Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள்

ibctamil-300x169.jpgஉடகத் துறையில் நீண்ட வரலாற்றைக்கொண்ட ஊடகவியலாளர் தினேஷ் குமார் ஐ.பி.சி (IBC)தமிழ் தொலைக்காட்சியில்ருந்து நீக்கப்பட்டார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்துமாறு கட்டளையிட்ட ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாகம் ஓர் இரவிற்குள் இந்த முடிவை எடுத்திருந்தது. இன்று சனிக்கிளமை நடைபெறவிருந்தத நேருக்கு நேர் நிகழ்ச்சியை நிறுத்துமாறு பணித்த ஐ.பி.சி தமிழ், இறுதியாக நடைபெற்ற அவரது நேரலை நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் நீக்கப்பட்டார்.

ஜி.ரி.வி மற்றும் தீபம் தொலைக்காட்சி சேவைகளிலும் ஊடகவியலாளராகப் பணியாற்றிய தினேஷ், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

தினேஷ் இற்கு முன்னதாக ஐ.பி.சி இல் பணியாற்றிய பல முழு நேர ஊடகவியலாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இன்று, புலம்பெயர் நாடுகளில் தொழில் முறை ஊடகவியலாளர்கள், ஐ.பி.சி இல் மட்டுமே தங்கியிருக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளதால், இவர்களின் அடிப்படை வாழ்க்கை இன்று கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியினை உள்வாங்க முற்பட்ட இன்றைய ஐ.பி.சி தொலைக்காட்சியின் உரிமையாளர், அம்முயற்சியில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ஐ.பி.சி என்ற வானொலியைக் கொள்வனவு செய்து அதனை ஐ.பி.சி தொலைக்காட்சியாக மாற்றினார்.

தமிழ் வின் உட்பட அதனோடு இணைந்த பல்வேறு இணையங்களையும் அண்மையில் உரிமையாக்கிக்கொண்ட ஐ.பி.சி நிர்வாகம் இன்று புலம்பெயர் தமிழ் ஊடகக் ‘கோப்ரட்’ ஆக மாற்றம் பெற்றது.

ஆரம்பத்தில் பல்வேறு ஊடகங்களிலிருந்த ஊடகவியலாளர்களையும் உள்வாங்கிக்கொண்ட ஐ.பி.சி, படிப்படியாக அவர்களின் வேலை நேரங்களைக் குறைக்க ஆரம்பித்தது. வேலைக் குறைப்பின் பின்னரும், வேறு தொழில் சார் ஊடகங்கள் அற்ற நிலையில், ஐ.பி.சி இல் தொங்கிக்கொண்டு வாழ்கை நடத்த வேண்டிய நிலைக்கு ஊடகவியலாளர்கள் உந்தப்பட்டனர்.

ஊடகவியலாளர்கள் மத்தியிலிருந்தோ மக்கள் மத்தியிலிருந்தோ எதிர்ப்புக்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தமது ஊழியர்கள் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்ய ஐ.பி.சி ஆரம்பித்தது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊடகவியளார்களின் வெற்றிடத்தை நிரப்ப, மலிந்த கூலியில் புதிய ஊடகவியலாளர்களை உள்வாங்கிக்கொண்ட ஐ.பி.சி, தனது யாழ்ப்பாண கிளையைப் பயன்படுத்தியும், நிகழ்ச்சிகளைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளது.

தவிர, அரசியல் நிகழ்ச்சிகளை பொழுது போக்கு நிகழ்ச்சிகளாக மாற்றி, புதிய மாற்றங்களையும் ஐ.பி.சி தொலைக்காட்சி உருவாக்க ஆரம்பித்துள்ளது.

ஒரு இரவிற்குள் ஐ.பி.சி இலிருந்து தினேஷ் நீக்கப்பட்டமைக்கான காரணங்கள் எதனையும் முன்வைக்காத ஐ.பி.சி உரிமையாளர்கள், ஐ.பி.சி இன் கொள்கை வரபு ஒன்றைத் தயாரித்த பின்னர் தினேஷ் ஐ தொடர்பு கொள்வதாகக் கூறியுள்ளனர்.

ஐ.பி.சி இலிருந்து ஊடகவியலாளர்கள் தொடர்ந்து நீக்கப்படுவதற்கு எதிரான போராட்டங்கள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை எனினும் புலம்பெயர் அமைப்புக்களின் ஊடகக் குரலாக தினேஷ் போன்றவர்கள் இதுவரை செயற்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://inioru.com/ibc-tamil-overnight-redundancies/

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரையில் தினேஷ் பகுதி நேர தொகுப்பாளர். முழு நேர உழைப்பாளர் இல்லை.

IBC radio, GTV, oru paper, thamilan போன்ற ஊடகங்களின் காலத்தில் இருந்தே தொகுப்பாளர்கள், ஒருபோதுமே இந்த வேலைகளை நிரந்தர வருமானம் தரும் ஒரு வேலையாக கருதவில்லை.

ILC radio எனும்  ஊடகம் சகலருமே தொண்டு அடிப்படையில் வேலை செய்தனர், செய்கின்றனர். 

ஆரம்பத்தில் subscription மூலம் வருமானம் பார்த்த GTV முதலில் இலவசமாகியது. அதனால் தீபம் வேறு வழி இன்றி இலவசமாகியது. 

இன்றய தேதியில் விஜய், supersinger நிகழ்ச்சி காரணமாக ubscription மூலம் வருமானம் பார்க்கிறது. ஏனையவை விளம்பரத்தினை மட்டுமே நம்பி உள்ளன.

இந்த நிலையில் செலவைக் குறைக்க யாழ்ப்பாணம் போனது ஐபிசி. இது lebera சார்பு ஊடகம். 

மறுபுறம் லைக்கா சார்பில் ஆதவன் இயங்குகிறது.

இந்த இரு நிறுவனங்களில், முதலில் ஊடகத்துறையினை முக்கியமாக ஐபிசி யை லபக்கியது lebera.

வேலை நிறுத்தம் போராடடம் செய்யுமளவுக்கு, ஊடக வியலாளர்களும் பெரும் தொகையில் இல்லை. ஊடக நிலையங்களும் பெரிய நிதி நிலையில் இல்லை.

மேலும் வேலை நிறுத்தம் செய்யுமளவுக்கு சட்டத்தில் அனுமதிக்கும், பதிவான தமிழ் ஊடகவியலாளர் சங்கமும் இல்லை.

வெளியே நின்று முதலாளி ஒழிக என்றால், public nusense case ல் போலீஸ் கொண்டு போகும்.

அடுத்ததாக, தமிழ் நாட்டு சினிமா என்னும் அரைத்த மாவினையும், இலங்கை அரசியல் என்னும் போரடித்த விடயத்தினையும் போட்டு கடாசினால் மக்கள் எங்கே வந்து கேட்கப் போகின்றனர்.

ஊடகவியலில் பல அருமையான விடயங்கள் உள்ளன. இங்கே பல விடயங்களை தயாரித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழும் நாடுகளில் விற்க முடியும். 

சில வருடங்களுக்கு முன்னர், ஐபிசி காரர்கள் கமெராவை தூக்கிக் கொண்டு ஸ்காட்லாந்து போன்ற பல பகுதிகளுக்கு சென்றார்கள். இதனையே தொடர்ந்து செய்து, தமிழக tv நிலையங்களுக்கு கொடுத்து barter முறையில் நிகழ்ச்சிகளை வாங்கி போட்டிருக்கலாம்.

free lancing முறையில் தினேஷ் போன்ற ஊடகவியலாளர்கள் தாமே நிகழ்ச்சிகளை எடுத்து, tv நிலையங்களுக்கு கொடுத்து பணம் பார்க்கலாமே.

பிபிசி கூட இந்த முறையில் தான் நிகழ்ச்சிகளை வாங்குகிறது. Mr Khan, Baskar, Meera போன்றவர்கள் கூட இவ்வாறே உழைக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் இருந்தும்... அவர்களுக்கு என்று ஒரு வலுவான ஊடகமே கிடையாது. அங்கும் புடுங்குப்பாடுகளும்.. காட்டிக்கொடுப்புகளும்.. விட்டிட்டு ஓடுதல்களும்.. விரட்டியடித்தல்களும் தான்.

ஐ ரி என்.. ரி ரி என்...ஜி ரி வி.. தீபம்.. ஐ பி சி.. ஆதவன்.. இப்படின்னு... ஆயிரத்தெட்டு முளைச்சதும் அழிஞ்சதும்... இதே ஆக்களின் நிலையில்லாத மனப்பான்மையால் தான்.

தமிழர்களின் காணப்படாத ஒரு காரணியான ஒற்றுமை என்பதே.. இத்தனைக்கும் காரணமாகும். அதுக்கு முதல் காரணம்.. சுயநலம். 

எமது அழிவுகளுக்கு நாமே தான் காரணம்.. என்பதற்கு இவை நல்ல உதாரணம். ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினேஷ் நீக்கம்: ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் ஒப்புதல் வாக்குமூலம்!

ibctamil-300x169.jpg

ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியிலிருந்து அதன் பிரதான ஊடகவியலாளர் தினேஷ் நீக்கப்பட்ட சம்பவம் புலம்பெயர் சூழலில் பல்வேறு தளங்களில் விவாதப் பொருளாக மாற்றமடைந்துள்ளது. தினேஷ் இற்கு முன்பதாகவே பல ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட்டு திடீரெனப் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். கருணாகரன், இரவி அருணாசலம், யோகா தினேஷ், பவித்ரா, அனாஸ்… போன்றவர்களின் இறுதியில் தினேஷ் இன் பதவி நீக்கம் முக்கியத்துவம் பெற்றமைக்கு இரண்டு பிரதான காரணங்களை உண்டு, முதலாவதாக தினேஷ் வெளியேற்றப்பட்ட போது அது ஐ.பி.சி இன் கொள்கை சார்ந்த பிரச்சனையாக முன்வைக்கப்பட்டது. ஏனையவர்கள் வெளியேற்றப்பட்ட போது அல்லது வேலை நேரக் குறைப்புச் செய்யப்பட்ட போது ஐ.பி.சி இழப்பில் இயங்குவதாகவும் அதனை ஈடு செய்வதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மாறாக தினேஷ் இன் வெளியேற்றம் தொலைக்காட்சி நிர்வாகத்தின் கொள்கை சார்ந்த பிரச்சனையாக முன்வைக்கப்பட்டது மட்டுமன்றி, நிர்வாகம் தனது கொள்கையை வரையறுத்த பின்னர் தினேஷை தொடர்பு கொள்வதாகவும் கூறப்பட்டது.

இரண்டாவதாக தினேஷ் முழுவதுமாக அரசியல் கோட்பாடு சார்ந்த விவாத நிகழ்ச்சிகளையே நடத்தி வந்தார். அதிலும் பொதுவாக இலங்கை அரசிற்கு எதிரானதும், சில வேளைகளில் அதிகாரவர்க்கத்திற்கும் எதிரான நிகழ்ச்சிகளே விவாதப் பொருளாக்கப்பட்டிருந்தன.

இறுதியாக 11.07.2018 நடைபெற்ற புது வெளிச்சம் விவாத நிகழ்ச்சியில் தினேஷ் இன் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது ஐ.பி.சி தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால் மறு நாளே தினேஷ் நீக்கப்பட்டார். அதே நாளில் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பிற்கு தயார் செய்யப்பட்ட மற்றொடு விவாதம் ஐபிசி தொடர்பாகப் பேசாத போதும் அது ஒளிபரப்பப்படாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. அந்த ஒளிப்பதிவில் கலந்து கொண்ட அனைவரையும் ஐபிசி அவமானப்படுத்தியுள்ளது என்பது வேறு விடையம்.

தினேஷ் இன் வெளியேற்றம் என்பது பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது. முதலாவதாக இது கொள்கை அடிப்படையிலான வெளியேற்றம் என்பதால், முன்னதாக வெளியேற்றப்பட்டவர்களும் அதே அடிப்படையிலேயே நீக்கப்பட்டிருந்தாலும், பொருளாதாரக் காரணங்களே அதற்குக் காரணம் எனக் கூறப்பட்டதா என்ற சந்தேகம்.

இனி, நீக்கப்பட்டமைக்கான காரணம் கொள்கை அடிப்படையிலானது என ஐபிசி நிர்வாகம் பொத்தாம் பொதுவில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தாலும், குறிப்பாக எந்தப்பகுதியை அது சார்ந்திருக்கிறது என்பதை குறிப்பிடவில்லை.

முதலில், சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் சார்ந்ததா, ஊடக சனநாயகம் சார்ந்ததா, அதிகாரவர்க்க எதிர்ப்பு தொடர்பானதா என்ற குறிப்பான விளக்கத்தை ஐபிசி இடமிருந்து பெற்றாகவேண்டும்.

அதனை ஐபிசி தெளிவுபடுத்தினால் அதன் நிர்வாகத்தின் மீது சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் தேவையற்ற சந்தேகங்களை தவிர்க்க முடியும்.

ஐபிசி தொடர்பான மேலும் தரவுகளுடனான பதிவுகளை வெளியிடுவதற்கும் முன்பதாக வெளிப்படையான உரையாடலுக்கு ஐபிசி இன் ஏனைய ஊடகவியலாளர்களையும், நிர்வாகத்தையும் இனியொரு சார்பில் அழைக்கிறோம்.
ஊடகங்களின் நம்பகத்தன்மையை ஐபிசி கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது என்றால், அதன் இன்றைய ஊடகவியலாளர்களின் மவுனம்அருவருப்பானது.


தொடரும்..

 

http://inioru.com/ibc-tamil-london/

  • கருத்துக்கள உறவுகள்

ibc என்றால் என்னங்க ? 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

ibc என்றால் என்னங்க ? 

Ãhnliches Foto

:306_earth_africa: international broadcasting corporation.எண்டு நினைக்கிறன்.:307_earth_asia: ?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

international broadcasting corporation

தமிழ் சனம் புழங்கும் இடத்தில் ஒரு பத்து பேரை ibc கேட்பது உண்டா என்று கேட்டு பாருங்கோ பத்தில் எட்டு நான் கேட்ப்பது போல் கேட்க்குங்கள் இந்த எண்ணிக்கை லாச்சப்பல் போன்ற இடங்களில் ஐந்து ஆறாகும் பாதி சனத்துக்கு இந்த ரேடியோ என்ன உளறுது எண்டே தெரியாது .

  • கருத்துக்கள உறவுகள்
On 7/19/2018 at 10:35 AM, nedukkalapoovan said:

....தமிழர்களின் காணப்படாத ஒரு காரணியான ஒற்றுமை என்பதே.. இத்தனைக்கும் காரணமாகும். அதுக்கு முதல் காரணம்.. சுயநலம். 

எமது அழிவுகளுக்கு நாமே தான் காரணம்.. என்பதற்கு இவை நல்ல உதாரணம். ?

தமிழ் நாட்டிலும் இதே நிலைதான்..!

  • கருத்துக்கள உறவுகள்

BEEFA9_D7-_CA26-4271-81_F0-194_CF28_CA58

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

தமிழ் சனம் புழங்கும் இடத்தில் ஒரு பத்து பேரை ibc கேட்பது உண்டா என்று கேட்டு பாருங்கோ பத்தில் எட்டு நான் கேட்ப்பது போல் கேட்க்குங்கள் இந்த எண்ணிக்கை லாச்சப்பல் போன்ற இடங்களில் ஐந்து ஆறாகும் பாதி சனத்துக்கு இந்த ரேடியோ என்ன உளறுது எண்டே தெரியாது .

 

On 7/17/2018 at 11:30 PM, Nathamuni said:

----அடுத்ததாக, தமிழ் நாட்டு சினிமா என்னும் அரைத்த மாவினையும், இலங்கை அரசியல் என்னும் போரடித்த விடயத்தினையும் போட்டு கடாசினால் மக்கள் எங்கே வந்து கேட்கப் போகின்றனர்.

ஊடகவியலில் பல அருமையான விடயங்கள் உள்ளன. இங்கே பல விடயங்களை தயாரித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழும் நாடுகளில் விற்க முடியும். ----

பெருமாள்...  சுமார் 25 வருடங்களுக்கு முன்பு  ஐரோப்பாவில் தமிழ் வானொலி, தமிழ் தொலைக்காட்சி  எல்லாம் தொடங்கிய போது, மிகுந்த குதூகாலத்துடனும், பெருமையுடனும் எல்லாவற்றையும் கேட்டேன். 
ஓரிரண்டு  வருடங்களில்... வெறுத்துப் போய் விட்டது.

மேலே... நாதமுனி எழுதிய மாதிரி, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள்.
புதிதாக, சொந்தமாக எதனையுமே... சித்திக்கத் தெரியாத  ஊடகங்கள் தான்... இந்த ஊடகங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

IBC வாங்கப் பட்டதான் நோக்கமே, lebera போன் நிறுவன புரொமோஷன் வேலைகளுக்காகத்தான். முன்னர் வைத்திருந்த சக்தி properties நிறுவன உரிமையாளர் சத்தியமூர்த்தி, ஈலிங் ஈழபதீஸ்வரர் கோவில் நிருவாகி மீதி சட்டத்துக்கு அமைவாக அல்லாமல் ஒரு செய்தி சொன்ன விடயத்தில், புரொக்டர் நோட்டீஸ் வந்ததும், சடாரென காலில் விழுந்து மன்னிப்பு கேட்க்காமல், வீம்பு பிடித்து, நீதிமன்று சென்று, நஷ்டஈடு, செலவு என 1மில்லியன் இழந்தார்.

நொந்த போயிருந்த அவரிடம், lebera வின் மூன்று உரிமையாளர்களின் ஒருவரான பாஸ்கரனின் முதலீட்டில், அடிமாட்டு விலைக்கு IBC வானொலி lebera வினால் காதும், காதும் வைத்தது போல் வாங்கப் பட்டது.

இப்போது lebera கைமாறி விட்டதால், அடிப்படை நோக்கம் மாறி விட்டது..... இலாபம் இல்லாவிடில், IBC யினை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய தேவை பாஸ்கரனுக்கு இருக்க முடியாது.

இதுதான் இந்த அதிக சம்பளம் அல்லது ஊதியம் பெறுபவர்களை கழட்டி விடுகிறார்கள். 

இது புரியாமல், ஆச்சோ, போச்சோ, அப்படியோ, இப்படியோ, தினேஷை அனுப்பியாச்சு, இனி யாரோ என்று இன்னுமொரு மீடியாகராக்கள் கூப்பாடு போடுகினம்.

முதலாளி, சிம்பிளா சொல்லுவார்... தினேஷை வச்சிருக்கிறம்.... மாதாமாதம் ஒரு 10 புவுணாவது தாருங்கோவன்....

உது யாவாரம்:  கலை, சேவை, லொட்டு, லொசுக்கு எல்லாம் பிறகு...

youtube channel நேற்று வந்தவர்கள் எல்லாம் ஆரம்பித்து பணம் பார்க்கிறார்கள். முக்கியமாக விளம்பரங்கள் மூலமாக. 

விகடன்.காம் சும்மா ஒரு சேனல் ஆரம்பித்து, வந்த வியூகளை (பார்வை) பார்த்து அரண்டு போய் இப்போது தினமும் நடத்துகிறார்கள். பார்வையாளர்கள் கூடும்போது விளம்பர வருமானம் அதிகமாகும்.

தினேசுடன் ஒருமுறை பேசும் போது தனது வீட்டில், காராஜில் ஒரு ஸ்டூடியோ செட்டப் செய்துள்ளதாக சொன்னார். அப்போதே சொன்னேன்.... நீங்களே, அங்கேயோ அல்லது வேறு இடத்திலோ இந்த பிரமுகர்களை வரவழைத்து அரசியல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தி, TV நிலையங்களுக்கு கொடுக்கலாமே என்று. 

இன்றும் கூட அதே போல செய்ய முடியும். youtube channel ஆரம்பித்து பணம் பார்க்லாமே.

இன்னுமொரு இழுத்து மூடப் பட்ட TV நிருவாகி ஒருவருக்கு சொன்னேன். பிபிசி, itv போன்ற நிறுவங்களின் நிகழ்ச்சிகளை, பிரித்தானியாவுக்குள் மட்டும், ஆங்கிலம் இல்லாத வேறு மொழிகளில் மறு ஒளிபரப்ப வழி ஒன்று இருக்கிறது. விசாரியுங்கள் என்றேன்.

மறுநாள் காலையில், வேறு நிர்வாகிகளுடன் பேசினேன், பெரும் ஆர்வமாக உள்ளார்கள். நீங்களே அது தொடர்பில் கடிதங்களை எழுதி உதவ முடியுமா என்றார். 

அவர்கள், நிறுவனத்தினை முன்னேறுவதிலும் பார்க்க, அடுத்த மாதம் சம்பளம் வருமோ என்பதில் குறியாக இருந்ததை அவதானிததால் ஆளை விடுங்கடா சாமி என்று சொல்லி விட்டேன்.

இவர்களது சேவை குறித்து ஒருவர் சொன்னார். பிட்டு அல்லது இடியப்பம். கொஞ்சம் வித்தியாசமாக உக்காந்து யோசிக்கினமாம் என்று, பிட்டும், இடியாப்பமும் சேர்ந்த கலவன்.... கடைசில இரண்டும் அரிசி மா தான் என்கிறார். எவ்வளவு உண்மை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by Kavi arunasalam

  • 2 weeks later...

ஐ.பி.சி தமிழ், வெளிவராத உண்மைகளும் உறைந்து போன ஊடகங்களும்

 

ibctamil-news-300x200.jpgதமிழ்த் தேசியத்தின் பெயராலும், இனப்படுகொலையின் பெயராலும் லைக்கா நிறுவனம் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. வெறும் இலாப வெறி மட்டுமே அந்த நிறுவனத்தின் குறிக்கோள். லைக்கா நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புகள் இலங்கை இனப்படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்சவின் கொல்லைபுறம் வரைக்கும் நீட்சியடைந்த போதே இனியொரு விசாரணை ஆரம்பமானது.
இன்று அதே கொல்லைப்புறத்தில் தேசியத்தின் பெயராலும், மக்கள் சேவையின் பெயராலும் லெபாரா நிறுவனம் தனது இலாப வேட்கைகைக்காகக் கூடுகட்டிக்கொண்ட போது அதன் மறுபக்கத்தில் ஐ.பி.சி (IBC) தொலைக்காட்சியின் கோர முகமும் வெளித்தெரிய ஆரம்பித்தது.

லெபாரா(LEBERA) நிறுவனத்தின் விற்பனை தொடர்பான தகவல்கள் பிரதானப்படுத்தப்பட வேண்டிய தகவலாக இல்லை என்றாலும், அந்த வியாபார யுக்திகளைக் கடந்து செல்லமுடியாத அளவிற்கு லெபாரா நிறுவனம் தனது பிரச்சாரத்தைப் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் ஈழத்திலும் முடுக்கி விட்டிருந்தது.

ஆக, லெபாரா விற்பனை செய்யப்பட்ட ‘விடுகதையிலிருந்தே’ இக் குறிப்பின் முதலாம் பாகத்தை ஆரம்பிக்க வேண்டிய துயரம் தவிர்க்கமுடியாதது. புலம்பெயர் நாடுகளில் லெபாரா தொலைபேசி நிறுவனம் மில்லியன் கணக்கில் வியாபாரம் செய்யதது. புலம்பெயர்ந்து வாழும் வெளி நாட்டவர்கள் தமது நாடுகளுக்கு அழைப்பு ஏற்படுத்திக்கொள்ள மலிவான விலையில் கைத் தொலைபேசி அட்டைகளைத் தயாரித்து விற்பனை செய்துவந்த லெபாரா நிறுவனம் அதன் முன்னோடியான லைக்காவிற்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டின் இறுதியில் லெபாரா நிறுவனம் சீன நிறுவனம் ஒன்றிற்கு 300 மில்லியன்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின என்பதை விட பிரச்சாரம் செய்யப்பட்டது என்பதே உண்மை.

அது விற்பனை செய்யப்பட்டது சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பல்மேரியம் (Palmarium) என்ற முதலீட்டு நிறுவனத்திற்கே என்பதும், ஆங்கில ஊடகங்களைப் பொறுத்தவரையில் முடிச்சவிழ்க்கப்பட்ட விடுகதை. ஈழத் தமிழர்களுக்கு ஊடகங்கள் என்று எதுவும் இல்லை. சமூக வலைத் தளங்களில் தமது நண்பர் வட்டத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் குறுந்தகவல்களை எழுதுவதையே ஊடகப் புரட்சி என்று நம்பும் அவல நிலையில் இவ்வாறன தகவல்களை ஐ.பி.சி போன்ற பல் தேசிய கோப்ரட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. லெபாரா நிறுவனத்தீன் உரிமையாளரால் ஆரம்பிக்கப்பட்ட இன்றும் அதனோடு தொடர்புடைய பண மூலதனத்திலேயே இயங்கும் ஐ.பிசி இடம் உண்மைகள் உறைந்து போயுள்ளன.

இன்று சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்பனை கிடையாது. ஸ்மார்ட் போன் இல் கிடைக்கும் செயலிகளைப் பயன்படுத்தியே உலகம் முழுவதையும் இணைந்துக்கொள்கிறார்கள் அதன் பயனர்கள். ஆக, புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலிருந்து தோன்றிய லைக்கா லெபாரா போன்ற நிறுவனங்கள் வேறு தொழில்களில் ஈடுபட ஆரம்பித்துஇந்த நிலையில் லெபாரா நிறுவனத்தை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.

இந்த நிலையில் பல மில்லியன்கள் இழப்பில் அந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

அப்போது தான், பல்மேரியம் என்ற ஏற்னவே இயங்கிக்கொண்டிருந்த முதலீட்டு நிறுவனத்திற்கு புதிய உரிமையாளர்கள் இருவர் வருகின்றனர். முன்னை நாள் அமெரிக்கப் பிரசையான சூசானி ஆர்சேர்(Suzanei Archer) மற்றும் ரபேல் ஔரெபெச் (Raphael Auerbach) ஆகிய இருவரும் லெபாரா விற்பனை செய்யப்படுவதற்கு சற்று முன்னான காலப்பகுதிய் பல்மேரியத்தை உரிமையாக்கிக் கொள்கின்றனர்.

பின்னதாக, இலாபத்தில் இயங்கமுடியாத வியாபாரச் சூழலிலிருந்த லெபாராவை வாங்குவதாக முடிவெடுத்து அதற்குரிய பணமான 420 மில்லியன் யூரோக்களை தேடுவதற்கான முயற்சியில் பல்மேரியம் ஈடுபடுகிறது. முதலில் பல்மேரியம் லொபாராவை வாங்குவதற்கான பணத்தில் ஆரம்பச் சொத்தான 85 மில்லியனை லெபாராவே வழங்கக எஞ்சிய பணத்தை வங்கிகளின் அல்லது முதலீட்டு நிறுவனங்களின் பண முறிகளாகவும் திரட்டப்படுகிறது. லெபாரா இலாபத்தில் இயங்கும் நிறுவனமாகக் காட்டப்படுகிறது.

லக்சம் பேர்க்கில் பதிவு செய்ய்யபட்ட எல்.பி.ஆர். இன்வெஸ்ட்மென்ட்(LBR investments) என்ற நிறுவனம் இதனிடையே தோன்றுகிறது. இதன் உரிமையாளர்கள் லெபாராவின் உரிமையாளர்களே. இதைவிட எல்.பி.ஆர். மீடியா(LBR media) என்ற நிறுவனம் தோன்றுகிறது. ஐ.பி.சி தொலைக்காட்சி, பல்மேரியம், எல்.பிஆர். இன்வெஸ்ட்மன்ட் என்ற சிக்கலான வலைப்பின்னல், செல்வம்(CELVAM) என்ற மற்றொரு நிறுவனத்தின் தொடர்பு எல்லாம் நன்கு கச்சிதமாகத் திட்டமிடப்பட்டவை எனினும், “வாங்கியவரும் விற்றவரும் ஒரே ஆள் தான்” என்று பைனான்சியல் ரைம்ஸ் சொல்கிறது.

இவ்வாறான சிக்கலான பின்புலத்திலிருந்தே ஐ.பி.சி தொலைக்காட்சி உதிக்கிறது. அதன் பிறப்பு மர்மங்கள் நிறைந்தது. தமது நிதி மோசடிகளை மறைப்பதற்கு லெபாரா இலங்கை அரசிற்கும் அதனை இயக்கும் ஏகபோக அரசுகளுக்கும் சேவைசெய்ய ஒப்புக்கொண்டதன் வெளிப்பாடே ஐபிசி தொலைக்காட்சியின் தோற்றம் என்ற சந்தேகங்களின் முன்னதாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரே ஐந்து நட்சத்திர விடுதியான ஜெட்விங் வந்து போகிறது.
இலங்கையின் இன்றைய சனாதிபதி மைத்திரிபால சிரிசேன (குறிப்பு:தமிழ்த் தேசியவாதி அல்ல)வால் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டேலின் அதிகபடியான பங்குகள் லெபாராவினுடையது. ஹெர்பேர்ட் கூரே என்ற சிங்கள வர்த்தகர் ஜெட்விங்(Jetwink) இன் ஏனைய ஹொட்டேல் களின் பிரதான உரிமையாளர். மகிந்த மற்றும் பசில் ராஜபக்சக்களுக்கு நெருக்கமான கூரே, லெபாரா உரிமையாளர்களுடன் ஏற்பட்ட நெருக்கமான வியாபார ஒப்பந்தத்தில் உருவானது தான் ஜெட்விங் இன் யாழ்ப்பாணக் கிளை.

ibc-300x258.pngஜெட்விங் ஹொட்டேல் திறப்புவிழா 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேளையில் லெபாராவின் உரிமையாளர்களில் ஒருவரான லியோன் மைத்திரிபால சிரிசேன, மிலிந்த மொரகொட சகிதம் கல்ந்துகொண்டார்.

ஜெட்விங் ஹொட்டேல் அமைந்துள்ள இடத்திலிருந்து சில மைல்கள் தொலைவிலேயே ‘தமிழ்த் தேசியம் வளர்க்கும்’ ஐபிசி இன் நிகழ்ச்சிக் கலையகமும் அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார வானொலியாக 2000ம் ஆண்டு ஆரம்பங்கள் வரை இயங்கிவந்த ஐபிசி, 2015 ஆம் ஆண்டில் லெபாரா நிறுவனத்தின் முதலீட்டில் வாங்கப்பட்டது. ஐபிசி இல் தொடர்ந்து பணியாற்றிய பரா பிரபா என்ற ஊடகவியலாளர் இடைத் தரகராகச் செயற்பட ஐபிசி லெபாரா உரிமையாளர்களில் ஒருவரான பாஸ்கரனின் முதலீட்டில் உருவானாலும் அதன் சட்டரீதியான உரித்து நிராஜ் பேர்னாட் டேவிட் என்பவரின் பெயரிலேயே பதிவாகியிருக்கிறது.

இத்த நிறுவனத்தின் பின்னணியில் உள்ள முதலீட்டு நிறுவனமே லெபாரா உரிமையாளரால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஐபிசி தொலைக்காட்சி நிறுவனம் தோன்றிய போது, “தமிழர்களுக்கான ஒரே தொலைக்காட்சி”, தமிழ்த் தேசியம் என்றெல்லாம் புகழ் பாடப்பட்டது.

இனிமேல் பல்மேரியம். எல்.பி.ஆர். பைனான்ஸ், லெபாரா, ஐ.பி.சி லெபாரா மீடியா, செல்வம்,இலங்கை அரசு போன்ற விரிவான தகவல்கள் ஊடாக இக் கட்டுரை பயணிக்கும்.

இன்னும் வரும்…

http://inioru.com/ibc-tamil-the-hidden-truth/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.