Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு இரண்டு ரோந்து படகுகளை வழங்கியது ஜப்பான்!

Featured Replies

இலங்கைக்கு இரண்டு ரோந்து படகுகளை வழங்கியது ஜப்பான்!

 

watermark-2-7-720x450.jpg

ஜப்பானிய அரசாங்கத்தின் மானிய உதவித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஜப்பான் அன்பளிப்புச் செய்துள்ள 1.8 பில்லியன் யென் ( 2.6 பில்லியன் இலங்கை ரூபா) பெறுமதியிலான இரண்டு ரோந்துப் படகுகளும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று(புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.

சுதந்திரமானதும் , திறந்ததும், ஸ்திரமானதும் மற்றும் சுபீட்சம் நிறைந்ததுமாக, இந்து – பசுபிக் சமுத்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இலங்கைக்கு இந்த கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ரோந்துப் படகுகளுக்கு எஸ்எல்சிஜிஎஸ் சமுத்திர ரக்ஷா மற்றும் எஸ்எல்சிஜிஎஸ் சாம ரக்ஷா என இலங்கை கடற்படை பெயர் சூட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

watermark-1-6.jpg

watermark-3-7.jpg

watermark-4-5.jpg

watermark-5-5.jpg

watermark-16.jpg

http://athavannews.com/இலங்கைக்கு-இரண்டு-ரோந்து/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிலை ஒரு செத்தவீடு நடந்தால் அக்கம் பக்கத்து ஆக்கள் எல்லாரும் எட்டு முடியும் மட்டும் மூண்டு நேர சாப்பாடு குடுப்பினம்.
அது மாதிரி......
 இந்தியா கப்பல் குடுக்குது....

அதைப்பார்த்து சீனா குடுக்குது

அமெரிக்கா குடுக்குது

பாக்கிஸ்தான் குடுக்குது

ஐரோப்பா குடுக்குது

இங்கிலாந்து குடுக்குது  

சப்பான் குடுக்குது.....

மாலைதீவு இன்னும் குடுக்கேல்லை....

யோவ் மாலைதீவு ஒரு கட்டுமரமாவது குடுத்து மானத்தை காப்பாத்தையா...:(
 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 

ஊரிலைரு செத்தவீடு நடந்தால் அக்கம் பக்கத்து ஆக்கள் எல்லாரும் எட்டு முடியும் மட்டும் மூண்டு நேர சாப்பாடு குடுப்பினம்.

 

குமாரசாமி, எட்டு முடிந்த பிறகு எட்டிப் பார்க்கவும் ஆட்கள் இல்லை என்பதும் உண்மைதானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Kavi arunasalam said:

குமாரசாமி, எட்டு முடிந்த பிறகு எட்டிப் பார்க்கவும் ஆட்கள் இல்லை என்பதும் உண்மைதானே?

நோர்மலாய் எட்டுச்செலவு தமிழர் தரப்புக்குதான் நடக்கோணும். வீடு மாறிப்போய் செலவு செய்யினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்தலைமை நாடுகளின் தமிழின அழிப்பின் எச்சசொச்சம் இப்படித் தொடர்கிறது. தங்களின் மேலாதிக்க நலனை கருத்தில் கொண்டு. அவ்வளவே. அதில் சிங்களம் நன்கு குளிர்காய்ந்து கொள்கிறது. எம்மவர்கள் சாணக்கிய அரசியல் செய்யுறம் என்ற போர்வையில்..  இன நல்லிணக்கம் பேசி சொந்த இனத்தையும் நிலத்தையும் காட்டிக்கொடுத்தும்.. பறிகொடுத்துக் கொண்டும் இருக்கின்றனர் அவ்வளவே. ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவங்கள்......கழிச்சு  விடுகிற பிள்ளையளுக்குப்.....பேர் வைக்கிறதில மட்டும்.....சிங்களவன் கெட்டிக்காரன் தான்!

7 hours ago, குமாரசாமி said:

இந்தியா கப்பல் குடுக்குது....

அதைப்பார்த்து சீனா குடுக்குது

அமெரிக்கா குடுக்குது

பாக்கிஸ்தான் குடுக்குது

ஐரோப்பா குடுக்குது

இங்கிலாந்து குடுக்குது  

சப்பான் குடுக்குது.....

உலகிலுள்ள மோசமான அரச பயங்கரவாதிகள் இவர்கள்தான்! 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஊரிலை ஒரு செத்தவீடு நடந்தால் அக்கம் பக்கத்து ஆக்கள் எல்லாரும் எட்டு முடியும் மட்டும் மூண்டு நேர சாப்பாடு குடுப்பினம்.
அது மாதிரி......
 இந்தியா கப்பல் குடுக்குது....

அதைப்பார்த்து சீனா குடுக்குது

அமெரிக்கா குடுக்குது

பாக்கிஸ்தான் குடுக்குது

ஐரோப்பா குடுக்குது

இங்கிலாந்து குடுக்குது  

சப்பான் குடுக்குது.....

மாலைதீவு இன்னும் குடுக்கேல்லை....

யோவ் மாலைதீவு ஒரு கட்டுமரமாவது குடுத்து மானத்தை காப்பாத்தையா...:(
 

தோழர் .. ஒரு வேளை வல்லரசு  மாலதீவு இலங்கைக்கு எதிரி நாடாக இருக்குமோ ? அதை எதிர்ப்பதற்கு இவையள் உதவி

செய்கினமா ? ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் .. ஒரு வேளை வல்லரசு  மாலதீவு இலங்கைக்கு எதிரி நாடாக இருக்குமோ ? அதை எதிர்ப்பதற்கு இவையள் உதவி

செய்கினமா ? ?

நியாயமான கேள்விதான்.?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன, இலங்கையைச் சுத்தி சீனா தனது கடற்பாதையை பலப்படுத்துவதால், சீனாவிற்குப் பயப்படும் அமெரிக்கா, இந்தியா , ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கைக்கந்தமது போர்க்கப்பல்களை போட்டிபோட்டுக்கொண்டு வழங்கியவுடன் உடனேயே இலங்கை இவையெல்லாவற்றையும் கொண்டு சீனாவுக்கெதிராக போர்தொடுக்கப்போகிறதா?

இன்று இலங்கைராஜதந்திரத்தில் மிகவும் முன்னேறிவிட்டது. தமிழர்களுக்கென்று உதவுவதாக நினைத்துக்கொண்டு ஏதேதொவெல்லாம் செய்த இந்தியாவைக் கொண்டே தமிழர்களை அழித்தது, இந்தியாவைப் பாவித்தெ ஐ. நா சபை, சர்வதேசம் ஆகியவற்றை தனது இனக்கொலை முடியுமட்டும் வசலிற்கு வெளியே வைத்திருந்தது. தமிழருக்கெதிரான சோனியாவின் காழ்ப்புணர்ச்சியைப் பாவித்தே அவரின் அணுசரணையுடன் சீனாவையும், பாக்கிஸ்த்தானையும் இலங்கைக்குள் நன்கு ஊடுருவ வைத்தது. இன்று தமிழர்களை முற்றான இனக்கொலை மற்றும் போர்க்குற்றங்களினூடு அழித்துவிட்டு, அதற்குச் சன்மானமாக சர்வதேசத்தையுமே தனக்குப் பணிவிடை செய்யும் அள்விற்குப் பாவிக்கிறது.

இலங்கைக்குச் சீனாவின் பலமும் வேண்டும், இந்தியாவின் கவசமும் வேண்டும், அமெரிக்காவின் ஆதரவும் வேண்டும். அவர்களின் சாணக்கியத்தில் இவை எல்லாமுமே அவர்களுக்குக் கிடைக்கின்றன. வேறு என்ன வேண்டும் ??!!

இப்போதாவது புரிகிறதா சிங்களவர்களின் ராஜதந்திரம் !!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

யோவ் மாலைதீவு ஒரு கட்டுமரமாவது குடுத்து மானத்தை காப்பாத்தையா...:(
 

நீங்க ஒன்னு.. தமிழின படுகொலை..மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது புகழ் சுப்பிரமணியம் சுவாமி.. அண்மையில்.. ஹந்தியா மாலைதீவு வல்லரசு மீது போர் தொடுக்க வேண்டும் என்று ருவிட்டரில் அறைகூவல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் மாலைதீவு வல்லரசு.. கப்பலை தூக்கி சும்மா கொடுக்கேலுமோ..??! ?

8 minutes ago, nedukkalapoovan said:

தமிழின படுகொலை..மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது புகழ் சுப்பிரமணியம் சுவாமி..

திருடர்கள் திருடர்களுடன் கூட்டு வைப்பதுவும்
போதைப்பொருள் வியாபாரிகள் போதைப்பொருள் வியாபாரிகளுடன் கூட்டு வைப்பதுவும்
கொலைகாரர்கள் கொலைகாரர்களுடன் கூட்டு வைப்பதுவும்
கொள்ளைக்காரர்கள் கொள்ளைக்காரர்களுடன் கூட்டு வைப்பதுவும்
சர்வசாதாரணம் என்ற வகையில்
இரண்டு இரண்டு அயோக்கியர்களும் கூட்டு வைத்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.