Jump to content

நாவற்குழி விகாரை திறப்பு- வழக்கை வாபஸ் பெற்றது பிரதேச சபை


Recommended Posts

தமிழர் தாயகம் வட மாகாணம் யாழ்ப்பாணம்

நாவற்குழி விகாரை திறப்பு- வழக்கை வாபஸ் பெற்றது பிரதேச சபை

அமைச்சர் சம்பிக்க ரணவக்க நோில் சென்று விகாரையில் வழிபாடு
 
 
main photomain photomain photo
  •  
தமிழர் தாயகம் வடமாகாணம் யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் கட்டப்பட்ட விகாரை எதிர்வரும் 13 ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நாவற்குழி சம்புத்தி சுமன விகாரைத் திறப்பு விழா எனப் பெயரிடப்பட்ட அழைப்பிதழ் கொழும்பில் உள்ள பிரமுகர்களுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 45 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. 
 
பின்னர் 2015 ஆம் ஆண்டு 48 சிங்களக் குடும்பங்களுக்கு நாவற்குழிப் பிரதேசத்தில் காணி அனுமதிப் பத்திரம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு விகாரை ஒன்றைக் கட்டுவதற்காக காணி ஒதுக்கப்பட்டு, கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதற்கெதிராக சாவகச்சேரிப் பிரதேச சபை, சாவகச்சேரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் எதவுமின்றி விகாரை கட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தி, சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனால் விகாரையைத் தொடர்ந்து கட்டுவதற்கு நீதிபதி சிறிநிதி நந்தசேனன் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தார்.

 

சம்பிக்க
share-fb.png share-tw.png
விகாரை கட்டுவதற்கு எதிராக சாவகச்சேரி பிரதேச சபை தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெற்றப்பட்ட பின்னர், அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க நாவற்குழி விகாரைக்குச் சென்று வழிபடும் காட்சி இது. பாட்டாளி சம்பிக்க ரணவக்க, 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து யானைச் சின்னத்தில் கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மகரகம தொகுதி அமைப்பாளராக சம்பிக்க ரணவக்க நியமிக்கப்படவுள்ளார். இதற்கான அனுமதியை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

 

ஆனால் சென்ற ஆண்டு ஆவணி மாதம் 20 ஆம் திகதி உரிய ஆவணங்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. விகாரை கட்டப்படும் காணி இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குரியது என்பதால் குறித்த காணியில் விகாரை கட்டுவதற்கு கொழும்பில் உள்ள வீடமைப்பு அதிகார சபையின் சிங்கள உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கிய கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனால் விகாரை கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச சபையும் தமது மனுவை மீளப் பெற்றுக் கொண்டது. அத்துடன் சென்ற ஆண்டு பத்தாம் மாதம் பதினொராம் திகதி விகாரையைக் கட்டுவதற்கான அனுமதியையும் சாவகச்சேரி பிரதேச சபை வழங்கியுள்ளது.

அனுமதி வழங்கப்பட்டது என்பதை சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் கந்தையா வாமதேவன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் குறித்த விகாரை அவசர அவசரமாக கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது குறித்து கூர்மைச் செய்தித் தளத்திடம் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி காண்டீபன், விகாரை கட்டப்படுவதற்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டும் என்றார்.

ஏனெனில், நீதிமன்றத்தில் ஆவணங்களைக் காண்பித்தால் பிரதேச சபை கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை வழங்கியே ஆகவேண்டும். இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் உள்ள சட்டங்கள் மூலமாக ஈழத் தமிழர்கள், தமது அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த முடியாது.

எனவே ஈழத் தமிழர் பிரதேசங்களில் காணி அபகரித்தல், விகாரை கட்டுதல், புத்தர் சிலைகள் வைத்தல் போன்ற விடயங்களுக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து நீதியைப் பெற முடியாது. ஆகவே இந்த விவகாரத்தை ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சனையாகவே நோக்கியிருக்க வேண்டும் என்று காண்டீபன் கூறினார்.

இதேவேளை, புதிதாகத் திறக்கப்படவுள்ள விகாரைக்கான புனிதத் தாது, நாளை மறுதினம் 12 ஆம் திகதி குருநாகல் நெவகட செல்கிரி விகாரையில் இருந்து காலை எட்டு மணிக்கு ஊர்வலமாக (பெரகரா) எடுத்துச் செல்லப்படும்.

அன்று இரவு அனுராதபுரம் துபாராம சைத்திய விகாரையைச் சென்றடையும் ஊர்வலம், அடுத்த நாள் 13 ஆம் திகதி காலை ஏழு மணிக்கு மீண்டும் அங்கிருந்து ஆரம்பமாகி அன்றைய தினம் மாலை ஐ;ந்து மணிக்குப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாவற்குழி சம்புத்தி சுமன விகாரையைச் சென்றடையுமென அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு நல்லிணக்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் காலத்திலேயே இலங்கைப் படையினரின் ஒத்துழைப்போடு இலங்கை ஒற்றையாட்சியின் சட்டங்களுக்கு அமைவாக விகாரைகள் துரிதமாகக் கட்டப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு மாசி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் விகாரைகள் கட்டப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வரும் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான செயற்பாட்டாளர் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க, வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் விகாரைகள் கட்டும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றார்.

நாவற்குழி விகாரையை கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட பின்னர், கடந்த மாதம் அங்கு சென்ற அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, அந்த விகாரையில் வழிபட்டார்.

ஆயிரம் விகாரைகள் கட்டப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.

சாவகச்சேரி பிரதேச சபை சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலேயே உள்ளது.

1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உண்டு. ஆனால் அந்த அதிகாரங்கள் எதுவுமே இதுவரை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

காணி அதிகாரங்களை கொழும்பு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் நிர்வாகம் தம்வசப்படுத்தியுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல. ஆனால் அந்தத் திருத்தச் சட்டத்தைக் கூட உரிய முறையில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்த விரும்பவில்லையென தமிழ்த் தரப்பு ஏலவே குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1072&fbclid=IwAR2JA1cxrtp-3bgRu3JRHxBwZVuQLySMq2QplZcL7mBLlNmhyJG_gB7R3Hc

Link to comment
Share on other sites

இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் புத்த மதத்திற்கு மாறினால் மொழியையும் நிலத்தையும் தக்கவைக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் இலங்கையில் எதுவும் செய்யலாம்! 

மதம் மாறினவையள் தான் இன்று பெரும்பான்மை சிங்களவர்களாகியுள்ளதாக நான் கருதுகிறேன்.

 

Link to comment
Share on other sites

17 hours ago, ampanai said:

இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் புத்த மதத்திற்கு மாறினால் மொழியையும் நிலத்தையும் தக்கவைக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது. 

 

12 hours ago, ஏராளன் said:

அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் இலங்கையில் எதுவும் செய்யலாம்! 

மதம் மாறினவையள் தான் இன்று பெரும்பான்மை சிங்களவர்களாகியுள்ளதாக நான் கருதுகிறேன்.

 

ஐம்பெரும் காப்பிய காலம் நினைவுக்கு வருகிறது. காவிரி பூம்பட்டணம் செழித்து ஓங்கிய காலம் அது. பின்னர் சோழர் காலத்தில் பௌத்தம் அழிக்கப்பட்ட சிங்களமும் பாளியும் தான் பௌத்தத்தை பாதுகாத்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த நிலத்தில் சொந்த இனத்தால் கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டும்.தேர் வடம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டு பதிலாய் பொக்லைன் இயந்திரமூலம் இழுக்கப்பட்டும் அவமானபடுத்தபடும்  தாயக தமிழர்கள்  பெளத்ததிற்கு மாறி இதுபோன்ற விகாரைகளில் போய் நிம்மதியாய் வழிபாடு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு..

புல்டோசரையும் பொக்லைனையும்விட சக தமிழன் தரம் குறைந்தவனென்றால் புத்தரை தொழுவதில் ஒன்றும் தப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

சொந்த நிலத்தில் சொந்த இனத்தால் கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டும்.தேர் வடம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டு பதிலாய் பொக்லைன் இயந்திரமூலம் இழுக்கப்பட்டும் அவமானபடுத்தபடும்  தாயக தமிழர்கள்  பெளத்ததிற்கு மாறி இதுபோன்ற விகாரைகளில் போய் நிம்மதியாய் வழிபாடு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு..

புல்டோசரையும் பொக்லைனையும்விட சக தமிழன் தரம் குறைந்தவனென்றால் புத்தரை தொழுவதில் ஒன்றும் தப்பில்லை.

உண்மைதான்.தமிழினம் தனக்குத்தானே சூனியம் வைத்து அழிந்து கொண்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்துவும் எமது மதம் இல்லை.

பெளத்தமும் எமது மதமில்லை.

தமிழுக்கு, தமிழர்க்கு என ஒரு நிறுவன மயப்பட்ட மதம் இருந்திருக்கவில்லை.  இயற்கையையும், மூதாதையையும் வழிபட்ட நம் இனத்தில், இறை எனும் தத்துவம் இருந்தது ஆனால் நிறுவனமயப்பட்ட மதம் இருக்கவில்லை.

இந்த வெற்றிடத்தை இந்து (பிரம்மணியம்), சமண, பெளத்த, கிறீஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் நிரப்பி கொண்டன.

தமிழர்களின் பெரும்பான்மை மதமாக எப்போதும் பிரம்மணியம்தான் இருந்தது என்றில்லை.

வர்ணாசிரம அடிப்படையில் அமைவதால் இந்து சமயத்தில், மானம் உள்ள எந்த தலித்தும் இருக்க மாட்டன்(ள்) என்பதும் உண்மையே.

எனவே இன்னொரு முறை மத அடையாளத்தை மாற்றுவதால், நம் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க முடியும் என்றால் ஏன் அப்படி செய்ய கூடாது? என்ற கேள்வியில் நியாயம் இருந்தாலும்,

1. ஆக்கிரமிப்புக்கு அடி பணிந்து எம் தற்போதைய மத அடையாளத்தை விட்டு கொடுப்பது இழுக்கில்லையா?

2. நீர்கொழும்பு-மன்னார் வரை கத்தோலிக்கராக மாறிய தமிழர், ஈற்றில் இன மொழி அடையாளத்தையும் இழந்துவிட்டது போல் எமக்கும் ஆகாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

D_FpVltXUAApfP_.jpgD_FpVlvW4AAZ7pQ.jpgD_FpVlvX4AAs6dW.jpg

ஈழத்தில் 11 ஆம் வகுப்பு வரை சமய பாடம் ஒரு கட்டாய பாடம். நாங்கள் இந்துக்கள் அல்ல, சைவர்கள்.

 

Link to comment
Share on other sites

எமது மக்கள் ஒரு நலிவுற்ற நிலையில் இன்று உள்ளார்கள்.


தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, அரங்கேறும் நில அகபரிப்பு, பறிபோகும் வாழ்வாதாரங்கள்.
வறுமை, விரக்தி, யாருமே அற்ற நாதி நிலை.

இந்த நிலைமையில் நாளைக்கு எவ்வாறு தனி நபராக, குடும்பமாக, சமூகமாக வாழ்வை தக்கவைத்து வாழ்வது என விடை கண்டால் மட்டுமே, வாழ்ந்தால் மட்டுமே, நாளைமறுநாள் பற்றி யோசிக்க மக்களும் நிலமும் இருக்கும்.

சிங்கள குயேற்றத்தையும் கொஞ்சம் குறைக்கலாம். மொழியை ஒரு பிரேதச ரீதியாக தக்கவைக்கலாம்.

இதை விட மாற்று வழிகள் இருக்கும் என்றால் அவையும் மக்களால், மக்கள் விரும்பிகளால் நிச்சயம் ஆராயப்படல் வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

எமது மக்கள் ஒரு நலிவுற்ற நிலையில் இன்று உள்ளார்கள்.


தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, அரங்கேறும் நில அகபரிப்பு, பறிபோகும் வாழ்வாதாரங்கள்.
வறுமை, விரக்தி, யாருமே அற்ற நாதி நிலை.

இந்த நிலைமையில் நாளைக்கு எவ்வாறு தனி நபராக, குடும்பமாக, சமூகமாக வாழ்வை தக்கவைத்து வாழ்வது என விடை கண்டால் மட்டுமே, வாழ்ந்தால் மட்டுமே, நாளைமறுநாள் பற்றி யோசிக்க மக்களும் நிலமும் இருக்கும்.

சிங்கள குயேற்றத்தையும் கொஞ்சம் குறைக்கலாம். மொழியை ஒரு பிரேதச ரீதியாக தக்கவைக்கலாம்.

இதை விட மாற்று வழிகள் இருக்கும் என்றால் அவையும் மக்களால், மக்கள் விரும்பிகளால் நிச்சயம் ஆராயப்படல் வேண்டும்.  

அந்த தமிழ் தலைவர்கள் என்ன செய்கின்றார்கள்? ஆட்சியை தக்க வைப்பதில் கவனம் செலுத்துகின்றார்களோ? இலங்கையின் ஆட்சியை நிர்மாணிக்கும் வல்லமை பெற்றவர்கள் தன் இனத்தின் தலைவிதியை மாற்ற முடியாத  பொய்யர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

D_FpVltXUAApfP_.jpgD_FpVlvW4AAZ7pQ.jpgD_FpVlvX4AAs6dW.jpg

ஈழத்தில் 11 ஆம் வகுப்பு வரை சமய பாடம் ஒரு கட்டாய பாடம். நாங்கள் இந்துக்கள் அல்ல, சைவர்கள்.

 

இதே பாடத்திட்டம்தான் இலங்கையில் தமிழர் வந்தேறிகள் என்றும், தமிழ் மன்னன் முந்து சிவனின் மகன் ஒரு சிங்கள மன்னம் எண்டும் கூட எமக்கு படிபிச்சது. அதுக்காக அதையும் ஏற்போமா?

சைவம் எமது மதம் என்போரே,

1. முதன் முதலில் சைவம் என்ற சொல் எந்த தமிழ் இலக்கியத்தில், எந்த கல்வெட்டில் வந்தது?

2. சைவம் எமது வாழ்வின் ஆரம்ப சமயம் எனில், ஏன் எமது சங்க இலக்கியங்கள் சைவ இலக்கியங்களாக இல்லை?

சைவமோ, வைணவமோ, காணபத்யமோ, சாக்தமோ, செளமாரமோ இவற்றை சாம்பாராக்கி ஆதி சங்கரர் உருவாக்கிய “இந்து” வோ எமது மதம் அல்ல.

இஸ்லாத்துக்கு முந்திய அரேபியர்களை போல எமக்கும், நிறுவனமயப்படாத, உள்ளுர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப இடத்துக்கு இடம் வேறு பட்ட ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் மதம் இருக்கவில்லை. 

இப்போதைய அந்தமான் பழங்குடிகளுக்கு, அமேசன் பழங் குடிகளுக்கு எப்படி நிறுவன மயப்பட்ட மதம் இல்லாமல் ஆனால் இறையியல் இருக்கின்றதோ, அப்படி.

இந்த பண்டைதமிழர் இறையியலை முதலில் ஆக்கிரமித்து அழித்தொழித்தது பிரம்மணியம். எம் கடவுளாரை காட்டு மிராண்டி ஆக்கி, எம் வணக்க முறையை கவிச்சி என்றாக்கி. எங்கள் குறு நிலத் தெய்வங்களான முருகனை தங்கள் சிவனுக்கு இரண்டாம் மகனாக சுவீகரித்து, எம் மேல் ஆக்கிரமிப்பு மூலம் வலுக் கட்டயமாக அமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பே சைவம்/இந்து எல்லாமே.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளனின் மொழியில், அவன் முறையில் அவனை கடவுளுக்கும் நமக்குமான ஏஜெண்டாக கொண்டு வழிபட்டு, எம் இலக்கியமும், பக்திமார்க்கம் என்று பிரம்மணிய ஆசான்களின் நாயன்மாரின் வழிப்பட்டு போன பின், இப்போ நாமே ஆக்கிரமிப்பாளனின் மதத்தை தலையில் சுமந்து “நான் இந்து என மார்தட்டுகிறோம்”.

நிற்க,

இதேபோல் இப்போ நாமெல்லாம் தமிழ் பெளத்தராக மாறிவிட்டால், இன்னும் ஒரு 100 வருடத்தில் இன்னொரு சின்ன குமாரசாமி வந்து “நான் தமிழ் பெளத்தன்” என்று மார்தட்டி விட்டுப் போகட்டுமே?

தமிழ் தப்பினால் போதாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதங்கள்  புகுத்தப்படும் போது வேண்டாத மொழிகளும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் புகுத்தப்படுகின்றது. இதுதான் ஐரோப்பியர்களின் வணிக படையெடுப்புகளிலும் நடந்தது.
இன்று  இலங்கையின் தமிழ் பிரதேசங்களிலும் இந்திய தமிழ் நாட்டிலும் ஒரு நாடு  எனும் பெயர்ல் சிறப்பாக நடந்தேறி வருகின்றது.

ஈழத்தமிழன் மதவெறி பிடித்தவனல்ல. ஆனால் மொழி சிதையும் போது மதத்தை கெட்டியாக பிடிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை.......

main photo

புத்தமதம் ஏன் தமிழை அரவணைக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால் ஏன் சைவம் எமது மதம் இல்லை என்பது தெளிவாக விளங்கும்.

1. எமது பழ வகைகள் எவை? மா பலா வாழை. ஏன் சங்க இலங்கியங்களிலோ, கல்வெட்டுகளிலோ அப்பிள் திராட்சை பற்றி ஏதுமில்லை? ஏனென்றால் அவை எம் நிலத்துக்குரியன அல்ல. அவை பற்றி தமிழுலகு அப்போது அறிந்திருக்கவில்லை.

2. எமக்கு ஏன் நானிலங்கள் மட்டும்( முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி). ஏனென்றால் பாலை எமக்கு அந்நியமானது. தமிழர் நிலத்தில் பாலை இல்லை.

3. ஏன் தமிழ் இலக்கியங்களில் பனிச் சரிவு பற்றிய பதிவுகள் இல்லை ஆனால் கடற்கோள் பற்றிய பதிவு இருக்கிறது? ஏனென்றால் நாம் பனிசூழ் பகுதியில் வாழவில்லை.

4. சரி அப்போ சைவத்தின் முழுமுதற் கடவுள் யார்? சிவன்.

5. சிவன் எங்கே இருக்கிறார்? வடக்கே, திபெத்தில், கைலாய மலையில்.

6. எனது, மொழி, உணவு, இலக்கியம், பண்பாடு எல்லாமே என்னை சுற்றியே இருக்க , என் மதம் மட்டும் எப்படி கைலாயத்தில் இருந்து வந்தது?

7. அப்போ எனது மதம் இங்கே உருவாகவில்லை, கைலாயத்துக்கு அருகில் இருந்த யாரோ என் நிலத்துக்கு வந்து எனக்கு என்மதம் பற்றி சொல்லி என்னையும் மதம் மாற்றி இருக்கிறார்களா?

8. அப்போ நான் இப்படி மாறும் முன் என்னிடம் இருந்த இறையியல் என்ன?

9. அதுதானே என் உண்மையான மதம்? அல்லது நம்பிக்கை?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

மதங்கள்  புகுத்தப்படும் போது வேண்டாத மொழிகளும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் புகுத்தப்படுகின்றது. இதுதான் ஐரோப்பியர்களின் வணிக படையெடுப்புகளிலும் நடந்தது.
இன்று  இலங்கையின் தமிழ் பிரதேசங்களிலும் இந்திய தமிழ் நாட்டிலும் ஒரு நாடு  எனும் பெயர்ல் சிறப்பாக நடந்தேறி வருகின்றது.

ஈழத்தமிழன் மதவெறி பிடித்தவனல்ல. ஆனால் மொழி சிதையும் போது மதத்தை கெட்டியாக பிடிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை.......

main photo

புத்தமதம் ஏன் தமிழை அரவணைக்கவில்லை?

ஒரு காலத்தில் பெளத்தமே தமிழின் பிரதான மதம். பிரமணியத்துக்கும் பெளத்ததுக்குமான சண்டையில் தமிழில் இருந்து பெளத்தம் விரட்டப் பட்டது. இந்திய துணைக் கண்டத்தின் கடைக்கோடி வரை துடைத்தெறியப்பட்ட பெளத்தம், சிங்களவர் மத்தியில் மட்டும் தங்கியது. அங்கேயாவது தன் இருப்பை தக்க வைக்க வேண்டும் என்ற அவதியில், தேரர்கள் மூலம், பெளத்தத்தை சிங்கள இன அபிமானத்துடன் சேர்த்து, பெளத்த-சிங்கள அடையாளத்தை கட்டி எழுப்பியது. நீ சிங்களவன் என்ற அடையாளத்தை பேண வேண்டுமா? அப்போ பெளத்தனாயிரு. ஒன்றை இழந்தால் மற்றதயும் இழப்பாய் என்று பயமுறுத்தி, பெளத்தம் சிங்களத்தில் குருவிச்சை போல ஒட்டுண்ணி வாழக்கை வாழ்கிறது.

தன் இருப்பை சிங்களத்திடம் பேண, பெளத்தம் பிரம்மணியம் சேர் தமிழை, தமிழரை கருவறுக்க வேண்டிய பரம்பரை வைரியாக சிங்களத்திடம் காட்டுகிறது.

புத்தம் ஏன் தமிழை ஆதரிக்கவில்லை என்பதற்கான பதில் மட்டுமில்லை. சிங்கள-பெளத்த மஹாவம்ச மனோநிலை என்றால் என்ன, எப்படி உருவானது என்பதற்கும் இதுவே விளக்கம்.

Link to comment
Share on other sites

நிலமா? மதமா? மொழியா? என கேட்டால் முதலில் நிலம்தான், நிலம் மட்டும்தான்.


நிலம் இருந்த படியால்தான் புத்தமதம் அன்று தப்பியது.

இன்று தமிழன் நூறு வருடங்கள் பின்னரும் இலங்கை தீவில் இருக்க இன்று நிலத்தை தக்க வைக்கவேண்டும். 

அதற்கு அரசியல்வாதிகளை மட்டும் மக்கள் நம்பி இருக்க கூடாது.

  • ஒன்று இணைந்த போராட்டங்கள்,
  • சுயநலம் அற்ற தலைமைகளை உருவாக்குதல்,
  • தலைமைகள் மீதான விழிப்புணர்வை வளர்த்தல்.
  • குடும்ப பெண்களை முன்வைத்து பொருளாதார வளத்தை உருவாக்குதல் ......

என என் கருத்தை கூறினாலும், தாயக மக்கள் தான் இறுதியில் தமக்கு சரியான பாதைகளை தெரிந்து அவற்றை முன்னெடுக்கவேண்டும். அதற்கு புலம்பெயர் மக்கள் உதவவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ampanai said:

நிலமா? மதமா? மொழியா? என கேட்டால் முதலில் நிலம்தான், நிலம் மட்டும்தான்.


நிலம் இருந்த படியால்தான் புத்தமதம் அன்று தப்பியது.

இன்று தமிழன் நூறு வருடங்கள் பின்னரும் இலங்கை தீவில் இருக்க இன்று நிலத்தை தக்க வைக்கவேண்டும். 

அதற்கு அரசியல்வாதிகளை மட்டும் மக்கள் நம்பி இருக்க கூடாது.

  • ஒன்று இணைந்த போராட்டங்கள்,
  • சுயநலம் அற்ற தலைமைகளை உருவாக்குதல்,
  • தலைமைகள் மீதான விழிப்புணர்வை வளர்த்தல்.
  • குடும்ப பெண்களை முன்வைத்து பொருளாதார வளத்தை உருவாக்குதல் ......

என என் கருத்தை கூறினாலும், தாயக மக்கள் தான் இறுதியில் தமக்கு சரியான பாதைகளை தெரிந்து அவற்றை முன்னெடுக்கவேண்டும். அதற்கு புலம்பெயர் மக்கள் உதவவேண்டும்.

உங்களை போல நானும் முன்பு சிந்திப்பதுண்டு. ஆனால் நீங்கள் ஒன்றை கவனிக்க தவறுகிறீர்கள்.

சிங்கள-பெளத்தம் என்பது இரெட்டைக் குழல் துப்பாக்கி. சிங்கள மொழியின் ஆதிக்கம். பெளத்த மதத்தின் ஆதிக்கம். ரெண்டுமே ஒன்றுக்கு ஒன்று குறையாத குறிக்கோள்கள்.

அதனால்தான் தமிழில், தமிழால் இலங்கையில் பெளத்தம் வளர்க்க அரசோ, பிக்குகளோ முனவதில்லை.

மதம் ➡️ மொழி ➡️ நிலம்

மொழி ➡️ மதம் ➡️ நிலம் 

எந்த வகையிலும் தமிழ்-இந்து/கிறீஸ்த பகுதியை, சிங்கள-பெளத்த பகுதியாக மாற்றும் மட்டும், மஹாவம்ச மனோநிலையின் பசி அடங்குமா என்பது கேள்விக் குறியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஒரு காலத்தில் பெளத்தமே தமிழின் பிரதான மதம். பிரமணியத்துக்கும் பெளத்ததுக்குமான சண்டையில் தமிழில் இருந்து பெளத்தம் விரட்டப் பட்டது. இந்திய துணைக் கண்டத்தின் கடைக்கோடி வரை துடைத்தெறியப்பட்ட பெளத்தம், சிங்களவர் மத்தியில் மட்டும் தங்கியது. அங்கேயாவது தன் இருப்பை தக்க வைக்க வேண்டும் என்ற அவதியில், தேரர்கள் மூலம், பெளத்தத்தை சிங்கள இன அபிமானத்துடன் சேர்த்து, பெளத்த-சிங்கள அடையாளத்தை கட்டி எழுப்பியது. நீ சிங்களவன் என்ற அடையாளத்தை பேண வேண்டுமா? அப்போ பெளத்தனாயிரு. ஒன்றை இழந்தால் மற்றதயும் இழப்பாய் என்று பயமுறுத்தி, பெளத்தம் சிங்களத்தில் குருவிச்சை போல ஒட்டுண்ணி வாழக்கை வாழ்கிறது.

அந்த கும்பலில் வேற்று மதத்தவர்களும் இணைந்து பணியாற்றுகின்றார்கள் அல்லவா?
 

Link to comment
Share on other sites

இனஅழிப்புக்கு பிந்திய தமிழீழம் மீதான ஆக்கிரமிப்பின் குறீயீடு சம்புத்தி

 

வடதமிழீழம்: யாழ்ப்பாணம் – நாவற்குழியில் முதல் சிங்கள குடியேற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பௌத்த விகாரை திறந்துவைக்கப்படவுள்ளது.

இன அழிப்பு யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்டமான பௌத்த விகாரை இதுவாகும். இந்த விகாரையின் திறப்பு விழா இன்று இடம்பெறவுள்ளது.

சம்புத்தி சுமன என பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரை ஶ்ரீலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இன்றைய திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பௌத்த மதகுருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கு முன்னோடியாக, குருநாகல் நெவகட செல்கிரி விகாரையிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு நாவற்குழி நோக்கி பேரணியாக புறப்பட்ட விகாரைக்கான புனித தாது, அநுராதபுரம் தூபராம சைத்திய விகாரையை நேற்று இரவு வந்தடைந்தது.

2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நாவற்குழி ரயில் நிலையத்திற்கு அருகில், நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் அத்துமீறி குடியிருந்தனர்.

தமிழர்களுக்கு எதிரான மனநிலையுடன், நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் சிங்களவர்கள் அத்துமீறி குடியமர்த்தப்பட்டனர்.

அந்த மக்களுக்கு நிரந்தர குடியிருப்புக்களை அமைக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஹெல உறுமய உதவிபுரிந்தது.

பின்னர் விகாரை அமைக்கும் பணி ஆரம்பித்தபோது, சாவகச்சேரி பிரதேசசபையினால் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன்பின்னர் அமைச்சர் சஜித்தின் தலையீட்டையடுத்து, சாவகச்சேரி பிரதேசசபையும் விகாரை அமைக்க அனுமதியளித்தது.

தமிழர்கள் வாழும் பகுதிகள் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தலைமைகளினால் பரவலாக குற்றம் சுமத்தப்பட்டுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் இவ்வாறு விகாரை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.thaarakam.com/news/79246?fbclid=IwAR0R6qeBzW2FdqaN2w16b4vmY2R90NpcZXbeZkizw1WbI8Crea5t6sGk4zw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

அந்த கும்பலில் வேற்று மதத்தவர்களும் இணைந்து பணியாற்றுகின்றார்கள் அல்லவா?
 

தமிழ்-இந்து/தமிழ்-கிறிஸ்தவர்/முஸ்லீம்களின் கதையை முடித்த பின் அவர்களின் கதை முடிவும் தொடங்கும்.

எ. எல் குணசேகர என்று ஒரு வக்கீல், பக்கா இனவாதி. கீழ்நாட்டு, கிறீஸ்தவ சிங்களவர். 94-99 வரையில் தொலைகாட்சி பேட்டிகளில், சும்மா தூள்பறக்க இனவாதம் பேசுவார். குமார் பொன்னருக்கும் இவருக்கும் தொலைக்காட்சியில் நடந்த விவாதங்களில் அத்தனை சூடு இருக்கும்.

பின்னர் எதோ ஒரு விடயத்தில், ஒரு சிங்கள ஊரில் வைக்கப்பட்ட மாதா சிலை விவகாரம் என நினக்கிறேன், இவர் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை பேசப் போக, முழு பெளத்த-சிங்கள இயந்திரமுமே இவருக்கு எதிராக திரும்பியது. 

துரோகிபட்டம், போத்துகீசருக்கு மூதாதையர் பாலியல் சேவகம் என்பதாக கிழிச்சு தொங்க விடப்பட்டார்😂.

கடைசியில் நீ சிங்களவனே இல்லை என்றெல்லாம் சொல்லி, எனக்கா இந்த நிலை என ஆள் கண்ணீர்விட்டது, பொது வெளியில்.

 

Link to comment
Share on other sites

22 hours ago, goshan_che said:

உங்களை போல நானும் முன்பு சிந்திப்பதுண்டு. ஆனால் நீங்கள் ஒன்றை கவனிக்க தவறுகிறீர்கள்.

சிங்கள-பெளத்தம் என்பது இரெட்டைக் குழல் துப்பாக்கி. சிங்கள மொழியின் ஆதிக்கம். பெளத்த மதத்தின் ஆதிக்கம். ரெண்டுமே ஒன்றுக்கு ஒன்று குறையாத குறிக்கோள்கள்.

அதனால்தான் தமிழில், தமிழால் இலங்கையில் பெளத்தம் வளர்க்க அரசோ, பிக்குகளோ முனவதில்லை.

மதம் ➡️ மொழி ➡️ நிலம்

மொழி ➡️ மதம் ➡️ நிலம் 

எந்த வகையிலும் தமிழ்-இந்து/கிறீஸ்த பகுதியை, சிங்கள-பெளத்த பகுதியாக மாற்றும் மட்டும், மஹாவம்ச மனோநிலையின் பசி அடங்குமா என்பது கேள்விக் குறியே.

சிந்திக்க வைக்கும் கருத்துக்கள். மேலதிக பதில்கள் இப்பொழுது என்னிடம் இல்லை. 

நிலத்தில் பொருளாதார பலத்துடன் இருந்தால் அது மற்றைய கதவுகளை திறக்கும்.  ஆனால், பொருளாதார பலம் பெற எமக்கு இதர கதவுகள் திறந்து இருக்க வேண்டும் என்பதும் உண்மை. 

எவரும் வெற்றிபெற்றவர்களை தான் பின் தொடருவார்கள். அந்த வகையில் பெரும்பான்மை சமூகம் இன்று அந்த வெற்றி மன வட்டத்துள் உள்ளது.  

 

Link to comment
Share on other sites

On 7/11/2019 at 3:48 AM, nunavilan said:

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 45 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. 

 

On 7/12/2019 at 12:48 PM, குமாரசாமி said:

உண்மைதான்.தமிழினம் தனக்குத்தானே சூனியம் வைத்து அழிந்து கொண்டிருக்கின்றது.

நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றத்திற்கு அத்தியடிக் குத்தியன் மூலகாரணம் என்று வந்த செய்திகள் படித்த ஞாபகம் உள்ளது.

Link to comment
Share on other sites

யாழ். நாவற்குழியில்

சமித்தி சுமண விகாரை திறப்பு

யாழ்ப்பாணம், நாவற்குழியில் அமைக்கப்பட்ட நல்லிணக்க விகாரை என அழைக்கப்பட்ட சமித்தி சுமண விகாரை இன்று (13) பௌத்த மத சம்பிரதாயங்களுக்கு அமைய திறந்து வைக்கப்பட்டது.

இராணுவம் உட்பட முப்படைகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம், நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், யாழ்ப்பாண நகரின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றத்திற்கு அருகில் கட்டப்பட்ட மிகப்பெரிய விகாரையான சமித்தி சுமண விகாரை இவ்வாறு இன்று (13) திறந்து வைக்கப்பட்டது.

 

குறித்த குடியேற்றத்தில் சுமார் 9 சிங்கள குடும்பங்களே வசிப்பதாக குறித்த பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள தென்மராட்சி பிரதேச சபையின் தலைவர் வாமதேவன் கந்தையா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள குடியேற்றத்தில் இராணுவத்தினால் 28 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அதில் சுமார் 20 பயன்பெறும் குடும்பங்கள் அங்கு தங்கியிருப்பதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விகாரைக்கான புனித தாது குருணாகல் நெவகட செல்கிரி விகாரையில் இருந்து இன்று (13) மாலை எடுத்து வரப்பட்டது.

நாவற்குழி சந்தியில் இருந்து, விகாரைக்கான புனித தாது மற்றும், பௌத்த மத அனுஷ்டான முறைப்படி, தீப் பந்தம், பௌத்த கொடி, ஆலவட்டங்களுடன், பிக்குகளின் தலைமையில் புனித தாது, விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வடமேல் மாகாணம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு, சாது எனும் நாமத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட விகாரையின் மேல் , புனித தாது வைக்கப்பட்டது.

 

இந்த புனித தாதுவை, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி தர்ஷண ஹெட்டியாராச்சி, உட்பட முப்படைகளின் தளபதிகள், உட்பட விகாராதிபதிகள், விகாரையின் மேல் வைத்தனர்.

அதன் பின்னர், பௌத்த சமய விதிமுறைகளின் படி, பிரித் ஓதப்பட்டது.

இவ்விகாரை திறப்பு விழாவில், புனித தாது எடுத்து வரப்பட்டது முதல் விகாரையின் மேல் வைக்கும் வரை, இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.thinakaran.lk/2019/07/13/உள்நாடு/37162/யாழ்-நாவற்குழியில்-சமித்தி-சுமண-விகாரை-திறப்பு

யாழà¯. நாவறà¯à®à¯à®´à®¿à®¯à®¿à®²à¯ à®à®®à®¿à®¤à¯à®¤à®¿ à®à¯à®®à®£ விà®à®¾à®°à¯ திறபà¯à®ªà¯-Jaffna Navatkuli Sammidhi Sumana Vihara Opening

யாழà¯. நாவறà¯à®à¯à®´à®¿à®¯à®¿à®²à¯ à®à®®à®¿à®¤à¯à®¤à®¿ à®à¯à®®à®£ விà®à®¾à®°à¯ திறபà¯à®ªà¯-Jaffna Navatkuli Sammidhi Sumana Vihara Opening

Link to comment
Share on other sites

On 7/12/2019 at 7:35 AM, goshan_che said:

8. அப்போ நான் இப்படி மாறும் முன் என்னிடம் இருந்த இறையியல் என்ன?

9. அதுதானே என் உண்மையான மதம்? அல்லது நம்பிக்கை?

தமிழரின் இறையியலில் வைரவர் முக்கியமானவர். முருகனும் தமிழர் கடவுள்.

சிங்கள மொழி உருவாக முதல் சிங்களவரும் தமிழ் பேசும் முருக பக்தர்கள்.

பௌத்தம் தமிழகத்தை தன்னகத்தே கொண்ட போது சிங்களவரும் பௌத்தராகினர். 

பின்னர் பிராமணருக்கு ஆதரவாக பௌத்தத்தை சோழர் அழித்த போது தமிழகம் சைவமானது.

ஆனால் சிங்களவரை தமிழ் மொழி மூலம் சைவராக்க முடியவில்லை. 

தமிழரின் பண்டைய கடவுள்களான முருகன், வைரவர் கோவில்களை அமைத்து தமிழர் பண்பாடு மீண்டும் சிறக்க வேண்டும்.

தமிழ் பௌத்தத்தை உயிர்ப்பித்து சிங்கள பௌத்தத்தின் ஏகாதிபத்தியத்தையும் மகாசங்கத்தின் வல்லாதிக்கத்தையும் 

கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

தமிழரின் இறையியலில் வைரவர் முக்கியமானவர். முருகனும் தமிழர் கடவுள்.

சிங்கள மொழி உருவாக முதல் சிங்களவரும் தமிழ் பேசும் முருக பக்தர்கள்.

பௌத்தம் தமிழகத்தை தன்னகத்தே கொண்ட போது சிங்களவரும் பௌத்தராகினர். 

பின்னர் பிராமணருக்கு ஆதரவாக பௌத்தத்தை சோழர் அழித்த போது தமிழகம் சைவமானது.

ஆனால் சிங்களவரை தமிழ் மொழி மூலம் சைவராக்க முடியவில்லை. 

தமிழரின் பண்டைய கடவுள்களான முருகன், வைரவர் கோவில்களை அமைத்து தமிழர் பண்பாடு மீண்டும் சிறக்க வேண்டும்.

தமிழ் பௌத்தத்தை உயிர்ப்பித்து சிங்கள பௌத்தத்தின் ஏகாதிபத்தியத்தையும் மகாசங்கத்தின் வல்லாதிக்கத்தையும் 

கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்.

 

இதனால்  கள்ளம் கபடமறியா எமது முஸ்லீம் அன்புச்சகோதரர்களுக்கு சொல்ல விளைவது என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.