Jump to content

வெங்காய வெடி வைத்து, மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Vavuniya-Murder-Arrest.jpg

வெங்காய வெடி வைத்து, மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது!

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் வெங்காய வெடியை வெடிக்க வைத்து மனைவியை கொலை செய்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய து.ரவிச்சந்திரன் என்பரே செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 4 பிள்ளைகளின் தாயார் ஒருவர் வெங்காய வெடியை முகத்தில் வெடிக்க வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த கொலைச் சம்பவம் குறித்து செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

கொலைசெய்யப்பட்ட குறித்த பெண்ணின் கணவன் தலைமைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று செட்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள ஆலயத்தின் பின்புறமாகவுள்ள காட்டுப் பகுதிக்குள் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் கையிலும் வெங்காய வெடி காரணமாக காயம் ஏற்பட்டுள்ளதால் பொலிஸ் பாதுகாப்புடன் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Vavuniya-Murder-Arrest-2.jpg

Vavuniya-Murder-Arrest-3.jpg

http://athavannews.com/வெங்காய-வெடி-வைத்து-மனைவ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் மனைவியை வெங்காய வெடியை வெடிக்க வைத்து கொலை செய்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவன் இன்று செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

65292160_435685220605763_973063577218842

செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 4 பிள்ளைகளின் தாயாரான 40 வயது பெண் ஒருவர் வெங்காய வெடியை முகத்தில் வெடிக்க வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். 

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

இச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவன் தலைமைவாகியிருந்த நிலையில் பொலிசாரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று செட்டிகுளம் புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள ஆலயத்தின் பின்புறமாக உள்ள காட்டுப்பகுதிக்குள் மறைந்திருந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

virakesari.jpg

குறித்த நபரின் கையிலும் வெங்காய வெடி காரணமாக காயம் ஏற்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த நபர் பொலிஸ் பாதுகாப்புடன் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய து.ரவிச்சந்திரன் என்பரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/58914

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

வெங்காய வெடி

இதை ஆர் கண்டுபுடிச்சது? 😎

Link to comment
Share on other sites

33 minutes ago, குமாரசாமி said:

இதை ஆர் கண்டுபுடிச்சது? 😎

அது எப்பிடி வேலை செய்யுது எண்டதையும் சொல்லுங்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காய வெடி நிலத்தில் வீசி எறியும்போது அதன் செறிவான மருந்து காரணமாக வெடிக்கும் தமிழகத்தில் தடை செய்யபட்ட வெடி சிறிய அளவில் செய்கிறார்கள் போல் உள்ளது வீட்டு உபயோகத்துக்கு பயன்படும் பொருள் மூலம் அதன் வீரியத்தன்மையை அதிகரிக்கலாம் நாலு பிள்ளையின் தாய் இனி அந்த பிள்ளைகள் என்ன பாடு படப்போகுதுகளோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இதை ஆர் கண்டுபுடிச்சது? 😎

Ãhnliches Foto

சீனா, இந்தியாவில்.... தயாரிக்கின்றார்கள்.
ஜேர்மனியில்  கூட... புத்தாண்டு நேரம்.. இது சிறிய..  சத்தத்துடன். 
வெடிக்கின்ற மாதிரியான அளவில்... விற்பதை பார்த்துள்ளேன்.

பெரிய அளவிலுள்ள வெங்காய வெடிகளை தயாரித்து விற்பதை, தடை  செய்துள்ளார்கள்.
ஆனாலும்... ஏதோ வழியில், பெரிய வெங்காய வெடிகளும் சந்தைக்கு வந்து விடுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/24/2019 at 5:19 AM, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

சீனா, இந்தியாவில்.... தயாரிக்கின்றார்கள்.
ஜேர்மனியில்  கூட... புத்தாண்டு நேரம்.. இது சிறிய..  சத்தத்துடன். 
வெடிக்கின்ற மாதிரியான அளவில்... விற்பதை பார்த்துள்ளேன்.

பெரிய அளவிலுள்ள வெங்காய வெடிகளை தயாரித்து விற்பதை, தடை  செய்துள்ளார்கள்.
ஆனாலும்... ஏதோ வழியில், பெரிய வெங்காய வெடிகளும் சந்தைக்கு வந்து விடுகின்றன.

அட உதே சாமான்......இஞ்சை விக்கிற வெங்காய வெடி பெரிசாய் விக்கினமில்லை எண்டு நினைக்கிறன்.....ஏனெண்டால் இஞ்சை வருசம் முழுக்க விக்கிறாங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/24/2019 at 1:19 PM, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

சீனா, இந்தியாவில்.... தயாரிக்கின்றார்கள்.
ஜேர்மனியில்  கூட... புத்தாண்டு நேரம்.. இது சிறிய..  சத்தத்துடன். 
வெடிக்கின்ற மாதிரியான அளவில்... விற்பதை பார்த்துள்ளேன்.

பெரிய அளவிலுள்ள வெங்காய வெடிகளை தயாரித்து விற்பதை, தடை  செய்துள்ளார்கள்.
ஆனாலும்... ஏதோ வழியில், பெரிய வெங்காய வெடிகளும் சந்தைக்கு வந்து விடுகின்றன.

உள்ளி வெடி எண்டு பேர்  வைச்சிருக்கலாம் போல...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.