Jump to content

உலக அன்னையர் தின வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®©à¯à®©à¯à®¯à®°à¯

அனைவருக்கும் அன்பார்ந்த
உலக அன்னையர் தின வாழ்த்துக்கள்!

வேரில்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழிநடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்!

Ãhnliches Foto

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையருக்கு வாழ்த்துக்கள்.!1

iybpf_335028.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                           Image associée

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள அன்னையர் தின வாழ்த்துக்கள்..💐

PicsArt_10-20-09.26.51.png 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

யாழ்கள அம்மாக்களுக்கும் வாழ்த்துக்கள்.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையவள் அதிசயம்

 
images.jpg
 70 Views

அன்னையர் தினத்திற்கான சிறப்புக் கட்டுரை

“பசுந் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணி வைரம்

இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா..

விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும்

கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா.”

எனும் கவிஞர் வாலியின் பாடல் வரிகள் என்றென்றும் நம் மனங்களில் ஆழப் பதித்துக் கொள்ள வேண்டியவை. சாதாரண ஒரு மனிதன் 45 டெல் யுனிற் அளவிற்கு தான் வலியை பொறுத்துக் கொள்ள முடியம். ஆனால் ஒரு பெண் பிரசவத்தின் போது 57 யுனிற் அளவிற்கு வலியை அனுபவிக்கின்றாள். இது 20 என்புகள் ஒரே தருணத்தில் உடைவதனால் உண்டாகும் வலிக்கு சமம். அத்துணை வலிகளையும் ஒரு தாயானவள் தன் பிள்ளைக்காக பொறுத்துக் கொள்கின்றாள். தாயில் இருந்து தான் தலைமுறை ஆரம்பிக்கின்றது. சமுதாய மாற்றத்தினையும், தலைமுறை மாற்றத்தினையும் உண்டாக்க கூடிய சக்தி ஒரு தாயிடம் மட்டுமே காணப்படுகின்றது என்பது நிதர்சனமான உண்மை.

“என்னுடைய தாயின் காலடியில் தான் சுவர்க்கம் இருக்கின்றது”  – நபிகள் நாயகம்

“எனது நல்ல குணங்கள் அத்தனைக்கும் காரணம் என்னைப் பெற்றெடுத்த தாயே” – ஆபிரகாம் லிங்கன்

“மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் ” – உலக நியதி

என்று இன்று நாம் பறிக்கும் வெற்றிக் கனிகள் அனைத்திற்கும் பின்னால் எம் தாயின் வியர்வைத் துளிகளும், கண்ணீரும் நிச்சயமாக கலந்திருக்கும். ஒரு குடும்பத்திலே மாதத் தொடக்கத்தில் வேலைக்கு சென்று வருகின்ற ஆணிடம் மனைவி எதிர் பார்ப்பது சட்டைப் பையில் இருக்கும் சம்பளப் பணமாக இருக்கும். அவனது பிள்ளை எதிர்பார்ப்பு என்பது கைப்பையில் இருக்கும் நொறுக்கு தீனியாக இருக்கும். ஆனால் ஒரு தாயானவள்  தன் பிள்ளை இத்தனை நேரம் கழித்து வீட்டிற்கு வருகின்றானே உணவு உண்டானா இல்லையா என அவனது இரைப்பையை பார்ப்பவளாக இருப்பாள்.

இத்துணை சிறப்பு வாய்ந்த அன்னையரை கௌரவிக்கும் வகையில் தான் ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையினை அன்னையர் தினமாக கொண்டாடி வருகின்றோம். ஆனால் இவ் அன்னையர் தினம் குறித்தும்  அதன் காரணகர்த்தாவை பற்றியும் சற்றேனும் சிந்தித்திருப்போமா?

17ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் அன்னையர் தினம் கொண்டாட ஆரம்பித்தார்கள். பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேலைக்கு செல்பவர்களுக்கு தங்கள் தாயை சந்திப்பதற்காக வருடத்தில் மே மாதம் நான்காம் ஞாயிற்று கிழமையில் விடுமுறை வழங்கினார்கள். அது “மதர்ஸ் சண்டே” என அழைக்கப்பட்டது. அதன் போது பரிசுப் பொருட்களுடன் தமது தாயைச் சந்திக்க செல்வார்கள். 1870 களில் வட அமெரிக்காவில் ஜுலியா வார்ட் என்ற பெண் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதன் படி  நூற்றாண்டு காலமாக பல்வேறு வடிவங்களில் அன்னையர் தினமானது மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பினும், அமெரிக்காவில் முகிழ்த்த அன்னையர் தினம் தான் இன்றைக்கு உலகம் எங்கும் கொண்டாடப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

1908ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள் 5000 பேர் அமரக் கூடிய பிலடெல்பியா அரங்கில்  15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஜார்விஸ் என்ற பெண் சேவகியின் மகள் ஜார்விஸ்  அன்னையர் தின உரையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து அன்னையர் தின கமிட்டி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அம்மையார் எதிர்பார்த்ததை விட 1909ஆம் ஆண்டு அமெரிக்காவின் 45 மாநிலங்களிலும் ஏனைய சில இடங்களிலும் அன்னையர் தின விசேட பிரார்த்தனைகள் வெள்ளை மற்றும் சிவப்பு துணிகளை அணிந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கௌரவிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். 1913ஆம் ஆண்டு தன் பணி நிமிர்த்தம் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினர்.  தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக 1914ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி அதிபர் வூட்றோவில்சன் கூட்டறிக்கையில் கைச்சாத்திட்டார். இதன் போது மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படும் என குறிப்பிடப்பட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டே அன்னையர் தினம் வருடம் தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்று கிழமை அன்று எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தான் கருத்தரித்ததில் இருந்து தன் விருப்பு வெறுப்பைத் துறந்து தன் பிள்ளையின் நலன் கருதி தான் துன்பப்பட்டு தான் கருவறையில் சுமக்கும் தன் பிள்ளையின் சிறு அசைவினைக் கூட வலியாகப் பார்க்காது இன்முகத்துடன் பூரித்து பார்த்து பத்து மாதங்கள் தன் பிள்ளையின் வரவிற்காய் காத்திருந்து பிரசவ வலி சுமந்து பிள்ளையை பெற்றெடுக்கும் போது அவள் அனுபவிக்கும் வலி, அவளை அறியாமலே கண்களோரம் கசியும் கண்ணீர் என அனைத்தையும் மறந்து, தன் மார்பில் முகம் புதைத்து தன் பிள்ளை பால் அருந்தும் வேளையிலே அவள் இதழ் ஓரம் ஏற்படுகின்ற புன்னகையில் பூக்கின்ற தாய்மைக்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவுமே இல்லை எனலாம்.

வைகையில ஊர் முழுக

வல்லூறும் சேர்ந்தழுக

கைபிடியாய் கூட்டிவந்து

கரை சேர்த்து விட்டவளே

எனக்கொண்ணு ஆனதுன்னா

ஒனக்கு வேறு பிள்ளையுண்டு

ஒனக்கேதும் ஆனதுன்னா

எனக்குவேற தாயிருக்கா

ஆம்! ஆயிரம் ஆயிரம் சொந்தங்கள் சுற்றி இருந்தாலும், பணத்தினை வாரி இறைத்தாலும் தாய் அன்பை மட்டும் எங்கும் வாங்கிவிட முடியாது. தொப்பிள் கொடியில் நேசம் ஊற்றி மழலைப் பருவத்தில் மடியில் ஏந்தி பருவ வயதில் பெருமிதம் அடைந்து கடைசி வரையும் கண்ணில் சுமக்க கூடியவளே தாய். நாம் பிறக்கும் வரைக்கும் தன் அழகில் அக்கறை கொண்டவள், தாயாக மாறும் போது உடை வாங்கும் போதும், நகை வாங்கும் போதும் தன் பிள்ளைக்கு அதனை அணிவித்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்றே தன் பிள்ளையை பற்றி மட்டுமே சிந்திக்கின்றாள். நாம் இன்று ஒருவருக்கு ஏதேனும் உதவி செய்து விட்டால் அதனை பல முறை அவரிடம் சொல்லிக் காட்டுகின்றோம்; அல்லது ஒரு முறையாவது அதை பற்றி கதைக்காமல் விட்டு விடுவதில்லை. ஆனால் தன் உடல் நிலையை கவனிக்காது கூலி வேலைக்கு செல்வது மட்டுமின்றி பாக்கு விற்று, முட்டை விற்று தான் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் தன் பிள்ளை ஆசைப்படும் பொருட்களை வாங்கிக் கொடுத்து அழகு பார்க்கின்றாள். ஆனால் அதை  ஒரு முறை கூட எம்மிடம் சொல்லிக் காட்டியிருக்க மாட்டாள்.

இன்று எத்தனை தாய்மார்கள் அன்னையர் தினத்தில் போற்றப்படுகின்றனர் என்கின்ற கேள்விக்கு அப்பால் எத்தனை தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் கேட்பதற்கு நாதி அற்று இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் எம்மிடமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. மாறி வரும் இந் நவீன யுகத்திலும் எத்தனையோ தாய்மார்கள் தம் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்கின்ற காரணத்தினால் தம் கனவுகளை மனதிற்குள்ளேயே புதைத்து விட்டு வீட்டிலேயே கட்டிப் போடப்படுகின்றனர். அவர்களது வெளி உலகம் என்பது நான்கு சுவர்களுக்குள் முடிவடைந்து விடுகின்றது.

அன்னையர் தினத்தில் அன்னையர்களை பூஜிக்காது போனாலும், அவர்களுக்கு அன்னையர் தினத்திலாயினும் அன்னைக்குரிய மரியாதையை வழங்குங்கள். தாய்மை மதிக்கப்படுகின்ற போது நாட்டில் உள்ள பல முதியோர் இல்லங்கள் அழிக்கப்படும் என்பதனை நாம் அனைவரும் கருத்தில் எடுக்க வேண்டும்.

தாயை போற்றி வீழ்வாரும் இல்லை

தாயை தூற்றி வாழ்வாரும் இல்லை.

 

வேலம்புராசன். விதுஜா

சமூகவியல் துறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

https://www.ilakku.org/?p=49129

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரில் ஒருவர் கைது! Published By: VISHNU 21 JUN, 2024 | 12:52 AM   நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவ இடத்தில் தடயவியல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் தேடி கைது செய்யும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/186607
    • 20 JUN, 2024 | 07:48 PM   (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் 25 மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல ஆரம்ப வகுப்பு பாடசாலைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மொழி மூல பாடசாலைகள் இல்லாமல் இருப்பது கவலைக்குரியது. இவ்வாறான நிலைமையில் எப்படி இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என  சுயாதீன எதிரணியின் உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) மகளிர் வலுப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, யுனெஸ்கோ பிரகடனத்தில் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆனால், 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஏற்கனவே கேள்விகளை எழுப்பியுள்ளேன்.  கடந்த 5 வருடங்களை எடுத்துக்கொண்டால் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படும்போது 25 மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல வெட்டுப்புள்ளிகள் வெளியாகின்றன. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள்  நிறைவடைந்துள்ள பின்னரும் கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சிங்கள வெட்டுப்புள்ளிகள் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மொழிமூலம் ஆரம்பக் கல்வி பாடசாலைகள் இல்லை என்பதனையே காட்டுகிறது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே உங்களின் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்... யுத்த காலத்திலும் கூட கொழும்பு ரோயல் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் வகுப்புகள் இடம்பெற்றன. ஆனால், வடக்கு, கிழக்கில் சிங்கள மொழிமூலம் வகுப்புகள் ஏதும் இல்லை. மட்டக்களப்பில் எத்தனையோ சிங்கள கிராமங்கள் உள்ளன. எத்தனையோ சிங்கள பாடசாலைகள் பிரபுக்களால் அமைக்கப்பட்டன. ஆனால், அவை இல்லாது இருக்கின்றன. இப்படி இருக்கையில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்றார். https://www.virakesari.lk/article/186596
    • டி20 உலகக் கோப்பை: மிரட்டிய ஆப்கானிஸ்தானை வியூகம் வகுத்துச் சுருட்டிய இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 21 ஜூன் 2024, 03:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சூப்பர்-8 சுற்று ஆட்டங்கள் மாறிவிட்டதால் இனிமேல் டி20 போட்டிகளுக்கே உரிய ரன் குவிப்பை பார்க்கலாம் என்று கூறப்பட்டது. ஆடுகளங்கள் ரன்குவிப்புக்கு சாதகமாக இருப்பதுபோல் தெரிந்தாலும், பேட்டர்கள் பந்தைக் கவனித்து ஷாட்களை அடிக்க வேண்டியுள்ளது. இதுதான் நேற்றை இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் தாத்பரியமாக இருந்தது. அனுபவ பேட்டர்கள், தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் பொறுமையாக, நிதானமாக பேட் செய்யாமல் விக்கெட்டை இழந்தனர். ஆனால், சூர்யகுமார் யாதவ் நிதானமாக, அதேநேரம் எந்தப் பந்தை பெரிய ஷாட்டாக மாற்றலாம் எனத் தெரிந்து அடித்து ஹீரோவாக ஜொலித்தார். பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் குருப்- ஏபிரிவில் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம், இந்திய அணி குரூப்-1 பிரிவில் 2 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் 2.350 என்று வலுவாக முதலிடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 13 சர்வதேச போட்டிகளை இந்திய அணி வென்று சாதனையை தக்கவைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் ரன்ரேட் மைனஸ் 2.350 என்று குறைவாக இருக்கிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் நடந்தது என்ன? இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருவரும்தான். அதிலும் புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு துல்லியமாக இருந்ததை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்திய அணி 90 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, இந்திய அணியை தாங்கிப்பிடித்து பெரிய ஸ்கோருக்கு கொண்டுவந்தவர் சூர்யகுமார் யாதவ். 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் கணக்கில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். அணியைச் சரிவிலிருந்து மீட்ட சூர்யகுமார் ஆட்டநாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூர்யகுமார்-ஹர்திக் பாண்டியா கூட்டணி நேற்றைய ஆட்டத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் 5-ஆவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும், பெரியஸ்கோருக்கும் வழிவகுத்தது. ஹர்திக் பாண்டியாவும் 2 சிக்ஸர்கள், 3பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் பும்ராவின் திறமை ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறிக் கொண்டே செல்கிறது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடங்கியதிலிருந்து பும்ரா பந்துவீச்சில் எக்கானமி 3 ரன்களைக் கடக்கவில்லை. இந்த ஆட்டத்திலும் 4 ஓவர்கள் வீசிய பும்ரா 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறனை வெளிப்படுத்தினார். அதிலும் புதிய பந்தில் பும்ராவாவின் பந்துவீச்சை சமாளிக்க ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் கடும் சிரமப்பட்டு விக்கெட்டையும் இழந்தனர். அதேபோல அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட், சிராஜுக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட குல்தீப் யாதவ் 4 ஓவர்களிலி் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் என அற்புதமாகப் பந்துவீசினர். அக்ஸர் படேலும், ஜடேஜாவும் தங்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு துணை செய்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ரோகித் சர்மான கூறியது என்ன? வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் “கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் இங்கு டி20 போட்டிகளை விளையாடியிருக்கிறோம் என்பதால், சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் திட்டமிட முடிந்தது. அதனால்தான் 180 ரன்களை எட்ட முடிந்தது.” என்றார். “பேட்டர்களின் பங்கு அசாத்தியமானது. எங்களிடம் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடிந்தது, பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இக்கட்டான நேரத்தில் ஒவ்வொரு வீரரும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். ஸ்கை, ஹர்திக் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. ஆட்டத்தை ஆழமாகக் கொண்டு செல்ல இருவரின் ஆட்டம் அவசியமானதாக இருந்தது. பும்ராவின் பந்துவீச்சு குறித்து நமக்குத் தெரியும். அவர் பந்துவீச்சில் என்ன செய்வார் என்பதும் தெரியும். சூழலையும், ஆடுகளத்தையும் சாதகமாக பயன்படுத்தி பந்துவீசக்கூடியவர். பொறுப்பெடுத்து தனது பங்களிப்பை பல ஆண்டுகளா அளித்து வருகிறார் பும்ரா. இந்த ஆடுகளத்தின் தன்மையைப்புரிந்து கொண்டுதான் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் அடுத்த ஆட்டத்தில் இருந்தால், அதிகமான வேகப்பந்துவீச்சாளர்களுடன் வருவோம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரோகித், கோலி 2 ஆண்டுகளாக விளையாடவில்லை ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணித்து ரோகித் சர்மா, கோலி பேட் செய்து கையைச் சுட்டுக்கொண்டனர். 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் கடந்த ஜனவரி மாதம் வரை சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாடவில்லை. ரோஹித் சர்மா 13 பந்துகளில் 8 ரன்களுடன் பரூக்கி பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு சென்று விக்கெட்டை இழந்தார். இன்றைய டி20 போட்டிகளில் பந்துவீச்சில் ஒவ்வொரு வீரரும் எவ்வாறு வேரியேஷன்களை கொண்டு வருகிறார்கள். 145 கி.மீ வேகத்தில் பந்துவீசும் ஒரு பந்துவீச்சாளர் அடுத்த பந்தை அப்படியே வேகத்தைக் குறைத்து 110 கி.மீ வேகத்தில் வீசுகிறார். இதை கவனிக்காமல் விட்டதுதான் நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா செய்த தவறாகும். ஐபிஎல் தொடரில் பலமுறை லெக் ஸ்பின்னுக்கு கோலி ஆட்டமிழந்துள்ளார். இதை உணர்ந்த ரஷித் கான் தனது பந்துவீச்சில் கோலியை பெரிய ஷாட்டுக்கு மாற்றும் வகையில், ஆசையைத் தூண்டும் வகையில் பந்துவீசினார். இதை கவனிக்காத கோலி, சிக்ஸருக்கு முயன்று கேட்சாகினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமார் யாதவ் சிறப்பான பேட்டிங் சூர்யகுமாரின் பேட்டிங் நேற்றைய ஆட்டத்தில் மாஸ்டர் கிளாஸாக இருந்தது. சூர்யகுமார் 3வது வீரராக வழக்கமாகக் களமிறங்கிய நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு 4வது இடம் தரப்பட்டது. ஆனாலும், தனக்குரிய பணியை இந்தத் தொடரில் சிறப்பாகவே செய்து வருகிறார். சூர்யகுமார் ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான, ஸ்பெஷல் ஷாட்களை ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆப்சைட் சென்ற பந்துகளை ஸ்வீபுக்கு மாற்றியது, ஃபுல்டாஸ் பந்தை ஸ்வீப்புக்கு மாற்றியது என எதிரணி பீல்டர்கள் கணிக்க முடியாத வகையில் ஷாட்களை விளையாடினார். அதாவது இடதுபுறம் பவுண்டரி எல்லை குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து பெரும்பாலான ஷாட்களை சூர்யாக இடதுபுறம் அடித்து ஸ்மார்ட் கிரிக்கெட்டை ஆடினார். சூர்யகுமார் அடித்த 3 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸரில் பந்து அரங்கத்தின் மேற்கூரையில் விழுந்தது. ஸ்லோவர் பந்துகளை எவ்வாறு கணித்து ஆட வேண்டும் என்பதற்கு பிரத்யேகப் பயிற்சி எடுத்த சூர்யா, நேற்று ஸ்லோவர் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பந்துவீச்சு வேரியஷன்கள் சூர்யாவிடம் தோல்வி அடைந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆடுகளம் மந்தமாக இருந்தால், பந்து வரும் திசையை பேட்டர்கள் கணிப்பது சிரமம். இதற்கு நீண்டநேரம் களத்தில் இருந்து பந்தை கணித்தால்தான் ஆட முடியும். ஆனால், இதை சூர்யகுமார் வந்தவுடன் புரிந்து கொண்டு ஆடுகளத்துக்கு ஏற்றபடி ஆட்டத்தை மாற்றிக்கொண்டார். வழக்கமாக ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஸ்வீப் போன்றவற்றை அதிகமாக ஆடக்கூடிய சூர்யா நேற்று பெரிதாக ஆடவில்லை.இந்த ஆட்டத்தில் 14 ரன்கள் மட்டுமே கீப்பருக்கு பின்னால் அடித்து சூர்யா சேர்த்தார். இதுபோன்று ஆடுவது சூர்யாவின் பேட்டிங்கில் குறைந்த சதவீதம் என்றாலும், ஆடுகளத்தின் மெதுவான தன்மை, பந்தின் வேகக் குறைவால் அதிகமான சக்தியை செலுத்திதான் இந்த ஷாட்களை ஆட முடியும் என்பதால் பெரியாக மெனக்கெடவில்லை. ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்ட சூர்யா, அதை ஹர்திக் பாண்டியாவிடம் கூறி, அவர் அடித்த அதே ஷாட்களுக்கு அடிக்க மாற்றினார். இருவருமே பீல்டர்கள் கணிக்க முடியாத பகுதியில் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர். ரன் சேர்ப்பதற்கு கோலி, ரோஹித், ரிஷப் பந்த், துபே ஆகியோர் சிரமப்பட்ட நிலையில், சூர்யகுமார் 27 பந்துகளில் அரைசதம் அடித்தது சகவீரர்களுக்கே வியப்பாக இருந்திருக்கலாம். ஆனால், கடைசி நேரத்தில் பரூக்கி வீசிய ஸ்லோவர் பந்துக்கு சூர்யா இரையாகினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ரா சிறப்பான பந்துவீச்சு புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு வேகம் அற்புதமானது. புதிய பந்தில் பும்ரா பந்துவீசினாலே 75 சதவீதத்துக்கும் மேல் விக்கெட் வீழ்த்தும் சாதனையை டி20 போட்டியில் வைத்துள்ளார். அதை நேற்றைய ஆட்டத்திலும் பும்ரா நிரூபித்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ்(11), ஜசாய்(2) விக்கெட்டுகளை காலி செய்தார். இந்த டி20 உலகக் கோப்பையில் அதிகமான ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் குர்பாஸ் விக்கெட்டை அனாசயமாக எடுத்தார் பும்ரா. குர்பாஸ் இறங்கி வந்ததும் பந்தை ஆஃப் சைடில் விலக்கி பும்ரா வீசவே, அதை அடிக்க முற்பட்டு ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்தார் குர்பாஸ். ஆடுகளத்தன் தன்மையை உடனடியாகக் கணித்து அதற்கு ஏற்றார்போல் பும்ரா பந்துவீசுவதால்தான் அனைத்து ஃபார்மெட்டுகளின் ராஜா என்று புகழப்படுகிறார். இந்த ஆட்டத்தில் பும்ரா 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அனுபவமில்லாத ஆப்கானிஸ்தான் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி பேட்டிங்கையும், பந்துவீச்சையும் உடனடியாக மாற்றாததன் விளைவுக்கு ஆப்கானிஸ்தான் நேற்று விலை கொடுத்தது. பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் முதல் நடுவரிசை வரை பெரிய ஷாட்களுக்குதான் பெரும்பாலும் முயன்றார்களே தவிர, களத்தில் நிலைத்திருக்க முயலவில்லை. இதனால்தான் ஆப்கானிஸ்தான் அணியில் ஓமர்சாய் தவிர, மற்ற எந்த பேட்டரும் 20 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை. பந்துவீச்சிலும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் ரஷித் கான், பரூக்கி இருவர் மட்டுமே பந்துவீசினர். மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பந்துவீசவில்லை. அதிலும் குறிப்பாக நவீன் உல் ஹக் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. ரஷித் கான் தவிர அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். https://www.bbc.com/tamil/articles/cy99zwqqpkno
    • இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.   யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினர் கைது செய்தனர்.  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.