Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தமிழ்த் தலைமைகள் இரட்டை வேடம்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘தமிழ்த் தலைமைகள் இரட்டை வேடம்’

எஸ்.நிதர்ஷன் 

தமக்கு தேவையானதைப் பெற்றுக்கொ ள்வதற்காக, தமிழ்த் தலைமைகள், இரட்டை வேடமிடுவதாகக் குற்றஞ்சாட்டிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, அதனாலேயே பிரதமரின் மறப்போம் மன்னிப்போம் கருத்துத் தொடர்பாக அவர்கள் மௌனம் காப்பதாகவும் தெரிவித்தார்.

  பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் தலைமைகள்,இன்றைக்கு அந்த மக்களுக்காக அல்லாமல் அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்பட்டு வருவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார். 

கொக்குவில் பிரதேசத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (24) நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அண்மையில் வடக்குக்கு விஜயம் செய்திருந்த பிரதமர், “யுத்தக் குற்றங்களை மறப்போம் மன்னிப்போம்” எனக் கூறியுள்ளமையை நினைவுபடுத்தியதோடு, அவ்வாறான அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து வருகின்றவர்கள், இது விடயத்தில் வாய்மூடி மௌனம் காத்துவருவதாகக் குற்றஞ்சாட்டினார்.  

ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், எங்களது தமிழ்த் தலைமைகள், சரியான வழியில் இதனைக் கையாள வேண்டியது அவசியமெனவும் சுட்டிக்காட்டிய தவராசா, தற்போதைய அரசாங்கத்தின் கீழ், தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், அரசாங்கத்துக்கு கொடுக்கும் ஆதரவை நிறுத்துவதாக அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் அதனூடாகவே எமது பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கிச் செல்லமுடியும் என்றும் வலியுறுத்தினார். ஆனால், அந்த அழுத்தம் அல்லது ஒருமித்த முடிவு இல்லாவிட்டால், ஏமாற்று ஐ.நா பிரேரணையே மீண்டும் அமையக்கூடிய நிலைமையே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த அரசாங்கமும் சரி, தற்போதைய அரசாங்கமும் சரி, ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற நிலைமையே காணப்படுகின்றது என்றார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தமிழ்த்-தலைமைகள்-இரட்டை-வேடம்/175-229980

 

 

 

உண்மையில் ஈ பி டி பி கூட்டமைப்பினை காட்டிலும் சிறந்தது . அவர்கள் எப்பவுமே அரசாங்க ஆதரவு என்பதனை வெளிப்படையாக சொல்லி வாக்கு எடுத்தார்கள் . கூட்டமைப்பு மாதிரி சொல்வது ஒன்று வென்ற பின் சிங்களத்துடன் ஓட்டுவது , உண்மையில் ஒட்டுன்னிகள் இவர்கள் தான் .... 

சம்பந்தன் சுமந்திரனை காட்டிலும் டக்கிளஸ் பரவாயில்லை .....
 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பிரபாதாசன் said:

உண்மையில் ஈ பி டி பி கூட்டமைப்பினை காட்டிலும் சிறந்தது . அவர்கள் எப்பவுமே அரசாங்க ஆதரவு என்பதனை வெளிப்படையாக சொல்லி வாக்கு எடுத்தார்கள் . கூட்டமைப்பு மாதிரி சொல்வது ஒன்று வென்ற பின் சிங்களத்துடன் ஓட்டுவது , உண்மையில் ஒட்டுன்னிகள் இவர்கள் தான் .... 

சம்பந்தன் சுமந்திரனை காட்டிலும் டக்கிளஸ் பரவாயில்லை .....
 

நெல்லுக் கொடுத்த அரசனும், உமி கொடுக்கும் அரசன் மகன் கதையும் நினைவுக்கு வருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாதாசன் கூறுவதில் என்ன பிழை டக்ளஸ் அங்கயன் விஜயகலா ஆகியோர் நாங்கள் யார் எங்களுக்கு வாக்களித்தால் என்ன செய்வோம் எனக்கூறியும் அவர்களது கடந்தகால செயற்பாட்டை தமிழர்கள் மனதில்வைத்தும் வாக்குச்சேகரித்து வெற்றிபெற்று அரசாங்கங்களுடன் இணைந்து செயற்படுகிறார்கள் கூட்டமைப்பு உரிமைபெற்றுத்தருகிறோம் என எல்லாப் பண்டிகை நாளையும் நினைவுபடுத்திப்போட்டு பிள்ளைகளுக்கு மத்திய வங்கியிலும் வெளிநாட்டிலும் வாழ்கை தேடத்தானே அரசியலைப் பயன்படுத்துகிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, people standing

Image may contain: 3 people, people standing and hat

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

சுமந்திரனுக்கே அல்வாவா? இது எங்கே நடந்தது? தாயகத்தில்தானா? தாயகம் முழுவதும் சுமந்திரன் அலையென்றல்லவா எண்ணிக்கொண்டிருக்கிறேன். 

அவெருக்கெதிரான கருத்துக்களுக்கு கைதட்டல் பிரமாதமாக இருக்கிறதே??!!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

Image may contain: 4 people, people standing

Image may contain: 3 people, people standing and hat

தோழர் தலையில் அது என்ன ஐயப்ப சாமி இருமுடியா .. ? 48 நாட்கள் விரதமிருந்து செல்கிறார்களா .. ? குருசாமி யார் .. ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ragunathan said:

சுமந்திரனுக்கே அல்வாவா? இது எங்கே நடந்தது? தாயகத்தில்தானா? தாயகம் முழுவதும் சுமந்திரன் அலையென்றல்லவா எண்ணிக்கொண்டிருக்கிறேன். 

அவெருக்கெதிரான கருத்துக்களுக்கு கைதட்டல் பிரமாதமாக இருக்கிறதே??!!

யாழ் இந்துவில் 17/18 இல் நடந்த நிகழ்வில்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைமைகள் இனி மாறுவேடத்தில் தான் நடமாடவேணும்!

  • கருத்துக்கள உறவுகள்
On 2/26/2019 at 11:48 AM, ragunathan said:

சுமந்திரனுக்கே அல்வாவா? இது எங்கே நடந்தது? தாயகத்தில்தானா? தாயகம் முழுவதும் சுமந்திரன் அலையென்றல்லவா எண்ணிக்கொண்டிருக்கிறேன். 

அவெருக்கெதிரான கருத்துக்களுக்கு கைதட்டல் பிரமாதமாக இருக்கிறதே??!!

இது 2017ல் கொழும்பில் நடந்த விவாத நிகழ்ச்சி, பங்குபற்றிய பாடசாலைகள் யாழ் இந்து கல்லூரி எதிர் பம்பலபிட்டி இந்து கல்லூரி.
த.தே.கூ வை கேள்வி கேட்பது யாழ் இந்து என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

53419652_1210523909125751_72536380370562

 

52637345_1210523875792421_85293609072879

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தை... பார்க்கவே...... அருவருப்பாக உள்ளது.😖

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.