Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை படையினருக்கு பீஜிங்கில் சிறப்புப் பயிற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

army-1-1-720x450.jpg

இலங்கை படையினருக்கு பீஜிங்கில் சிறப்புப் பயிற்சி

சீனாவுடன் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு அமைய, இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர், சிறப்புப் பயிற்சிக்காக அடுத்தவாரம் சீன, தலைநகர் பீஜிங்கிற்கு செல்லவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு, அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பாதுகாப்பு விவாகரங்கள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அதற்கிணங்க, பாதுகாப்பு தொடர்பில் இரண்டு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வழங்குவது தொடர்பிலான பாதுகாப்பு ஒப்பந்தமொன்றும் கடந்த 14 ஆம் திகதி, இரண்டு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.

அதற்கமைய இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர் அடுத்தவாரம் சீனாவுக்கு சென்று விசேட பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும், சீனாவின் திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை கொண்டதாக இந்தப் பயிற்சிகள் அமைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சீன தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர், இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஆற்றலைக் கட்டியெழுப்பும் உதவிகளையும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கருவிகளையும் இதன்போது சீனா வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இலங்கை இராணுவத்தினரின் முதல் தொகுதியினருக்கான பயிற்சித் திட்டம் அடுத்தவாரம் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு, சீனா தமது இராணுவத்தினரை இலங்கைக்குள் அனுப்பாது என்றும் அதற்குப் பதிலாக இலங்கை இராணுவத்தினரின் ஆற்றலை கட்டியெழுப்பவுள்ளோம் எனவும் குறித்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீனாவின் திட்டங்களுக்கான பாதுகாப்பை இலங்கைத் தரப்பினர் மேற்கொள்வார்கள் என்று நம்புவதாகவும் இதற்கான ஒத்துழைப்புக்களை சீனா வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இலங்கை-படையினருக்கு-பீஜி/

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலத்தில் இலங்கையில் சீன அமைதிகாக்கும் படை வந்தாலும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் எப்ப பாஸ் பண்ணுவாங்கள் ?

40 வருடமாய் நாடு நாடாய் பயிற்சி எடுக்கிறாங்கள் .

செய்தி : இலங்கையில் மேற்கொள்ளப்படும், சீனாவின் திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை கொண்டதாக இந்தப் பயிற்சிகள் அமைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கருத்து : இந்த முயற்சியை இதன் வளர்ச்சியை இந்திய, அமெரிக்க அரசுகள் நிச்சயம் சந்தேகத்துடனேயே பார்க்கும். எவ்வாறான திட்டங்கள்? இதன் தூர நோக்கம் என்ன? யாருடன் இருந்து காக்க பாதுகாப்பு? 

தென்சீனக்கடல், பாகிஸ்தான் உடனான 'சில்க்' வீதி திட்டம் மற்றும் இலங்கையில் .....

சிங்களம் வெற்றிகரமாக எல்லாத்தரப்புடனும் அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார சதுரங்கம் விளையாடி வருகின்றது. ஒருநாள் 'செக் மேட்' ஆகலாம். அப்பொழுது அதற்கு ஒரு பலமான தமிழர் தலைமை இருந்தாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

170801-alien-extraterrestrial-mn-1210_81

இன்னும் ஏலியன்களிடம் பயிற்சி எடுப்பதுதான் பாக்கி.. அதையும் சீக்கரமே முடித்து விடுங்கப்பா..👍

20 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை படையினருக்கு பீஜிங்கில் சிறப்புப் பயிற்சி

ஹிந்தியனிடம் அப்பாவிகளை எப்படிக் கொலைசெய்வது, பெண்களை எப்படி பாலியல் பலாத்காரம் செய்வது, அப்பாவிகளை எப்படி குற்றவாளிகளாக்குவது போன்ற அஹிம்சைப் பயிற்சிகளை பெற்ற சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள் சீனாவிடம் எப்படிப்பட்ட பயிற்சிகளைப் பெறுகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்!

மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவுடன் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏன் எதிர்க்கின்றார் என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகிக்கும் நிலையில் தன்னுடைய அனுமதியின்றி அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்ய முடியாதெனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

சோபா உடன்படிக்கை தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரிகள் கொழும்பில் பேச்சு நடத்தியிருந்தனர். ரணில் அரசாங்கமும் அந்த ஒப்பந்தத்தில் சில திருத்தங்களைச் செய்து கையொப்பமிட முடிவு செய்திருந்தது.

சென்ற 16 ஆம் திகதி வோஷிங்டனில் அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளோடு நடத்திய கலந்துரையாடலிலும் சோபா ஒப்பந்தம் குறித்துப் பேசியிருந்தார்.

பௌத்த தேசியவாத்தையும் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையையும் தொடர்ச்சியாகத் தக்கவைக்கும் நோக்கில் இவ்வாறான இரு வகையான அணுகுமுறைகளையும், பல்வகைப்பட்ட முகங்களையும் சர்வதேச அரங்கில் இலங்கை வெளிப்படுத்தி வருவதாகவே அவதானிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில். மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவுடன் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏன் எதிர்க்கின்றார் என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கையி்ன் பிரதான அரசியல் கட்சிகளின் சிங்களத் தலைவர்கள், சீனாவுடன் உறவைப் பேணுகின்ற அதேவேளை, அமொிக்காவுடனும் நல்லுறவைப் பேணவே விரும்புவா் என்பது கடந்தகால வரலாறுகள்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.