Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரெக்ஸிட்: பரபரப்பான சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
தெரீசா மேபடத்தின் காப்புரிமை Reuters

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே புதன்கிழமை மாலையில் (ஜிஎம்டி நேரம்) தனது தலைமை மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை எதிர்கொள்ள இருக்கிறார்.

 

பிரதமர் மே-யின் அணியில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி அடைய முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது,

அமைச்சரவையின் எல்லா முக்கிய உறுப்பினர்களும் பிரதமர் தெரீசா மே-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 172 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளதாக பிபிசி கணக்கிட்டுள்ளது.

 

ஆனால், இது ரகசிய வாக்கெடுப்பு என்பதால், வெளியில் ஆதரவு தெரிவித்துவிட்டு, தனியாக இன்னொரு விதமாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் தெரீசா மே-க்கு எதிராக யார் போட்டி போடுவது என்பதில், எதிரணியினர் பிளவுண்டு இருப்பதாக தெரிகிறது,

பிரதமரின் இல்லமான 10 டவுனிங் ஸ்டீரிட்டில் இருந்து வெளியான அறிக்கையில், தன்னுடைய முழு பலத்தோடு இந்த போட்டியை எதிர்கொள்ள போவதாக தெரீசா மே கூறியுள்ளார்.

புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டால் 2019ம் ஆண்டு மார்ச் 29ம் தேதிக்குள் பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றுகின்ற பொறிமுறையான 50வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதன் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டியிருக்கும் என்று தெரீசா மே கூறியுள்ளார்.

இதனால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தாமதமாகும் அல்லது நிறுத்தப்படும் என்று தெரீசா மே கூறியுள்ளார்.

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜிஎம்டி நேரப்படி மாலை 6 முதல் 8 மணிக்குள் இந்த வாக்கெடுப்பில் வாக்கு செலுத்தவுள்ளனர்.

ஐரோப்பிய தலைவர்களுடன் தெரீசா மே பேச்சுவார்த்தைபடத்தின் காப்புரிமை AFP

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரை மாற்றுவது நாட்டின் எதிர்காலத்தை ஆபத்திற்குள்ளாக்கும், பிரிட்டனால் தாங்கி கொள்ள முடியாத ஸ்திரமின்மையை உருவாக்கும் என்றும் பிரதமர் மே கூறியுள்ளார்.

பிரதமர் தெரீசா மே மீதான இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திப்பதற்கு தேவையான 48 கடிதங்களை பெற்ற பின்னர், பிரதமர் பதவிக்கு இந்த சவால் எழுந்துள்ளது.

2016ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை முடிவு செய்ய நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிட்டனில் பெரும்பாலான மக்கள் ஆதரவாக வாக்களித்ததை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின்போது தெரீசா மே பிரதமராக பதவியேற்றார்.

அதன் பின்னர் அவர் நடத்திய பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையால் அவரது கட்சிக்குள்ளேயே தெரீசா மே விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

ரகசியமாக நடத்தப்படும் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் எவ்வளவு விரைவாக அறிவிக்கப்படும் என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் பிரதமர் தெரீசா மே இதில் வெற்றிபெற வேண்டுமென்றால், பெரும்பான்மையான வாக்குகளை பெற்றாக வேண்டும்.

இவ்வாறு தெரீசா மே பெரும்பான்மை பெற்றுவிட்டால், இன்னும் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது.

வரைபட விளக்கம்

தெரீசா மே இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெறாவிட்டால், கன்சர்வேட்டிவ் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறும். ஆனால், இதில் தெரீசா மே போட்டியிட முடியாது.

தெரீசா மே ஒட்டுமொத்தமாக இல்லாமல் சிறிய பெரும்பான்மையில் வென்றுவிட்டால், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்யலாம்.

கன்சர்வேட்டிவ் கட்சி பிரிட்டன் பிரதிநிதிகள் அவையில் மிக பெரிய கட்சியாக இருப்பதால் இதன் தலைவராக இருப்பவர் பிரதமராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதே இதற்கு காரணமாகும்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரீசா மே தோற்றுவிட்டால், ஆறு வார நடைமுறையில் கட்சி உறுப்பினர்களால் புதிய தலைவர் தேர்தெடுக்கப்படும் வரை தற்காலிக பிரதமராக தெரீசா மே நீடிப்பார்.

இந்த கட்சியில் பலர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், கட்சி உறுப்பினர்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தொடர் வாக்கெடுப்புகளை கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்துவர்.

https://www.bbc.com/tamil/global-46538632

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த வரைக்கும் இவர் ஒரு ஆளுமை மிக்க பெண். இப்போது யாரும் பிரதமராக வர விரும்ப மாட்டார்கள். ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிய இவர் சமர்ப்பித்த வரைபை எதிப்பவர்கள் தாங்கள் ஒரு தீர்வும் சொல்லாமல் நழுவுகிறார்கள். இலங்கையில் நடப்பதுக்கு எதிர்மாறாக இங்கு நடக்கிறது. அங்கு ஒரு கதிரைக்கு இருவர் சண்டை. இங்கு ஆளை விட்டால் காணும் என்று ஒதுங்குகிறார்கள். மொத்தத்தில் குழப்பம்தான். 

சென்ற மாதம் ஜெர்மனிக்கு  காரில் போய் விட்டு வந்தோம். இனிமேல் விசாவுக்கு வரிசையில் நிக்க வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

என்னை பொறுத்த வரைக்கும் இவர் ஒரு ஆளுமை மிக்க பெண். இப்போது யாரும் பிரதமராக வர விரும்ப மாட்டார்கள். ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிய இவர் சமர்ப்பித்த வரைபை எதிப்பவர்கள் தாங்கள் ஒரு தீர்வும் சொல்லாமல் நழுவுகிறார்கள். இலங்கையில் நடப்பதுக்கு எதிர்மாறாக இங்கு நடக்கிறது. அங்கு ஒரு கதிரைக்கு இருவர் சண்டை. இங்கு ஆளை விட்டால் காணும் என்று ஒதுங்குகிறார்கள். மொத்தத்தில் குழப்பம்தான். 

சென்ற மாதம் ஜெர்மனிக்கு  காரில் போய் விட்டு வந்தோம். இனிமேல் விசாவுக்கு வரிசையில் நிக்க வேண்டி வரும்.

இதனால் பிரித்தானியாவுக்கு  நன்மையா அல்லது    தீமையா   எதுவும் புரிவதில்லை, ஆனால் ஒவ்வொரு தடவையும் வரும் செய்திகளிற்கு பணச்சந்தையில் பவுண்ஸ் மேலேறுவது கீழிறங்குவதாகவே இருக்கின்றதனாலும் அதனுடன் நாணயப்பரிமாற்ற விகித நளுவல் மிகவும் அதிகமாக அனைத்து பவுண்ஸ் இணைகளில் காணப்படுகிறதனால் பவுண்ஸ் இணைகளில் ஒதுங்கியிருப்பது நன்று.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, vasee said:

இதனால் பிரித்தானியாவுக்கு  நன்மையா அல்லது    தீமையா   எதுவும் புரிவதில்லை, 

பிரிவதால் பொருளாதாரத்தில்  பிரித்தானியாவுக்கும் பவுணுக்கும் வீழ்ச்சிதான் ஏற்படும். லண்டனில் வீடுகளின் பெறுமதி 1/3 பங்கால் விழும் என்று எதிர் பார்க்கப் படுகிறது (ஒரு உடன்படிக்கையும் இல்லை என்றால்). ஐரோப்பாவுடன் சேர்ந்து இருப்பதால் தங்கள் அடையாளத்தையும், சில  உரிமைகளையும் இழப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.அநேகமான  பெரும் பணக்காரர்கள், பல அரசியல் வாதிகள் உட்பட, ஐரோப்பாவுடன் சேர்ந்து இருப்பதையே விரும்புகிறார்கள். முதலீட்டு சந்தையை இழக்க விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

பிரிவதால் பொருளாதாரத்தில்  பிரித்தானியாவுக்கும் பவுணுக்கும் வீழ்ச்சிதான் ஏற்படும். லண்டனில் வீடுகளின் பெறுமதி 1/3 பங்கால் விழும் என்று எதிர் பார்க்கப் படுகிறது (ஒரு உடன்படிக்கையும் இல்லை என்றால்). ஐரோப்பாவுடன் சேர்ந்து இருப்பதால் தங்கள் அடையாளத்தையும், சில  உரிமைகளையும் இழப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.அநேகமான  பெரும் பணக்காரர்கள், பல அரசியல் வாதிகள் உட்பட, ஐரோப்பாவுடன் சேர்ந்து இருப்பதையே விரும்புகிறார்கள். முதலீட்டு சந்தையை இழக்க விரும்பவில்லை.

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎12‎/‎2018 at 8:01 PM, Ahasthiyan said:

என்னை பொறுத்த வரைக்கும் இவர் ஒரு ஆளுமை மிக்க பெண். இப்போது யாரும் பிரதமராக வர விரும்ப மாட்டார்கள். ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிய இவர் சமர்ப்பித்த வரைபை எதிப்பவர்கள் தாங்கள் ஒரு தீர்வும் சொல்லாமல் நழுவுகிறார்கள். இலங்கையில் நடப்பதுக்கு எதிர்மாறாக இங்கு நடக்கிறது. அங்கு ஒரு கதிரைக்கு இருவர் சண்டை. இங்கு ஆளை விட்டால் காணும் என்று ஒதுங்குகிறார்கள். மொத்தத்தில் குழப்பம்தான். 

சென்ற மாதம் ஜெர்மனிக்கு  காரில் போய் விட்டு வந்தோம். இனிமேல் விசாவுக்கு வரிசையில் நிக்க வேண்டி வரும்.

நான் இலங்கை பாஸ்போட் தான் இன்னும் வைச்சு இருக்கன்...ஒவ்வொரு முறைரும் விசா எடுக்கப் போவது என்டால் விசர் வரும்,,, இப்ப பிரிட்டிஷ் பாஸ்போட்க்காரரும் விசா எடுக்கோணும் என்று நினைக்க சந்தோசமாய்  இருக்கு.🙂

அரசியே இனிமேல் விசா எடுத்து தான் எங்கேயும் போகணும் 
 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நான் இலங்கை பாஸ்போட் தான் இன்னும் வைச்சு இருக்கன்...ஒவ்வொரு முறைரும் விசா எடுக்கப் போவது என்டால் விசர் வரும்,,, இப்ப பிரிட்டிஷ் பாஸ்போட்க்காரரும் விசா எடுக்கோணும் என்று நினைக்க சந்தோசமாய்  இருக்கு.🙂

அரசியே இனிமேல் விசா எடுத்து தான் எங்கேயும் போகணும் 
 

British passport ற்கு ஐரோப்பாவிற்கு நுழைவதற்கு இலங்கை passport காரர் போல் வீசா தேவையில்லை.

electronic visa waiver ற்கு விண்ணப்பம் செய்தால் போதும்

https://www.google.co.uk/amp/s/www.independent.co.uk/travel/news-and-advice/uk-europe-travel-post-brexit-fee-eu-etias-visa-waiver-a8682931.html%3famp

 

அரசிக்கு passport ஏ இல்லையே, உங்ஙகளுக்கு தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஒவ்வொரு முறைரும் விசா எடுக்கப் போவது என்டால் விசர் வரும்,,,

நாசமாப்போனது அந்தநேரமும் வந்து துளைக்குதோ  நான் நினைச்சன்  யாழில் மட்டும்தான் என்று .😄

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

British passport ற்கு ஐரோப்பாவிற்கு நுழைவதற்கு இலங்கை passport காரர் போல் வீசா தேவையில்லை.

electronic visa waiver ற்கு விண்ணப்பம் செய்தால் போதும்

https://www.google.co.uk/amp/s/www.independent.co.uk/travel/news-and-advice/uk-europe-travel-post-brexit-fee-eu-etias-visa-waiver-a8682931.html%3famp

 

அரசிக்கு passport ஏ இல்லையே, உங்ஙகளுக்கு தெரியாதா?

எனக்கும் வித்தியாசம் இருக்கும் என்று தெரியும்..உங்கள் இணைப்பிற்கு நன்றி ...அதன் மூலம் அதிகம் தெரிந்து கொண்டேன் 
 

இவ்வளவு நாளும் அரசியார் எப்படி பயணம் செய்தார் என்பதை சொல்லவில்லை...வேலையிடத்தில் ஒருவர் சொன்னார் இனி மேல் அரசி ஜரோப்பியா நாடுகளுக்கு போவது எண்டால் விசா எடுக்க வேண்டும் என அது தவறான தகவலாக இருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எனக்கும் வித்தியாசம் இருக்கும் என்று தெரியும்..உங்கள் இணைப்பிற்கு நன்றி ...அதன் மூலம் அதிகம் தெரிந்து கொண்டேன் 
 

இவ்வளவு நாளும் அரசியார் எப்படி பயணம் செய்தார் என்பதை சொல்லவில்லை...வேலையிடத்தில் ஒருவர் சொன்னார் இனி மேல் அரசி ஜரோப்பியா நாடுகளுக்கு போவது எண்டால் விசா எடுக்க வேண்டும் என அது தவறான தகவலாக இருக்கலாம் 

நன்றி, சாதாரண பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருப்பவருக்கே Visa waiver இருக்கும் போது அரசி விசாவிற்கு விண்ணப்பம் செய்வதா?

அரசி மார்ச் 29 இன் பிறகும் கடவுச்சீட்டின்றி பயணம் செய்வார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

எனக்கும் வித்தியாசம் இருக்கும் என்று தெரியும்..உங்கள் இணைப்பிற்கு நன்றி ...அதன் மூலம் அதிகம் தெரிந்து கொண்டேன் 
 

இவ்வளவு நாளும் அரசியார் எப்படி பயணம் செய்தார் என்பதை சொல்லவில்லை...வேலையிடத்தில் ஒருவர் சொன்னார் இனி மேல் அரசி ஜரோப்பியா நாடுகளுக்கு போவது எண்டால் விசா எடுக்க வேண்டும் என அது தவறான தகவலாக இருக்கலாம் 

 உங்களோடை சேர்ந்து வேலை செய்யிற அந்தத்தெய்வம்   போலந்து இல்லாட்டி ரூமேனியா ரஷ்யாவாய் இருக்குமெண்டு நான் நினைக்கிறன்...:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.