Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – மஹிந்த எதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

றிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – மஹிந்த எதிப்பு

 

Rishad_2_2

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்றையதினம் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர். என்றாலும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஸ)

FB_IMG_1557822433325http://www.dailyceylon.com/182707/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் கையெழுத்து வைக்காத ஒரே தமிழர் வியாழேந்திரன்...

எப்பவுமே அவசரப்பட்டு, அவிஞ்சு போய் நிக்கிற ஆளாயிருக்கிறார்.

3 hours ago, nunavilan said:

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக

முள்ளுவேலி முகாம் பராமரிப்பு புனர்வாழ்வு போன்றவற்றுக்கு கிடைத்த வெளிநாட்டு நிதிகளை சேர்ந்து கொள்ளையடித்த சமூகவிரோத ஊழல் கும்பலைச் சேர்ந்தவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

Rishad-Bathiyutheen-720x450.jpg

ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு?

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரேரணை இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படும் அதுரலியே ரத்தன தேரர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று ஒரு தொகுதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, மகிந்தானந்த அழுத்கமகே, நாமல் ராஜபக்ஷ, வியாழேந்திரன், எஸ்.பி திசாநாயக்க உள்ளிட்ட 22 பேர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதேவேளை இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் தவறுகள் இருப்பதாகவும் இதனைச் சமர்ப்பிக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ரிஷாட்டுக்கு-எதிரான-நம்ப/

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்து

 

Rishad-Bathiudeen.jpg?zoom=1.10249994993
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை நேற்றையதினம் சந்தித்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து விளக்கமளிக்கமனித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் இன்றைய தினம் பிற்பகல் இடம்பெறவுள்ள பொது எதிரணியினரின் கூட்டத்தில் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

http://globaltamilnews.net/2019/121818/

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு மதவாதி. தமிழினத்திற்கெதிரான பகையுணர்வைக் கொண்டவர். 2009 இறுதி யுத்தகாலத்தில் புணரமைப்பு அமைச்சராக மகிந்தவின் காலடியில் வலம்வந்த இவர் இனவழிப்பில் நேரடியான பங்களிப்பைச் செலுத்தியவர். 400,000 பொதுமக்கள் சிங்கள ராணுவத்தின் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருந்தபொழுது வெறும் 70,000 மட்டுமே உள்ளே இருக்கின்றனர் என்று வேண்டுமென்றே குறைத்து வெளியுலகிற்கு அறிவித்தவர். உணவு மற்றும் மருந்துப்பொருட்களை வெகுவாகக் குறைத்து அனுப்பியதுடன், பெருமளவு பொதுமக்கள் பட்டினியாலும், மருந்தின்மையினாலும் வாடக் காரணமானவர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இனவழிப்பை நியாயப்படுத்தியவர். யுத்தம் முடிந்த பிற்பாடு, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகியவிடங்களில் அடாத்தாக தனது மக்களை தமிழர் நிலங்களில் குடியேற்றியவர். சிங்கள அரச ஆசீர்வாதத்துடன் தமிழர் மீதான தனது குட்டி ஆக்கிரமிப்பை இன்றுவரை நடத்தி வருபவர். அண்மையில் வில்பத்துக் காட்டிற்குள் இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கான பாசறைகளை அமைக்க வெளிக்கிட்டு சிங்களப் பேரினவாதத்தின் கண்களுக்குள் மாட்டிக் கொண்டவர். 

அன்று இவரைப் பாவித்த சிங்களம், இன்று இவரைக் குற்றவாளி என்கிறது. 

இவரது பதவியும், அதிகாரமும் பறிக்கப்பட்டு வெற்று மனிதராக வெளியில் வரவேண்டும்.

ஆரம்பம் முதலே ஒரு ரவுடி அரசியல்வாதியாகவும், நீதிபதியை கூட மிரட்டிய காடைத்தன அரசியல்வாதியாகவும், காணிகளை திருடுவதில் கைதேர்ந்த திருட்டு அரசியல்வாதியாகவும், செட்டிக்குளம் முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கு கொடுக்கப்பட்ட உதவிகளில் கணிசமானதை கொள்ளையடித்த அரசியல்வாதியாகவும், பல மோசமான முகங்களை கொண்ட அரசியல்வாதியாக ரிஷாட் பதியுதீன் இருப்பதால், அவரை அகற்றுவது அரசியலை தூய்மைப்படுத்தும் ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக பார்க்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்க இலட்சக்கணக்கான ரூபாய்களை கப்பமாக வேண்டியவர்.

4 minutes ago, ஏராளன் said:

தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்க இலட்சக்கணக்கான ரூபாய்களை கப்பமாக வேண்டியவர்.

இப்பிடி நிறைய அடுக்கிக்கொண்டே போகலாம்! லிஸ்ட் மெக்கா வரை நீளும்!

இப்ப சுமந்திரனும் சம்பந்தனும் இவர்ற வலைக்கில சிக்கிவினமோ தெரியாது? காசெண்டா வாயை பிளக்கிற ஆக்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.