ப்பண்புடனுனான , சகதோரத்துவ மனப்பான்மையுடன் தமிழர்களை நடத்துவதற்கு நாங்கள் ஆயத்தம், ஏன் ஈழத்தை தவிர எல்லாத்தையும் பகிர்வதத்திற்கு நாங்கள்  ஆயத்தம்.

ஆனால் இந்த சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து  எம்மால் எண்தோவூர் தீர்வையும்  சிங்கள பொதுமக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு நேரம், காலம், பொருள் வேண்டும், மிக  குறைந்த மனித உரிமை மீறல்களை பற்றி சர்வதேச சமுதாயம் எம்மை நெருக்கினால் கூட, சிங்கள மக்கள் எம்மை விரட்டி விடுவார்கள்.

இதற்கு   எல்லாம் காரணம் மகிந்த, கோத்தபாயா அணியின் பேரினவாதப் போக்கே. ஒரு பொது தமிழர்களை கைவிடமாட்டோம், மங்களவின் நேரடி கூற்றுப் படி.  

என்ற சிங்களத்தின், குறிப்பாக ரணில், சந்திரிகா, மைத்திரி, ராஜித, மங்கள, மாரப்பன்ன, ஆஸ்ட்டின் பெர்னாண்டோ, மிலிந்த மொரகொட போன்றோரின் காலத்தை இழுத்தடித்து, அது முடியவிட்ட்டால் சீனாவை காட்டி (அமெரிக்கா சாயல் ராணிலே இதனை அம்பாந்தோட்டையை முன்னின்று சீனாவிதிற்கு தரை வார்த்தது) கட்டமைக்கப்பட்ட முறையில் வடகிழக்கில் தமிழரின் பெரும்பான்மையை சிதைத்து,  சர்வதேச சமுதாயத்தின் கவனத்தில் இருந்து இந்தப் பிரச்சனையை அகற்றி விடலாம் என்ற கிணற்று தவளைக்  கனவு  வெகுவிரைவில் முடிவிட்ற்கு கொண்டு வரப்படும். இதற்கு கிந்தியாவின் மறை முக ஆசீர்வாதமும் உண்டு.

ஆனால், அம்பாந்தோட்டை சர்வதேச சமுதாயத்தின் நிரந்தர பிரச்சனையாக மாற்றிவிட்டது என்பதே யதார்த்தம்.  

 

3 hours ago, Paanch said:

தனக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்று கோட்டாபய ராசபக்ச ஏன் நம்பிக்கை வெளியிட வேண்டும்.....?? அத்தடன் சிங்களவர் கணக்கில் புலிகளல்ல, புலி என்ற பெயரைக் கேட்டாலே அவர்களுக்கு வயிற்றைக் கலக்கும். :shocked: 

கடந்த வியாழன் முதல் இந்த திங்கள் வரை இலங்கையில்.

யாழில் இரண்டு நாள், கொழும்பில் இரண்டு நாள்.

கோத்தா பற்றி நம்மவரிடம் கேட்டபோது, கிடைத்த பதில்கள் ஆச்சரியப்பட வைத்தன.

வழவழத்த உறவிலும் பார்க்க வைரம் பாய்ந்த பகை நல்லது.

எதையாவது தந்து தொலைக்க வேண்டுமாயின் அதை தந்து தொலைக்க தேவையான துணிவு அங்க தான் இருக்குது.

அந்தாள், கட் அணட் றைட். இழுவல் இல்லை. ஒரு டீலை பேசிப் பார்க்கலாம்.

தமிழ் பேசும் மக்களை வெறுக்க வைத்ததாலேயே பதவியிழந்தோம் என்று இப்ப நல்லா தெரியும்.

அது மட்டுமல்ல, தமிழர் மனங்களை வெல்வது எப்படி என்று கடந்த புதன் இரவு கூட்டம் நடத்தியுள்ளார்.

குறிப்பு; இவை நான் கேட்டவை. எனது அபிப்பிராயம் இல்லை. மக்கள் விரக்தியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

Link to comment
Share on other sites

17 hours ago, Nathamuni said:

 

கடந்த வியாழன் முதல் இந்த திங்கள் வரை இலங்கையில்.

யாழில் இரண்டு நாள், கொழும்பில் இரண்டு நாள்.

கோத்தா பற்றி நம்மவரிடம் கேட்டபோது, கிடைத்த பதில்கள் ஆச்சரியப்பட வைத்தன.

வழவழத்த உறவிலும் பார்க்க வைரம் பாய்ந்த பகை நல்லது.

எதையாவது தந்து தொலைக்க வேண்டுமாயின் அதை தந்து தொலைக்க தேவையான துணிவு அங்க தான் இருக்குது.

அந்தாள், கட் அணட் றைட். இழுவல் இல்லை. ஒரு டீலை பேசிப் பார்க்கலாம்.

தமிழ் பேசும் மக்களை வெறுக்க வைத்ததாலேயே பதவியிழந்தோம் என்று இப்ப நல்லா தெரியும்.

அது மட்டுமல்ல, தமிழர் மனங்களை வெல்வது எப்படி என்று கடந்த புதன் இரவு கூட்டம் நடத்தியுள்ளார்.

குறிப்பு; இவை நான் கேட்டவை. எனது அபிப்பிராயம் இல்லை. மக்கள் விரக்தியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

இது விரக்தியில் வந்ததல்ல...! அனுபவம் தந்த அறிவு....!! :unsure: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

 

 

வழவழத்த உறவிலும் பார்க்க வைரம் பாய்ந்த பகை நல்லது.

எதையாவது தந்து தொலைக்க வேண்டுமாயின் அதை தந்து தொலைக்க தேவையான துணிவு அங்க தான் இருக்குது.

அந்தாள், கட் அணட் றைட். இழுவல் இல்லை. ஒரு டீலை பேசிப் பார்க்கலாம்.

தமிழ் பேசும் மக்களை வெறுக்க வைத்ததாலேயே பதவியிழந்தோம் என்று இப்ப நல்லா தெரியும்.

அது மட்டுமல்ல, தமிழர் மனங்களை வெல்வது எப்படி என்று கடந்த புதன் இரவு கூட்டம் நடத்தியுள்ளார்.

குறிப்பு; இவை நான் கேட்டவை. எனது அபிப்பிராயம் இல்லை. மக்கள் விரக்தியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

வைரம்பாய்ந்த பகையுடன் உறவை வைத்து தமிழ் மக்கள் டீல் போடலாம்......ஆனால் மீண்டும்  வேறு ஒரு வைரம் பாய்ந்த‌ பகையுடய ஒரு சிங்கள அரசியல்வாதி உருவாகி சிங்கள மக்களின் கதாநாயகனாகி விடுவார்.....

தமிழ்மக்களை உரிமைகளை மறுப்பதன் மூலம் தான் சிங்கள மக்களிடையே காதாநாயகர்கள் உறுவாகின்றனர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, putthan said:

வைரம்பாய்ந்த பகையுடன் உறவை வைத்து தமிழ் மக்கள் டீல் போடலாம்......ஆனால் மீண்டும்  வேறு ஒரு வைரம் பாய்ந்த‌ பகையுடய ஒரு சிங்கள அரசியல்வாதி உருவாகி சிங்கள மக்களின் கதாநாயகனாகி விடுவார்.....

தமிழ்மக்களை உரிமைகளை மறுப்பதன் மூலம் தான் சிங்கள மக்களிடையே காதாநாயகர்கள் உறுவாகின்றனர் 

வைரம் பாய்ந்த பகை, புலிகள் இல்லாத நிலையில் வேறு  அர்ததம் பெறுகிறது.

பாம்பு விசத்தை எடுத்து, மருந்து தயாரித்து அதே பாம்புக்கடிக்கு  வைத்தியம் பார்பது போல என கருதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

 

கடந்த வியாழன் முதல் இந்த திங்கள் வரை இலங்கையில்.

யாழில் இரண்டு நாள், கொழும்பில் இரண்டு நாள்.

கோத்தா பற்றி நம்மவரிடம் கேட்டபோது, கிடைத்த பதில்கள் ஆச்சரியப்பட வைத்தன.

வழவழத்த உறவிலும் பார்க்க வைரம் பாய்ந்த பகை நல்லது.

எதையாவது தந்து தொலைக்க வேண்டுமாயின் அதை தந்து தொலைக்க தேவையான துணிவு அங்க தான் இருக்குது.

அந்தாள், கட் அணட் றைட். இழுவல் இல்லை. ஒரு டீலை பேசிப் பார்க்கலாம்.

தமிழ் பேசும் மக்களை வெறுக்க வைத்ததாலேயே பதவியிழந்தோம் என்று இப்ப நல்லா தெரியும்.

அது மட்டுமல்ல, தமிழர் மனங்களை வெல்வது எப்படி என்று கடந்த புதன் இரவு கூட்டம் நடத்தியுள்ளார்.

குறிப்பு; இவை நான் கேட்டவை. எனது அபிப்பிராயம் இல்லை. மக்கள் விரக்தியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

ஏற்கனவே  புலிகள்  இப்படியான  முடிவை  எடுத்துத்தானே மகிந்தவை  கொண்டு  வந்தார்கள்
ரணில்  வரக்கூடாது 
மகிந்த  மீண்டும் வரணும் என்ற  முடிவு  தானே பின்னரும் இருந்தது
சாணக்கியரின் முடிவு  மக்களிடம் எடுபடவில்லையா???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.