Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை மாணவர் படுகொலை – சட்டமா அதிபரின் நடவடிக்கையை, மன்னிப்புச் சபை வரவேற்றது…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாணவர் படுகொலை – சட்டமா அதிபரின் நடவடிக்கையை, மன்னிப்புச் சபை வரவேற்றது…

August 10, 2019

trinco-students.jpg?resize=800%2C485திருகோணமலையில் 2006 ஜனவரியில் விசேட அதிரடிப்படையினரால் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற 5 தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கையின் சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்றிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, விசாரணைகள் பயனுறுதி உடையவையாக இருக்க வேண்டுமானால் சில சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் கூறியிருக்கிறது.

இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்ட விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 13 வீரர்களை, அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையென்ற காரணத்தைக் கூறி திருகோணமலை மேல் நீதிமன்றம் விடுதலை செய்தமையை அடுத்தே இந்த மீள் விசாரணைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும், இந்தக் கொலைகள் தொடர்பான நீதி கிடைக்கப்பெறுவதற்கும் முழுமையானதும், கண்டிப்பானதும், பயனுறுதி உடையதுமான பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்பதையும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30(1) தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பன மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை உள்நாட்டு நீதிமன்ற முறைமை ஒன்றினூடாக அல்லது விசேட சட்டவாதி ஒருவரை உள்ளடக்கிய நீதிமன்றப் பொறிமுறை ஊடாக விசாரணை செய்து கொலைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச்செய்வதற்கு சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் கடப்பாடு உடையதாக இருக்கின்றது என்று கூறியிருக்கும் மன்னிப்புச்சபை, திருகோணமலை மாணவர்கள் கொலைகள் குறித்து பயனுறுதியுடைய முறையில் விசாரிப்பதற்கும், பொறுப்புக்கூற வைப்பதற்குமாக சாட்சிகள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் தற்போது வசிக்கின்ற நாடுகளிலிருந்து பரஸ்பர சட்ட உதவிகளைப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

திருகோணமலையில் 5 மாணவர்களினதும் சடலங்களைப் புகைப்படம் எடுத்த பத்திரிகையாளரான சுப்ரமணியம் சுகிர்தராஜன் சம்பவத்திற்கு ஒருசில வாரங்கள் கழித்து கொலை செய்யப்பட்டார் என்பதும், கொலையுண்ட மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தையாரான டாக்டர் கே.மனோகரன் கொலை அச்சுறுத்தல்களை அடுத்து நாட்டைவிட்டுத் தப்பியோட நிர்பந்திக்கப்பட்டார். இந்த வழக்கில் சாட்சியமளிக்கும் பட்சத்தில் தான் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தை அவர் தொடர்ந்தும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொலையுண்ட ஏனைய மாணவர்களின் குடும்பத்தவர்களும் சம்பவத்தில் உயிர் தப்பிய இளைஞர்களும் கூட இலங்கையை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாலும், சாட்சிகளாலும் வெளிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அச்சங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இலங்கைக்கு வெளியே இருக்கும் சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களும் விசாரணைகளில் பங்கேற்பதற்கு வசதி செய்வதற்காக 2015 ஆம் ஆண்டின் குற்றச்செயல் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் பாதுகாப்பிற்கான சட்டத்தில் இலங்கை அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை கூறியிருக்கிறது.

சாட்சிகளும், பாதிக்கப்பட்டவர்களும் தற்போது வசிக்கின்ற வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்களிலிருந்து சாட்சியளிப்பதற்கு வசதி செய்வதற்கும் அப்பால் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யக்கூடியதாக அந்தச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் மன்னிப்புச்சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/2019/128564/

  • கருத்துக்கள உறவுகள்

Trinco-1.jpg

5 மாணவர்கள் படுகொலை விவகாரம் – சட்டமா அதிபரின் தீர்மானத்திற்கு மன்னிப்புச் சபை வரவேற்பு

திருகோணமலையில் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை சர்வதேச மன்னிப்புச் சபை வரவேற்றுள்ளது.

அத்தோடு அந்த விசாரணைகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் சில சீர்த்திருத்தங்கள் அவசியம் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 13 பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

எனினும் அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையெனக் கூறி அவர்களை திருகோணமலை மேல் நீதிமன்றம் கடந்த மாதம் 3ஆம் திகதி விடுதலை செய்திருந்தது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மீள் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே அவரின் தீர்மானம் வரவேற்கத்தக்கதென சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இந்த கொலைகள் தொடர்பான நீதி கிடைக்கப்பெறுவதற்கும் முழுமையானதும், கண்டிப்பானதும், பயனுறுதி உடையதுமான பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்பதை சர்வதேச மன்னிப்புச்சபை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பன மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை உள்நாட்டு நீதிமன்ற முறைமை ஒன்றினூடாக அல்லது விசேட சட்டவாதி ஒருவரை உள்ளடக்கிய நீதிமன்றப் பொறிமுறை ஊடாக விசாரணை செய்து, கொலைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கு சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் கடப்பாடு உடையதாக இருக்கின்றது என்றும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் தற்போது வசிக்கின்ற நாடுகளிலிருந்து பரஸ்பர சட்ட உதவிகளைப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

கொலையுண்ட மாணவர்களின் குடும்பத்தவர்களும் சம்பவத்தில் உயிர் தப்பிய இளைஞர்களும்கூட இலங்கையைவிட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாலும், சாட்சிகளாலும் வெளிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அச்சங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இலங்கைக்கு வெளியே இருக்கும் சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களும் விசாரணைகளில் பங்கேற்பதற்கு வசதி செய்வதற்காக 2015ஆம் ஆண்டின் குற்றச்செயல் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் பாதுகாப்பிற்கான சட்டத்தில் இலங்கை அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை கேட்டுக்கொண்டுள்ளது.

சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களும் தற்போது வசிக்கின்ற வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்களிலிருந்து சாட்சியளிப்பதற்கு வசதி செய்வதற்கும் அப்பால் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யக்கூடியதாக அந்தச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் மன்னிப்புச்சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

EBlkl1fXsAAPRuq.jpg

http://athavannews.com/5-மாணவர்கள்-படுகொலை-விவகா/

 

"கொலையுண்ட ஏனைய மாணவர்களின் குடும்பத்தவர்களும் சம்பவத்தில் உயிர் தப்பிய இளைஞர்களும் கூட இலங்கையை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாலும், சாட்சிகளாலும் வெளிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அச்சங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இலங்கைக்கு வெளியே இருக்கும் சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களும் விசாரணைகளில் பங்கேற்பதற்கு வசதி செய்வதற்காக 2015 ஆம் ஆண்டின் குற்றச்செயல் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் பாதுகாப்பிற்கான சட்டத்தில் இலங்கை அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை கூறியிருக்கிறது."

இது நடக்காது. சர்வதேசத்தையும் பாதிக்கப்பட்ட உறவுகளின் எதிர்பார்ப்புக்களை இழுத்தடிக்கும் நோக்கமே இதில் உள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்


இந்த அப்பாவி... மாணவர்கள்,  இலங்கை ராணுவத்தால்... 
2006´ம்  ஆண்டில் கொலை செய்யப்பட்டார்கள். இன்று 2019´ம்  ஆண்டு.
13 ஆண்டுகள் வரை... சர்வதேச அமைப்பு களால்  கூட,
நீதி...  கிடைக்கவில்லை என்றால்...

பிறகு, என்ன.... ##க்கு...  உங்கள்,  அமைப்பும், அறிக்கையும் எமக்கு. 

இவர்களை... இழந்த, பெற்றோர்கள்...  பிள்ளைகளை இழந்த பின்பும்,
ஐநாவிடமும், சர்வதேச மன்னிப்பு சபையிடமும்... முறையிட்டார்கள்.
அவர்களின் வேதனையிலும்... பொருட் செலவை கூட பொருட்படுத்தாமல்.... 
உங்களிடம், வந்தது ஏன்....?
நீதி  கிடைக்கும் என்ற.. நப்பாசை தானே....  

காணாமல் போன.... பிள்ளைகளை தேடிய, 6 தாய் மார்கள்
அவர்களின்... பிள்ளைகளை  கண்டு பிடிக்க போராட்டம் நடத்தியே...  இறந்து விட்டார்கள்.
அந்தப் பாவம்.... உங்கள் ஒருவரையும், சும்மா விடாது. 
இது.... கதையல்ல, சாபம்.

ஐக்கிய நாடுகள் சபையோ.... மனித உரிமைகள் அமைப்போ....
தமிழர் பக்கம் இல்லை என்பதே... உண்மை. 🤬

1 hour ago, தமிழ் சிறி said:

ஐக்கிய நாடுகள் சபையோ.... மனித உரிமைகள் அமைப்போ....
தமிழர் பக்கம் இல்லை என்பதே... உண்மை. 🤬

எம்மால் மாற்ற முடியவில்லை என்பதும் உண்மை !

5 hours ago, தமிழ் சிறி said:

ஐக்கிய நாடுகள் சபையோ.... மனித உரிமைகள் அமைப்போ....
தமிழர் பக்கம் இல்லை என்பதே... உண்மை. 🤬

அவர்கள் பேருக்கு தான் அறிக்கை விடுவது. மற்றும்படி கொலைகாரர் பக்கம். 😎

8 hours ago, தமிழ் சிறி said:

இலங்கைக்கு வெளியே இருக்கும் சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களும் விசாரணைகளில் பங்கேற்பதற்கு வசதி செய்வதற்கா

முன்னர் Skype மூலம் சாட்சி வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்கள். அதற்கு பின்னர் என்ன நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்  விசாரணையை தொடங்கி 10 வருடங்களை இழுத்தடித்து , மீண்டும் அரசுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கும் என்பதில் ஐயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2019 at 6:18 AM, தமிழ் சிறி said:

ஐக்கிய நாடுகள் சபையோ.... மனித உரிமைகள் அமைப்போ....
தமிழர் பக்கம் இல்லை என்பதே... உண்மை. 🤬

தமிழர் பக்கம் எவருமே இல்லை.

On 8/10/2019 at 7:45 AM, ampanai said:

எம்மால் மாற்ற முடியவில்லை என்பதும் உண்மை !

அது ஏன் என்ற கேள்வியை கேட்டு எப்படி வெற்றி பெறலாம் என்று ஆராய முற்பட்டால் நாங்கள் துரோகிகள் ஆகி விடுவோமோ என்ற பயத்தில் பலரும் ஒதுங்கி விட்டனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.