Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`சுசி கணேசனிடம் லீனா என்ன பாடுபட்டிருப்பார் என்பதை அறிவேன்!’ - அமலா பால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இயக்குநர் சுசி கணேசன் மீதான கவிஞர் லீனா மணிமேகலையின் #metoo புகாருக்கு நடிகை அமலா பால் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார். சில நாள்களாகத் தொடர்ந்து வரும் #metoo புகார்கள், தமிழில் பல பிரபலங்களை குறிவைத்த நிலையில், கவிஞர் லீனா மணிமேகலை #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் 2005-ம் ஆண்டு தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தைப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் கத்தியைக்காட்டி தான் அவரிடமிருந்து தப்பித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

லீனா
 

அதற்கு, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்த சுசி கணேசன், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், லீனா மணிமேகலை தன் மீது பொய்க் குற்றச்சாட்டு கூறுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஏற்கெனவே சுசிகணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

 

இந்நிலையில், நடிகை அமலா பால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

அதில் அவர் ``சுசி கணேசன் இயக்கிய திருட்டுப் பயலே படத்தில் நான் கதாநாயகியாக இருந்தாலும், இயக்குநர் சுசி கணேசனின் இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் அளிக்கும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை எனப் பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடு பட்டிருப்பார் என நான் அறிகிறேன் " என இவ்வாறு அவர் பதிவில் சொல்லியிருக்கிறார். 

 

லீனா

இதற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த லீனா மணிமேகலை, தமிழ் மொழிபெயர்ப்பு பதிவில் சில தவறுகள் இருப்பதாகவும், தான் சுசி கணேசனிடம் உதவியாளராகப் பணியாற்றவில்லை எனவும், 2005 ல் அவரைச் சந்திக்கும் போதுதான் தொலைக்காட்சி தொகுப்பாளராகப் பணியாற்றினேன் எனவும்.உங்களுக்கு நிகழ்ந்த கஷ்டத்துக்கு வருந்துகிறேன், என் குரலுக்கு வலு சேர்க்கும் உங்கள் ஆதரவுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/140563-amala-paul-in-support-of-leena-manimegalai-against-susi-ganesan.html

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில என் செல்லத்துடனும் சேட்டை விட்டிருக்கினம். பாவம் பால்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில என் செல்லத்துடனும் சேட்டை விட்டிருக்கினம். பாவம் பால்.

ஆகா... செல்லம் எண்டால் ஏன் விஜய் தள்ளிக்கொண்டு போக விட்டீர்கள் ?  

1 minute ago, Nathamuni said:

ஆகா... செல்லம் எண்டால் ஏன் விஜய் தள்ளிக்கொண்டு போக விட்டீர்கள் ?  

இப்படி எல்லாம் எடக்கு மடக்காக கேட்டு நிழலியை அழ வைக்க கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இப்படி எல்லாம் எடக்கு மடக்காக கேட்டு நிழலியை அழ வைக்க கூடாது

மலையாளத்து வல்லிய குட்டி ஆக்கும்... :grin:

லà¯à®©à®¾

எட்டிப் பார்க்கிற பார்வை, உங்களை தேடுற மாதிரி கிடக்குது நிழலி!!! ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DqRYjVYUUAAUHuP.jpg:large

 

  • கருத்துக்கள உறவுகள்

பன்மடங்கு விளைவு ஏற்படும்: ஆண்களுக்கு ஓவியா எச்சரிக்கை!

1540483851-3155.jpg

பிக்பாஸ் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியாதான். பிக்பாஸ் இன்னும் எத்தனை பாகங்கள் வந்தாலும் மீண்டும் ஒரு ஓவியாவை பார்க்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை

இந்த நிலையில் தற்போது பரபரப்பாக மீடூ விவகாரம் பரவி வரும் நிலையில் ஆண்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் ஒரு கருத்தை ஓவியா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த கருத்து  நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு என்பவரின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியா கூறிய கருத்து இதுதான்:

பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களிடம் எதை கொடுத்தாலும் அதை பன்மடங்காக திருப்பி பெறலாம். ஒரு பெண்ணிடம் உயிரணுவை கொடுத்தால் அழகான குழந்தை கிடைக்கும். ஒரு வீட்டை கொடுத்தால் ஒரு சிறந்த இல்லம் கிடைக்கும்.

மளிகைப் பொருட்களை கொடுத்தால் ருசியான சாப்பாடு கிடைக்கும். புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள்.

ஆனால் அதே நேரத்தில் அவளுக்கு மோசமாக ஏதாவது நீங்கள் கொடுத்தால் அதன் விளைவு பன்மடங்காக இருக்கும். அதனை நீங்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

http://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/oviya-warned-to-men-in-twitter-118102500099_1.html

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பன்மடங்கு விளைவு ஏற்படும்: ஆண்களுக்கு ஓவியா எச்சரிக்கை!

1540483851-3155.jpg

பிக்பாஸ் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியாதான். பிக்பாஸ் இன்னும் எத்தனை பாகங்கள் வந்தாலும் மீண்டும் ஒரு ஓவியாவை பார்க்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை

இந்த நிலையில் தற்போது பரபரப்பாக மீடூ விவகாரம் பரவி வரும் நிலையில் ஆண்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் ஒரு கருத்தை ஓவியா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த கருத்து  நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு என்பவரின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியா கூறிய கருத்து இதுதான்:

பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களிடம் எதை கொடுத்தாலும் அதை பன்மடங்காக திருப்பி பெறலாம். ஒரு பெண்ணிடம் உயிரணுவை கொடுத்தால் அழகான குழந்தை கிடைக்கும். ஒரு வீட்டை கொடுத்தால் ஒரு சிறந்த இல்லம் கிடைக்கும்.

மளிகைப் பொருட்களை கொடுத்தால் ருசியான சாப்பாடு கிடைக்கும். புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள்.

ஆனால் அதே நேரத்தில் அவளுக்கு மோசமாக ஏதாவது நீங்கள் கொடுத்தால் அதன் விளைவு பன்மடங்காக இருக்கும். அதனை நீங்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

http://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/oviya-warned-to-men-in-twitter-118102500099_1.html

எல்லாம் சரி....ஓவியா!

ஒரு பெண்ணிடம் பணத்தைக் கொடுத்தால்.....எத்தனை மடங்காகத் திரும்பி வரும்??

 

அழகையும் உடலையும் அடிப்படை மூலதனமாக கொண்டு பணம் சம்பாதிக்கும்  இவர்கள் சாதார பெண்கள அன்றாட வாழ்வில் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான போராட்ட குரலாக ஒருபோதும் இருக்க முடியாது. தேவைப்படும் நேரம்  அனுசரித்து பணம் பார்ப்பது பின்னர் அவமானப்படுத்துவேன் என்று பணம் பார்ப்பது என ஏராளமான  உள்நோக்கங்கள் கொண்டது இந்த சர்ச்சைகள். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் 3 விதமானவர்கள் இருக்கிறார்கள்....தாங்கள் விரும்பியவர்களுடன் தாங்களாவே போய் படுப்பது,சினிமாவில் பிரபல்யமாவதற்கும்,காசு உழைப்பதற்காவும் அனுசரித்துக் கொள்வது,  கடைசி வகையினர் பாலியல் தேவைகளுக்காக  மற்றவர்களால் நிர்பந்திக்கப்படுபவர்கள் .

கட்டின மனைவியாய் இருந்தாலும் அவரது விருப்பம் இல்லாமல் தொட முடியாது...ஒரு பெண் எத்தனை பேரோடு படுத்திருந்தாலும் அவரது விருப்பம் இல்லாமல் தொட்டால் அது  பாலியல் அத்து மீறல் தான் 



 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.