Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எள்ளியவர்கள் எல்லாரும் கள்ள மௌனத்துடன் சுமந்திரனின் கருத்துக்களை இப்போது பார்க்கிறார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எள்ளியவர்கள் எல்லாரும் கள்ள மௌனத்துடன் சுமந்திரனின் கருத்துக்களை இப்போது பார்க்கிறார்கள்

 

 

" பாராளுமன்றத்தில் 'மறைமுகமாக ' நான் சுட்டிக்காட்டியிருந்தேன் " - சுமந்திரன், பா. உ 

ஒரு சனநாயக நாட்டில், மக்களை பிரநிதிதத்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஏன் "மறைமுகமாக" சொல்ல வேண்டும்.? அதுவும் பாராளுமன்றத்தில் ? 

உங்கள் ஆதாரங்களை (இரகசியமாக )  சர்வதேசத்திடம் சமர்த்திருப்பீர்கள் என நம்புகின்றேன். 

வரும் சனாதிபதி தேர்தல் களமும் பலிக்கடாவாகும் தமிழ் மக்களும். வட - கிழக்கு மக்களை எவ்வாறு மீண்டும் பாதுகாக்க கூட்டமைப்பு தவறுகின்றது

மகிந்த அண்ட் கோ தான் இந்த தாக்குதல்கள் பின்னால் இருக்கின்றார்கள் என்பது ஒரு பக்க வாதம். மறுபக்கம், ரணில் அண்ட் கோ  அதை மறுக்கின்றார்கள். இருவர்களும் சிங்கள பெரும்பான்மை கட்சிகளே. 

எமது மக்களின் அரசியலை முன்னெடுக்கதெரியாமல் மீண்டும் அரைத்த மாவை அரைப்பது எதையும் பெற்றுத்தரப்போவதில்லை.  இந்த சிங்கள கட்சிகளை குறை கூறுவது என்பது முடிந்த வரலாற்று அத்தியாயம். 

 இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து மகிந்த ராஜபக்ஷவுக்கு முன்பே தெரியுமா? - சுமந்திரன் பேச்சால் புதிய சர்ச்சை

"குண்டுத் தாக்குதலின் பின்னர் மட்டக்களப்பிற்கு வருமாறு மதகுரு ஒருவர் என்னை அழைத்திருந்தார். அதற்கமைய நானும் மட்டக்களப்புக்குச் சென்று உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்தேன். அந்த வேளையில் முன்னாள் ஐனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஐபக்ஷ என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அதன் போது எங்கு இருக்கிறீர்கள் என்றும் என்னுடைய பாதுகாப்பு எப்படியாக இருக்கிறதென்றும் என்னைக் கேட்டார். அது எனக்கு புதுமையாக இருந்தது. ஆனாலும் நான் மட்டக்களப்பில் இருப்பதாக பதிலளித்திருந்தேன். நான் அங்கிருப்பதாக கூறியது அவருக்கு வியப்பாக அமைந்தது மட்டுமல்லாமல் அவர் திகைத்துப் போயிருந்தார்.

அத்தோடு நீங்கள் தற்போது மட்டக்களப்பிலா இருக்கின்றீர்கள் என்று மறுபடியும் என்னைக் கேட்டார். ஏனெனில் நான் மட்டக்களப்பு சென்றது அவருக்குத் தெரியாது. ஆனாலும் அவர் தனக்கு தற்பொழுது சில தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அதில் என்னுடைய உயிருக்கும் ஆபத்துக்கள் ஏற்படக் கூடும் என்றவாறு என்னிடம் கூறியிருந்தார். மேலும் என்னுடைய பாதுகாப்பை தளர விட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48144090

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து மகிந்த ராஜபக்ஷவுக்கு முன்பே தெரியுமா? - சுமந்திரன் பேச்சால் புதிய சர்ச்சை

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் தொடராக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உயிராபத்து இருப்பதாக முன்னாள் ஐனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஐபக்ச எவ்வாறு முன்னரே அறிந்து கொண்டிருந்தார் என்ற விடயம் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் நாட்டில் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளும் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஐபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தமிழர் தரப்பு பிரதிநிதிகள் மீது திடிரென மகிந்த ராஐபக்ஷ கொண்ட இந்த அக்கறை தொடர்பாக இலங்கை ஊடகங்ளிலும் சமூக வலைத் தளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ராஜபக்ஷபடத்தின் காப்புரிமை Getty Images

அப்போது பேசிய அவர், "குண்டுத் தாக்குதலின் பின்னர் மட்டக்களப்பிற்கு வருமாறு மதகுரு ஒருவர் என்னை அழைத்திருந்தார். அதற்கமைய நானும் மட்டக்களப்புக்குச் சென்று உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்தேன். அந்த வேளையில் முன்னாள் ஐனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஐபக்ஷ என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அதன் போது எங்கு இருக்கிறீர்கள் என்றும் என்னுடைய பாதுகாப்பு எப்படியாக இருக்கிறதென்றும் என்னைக் கேட்டார். அது எனக்கு புதுமையாக இருந்தது. ஆனாலும் நான் மட்டக்களப்பில் இருப்பதாக பதிலளித்திருந்தேன். நான் அங்கிருப்பதாக கூறியது அவருக்கு வியப்பாக அமைந்தது மட்டுமல்லாமல் அவர் திகைத்துப் போயிருந்தார்.

அத்தோடு நீங்கள் தற்போது மட்டக்களப்பிலா இருக்கின்றீர்கள் என்று மறுபடியும் என்னைக் கேட்டார். ஏனெனில் நான் மட்டக்களப்பு சென்றது அவருக்குத் தெரியாது. ஆனாலும் அவர் தனக்கு தற்பொழுது சில தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அதில் என்னுடைய உயிருக்கும் ஆபத்துக்கள் ஏற்படக் கூடும் என்றவாறு என்னிடம் கூறியிருந்தார். மேலும் என்னுடைய பாதுகாப்பை தளர விட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்

அதற்கு நானும் சரி என்று கூறிவிட்டு நான் சென்ற வேலைகளை அங்கு நிறைவு செய்துவிட்டு மட்டக்களப்பிலிருந்து திரும்பினேன். இதன் பின்னர் அடுத்த நாள் நான் அவரை நேரடியாகச் சந்தித்த போது ஏன் எனக்கு இப்படியாக எச்சரிக்கை விடுத்தீர்கள் என்றவாறு வினவிய போது தனக்குச் சில தகவல்கள் கிடைத்ததாகவும் அதில் என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைத்ததாகவும் கூறினார்.

அது மட்டுமல்லாமல் தனக்கு கிடைத்த தகவல்களை எனக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் அதனடிப்படையிலே அதனை என்னிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து அவருக்கு நான் நன்றியும் கூறினேன். ஆக இந்த விடயத்தில் இவ்வளவு மட்டும் தான் நடந்தது. இதனைவிட வேறெதுவும் நடக்கவில்லை.

நிலைமை இவ்வாறிருக்கையில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உண்மையில் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற பின்னர் நான் மட்டக்களப்பிற்குச் சென்றிருந்த நிலைமையில் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறதென்பது குறித்தே முன்னெச்சரிக்கையொன்றை மகிந்த ராஐபக்ச விடுத்திருந்ததார்.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் எவருக்கும் முன்னெச்சரிக்கை விடப்படவில்லை என்பதையும் அது தொடர்பில் எவருக்கும் தெரிந்திருக்கவும் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48144090

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை, சரியான நேரத்தில், பேட்டியை சிறப்பாக கொடுத்துள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்

அவரே ஊதுகுழல்தான்  கொஞ்ச நாளைக்கு முன்னர் மாவையர் போர் வெடிக்கும் என்றார் இப்ப யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது பார்த்தீர்களா ??

1 hour ago, நீர்வேலியான் said:

என்னை பொறுத்தவரை, சரியான நேரத்தில், பேட்டியை சிறப்பாக கொடுத்துள்ளார். 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

என்னை பொறுத்தவரை, சரியான நேரத்தில், பேட்டியை சிறப்பாக கொடுத்துள்ளார். 

மன்னிக்க வேண்டும் நீர்வேலியான், ஓடாத மணிக்கூடும் ஒருநாளில் இருவேளை சரியான நேரம்காட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Paanch said:

மன்னிக்க வேண்டும் நீர்வேலியான், ஓடாத மணிக்கூடும் ஒருநாளில் இருவேளை சரியான நேரம்காட்டும்.

சரியாக கருத்து, பாஞ்ச்  அண்ணை. 
சம்பந்தன், சுமந்திரன், மாவை.... எல்லோருமே... ஓடாத மணிக் கூடுகள் தான்.

ஈழப் போர் முடிந்தும் பத்து வருடங்களாகி விட்டது.
அதற்குள்... நடந்த குற்றங்களிற்கு, சர்வதேசம் முன், எத்தனையோ....
ஆதாரங்களை, தமிழ்  மக்களால்... தேர்வு செய்யப்பட்ட  வகையில்... செய்திருக்க முடியும். 

எல்லாவற்றுக்கும்... சாணக்கிய அரசியல், மண்ணாங்கட்டி  அரசியல் என்று சொல்லி,
தமிழ் மக்களை, ஏமாற்றி... எதிர்க்கட்சி பதவியிலும்... நாலு வருஷம் இருந்து,
மகிந்தவுக்கும்,  ரணிலுக்கும்...... "சாமரை"  வீசி விட்டு,
இப்ப வந்து... "மீசையில், மண் ஓட்ட வில்லை"  என்று... பினாத்திக் கொண்டு இருக்கின்றார்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரே ஊதுகுழல்தான்  கொஞ்ச நாளைக்கு முன்னர் மாவையர் போர் வெடிக்கும் என்றார் இப்ப யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது பார்த்தீர்களா ??

 

 

1 hour ago, Paanch said:

மன்னிக்க வேண்டும் நீர்வேலியான், ஓடாத மணிக்கூடும் ஒருநாளில் இருவேளை சரியான நேரம்காட்டும்.

 

45 minutes ago, தமிழ் சிறி said:

சரியாக கருத்து, பாஞ்ச்  அண்ணை. 
சம்பந்தன், சுமந்திரன், மாவை.... எல்லோருமே... ஓடாத மணிக் கூடுகள் தான்.

ஈழப் போர் முடிந்தும் பத்து வருடங்களாகி விட்டது.
அதற்குள்... நடந்த குற்றங்களிற்கு, சர்வதேசம் முன், எத்தனையோ....
ஆதாரங்களை, தமிழ்  மக்களால்... தேர்வு செய்யப்பட்ட  வகையில்... செய்திருக்க முடியும். 

எல்லாவற்றுக்கும்... சாணக்கிய அரசியல், மண்ணாங்கட்டி  அரசியல் என்று சொல்லி,
தமிழ் மக்களை, ஏமாற்றி... எதிர்க்கட்சி பதவியிலும்... நாலு வருஷம் இருந்து,
மகிந்தவுக்கும்,  ரணிலுக்கும்...... "சாமரை"  வீசி விட்டு,
இப்ப வந்து... "மீசையில், மண் ஓட்ட வில்லை"  என்று... பினாத்திக் கொண்டு இருக்கின்றார்கள். 

இதுவரை எதுவித முயற்சிகளும் எடுக்கவில்லை என்று நன்றாக தெரிகிறது, ஏற்றுகொள்கிறேன். எனது கருத்து இந்த பேட்டியை பற்றி மாத்திரமே. இவர் இப்பிடி கோர்வையாக கதைத்து நான் பார்த்ததில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நீர்வேலியான் said:

இதுவரை எதுவித முயற்சிகளும் எடுக்கவில்லை என்று நன்றாக தெரிகிறது, ஏற்றுகொள்கிறேன். எனது கருத்து இந்த பேட்டியை பற்றி மாத்திரமே. இவர் இப்பிடி கோர்வையாக கதைத்து நான் பார்த்ததில்லை. 

நீர்வேலியான்...  தமிழ் கூத்தமைப்பு  அரசியல்வாதிகள்....
அந்நியரின், வேறு நிகழ்ச்சி  நிரல்... பட்டியலில் இயங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

உண்மையில்... ஈழப் போரின் பின்   தமிழ் மக்களுக்கு,  
ஏதாவது.... நன்மை,   செய்ய வேண்டுமாக, மனம் வைத்திருந்தால்...
எத்தனையோ... சந்தர்ப்பங்கள், சர்வதேச அளவில் கிடைத்தும்...
அதை... குளப்பும்  செயலில், ஈடு பட்டார்கள்.

ஈழப்  போர்.. முடிந்த கையுடன், 
ஐ.நா.வில்... எமக்காக,   கதைக்க.... வந்த தமிழக அரசியல் வாதிகளையும்,
ஓரம் கட்டி... சிங்களத்துக்கு, வக்காலத்து வாங்கி....
சாணக்கிய... அரசியல் பேசிய விண்ணர்கள்.

இன்று.... புதிய முகத்துடன், மக்களை முட்டாள்  என நினைத்து, வருகின்றார்கள்.

நோகாமல்... நொங்கு தின்பதில், 
பயங்கரவாதிகளை,  விட  மிகவும்... கொடுமையானவர்கள், ****

Edited by தமிழ் சிறி

ஐயா சுமந்திரன் அவர்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

எமது அடுத்த தலைமுறை இளையவர்கள்இ தமிழர்கள் மற்றும் முஸ்லீம் இளையவர்கள்இ சனநாயக பண்புகளில் நம்பிக்கை வைத்து தாமும் ஒரு 'சிறிலங்கானாக' வாழ சமைக்கலாம். இதற்கு தனது சட்டத்தரணி என்ற தகமையையும் ஆங்கில ஆளுமையையும் அதை விட தனது சாணக்கியத்தையும் பயன்படுத்தலாம். 

இல்லைஇ தந்தை செல்வா போன்று  " கடவுள் தான் தமிழர்களை " காப்பான்ற வேண்டும் என இறுதியில்  கூறி செல்வாரா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் ஒவ்வொரு மேடைப்பேச்சும்......விவாத மேடைகளும்.....ஊடக பேட்டிகளும் நியாயமானதாகவே தெரியும். நூற்றுக்கு நூறுவீதம் அவர்களின் கருத்துக்கள் உணர்ச்சியை தூண்டும். அவர்களை தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனாக ஒரு நொடியில் நினைக்க வைக்கும்.

ஆனால் உங்கள் மனதை நிலை நிறுத்தி ஒரு கணம் சிந்த்தித்தால்...... அவர்களின் பேச்சுக்களும் செயல்களும் பூச்சியமானதாகவே இருக்கும்.


தமிழினத்திற்கு எவ்வளவு கொடூரம் நடந்தாலும்  அவர்களின்  சாட்டையடி பேச்சுக்களால்  கொடூரத்தையும் நியானமானதாக்குவார்கள். இதுதான் அன்று தொடக்கம் நடக்கின்றது.
இப்படியான அரசியல் தலைவர்களை அன்றே அழித்திருந்தால்!!!!!!! இன்று நல்லதோ கெட்டதோ தமிழினம் இழுபறியற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.