Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இராணுவத் தளபதி அழைப்பு

Featured Replies

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இராணுவத் தளபதி அழைப்பு

 

 

Untitled-1asxsa.jpg

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க நேற்று(07) அழைப்பு விடுத்தார்.

இராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை இராணுவத்தின் இச்செய்தி இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ள 'கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018' இன் மூலம் தமிழ் டயஸ்போராவை சென்றடையுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 'கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018' தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் இராணுவத் தளபதி தலைமையில் கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்கள் முன்வைத்த வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"தமிழ் டயஸ்போராக்கள் அதிகமாக மேற்கில் வசிக்கின்றனர். தனவந்தர்களான இவர்களிடம் சிறந்த வளங்கள் உள்ளன. இவர்களை வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக இங்கே முதலீடு செய்ய நாம் ஏன் அழைக்கக் கூடாது?," என்றும் இச் செய்தியாளர் மாநாட்டில் இராணுவத் தளபதி கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, உலகம் முழுவதும் பரந்து வாழும் டயஸ்போராக்களுக்கிடையில் நிலவும் கருத்துவேறுபாடுகளை இனங்கண்டு, அவற்றை களைவதற்கு இலங்கை இராணுவம் முயற்சி செய்வதாகவும் அவர் விளக்கமளித்தார்.

"நாட்டை விட்டுச் சென்று வேறு நாடுகளில் வாழ்பவர்களையே நாம் டயஸ்போரா என அழைக்கின்றோம்.இவர்கள் வெளிநாடுகளில் இருந்தபடி எமது நாட்டின் சமூகத்தினர் மற்றும் ஆட்சியில் பாரிய பங்களிப்பு செலுத்தி வருகின்றனர். பல நாடுகளில் வாழ்ந்து வரும் இவர்களின் சிந்தனைகள் வித்தியாசமானவை. அவர்கள் சிறுபான்மையைச் சேர்ந்தவராகவோ அல்லது பெரும்பான்மையைச் சேர்ந்தவராகவோ இருந்தாலும் அவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றன. இதில் நாட்டுக்கு பயனளிக்க கூடியதனை கண்டறிந்து அதனை கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு இராணுவத்திடமே உள்ளது," என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மக்களுக்காக எமது இராணுவத்தினர் தொடர்ச்சியாக நலன்புரி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

 
 

அத்துடன் நடத்தப்படவுள்ள கொழும்பு செயலமர்வில் இலங்கை இராணுவத்தின் மேற்படி ஆர்வம் மற்றும் விருப்பத்தை வெளிநாட்டுப் பிதிநிதிகள் மூலம் அந்நாட்டில் வாழும் டயஸ்போராவிடம் கொண்டு சேர்ப்பதே இலங்கை இராணுவத்தின் விருப்பமென்றும் அவர் கூறினார்.

மேலும் இக்கருத்தரங்கில் அரசியல் அடிப்படைவாதம் எவ்வாறு இராணுவத்தினர் மீது அழுத்தம் வழங்குகிறது, மற்றும் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

நாட்டின் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்குமென்றும் இதன்போது இராணுவத்தளபதி தெரிவித்தார்.

இச்செயலமர்வுக்கு முன்னொருபோதும் இல்லாத வகையில் அமெரிக்காவிலிருந்து பெரும் திரளான இராணுவ அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதுடன் நால்வர் விசேட உரை நிகழ்த்தவுள்ளனர். அதேபோன்று சீனாவிலிருந்தும் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் கலந்து கொள்வரென்றும் அவர் கூறினார்.

இராணுவத்தினர் பாரம்பரியமாக யுத்தம் செய்து வந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. தற்போது ஆளுமையை கட்டியெழுப்பும் இராணுவமே இலங்கையில் உள்ளனர். எந்தவொரு இயற்கை அனர்த்தத்தின்போதும் இராணுவத்தினரே முதலில் களத்தில் இறக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் செய்திகளை வெளிநாடுகளுக்கு இராஜதந்திர ரீதியில் கொண்டு செல்வதே இக்கருத்தரங்கின் பிரதான நோக்கமென்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.thinakaran.lk/2018/08/08/உள்நாடு/26011/புலம்பெயர்-தமிழ்-அமைப்புகளுக்கு-இராணுவத்-தளபதி-அழைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவருக்கு எங்கள் பலம் தெரிவதில்லை சிங்களவன் தெரிந்து கொண்டு வெட்டி விளயாட தொடங்கிறான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமி கூப்பிடுது......பெட்டிபாயை கட்டடி பரிமளம்....ஊருக்கு போவம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஆமி கூப்பிடுது......பெட்டிபாயை கட்டடி பரிமளம்....ஊருக்கு போவம் :cool:

இப்ப பனை ஓலை பாயும் இல்லை பன் பாயும் இல்லை சாணி போட்டு மெழுகின தரையும் இல்ல மாபிளாக்கும் என்ன செய்வியள் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே மிகச் சிறந்த பதிலும், பாலியல் வல்லுறவு இனப்படுகொலை கடையாராய் அவர்கள் இடத்தில் வைப்பதற்கான முன்னேற்றப்பாடும். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிங்களவரின் பிரச்சினைகளை கையாள சிவில் அதிகாரிகள் உள்ளனர் அதற்கு மாறாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழர் விடயங்களைக் கையாள இலங்கை அரசு இராணுவத்தை பயன்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு முழுமையான அத்தாட்சி.  சமாதானம் பேச்சுவார்த்தை என்று புலிகளை அழைத்து பின் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிரிகள் வன்னியில் ஊடுருவி அழிவுகளை ஏற்படுத்தி போரை வென்றதுபோல் வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர் மத்தியில் உள்ள அமைப்புகளுள் ஊடுருவும் திட்டத்தை இராணுவம் போடுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஆமி கூப்பிடுது......பெட்டிபாயை கட்டடி பரிமளம்....ஊருக்கு போவம் :cool:

பிரதம‌ரும் கூப்பிடுறார் அண்னோய்....எல்லோருக்கும் எவ்வளவு பாசம் என்று பாருங்கோ
கோத்தா கூப்பிட்டால் தான் நான் போவேன்...tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கொலிடே போனவை சிலர் உவரோட மீற்றிங் வைச்ச படம் வந்திச்சே.

முன்னாள்.. இன்னாள்.. ஒட்டுக்குழுக்கள்.. காட்டிக்கொடுத்தோர் எல்லாரும் தானே அசைலம் அடிச்சிட்டு.. இப்ப வெளிநாட்டுப் பாஸ்போட்டோட இருக்கினம். எல்லாரும் டயஸ்போரா தானே.... அது தான் சிங்கள ஆமிக்காரன்.. அழைச்சு புட்டி.. குட்டின்னு.. காட்டிறானாக்கும்.  எலும்பு பொறுக்கிகள் கிடைக்காமலா போகும். ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.