Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கால அவகாசம் வழங்கப்படவில்லை ; தவறான கருத்துக்களை பரப்ப கூடாது ; ஜெனிவாவில் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)   

இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது. இதுவே  ஜெனிவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக கால அவகாசம் வழங்கப்பட்டமை என்பது தவறான விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்தின் ஜெனிவாவில் தெரவித்துள்ளார்.

sumanthiran.jpg

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 40 அவது கூட்டத்தொடரானது ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றைய தினம் இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் உரையாற்றியமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/52213

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிழம்பு said:

இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது

இதுக்கு பெயர் என்ன என்று யாருக்காவது தெரியுமோ?

35 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுக்கு பெயர் என்ன என்று யாருக்காவது தெரியுமோ?

நான் நினைக்கின்றேன் சுமந்திரன் சொல்ல வருவது என்னவெனில், இந்த நீட்டிப்புக்கு மறுத்து நிராகரித்தால், சர்வதேச மேற்பார்வை இந்த மார்ச் மாதத்துடனேயே முடிந்து போய் இலங்கை அரசுக்கு சாதகமாகி விடும் என.

இலங்கை அரசு இதனை நிராகரிக்க வேண்டும் என்றுதான் மகிந்த தரப்பும் சொல்கின்றது. புலம்பெயர் அமைப்புகளில் ஒரு பிரிவும் சொல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் எதிர்க்கிறது எண்டு முடிவு செய்து விட்டால், இந்தாள் சொல்ல வருவதையும் விளங்காமல் எதிர்க்க வேண்டியது தான்.

இவர், சொல்லாமல் சொல்லவருவது இதுதான்...

அடுத்த தேர்தலில், மைத்திரி, கோத்தா மற்றும் ரணிலின் மும்முனைப் போட்டியில் ரணில் வெல்லும் சந்தர்ப்பமே அதிகம்.

ரணில் ஜனாதிபதியானல், இந்த விசாரணைகள் சாத்தியமாகும் என மேற்குலகு நினைக்கிறது. அதுக்காக கோத்தாவுக்கு ஒரு இத்துப்போன கயிறு கொடுக்கப் பட்டிருக்கிறது.

நாய்க்கு கிடைத்த எலும்பு துண்டு போல அவரும், அமெரிக்க குடியுரிமை நீக்கத்துடன் இழுபட்டு..... இழுபட்டு.... தேர்தல் திகதி கடந்த பின்னும் இழுபடலாம்.

ஆகவே தான், இந்த, 'மேலும் இரண்டு வருட நீடிப்பு' கேட்கப்படுள்ளது. இலங்கை அரசுக்கு நீடிப்பு வழங்கப் படவில்லை. ஐக்கிய நாடுகள் மேற்பார்வை காலமே நீடிக்கப் பட்டுள்ளது என்கிறார்.  

மகிந்த, இணை அனுசரணையில் இருந்து விலக சொல்லி வலியுறுத்துகிறார் என்பதும் கவனிக்க தக்கது.

எல்லாம் சிங்கள தலைமையையும் பார்த்தாயிற்று. மேற்குலகு  நம்பும் ரணிலையும் ஒருமுறை பார்ப்பது நல்லது தானே.

45 minutes ago, நிழலி said:

நான் நினைக்கின்றேன் சுமந்திரன் சொல்ல வருவது என்னவெனில், இந்த நீட்டிப்புக்கு மறுத்து நிராகரித்தால், சர்வதேச மேற்பார்வை இந்த மார்ச் மாதத்துடனேயே முடிந்து போய் இலங்கை அரசுக்கு சாதகமாகி விடும் என.

இலங்கை அரசு இதனை நிராகரிக்க வேண்டும் என்றுதான் மகிந்த தரப்பும் சொல்கின்றது. புலம்பெயர் அமைப்புகளில் ஒரு பிரிவும் சொல்கின்றது.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு வேறு வழியில்லை என்றது உண்மை தான், ஆனால் முற்கூட்டியே அரசு 30/1 தீர்மானத்தை செயற்படுத்துகின்றதா என்று கண்காணிப்பதையும் செயற்படுத்தி இருக்கலாம்.
ஏனெனில் வரலாற்றில் பல ஏமாற்றங்களை சந்தித்த பட்டறிவு அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

நான் நினைக்கின்றேன் சுமந்திரன் சொல்ல வருவது என்னவெனில், இந்த நீட்டிப்புக்கு மறுத்து நிராகரித்தால், சர்வதேச மேற்பார்வை இந்த மார்ச் மாதத்துடனேயே முடிந்து போய் இலங்கை அரசுக்கு சாதகமாகி விடும் என.

இலங்கை அரசு இதனை நிராகரிக்க வேண்டும் என்றுதான் மகிந்த தரப்பும் சொல்கின்றது. புலம்பெயர் அமைப்புகளில் ஒரு பிரிவும் சொல்கின்றது.

 

1 hour ago, Nathamuni said:

எல்லாத்தையும் எதிர்க்கிறது எண்டு முடிவு செய்து விட்டால், இந்தாள் சொல்ல வருவதையும் விளங்காமல் எதிர்க்க வேண்டியது தான்.

இவர், சொல்லாமல் சொல்லவருவது இதுதான்...

அடுத்த தேர்தலில், மைத்திரி, கோத்தா மற்றும் ரணிலின் மும்முனைப் போட்டியில் ரணில் வெல்லும் சந்தர்ப்பமே அதிகம்.

ரணில் ஜனாதிபதியானல், இந்த விசாரணைகள் சாத்தியமாகும் என மேற்குலகு நினைக்கிறது. அதுக்காக கோத்தாவுக்கு ஒரு இத்துப்போன கயிறு கொடுக்கப் பட்டிருக்கிறது.

நாய்க்கு கிடைத்த எலும்பு துண்டு போல அவரும், அமெரிக்க குடியுரிமை நீக்கத்துடன் இழுபட்டு..... இழுபட்டு.... தேர்தல் திகதி கடந்த பின்னும் இழுபடலாம்.

ஆகவே தான், இந்த, 'மேலும் இரண்டு வருட நீடிப்பு' கேட்கப்படுள்ளது. இலங்கை அரசுக்கு நீடிப்பு வழங்கப் படவில்லை. ஐக்கிய நாடுகள் மேற்பார்வை காலமே நீடிக்கப் பட்டுள்ளது என்கிறார்.  

மகிந்த, இணை அனுசரணையில் இருந்து விலக சொல்லி வலியுறுத்துகிறார் என்பதும் கவனிக்க தக்கது.

எல்லாம் சிங்கள தலைமையையும் பார்த்தாயிற்று. மேற்குலகு  நம்பும் ரணிலையும் ஒருமுறை பார்ப்பது நல்லது தானே.

 

உங்கள் விளக்கத்துக்கு நன்றி நிழலி ,நாதம்.

1 hour ago, Nathamuni said:

அடுத்த தேர்தலில், மைத்திரி, கோத்தா மற்றும் ரணிலின் மும்முனைப் போட்டியில் ரணில் வெல்லும் சந்தர்ப்பமே அதிகம்.

இங்கே வாக்குகள் பிரியுமென்பதால் இருவரும் சேரலாம்.
இருந்தாலும் ரணில் சந்திரிக்காவை வைத்து இவர்களை சேரவிடாமல் முயற்சி செய்வார்.

On 3/18/2019 at 8:01 PM, பிழம்பு said:

இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது. இதுவே  ஜெனிவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக கால அவகாசம் வழங்கப்பட்டமை என்பது தவறான விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்தின் ஜெனிவாவில் தெரவித்துள்ளார். 

கும்பலில் கோவிந்தா போடும் சுமந்திரனின் பித்தலாட்டங்களில் இதுவும் ஒன்று!

முன்னர் "ஏக்கிய" என்பதற்கு வியாக்கியானம் செய்து தமிழ் மக்களை ஏமாற்ற முனைந்த பேர்வழி! 

ஜெனீவாவில் என்ன நடக்கிறது என்பதை தமிழ் மக்கள் விளங்கித்தான் உள்ளனர்! அதற்கு சுமந்திரனின் விளக்கங்கள் அவசியமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் பேசுவதற்கும், சம்பந்தன் மாவை போன்றோர் பேசுவதற்குமிடையே அதிகளவு வித்தியாசம் இருப்பது ஏன்?

சம்பந்தன் அண்மையில்க் கூட தமிழர்கள் அவர்களது விருப்பத்திற்கு எதிராகச் சிங்களவர்களால் பலவந்தமாக ஆளப்படுகிறார்கள் என்று ஐ. நா பிரதிநிதி ஒருவரிடம் கூறியிருக்கிறார்.

மாவையோ, தீர்மானத்தைப் பிற்போடுவதற்கோ கால அவகாசத்திற்கோ இடமில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆனால், சுமந்திரனோ கால அவகாசம் இருப்பதாக இன்னொரு பெயரில் கூறுகிறார்.

இதில் எவர் கூறுவது சரி?

கூட்டமைப்பிற்கு எத்தனை தலைவர்கள்? எவர் கூறுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்வது? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

சுமந்திரன் பேசுவதற்கும், சம்பந்தன் மாவை போன்றோர் பேசுவதற்குமிடையே அதிகளவு வித்தியாசம் இருப்பது ஏன்?

சம்பந்தன் அண்மையில்க் கூட தமிழர்கள் அவர்களது விருப்பத்திற்கு எதிராகச் சிங்களவர்களால் பலவந்தமாக ஆளப்படுகிறார்கள் என்று ஐ. நா பிரதிநிதி ஒருவரிடம் கூறியிருக்கிறார்.

மாவையோ, தீர்மானத்தைப் பிற்போடுவதற்கோ கால அவகாசத்திற்கோ இடமில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆனால், சுமந்திரனோ கால அவகாசம் இருப்பதாக இன்னொரு பெயரில் கூறுகிறார்.

இதில் எவர் கூறுவது சரி?

கூட்டமைப்பிற்கு எத்தனை தலைவர்கள்? எவர் கூறுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்வது? 

ஜஸ்டின், ஜூட்  தயவுசெய்து மேடைக்கு வரவும்! விளக்கமளிக்க?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.