Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில்... பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைதான போராளியின் கைத்தொலைபேசியில் உயிரிழந்த பொலிஸின் படம்?: புதிய கோணத்தில் விசாரணை!

December 3, 2018
2-10.jpg

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதில் கொல்லப்பட்ட தமிழ் பொலிஸ் காதலியும் உள்ளடங்குகிறார்.

இவர்களில் இருவர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதுடன் பல கோணங்களில் புலனாய்வு பிரிவு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வியாழக்கிழமை (29) நள்ளிரவு கடமையில் இருந்த பொலிஸார் இருவர் இனந் தெரியாதோரால் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகியும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவத்தை அடுத்து பொலிஸ் மா அதிபர் குறித்த இடத்திற்கு சென்றதுடன், 7 பேர் கொண்ட விசேட புலனாய்வு பிரிவு குழுவை கொழும்பில் நியமித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க. பிரபாகரன் அதன் உறுப்பினர் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சி உறுப்பினர் உட்பட முன்னாள் போராளிகள் மற்றும் பெண்கள் உட்பட 20 பேரை மட்டக்களப்பு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரவு காரியாலயத்துக்கு அழைத்து சென்று வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அஜந்தன் என்பவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட இராசநாயகம் சர்வானந்தம் அங்கிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

இதேவேளை, மட்டக்களப்பு உயர்பொலிஸ் அதிகாரியொருவர் தமிழ்பக்கத்திடம் தந்த தகவல்படி, கொல்லப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் புகைப்படம், கைதாகியுள்ள முன்னாள் போராளியொருவரின் கைத்தொலைபேசியில் சேமிக்கப்பட்டிருந்தது. பொலிஸ் உத்தியோகத்தரின் முகப்புத்தகத்தில் இருந்து அந்த படம் சில வாரங்களின் முன்னர் பதிவிறக்கப்பட்டிருக்கலாமென பொலிசார் கருதுகிறார்கள்.

ஒரு காதல் விவகாரத்தால் இந்த படம் அவரிடம் வந்ததா?, அந்த விவகாரத்தால் கொலை இடம்பெற்றதா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள். எனினும், உத்தியோகபூர்வகமாக பொலிசார் இது பற்றி பேச மறுத்து விட்டனர்.

இதேவேளை, இன்று வவுணதீவை அண்டிய பகுதிகளில் இராணுவம், விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொண்டுள்ளனர். வீதிச்சோதனைகள் ஏற்படுத்தப்பட்டு, ஆட்களின் அடையாளத்தை உறுதிசெய்யும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

 

http://www.pagetamil.com/26659/

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Arrested-720x450.png

வவுணத்தீவு பொலிஸார் கொலை: மற்றுமொறு சந்தேகநபர் கைது

வவுணத்தீவு பொலிஸார் கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொறு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர், மட்டக்களப்பு பகுதியில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தவகையில் கைது செய்யப்பட்டவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவு உறுப்பினர் எனவும் அவரது பெயர் அஜந்தன் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து  கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேகநபரை தடுப்பு காவலில் வைத்து, விசாரணையை ஆரம்பித்துள்ளதாக வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஒருவரென பொலிஸார் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வவுணத்தீவு-பொலிஸார்-கொலை/

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

பொலிஸ் உத்தியோகத்தரின் முகப்புத்தகத்தில் இருந்து அந்த படம் சில வாரங்களின் முன்னர் பதிவிறக்கப்பட்டிருக்கலாமென பொலிசார் கருதுகிறார்கள்.

மாவீரர் தினம் நடத்தவிடவில்லை என்பதால்  கொன்றேன் என்று சரணடைந்த முன்னாள் பேராளி சொன்னதாக சொன்னார்கள் 
இப்போ சில வாரங்களுக்கு முன் பதிவிறக்கியிருந்தால்  முதலிலேயே மாவீரர் தினம் நடத்த விடமாட்டார்கள் என்று இவருக்கு எப்படி  தெரிந்தது.
ஒன்றும் நம்புற மாதிரியில்லையே , ரதி அக்கியோட அண்ணன் திரும்ப ஆரம்பிச்சிட்டார், போதாக்குறைக்கு நோர்வேயில் இருக்கும் பொட்டுஅம்மானும் 
தேவைப்படுகிறாராமில்ல...  

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினம் கொண்டாட விடப்படாமைக்காக பொலிஸார் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றால் நம்பும்படியாக இல்லை. ஏனென்றால், இன்றுவரை அரசும், பொலிஸூம் மாவீரர் தினம் கொண்டாடப்படுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாவற்றையும் மீறித்தான் இம்முறை மாவீரர் நிகழ்வு இடம்பெற்றது. இப்படியிருக்க முன்னாள்ப் புலிகள் இவர்களைக் கொன்றார்கள் என்பது நம்பும்படியாக இல்லை.

இச்சம்பவமும் சில மாதங்களுக்கு முன்னர் முச்சக்கரவண்டியில் கிளேமோர் அகப்பட்ட சம்பவமும், மகிந்த காலத்தில் கொக்கிளாய்ச் சம்பவமும் ஒரேமாதிரியானவை. ராணுவ பிரசன்னத்தை, ராணுவக் கெடுபிடியை, ராணுவ ஆக்கிரமிப்பை தொடர்ந்தும் வட கிழக்கில் நிலைப்படுத்த சிங்களப் பேரினவாதம் செய்யும் வேலை இது. இதன் ஒரு படிதான் ராணுவத் துணைக்குழுவின் தலைவர் முரளீதரன் அண்மையில் வெளியிட்டுள்ள பொட்டம்மானின் இருப்புப் பற்றியும் புலிகளின் மீளுருவாக்கம் பற்றிய செய்தியும்.

சிங்களப் பேரினவாதம் தனது ஆக்கிரமிப்பினை தொடர்ந்தும் கொண்டுநடத்த புலிகளை உயிர்ப்பிக்கிறது. ராணுவத் துணைக்குழு ஒத்தூதுகிறது. அந்த வகையில், இந்தக் கொலைகள் கூட முரளீதரன் தலைமையிலான துணைக்குழுவின் கைங்கரியமாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சில பிரிவுகளுக்குள் உளவு வேலைக்கு ஸ்ரீலங்கா ராணுவத்தால் அனுப்ப பட்டவர்கள் முதலில் காவலுக்கு நின்ற ஸ்ரீலங்கா அடிமட்ட ராணுவத்தினரைபோட்டு தள்ளிக்கொண்டு அவர்களின் ஆயுதங்களுடன் புலிகளிடம் சரணடைந்து பின்பு புலிகளின் பொறுப்பாளர்களின் நம்பிக்கையையும் பெற்று கடைசி சண்டையில் அந்த முக்கிய பொறுப்பாளர்களையே போட்டு தள்ளின கதையும் இருக்கு . இந்த இரண்டு பொலிசாரின் கதையும் இடறுது பொறுத்து இருந்து பார்ப்பம் .

(தனக்கு மூக்கு போனாலும் காரியம் ஆகணும் என்பதில் சிங்களம் விடாப்பிடி கொண்டது )

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2018 at 9:03 PM, nedukkalapoovan said:

எதிர் காலத்தில் தமிழ் மக்களை இராணுவ ரீதியில் தொடர் அச்சுறுத்தலின் கீழ் வைச்சிருக்கவும்... மாவீரர் தினம் போன்ற கடந்த காலத்தை நினைக்க வைத்து..  இன எழுச்சி கொள்ள நினைக்கும் நிகழ்வுகளை கட்டுப்படுத்தவும்.. சிங்கள.. பேரினவாதிகளும்.. அவர்களின் தமிழ், முஸ்லீம் கைக்கூலிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கையே இதுவாகும்

 

On 12/3/2018 at 3:43 AM, ஈழப்பிரியன் said:

புலிகள் வந்துவிட்டார்கள் என்று சிங்கள மக்களுக்கு காட்டி அவர்களின் ஆதரவைப் பெற மகிந்த ஆடிய நாடகத்தில் அநியாயமாக இரு பொலிசாரும் கஸ்டத்திலிருக்கும் இரு தமிழர்களும் பலிக்கடாவாக்கப் பட்டிருக்கிறார்கள்.

அவசர அவசரமாக பொலிசாரைச் சுட்டு சுட்டவர்களைப் பிடித்துவிட்டோம் இது புலிகள் மீள்கிறார்கள் எனும் போது எந்தச் சிங்களவனும் மகிந்த தான் இதற்கு சரியான ஆள் என்று அவர் பக்கமே சாய்வதற்கான சந்தர்ப்பமே உள்ளது.

அதுவேதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.