Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2020இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்! முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை அனுமதித்தது தவறு…

Featured Replies

2020இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்! முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை அனுமதித்தது தவறு…

 

 

சிங்கள ஊடகத்தில் கோத்தபாய

Gota-and-MR-smiling.jpg?resize=600%2C450

 

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை பாரிய தவறு என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார்.

அங்கு பொதுமக்கள் மாத்திரம் நினைவுகூரப்படவில்லை என்றும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் அஞ்சலிக்கப்பட்டதாகவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர்வதற்கு அனுமயளித்திருக்கவே கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கள வானொலி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதற்கு அரசாங்கம் இடையூறு விளைத்திருக்க வேண்டும் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்று கூறிய அவர் இதனை தான் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அதில் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இதன்போது பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

எனினும் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவின் அனுமதி தேவைப்படுகிறது என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட்டால் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவின் உதவியும் அதிகமாக கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார். ஒன்றிணைந்த எதிரணித் தரப்பினர் உட்பட பலரது ஒத்துழைப்புக்களும் தனக்கு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் போட்டியிட்டால் தமிழ் மக்களின் வாக்குகளை உங்களால் பெறமுடியுமா என்று இதன்போது கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார் என்றும் தனக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்று கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டார்.

http://globaltamilnews.net/2018/80608/

கோட்டாபய ராஜபக்ச போன்ற கொலைகார்கள் உளறுவதை தமிழர் கணக்கிலெடுக்கப் போவதில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

கோட்டாபய ராஜபக்ச போன்ற கொலைகார்கள் உளறுவதை தமிழர் கணக்கிலெடுக்கப் போவதில்லை! 

சிங்களவர் கணக்கில் எடுத்தால்? ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சிங்களவர் கணக்கில் எடுத்தால்? ?

தனக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்று கோட்டாபய ராசபக்ச ஏன் நம்பிக்கை வெளியிட வேண்டும்.....?? அத்தடன் சிங்களவர் கணக்கில் புலிகளல்ல, புலி என்ற பெயரைக் கேட்டாலே அவர்களுக்கு வயிற்றைக் கலக்கும். :shocked: 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

சிங்களவர் கணக்கில் எடுத்தால்? ?

தமிழர்களுக்கு உரிமை பிரச்னை இருக்கிறது, சிங்களத்தின் நற்ப்பண்புடனுனான , சகதோரத்துவ மனப்பான்மையுடன் தமிழர்களை நடத்துவதற்கு நாங்கள் ஆயத்தம், ஏன் ஈழத்தை தவிர எல்லாத்தையும் பகிர்வதத்திற்கு நாங்கள்  ஆயத்தம்.

ஆனால் இந்த சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து  எம்மால் எண்தோவூர் தீர்வையும்  சிங்கள பொதுமக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு நேரம், காலம், பொருள் வேண்டும், மிக  குறைந்த மனித உரிமை மீறல்களை பற்றி சர்வதேச சமுதாயம் எம்மை நெருக்கினால் கூட, சிங்கள மக்கள் எம்மை விரட்டி விடுவார்கள்.

இதற்கு   எல்லாம் காரணம் மகிந்த, கோத்தபாயா அணியின் பேரினவாதப் போக்கே. ஒரு பொது தமிழர்களை கைவிடமாட்டோம், மங்களவின் நேரடி கூற்றுப் படி.  

என்ற சிங்களத்தின், குறிப்பாக ரணில், சந்திரிகா, மைத்திரி, ராஜித, மங்கள, மாரப்பன்ன, ஆஸ்ட்டின் பெர்னாண்டோ, மிலிந்த மொரகொட போன்றோரின் காலத்தை இழுத்தடித்து, அது முடியவிட்ட்டால் சீனாவை காட்டி (அமெரிக்கா சாயல் ராணிலே இதனை அம்பாந்தோட்டையை முன்னின்று சீனாவிதிற்கு தரை வார்த்தது) கட்டமைக்கப்பட்ட முறையில் வடகிழக்கில் தமிழரின் பெரும்பான்மையை சிதைத்து,  சர்வதேச சமுதாயத்தின் கவனத்தில் இருந்து இந்தப் பிரச்சனையை அகற்றி விடலாம் என்ற கிணற்று தவளைக்  கனவு  வெகுவிரைவில் முடிவிட்ற்கு கொண்டு வரப்படும். இதற்கு கிந்தியாவின் மறை முக ஆசீர்வாதமும் உண்டு.

ஆனால், அம்பாந்தோட்டை சர்வதேச சமுதாயத்தின் நிரந்தர பிரச்சனையாக மாற்றிவிட்டது என்பதே யதார்த்தம்.  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kadancha said:

தமிழர்களுக்கு உரிமை பிரச்னை இருக்கிறது, சிங்களத்தின் நற்ப்பண்புடனுனான , சகதோரத்துவ மனப்பான்மையுடன் தமிழர்களை நடத்துவதற்கு நாங்கள் ஆயத்தம், ஏன் ஈழத்தை தவிர எல்லாத்தையும் பகிர்வதத்திற்கு நாங்கள்  ஆயத்தம்.

ஆனால் இந்த சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து  எம்மால் எண்தோவூர் தீர்வையும்  சிங்கள பொதுமக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு நேரம், காலம், பொருள் வேண்டும், மிக  குறைந்த மனித உரிமை மீறல்களை பற்றி சர்வதேச சமுதாயம் எம்மை நெருக்கினால் கூட, சிங்கள மக்கள் எம்மை விரட்டி விடுவார்கள்.

இதற்கு   எல்லாம் காரணம் மகிந்த, கோத்தபாயா அணியின் பேரினவாதப் போக்கே. ஒரு பொது தமிழர்களை கைவிடமாட்டோம், மங்களவின் நேரடி கூற்றுப் படி.  

என்ற சிங்களத்தின், குறிப்பாக ரணில், சந்திரிகா, மைத்திரி, ராஜித, மங்கள, மாரப்பன்ன, ஆஸ்ட்டின் பெர்னாண்டோ, மிலிந்த மொரகொட போன்றோரின் காலத்தை இழுத்தடித்து, அது முடியவிட்ட்டால் சீனாவை காட்டி (அமெரிக்கா சாயல் ராணிலே இதனை அம்பாந்தோட்டையை முன்னின்று சீனாவிதிற்கு தரை வார்த்தது) கட்டமைக்கப்பட்ட முறையில் வடகிழக்கில் தமிழரின் பெரும்பான்மையை சிதைத்து,  சர்வதேச சமுதாயத்தின் கவனத்தில் இருந்து இந்தப் பிரச்சனையை அகற்றி விடலாம் என்ற கிணற்று தவளைக்  கனவு  வெகுவிரைவில் முடிவிட்ற்கு கொண்டு வரப்படும். இதற்கு கிந்தியாவின் மறை முக ஆசீர்வாதமும் உண்டு.

ஆனால், அம்பாந்தோட்டை சர்வதேச சமுதாயத்தின் நிரந்தர பிரச்சனையாக மாற்றிவிட்டது என்பதே யதார்த்தம்.  

 

3 hours ago, Paanch said:

தனக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்று கோட்டாபய ராசபக்ச ஏன் நம்பிக்கை வெளியிட வேண்டும்.....?? அத்தடன் சிங்களவர் கணக்கில் புலிகளல்ல, புலி என்ற பெயரைக் கேட்டாலே அவர்களுக்கு வயிற்றைக் கலக்கும். :shocked: 

கடந்த வியாழன் முதல் இந்த திங்கள் வரை இலங்கையில்.

யாழில் இரண்டு நாள், கொழும்பில் இரண்டு நாள்.

கோத்தா பற்றி நம்மவரிடம் கேட்டபோது, கிடைத்த பதில்கள் ஆச்சரியப்பட வைத்தன.

வழவழத்த உறவிலும் பார்க்க வைரம் பாய்ந்த பகை நல்லது.

எதையாவது தந்து தொலைக்க வேண்டுமாயின் அதை தந்து தொலைக்க தேவையான துணிவு அங்க தான் இருக்குது.

அந்தாள், கட் அணட் றைட். இழுவல் இல்லை. ஒரு டீலை பேசிப் பார்க்கலாம்.

தமிழ் பேசும் மக்களை வெறுக்க வைத்ததாலேயே பதவியிழந்தோம் என்று இப்ப நல்லா தெரியும்.

அது மட்டுமல்ல, தமிழர் மனங்களை வெல்வது எப்படி என்று கடந்த புதன் இரவு கூட்டம் நடத்தியுள்ளார்.

குறிப்பு; இவை நான் கேட்டவை. எனது அபிப்பிராயம் இல்லை. மக்கள் விரக்தியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

 

கடந்த வியாழன் முதல் இந்த திங்கள் வரை இலங்கையில்.

யாழில் இரண்டு நாள், கொழும்பில் இரண்டு நாள்.

கோத்தா பற்றி நம்மவரிடம் கேட்டபோது, கிடைத்த பதில்கள் ஆச்சரியப்பட வைத்தன.

வழவழத்த உறவிலும் பார்க்க வைரம் பாய்ந்த பகை நல்லது.

எதையாவது தந்து தொலைக்க வேண்டுமாயின் அதை தந்து தொலைக்க தேவையான துணிவு அங்க தான் இருக்குது.

அந்தாள், கட் அணட் றைட். இழுவல் இல்லை. ஒரு டீலை பேசிப் பார்க்கலாம்.

தமிழ் பேசும் மக்களை வெறுக்க வைத்ததாலேயே பதவியிழந்தோம் என்று இப்ப நல்லா தெரியும்.

அது மட்டுமல்ல, தமிழர் மனங்களை வெல்வது எப்படி என்று கடந்த புதன் இரவு கூட்டம் நடத்தியுள்ளார்.

குறிப்பு; இவை நான் கேட்டவை. எனது அபிப்பிராயம் இல்லை. மக்கள் விரக்தியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

இது விரக்தியில் வந்ததல்ல...! அனுபவம் தந்த அறிவு....!! :unsure: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

 

 

வழவழத்த உறவிலும் பார்க்க வைரம் பாய்ந்த பகை நல்லது.

எதையாவது தந்து தொலைக்க வேண்டுமாயின் அதை தந்து தொலைக்க தேவையான துணிவு அங்க தான் இருக்குது.

அந்தாள், கட் அணட் றைட். இழுவல் இல்லை. ஒரு டீலை பேசிப் பார்க்கலாம்.

தமிழ் பேசும் மக்களை வெறுக்க வைத்ததாலேயே பதவியிழந்தோம் என்று இப்ப நல்லா தெரியும்.

அது மட்டுமல்ல, தமிழர் மனங்களை வெல்வது எப்படி என்று கடந்த புதன் இரவு கூட்டம் நடத்தியுள்ளார்.

குறிப்பு; இவை நான் கேட்டவை. எனது அபிப்பிராயம் இல்லை. மக்கள் விரக்தியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

வைரம்பாய்ந்த பகையுடன் உறவை வைத்து தமிழ் மக்கள் டீல் போடலாம்......ஆனால் மீண்டும்  வேறு ஒரு வைரம் பாய்ந்த‌ பகையுடய ஒரு சிங்கள அரசியல்வாதி உருவாகி சிங்கள மக்களின் கதாநாயகனாகி விடுவார்.....

தமிழ்மக்களை உரிமைகளை மறுப்பதன் மூலம் தான் சிங்கள மக்களிடையே காதாநாயகர்கள் உறுவாகின்றனர் 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, putthan said:

வைரம்பாய்ந்த பகையுடன் உறவை வைத்து தமிழ் மக்கள் டீல் போடலாம்......ஆனால் மீண்டும்  வேறு ஒரு வைரம் பாய்ந்த‌ பகையுடய ஒரு சிங்கள அரசியல்வாதி உருவாகி சிங்கள மக்களின் கதாநாயகனாகி விடுவார்.....

தமிழ்மக்களை உரிமைகளை மறுப்பதன் மூலம் தான் சிங்கள மக்களிடையே காதாநாயகர்கள் உறுவாகின்றனர் 

வைரம் பாய்ந்த பகை, புலிகள் இல்லாத நிலையில் வேறு  அர்ததம் பெறுகிறது.

பாம்பு விசத்தை எடுத்து, மருந்து தயாரித்து அதே பாம்புக்கடிக்கு  வைத்தியம் பார்பது போல என கருதலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

 

கடந்த வியாழன் முதல் இந்த திங்கள் வரை இலங்கையில்.

யாழில் இரண்டு நாள், கொழும்பில் இரண்டு நாள்.

கோத்தா பற்றி நம்மவரிடம் கேட்டபோது, கிடைத்த பதில்கள் ஆச்சரியப்பட வைத்தன.

வழவழத்த உறவிலும் பார்க்க வைரம் பாய்ந்த பகை நல்லது.

எதையாவது தந்து தொலைக்க வேண்டுமாயின் அதை தந்து தொலைக்க தேவையான துணிவு அங்க தான் இருக்குது.

அந்தாள், கட் அணட் றைட். இழுவல் இல்லை. ஒரு டீலை பேசிப் பார்க்கலாம்.

தமிழ் பேசும் மக்களை வெறுக்க வைத்ததாலேயே பதவியிழந்தோம் என்று இப்ப நல்லா தெரியும்.

அது மட்டுமல்ல, தமிழர் மனங்களை வெல்வது எப்படி என்று கடந்த புதன் இரவு கூட்டம் நடத்தியுள்ளார்.

குறிப்பு; இவை நான் கேட்டவை. எனது அபிப்பிராயம் இல்லை. மக்கள் விரக்தியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

ஏற்கனவே  புலிகள்  இப்படியான  முடிவை  எடுத்துத்தானே மகிந்தவை  கொண்டு  வந்தார்கள்
ரணில்  வரக்கூடாது 
மகிந்த  மீண்டும் வரணும் என்ற  முடிவு  தானே பின்னரும் இருந்தது
சாணக்கியரின் முடிவு  மக்களிடம் எடுபடவில்லையா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.