Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓ .. உதுக்குத்தானோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இந்தியாவுக்கு போனால் அதிகமாக கோவிலுக்கு போவது வழமை நான் ஒரு கோவிலுக்கு போவம் என்று நினைத்தால் என்ட பெட்டர்காவ் நாலு கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லுவார்.அது மட்டுமல்லாது இந்த மனித சாமிமார் அவர்களின் ஆச்சிரமம் அது இது என்று போவதும் வழக்கம்.

 

முதல் தடவையாக புட்டபத்திக்கு போனேன் .காரில் போகும் பொழுதே சாரதி இது சாய் பல்கலைகழகம் ,இது சாய் சங்கீதபாடசாலை,சாய் மருத்துவமனை,சாய் விமான நிலையம் என ஒரு பெரிய நகரத்திற்க்கு தேவையான சகல கட்டமைப்புக்களும்  இருப்பதை காட்டிக்கொண்டே வந்தார் .ஒரு தனிநபரால் எப்படி இது சாத்தியம் என்று மனதில் கேள்வி எழுந்தது ,நான் அந்த கேள்வியை

கேட்டிருந்தால் நிச்சமாக‌ சாரதியின் பதில் அவர் கடவுள் அவரால் இதுவும் செய்யமுடியும் இதற்கு மேலும் செய்ய முடியும் என்ற பதில் தான் வந்திருக்கும்.

அதைவிட பின்னுகிருந்த மனிசிட்ட "உங்களுக்கு எங்க போனாலும் குறுக்குபுத்தியும் லொள்ளும்,என்று திட்டு வாங்க வேணும்"

பயணம் போன இடத்தில ஏன் வம்பு என்று போட்டு சாரதி சொல்லுவதற்கெல்லாம் ஆச்சரியமாக கேட்பது போல‌ நடித்துகொண்டு பயணித்தேன்.

 

வெளிநாட்டவர்க‌ள் பதிவு செய்து தங்குவதற்கு என ஒர் க‌ட்டிடம் உண்டு அங்கு போய் பதிவு செய்தேன் ,படம் பிடித்தார்கள் மற்றும் விரல் அடையாளங்களையும் பெற்று கொண்ட பின்பு  பயணப்பொதிகளை எக்ஸ் ரெ பண்ணும் பெல்டில் போடும் படி கேட்டார்கள் அதை செய்து போட்டு,  குளித்து வேஸ்டியை கட்டிக்கொண்டு  தரிசனம் பூஜை போன்றவை நட‌க்கும் மண்டபத்திற்க்கு போனேன்..

எனக்கு புது இடம் என்றபடியால் மண்டபத்திற்கு முன்னால் நின்று  மனைவியுடன் உரையாடிகொண்டிருக்கும் பொழுது, வெள்ளை காற்சட்டையும் செர்ட்டும் அணிந்த ஒருவர் "சாய்ராம்"என்று சொன்னபடி அருகே வந்து ‍ஹிந்தியில் என்னவோ சொன்னார் நாங்கள் முழித்துகொண்டு நிற்கவே ஆண்களும் பெண்களும் இதில் நின்று  கதைக்க வேண்டாம் பெண்கள் இந்த பக்கம் போகவும் ஆண்கள் மற்ற பக்கம் போகவும் என்றார்.

கூம்பிட்டு முடிந்தவுடன் மொபைலில் கொல்பண்ணுங்கோ என்று மனைவி பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு, நான் ஆண்களுக்குரிய லைனில் போய் நின்றேன் .மொபைல் போன் உள்ளே கொண்டு செல்ல தடை என அறிவிப்பு பலகையில்  இருந்த அறிவிப்பை அப்ப தான் பார்த்தேன்.

மொபைல் மற்றும் கை பைகள் உள்ளே கொண்டு செல்ல முடியாது ,காரியாலயத்தில் கொண்டு போய் பாரப்படுத்துங்கள் என்று ஒரு சாய்ராம் காவலாளி சொல்ல மீண்டும் பொருட்கள் பாரப்படுத்தும் லைனில் போய் நின்றேன் ,எனது முறை வரவே கையிலிருந்த மொபைல் மற்றும் கைப்பையை கொடுத்து டொக்கனெடுத்து மீண்டும் வந்து ம‌ண்டபத்திற்க்கு போகும் வழியில் நின்றேன் ,எனது முறை வந்தது மெட்டல் டிடெக்கடர் ஊடாக உள்ளே வா என்றார் நானும் போனேன் இரு இளைஞர்கள் கீழே சப்பாணிகட்டிகொண்டு இரு பக்கமும் இருந்தார்கள் .எனது கால்களை வேஸ்டிக்கு மேலால் தடவி உள்ளே மறைத்து சொந்த ஆயுதத்தை தவிர வேறு ஆயுதங்கள் இருக்கா என சோதனை போட்டார்கள் ,சாய்ராம் என்ற சொல்லை மீண்டும் சொன்னார்கள், இதை தாண்டியவுடன் இன்னோரு காவலாளி சாய்ராம் என்று சொன்னபடி சேர்ட்டுக்கு மேலால் மேல் உடம்பை தடவிபார்த்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார்.

 உந்த செக்யுரிட்டு செக் எனக்கு பிடிக்கவில்லை என்ன செய்யிறது என்று போய் உள்ளே இருந்தேன்.     நான் போன மாதம் டிசம்பர் என்றபடியால் கிறிஸ்மஸ் பெருநாளுக்காக மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது...மண்டபத்தினுள் புத்தர்,சிவன்,ஜேசு உருவங்களும் இஸ்லாத்தை அடையாளப்படுத்த பிறையும் வைக்கப்பட்டிருந்தது....இவர்கள் எல்லா மத சின்னங்களையும் வைத்து வணங்குகிறார்கள் இவரை மற்ற மதத்தவர்கள்  வைத்து கும்பிடுவார்களா என்ற குறுக்கால போன புத்தி எனக்கு வந்திட்டு...

 

வழிபாடு முடித்துவிட்டு வெளியே வந்து டோக்கனை கொடுத்து மொபைலையும் கைபையையும் வாங்கி கொண்டு விடுப்பு பார்த்து கொண்டிருந்தேன்...

மனைவியும் பிள்ளைகளும் வந்தார்கள்..

 

இஞ்சாரும் நாளைக்கு நான் வரமாட்டன் நீர் வேணும் என்றால் வாரும்,எனக்கு உந்த செக் பண்ணி சாமி கும்பிடுற விளையாட்டுகள் சரி வராது...சிட்னி முருகனிட்ட போனால் எவ்வளவு டிசன்டா கும்பிட்டு போட்டு வரலாம்...

 

இந்த இந்தியாவில தான் பழணி யாண்டியை தரிசிக்க போற‌து என்றாலும் செக்கியுரிட்டி செக்....

what a shame

 

 

 

 

வேலையால் வந்தவள் இஞ்சாருங்கோ சிறிலங்கா நியுஸ் பார்த்தனீங்களோ ,செர்ஜ்யில் குண்டு போட்டிட்டாங்களாம் இப்ப விளங்குதோ ஏன் இந்தியாவில கோவில்களிலும் தேவாலயங்களிலும்  செக்குயுரிட்டி செக்   அதிகம் எண்டு

 

ஓஓ உதுக்குத்தானோ....

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, putthan said:

 

 

வேலையால் வந்தவள் இஞ்சாருங்கோ சிறிலங்கா நியுஸ் பார்த்தனீங்களோ ,செர்ஜ்யில் குண்டு போட்டிட்டாங்களாம் இப்ப விளங்குதோ ஏன் இந்தியாவில கோவில்களிலும் தேவாலயங்களிலும்  செக்குயுரிட்டி செக்   அதிகம் எண்டு

 

ஓஓ உதுக்குத்தானோ....

ஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த  போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....!   👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எனது கால்களை வேஸ்டிக்கு மேலால் தடவி உள்ளே மறைத்து சொந்த ஆயுதத்தை தவிர வேறு ஆயுதங்கள் இருக்கா என சோதனை போட்டார்கள் ,சாய்ராம் என்ற சொல்லை மீண்டும் சொன்னார்கள், இதை தாண்டியவுடன் இன்னோரு காவலாளி சாய்ராம் என்று சொன்னபடி சேர்ட்டுக்கு மேலால் மேல் உடம்பை தடவிபார்த்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார்.

நல்லூரிலும் ஒரு சோதனைச் சாவடி அமைக்க போறமெல்லோ.

புத்து ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கதை வரும் போல.
இனி அடுத்த வெடி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கை பாத்தால் மனிசரை விட சாமியளுக்குத்தான் பாதுகாப்பு கனக்க வேணும் போலை கிடக்கு......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, putthan said:

"சாய்ராம்"

அப்ப............................. ஒவ்வொரு வியாழக்கிழமையும் பஜனை பக்தியெண்டு  ஜமாய்க்கிறீஙகள்........பாவம் சிட்னி முருகன்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

எனது முறை வந்தது மெட்டல் டிடெக்கடர் ஊடாக உள்ளே வா என்றார் நானும் போனேன் இரு இளைஞர்கள் கீழே சப்பாணிகட்டிகொண்டு இரு பக்கமும் இருந்தார்கள். எனது கால்களை வேஸ்டிக்கு மேலால் தடவி உள்ளே மறைத்து சொந்த ஆயுதத்தை தவிர வேறு ஆயுதங்கள் இருக்கா என சோதனை போட்டார்கள் ,சாய்ராம் என்ற சொல்லை மீண்டும் சொன்னார்கள், இதை தாண்டியவுடன் இன்னோரு காவலாளி சாய்ராம் என்று சொன்னபடி சேர்ட்டுக்கு மேலால் மேல் உடம்பை தடவிபார்த்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார்.

 உந்த செக்யுரிட்டு செக் எனக்கு பிடிக்கவில்லை என்ன செய்யிறது என்று போய் உள்ளே இருந்தேன்.    

 

roflphotos-dot-com-photo-comments-20190302110410.jpg

ஆயுத செக்கிங்... சூப்பர் புத்தன். 💥
அந்த நேரம், வேட்டி  அவிண்டுடும்... என்று பயப்படவில்லையா? 
மேலே உள்ள பந்தியை கற்பனை பண்ணி பார்த்தேன். சிரிப்பு வந்திட்டுது. :grin:

Edited by தமிழ் சிறி

21 hours ago, putthan said:

இந்த இந்தியாவில தான் பழணி யாண்டியை தரிசிக்க போற‌து என்றாலும் செக்கியுரிட்டி செக்....

what a shame

வேலையால் வந்தவள் இஞ்சாருங்கோ சிறிலங்கா நியுஸ் பார்த்தனீங்களோ ,செர்ஜ்யில் குண்டு போட்டிட்டாங்களாம் இப்ப விளங்குதோ ஏன் இந்தியாவில கோவில்களிலும் தேவாலயங்களிலும்  செக்குயுரிட்டி செக்   அதிகம் எண்டு

புத்தன், 'ரைமிங்' சரியில்லைப் போல... உங்களுக்கு எண்டு பார்த்து இப்படி அவ்வப்போது நடக்குது! 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/25/2019 at 10:29 PM, ஈழப்பிரியன் said:

நல்லூரிலும் ஒரு சோதனைச் சாவடி அமைக்க போறமெல்லோ.

புத்து ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கதை வரும் போல.
இனி அடுத்த வெடி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கணும்.

நாங்கள் இரண்டு மூன்று வருசத்திற்க்கு அங்கால  போகமாட்டமல்ல,

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

நாங்கள் இரண்டு மூன்று வருசத்திற்க்கு அங்கால  போகமாட்டமல்ல,

கல்லோ
சிட்னி முருகன் வாசலிலும் சோதனைச் சாவடி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

கல்லோ
சிட்னி முருகன் வாசலிலும் சோதனைச் சாவடி.

சிட்னி முருகன் விட மாட்டான்....அவனே ஒர் போர்வீரன் ...அவனை தாண்டித்தான் ....மேலும் நாங்கள் ஜனநாய‌கவாதிகள் க்ண்டியளோ 

  • கருத்துக்கள உறவுகள்

1998 இல் குடும்பத்தினருடன் இந்தியாவுக்குச் சுற்றுலாத் சென்றவேளை வழியில் புட்டபர்த்திக்கும் போகவேண்டி வந்தது. வெளிநாட்டவர்கள் என்று எமக்கு ஒரு அறைகள் தந்தவர்கள்  எமது வான் றைவருக்கு தரமாட்டேன் என்றனர். ஒரு நிமிடம் பிள்ளைகளுடன் கதைத்தால் கூட கதைக்க வேண்டாம் என்று கூற நாங்கள் என்ன ஊமையா என்றேன் சொன்ன பெண்ணிடம்.

காலை ஐந்து மணிக்கு என நினைக்கிறேன் சாயிபாபா வருகிறார் என்றனர். நீ உண்மையான சாமி எண்டால் என்னைக் கூப்பிடு பார்ப்போம் என்று மனதுள் அவருக்குச் சவால்விட்டுக் காத்திருந்தால் அந்தாள் கூப்பிட்டால்  தானே.😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/25/2019 at 10:16 PM, suvy said:

ஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த  போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....!   👍

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ....சரியா சொன்னீங்கள் சமயம் பார்த்து ஆப்பு வைப்பினம்.L

On 4/26/2019 at 9:20 AM, குமாரசாமி said:

போற போக்கை பாத்தால் மனிசரை விட சாமியளுக்குத்தான் பாதுகாப்பு கனக்க வேணும் போலை கிடக்கு......

சாமிக்கு மட்டுமல்ல இப்ப சாமியின்ட எஜன்ட் மாருக்கும் பாதுகாப்பு கொடுக்கினம்...

On 4/26/2019 at 1:15 PM, தமிழ் சிறி said:

 

roflphotos-dot-com-photo-comments-20190302110410.jpg

ஆயுத செக்கிங்... சூப்பர் புத்தன். 💥
அந்த நேரம், வேட்டி  அவிண்டுடும்... என்று பயப்படவில்லையா? 
மேலே உள்ள பந்தியை கற்பனை பண்ணி பார்த்தேன். சிரிப்பு வந்திட்டுது. :grin:

ராமராஜ்  கொட்டன் வேஸ்டிகடையில் ஒட்டுற பெல்ட் வாங்கி கட்டியபடியால் பயப்பிடாமல் இருந்திட்டேன் ...😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/26/2019 at 6:58 PM, மல்லிகை வாசம் said:

புத்தன், 'ரைமிங்' சரியில்லைப் போல... உங்களுக்கு எண்டு பார்த்து இப்படி அவ்வப்போது நடக்குது! 😃

நான் நினைக்கிறன் ரைமிங் கிரகம் எட்டாம் வீட்டில் இருந்து பக்கத்து வீட்டை பார்க்கின்றது அது தான்.....அடுத்த வருசம் முன்வீட்டை பார்க்கும் எண்டு சாத்திரியார் சொல்லுறார்...அப்ப நல்லது நடக்குமாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/28/2019 at 9:17 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

1998 இல் குடும்பத்தினருடன் இந்தியாவுக்குச் சுற்றுலாத் சென்றவேளை வழியில் புட்டபர்த்திக்கும் போகவேண்டி வந்தது. வெளிநாட்டவர்கள் என்று எமக்கு ஒரு அறைகள் தந்தவர்கள்  எமது வான் றைவருக்கு தரமாட்டேன் என்றனர். ஒரு நிமிடம் பிள்ளைகளுடன் கதைத்தால் கூட கதைக்க வேண்டாம் என்று கூற நாங்கள் என்ன ஊமையா என்றேன் சொன்ன பெண்ணிடம்.

காலை ஐந்து மணிக்கு என நினைக்கிறேன் சாயிபாபா வருகிறார் என்றனர். நீ உண்மையான சாமி எண்டால் என்னைக் கூப்பிடு பார்ப்போம் என்று மனதுள் அவருக்குச் சவால்விட்டுக் காத்திருந்தால் அந்தாள் கூப்பிட்டால்  தானே.😀

மாமிமாருடன் சவாலுக்கு போகலாம் ஆனால் சாமிமாருடன் சாவாலுக்கு போகக்கூடாது...சாபம் போட்டுவிடிவினம்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

இனி  பழையபடி முருகனின்  உடையில் நாமே செல்வது தான்

முருகன்  நமக்குத்தரும்   பாடம்

நன்றி சகோ

தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

ம்ம்ம்

இனி  பழையபடி முருகனின்  உடையில் நாமே செல்வது தான்

முருகன்  நமக்குத்தரும்   பாடம்

நன்றி சகோ

தொடருங்கள்

முருகா என்று சொல்லி கொண்டு வீட்டில இருக்கிறதுதான் நல்லம் போல கிடக்கு 

1 hour ago, putthan said:

நான் நினைக்கிறன் ரைமிங் கிரகம் எட்டாம் வீட்டில் இருந்து பக்கத்து வீட்டை பார்க்கின்றது அது தான்.....அடுத்த வருசம் முன்வீட்டை பார்க்கும் எண்டு சாத்திரியார் சொல்லுறார்...அப்ப நல்லது நடக்குமாம்

ம்... நம்மட சாத்திரியாரும் நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது என்று பிறந்தது தொடக்கம் சொல்லிக்கொண்டே இருக்ககிறார்.

நானும் யாருக்கு எண்டு கேட்க மறந்திட்டன். அனேகமாக அவருக்குத் தான் என்று நினைக்கிறேன்! 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மல்லிகை வாசம் said:

ம்... நம்மட சாத்திரியாரும் நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது என்று பிறந்தது தொடக்கம் சொல்லிக்கொண்டே இருக்ககிறார்.

நானும் யாருக்கு எண்டு கேட்க மறந்திட்டன். அனேகமாக அவருக்குத் தான் என்று நினைக்கிறேன்! 😃

வருசப் பிறப்புக்கு கோயிலுக்கு(தமிழ்,சிங்களம்,தெலுங்கு ,ஹிந்தி)போயிருந்தேன் ஐயர் பூஜை முடிந்தவுடன்  ராசிபலன் வாசிக்கிறேன்    என்று ,இந்த ராசிக்கு 5  வரவு 5 செலவு,அந்த ராசிக்கு 6 வரவு 4 செலவு..Balance sheet   வாசித்தார் ...  .ஒவ்வோரு வருசமும் வாசிக்கிறார் நாங்கள் வேலைக்கு போறம் சம்பளம் தாராங்கள்...கிழமை முடிய அதுவும் முடியும் மீண்டும் அதே பல்லவி ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.