Jump to content

பத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்

சவுதிஅரேபியாவின் முக்கியமான எண்ணெய் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களின் பேச்சாளர் ஒருவர் தாக்குதலிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஹெளதி கிளர்ச்சிக்குழுவினர் தமது அல்மசீரா ஊடகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

aramco.jpg

அப்கேயக் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீதும் குரைஸ் எண்ணெய் வயல்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு 10 ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக யேமனின் கிளர்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யேமனில் தாக்குதல்கள்  தொடர்ந்தால் சவுதிஅரேபியா மீது தாக்குதல்கள் தீவிரமடையலாம் என ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

houthi.jpg

இதனை தவிர்ப்பதற்கு சவுதி அரேபிய அரசாங்கம் எங்களை தாக்காமலிருப்பதே ஒரே வழி எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அப்கெயக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டவேளை எடுக்கப்பட்ட வீடியோக்களில் பின்னணியில் துப்பாக்கி சத்தத்தை கேட்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரம்கோவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்குவைக்கில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

ஆளில்லா விமானதாக்குதல்களை தொடர்ந்து தொழிற்சாலையிலிருந்து பாரிய தீப்பிழம்புகளும் கரும் புகை மண்டலமும் வெளியாவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

sauthi_drone_se14.jpg

இந்த தாக்குதல் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை செய்திகள் வெளியாகாத அதேவேளை இந்த தாக்குதல் காரணமாக மத்தியகிழக்கில் பதற்ற நிலை மேலும் தீவிரமடையும் ஆபத்து உருவாகியுள்ளது என கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

யேமன் கிளர்ச்சியாளர்களிற்கு ஈரான் மறைமுக ஆதரவை வழங்கிவருவதும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி அவர்களிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/64780

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சௌதி அரசின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல்

 
சௌதிபடத்தின் காப்புரிமை Reuters

சௌதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதலால் பெரும் தீ உண்டாகியுள்ளது.

இரான் ஆதரவளிக்கும், ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

எனினும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என சௌதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை நான்கு மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்துள்ளது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சௌதி அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியை சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 1% கிடைக்கிறது.

2006இல் அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அல்-கய்தா நடத்தத் திட்டமிட்ட தற்கொலைத் தாக்குதலை சௌதி காவல் படைகள் முறியடித்திருந்தன.

சௌதி விமானப் படை மற்றும் சௌதி தலைமையிலான கூட்டுப்படை சமீப ஆண்டுகளாக ஏமனில் ஹூதி கிளிர்ச்சியாளர்களுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

2015இல் இருந்து போர் நடந்து வரும் ஏமனில் அதிபர் அப்த்ராப் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சௌதி அரசு உள்ளது.

இன்றைய தாக்குதல்கள் சௌதி அரேபியாவின் ஆதரவைப் பெற்றுள்ள ஏமன் அரசுக்கு எதிராகப் போரிடும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தந்திரோபாய அச்சுறுத்தலை வெளிக்காட்டும் வகையில் இது அமைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக அரம்கோ இருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு வல்லமை பெற்றிருந்தால், அந்த அளவுக்கான வசதிகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-49700918

Link to comment
Share on other sites

"அரம்கோவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்குவைக்கில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது" 

ஈரான் வித்தியாசமாக யேமனில் போராட்டத்தை நகர்த்த ஆரம்பித்துள்ளது. சவூதி என்ற நாடு இயற்கை தந்த வளத்தை வைத்து மிகவும் வசதியாக வாழும் நாடு.  அந்த மூல வருமானத்தில் கை  வைக்கும் முயற்சி. இது சவூதியை ஆத்திரத்திற்கு உள்ளாக்கும்.  

மசகு எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்க நாடு முன்னிலை நாடாக இருப்பதாலும் உலகம் பொருளாதார மந்த நிலை நோக்கி செல்வதாலும், சர்வதேச சந்தையில் விலை இதனால் அதிகரிக்காது !

Link to comment
Share on other sites

10 hours ago, ampanai said:

"அரம்கோவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்குவைக்கில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது" 

ஈரான் வித்தியாசமாக யேமனில் போராட்டத்தை நகர்த்த ஆரம்பித்துள்ளது. சவூதி என்ற நாடு இயற்கை தந்த வளத்தை வைத்து மிகவும் வசதியாக வாழும் நாடு.  அந்த மூல வருமானத்தில் கை  வைக்கும் முயற்சி. இது சவூதியை ஆத்திரத்திற்கு உள்ளாக்கும்.  

மசகு எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்க நாடு முன்னிலை நாடாக இருப்பதாலும் உலகம் பொருளாதார மந்த நிலை நோக்கி செல்வதாலும், சர்வதேச சந்தையில் விலை இதனால் அதிகரிக்காது !

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

Link to comment
Share on other sites

ஆளில்லா விமானதாக்குதலைதொடர்ந்து - சவுதியின் எண்ணெய் உற்பத்தி பெருமளவு பாதிப்பு- சர்வதேச விநியோகத்தில் நெருக்கடி- விலை அதிகரிக்கும் அபாயம்-

 

சவுதிஅரேபியாவின் இரு முக்கிய எண்ணெய் உற்பத்திநிலையங்கள் மீது யேமனின் கிளர்ச்சிக்குழுவினர் மேற்கொண்ட ஆளில்லாத விமானதாக்குதல்கள் காரணமாக சவுதி அரேபியா தனது நாளாந்த எண்ணெய் உற்பத்தி பாரிய பாதிப்பை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஆளில்லா விமானதாக்குதல்கள் காரணமாக நாள் ஒன்றிற்கு நாங்கள் 5.7 மில்லியன் பரல் கச்சா எண்ணெய் மற்றும் வாயு உற்பத்தியை இழக்கவேண்டிய நிலையிலுள்ளோம் என சவுதி அரேபியாவின் எரிசக்தி துறை அமைச்சர் அப்துல்அசீஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

ஒபேக்கின் புள்ளிவிபரங்களின்படி நாள்ஒன்றிற்கு சவுதிஅரேபியா 9.8 மில்லியன் பரல் உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

ஆளில்லா விமானதாக்குதல்கள் காரணமாக இழந்தவற்றை மீளப்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் இந்த தாக்குதல்கள் சவுதி அரேபியாவிற்கு எதிராக மாத்திரம் மேற்கொள்ளப்படவில்லை,சர்வதேச எண்ணெய் விநியோகத்தினையும் பாதுகாப்பையும் இலக்குவைத்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன  இதனால் உலக பொருளாதாரத்திற்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அப்கெய்க் எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையம்  சர்வதேச எண்ணெய் விநியோகத்தை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான இடம் என குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் சர்வதேச சக்தி கொள்கை நிலையத்தின் இயக்குநர் ஜேசன்போர்டொவ் எண்ணெய் விலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதல்களிற்கு யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களிற்கு அதரவு அளித்து வரும் ஈரான் பொறுப்பேற்கவேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரானிய தலைநகர்கள் இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்யும் அதேவேளை ஈரான் சவுதிஅரேபியா  100ற்கும் மேற்பட்ட தாக்குல்களை மேற்கொண்டுள்ளது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ஈரான் சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் மீது எதிர்பாரத தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ள மைக்பொம்பியோ இந்த தாக்குதல் யேமனிலிருந்து மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/64793

Link to comment
Share on other sites

1 hour ago, Jude said:

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

இதுதான் என்பது ஒரு பாடமாக அமையுமா என தெரியவில்லை. காரணம், ஒவ்வொரு போராட்டமும் ஒன்றில் இருந்து வேறுபாடும். 

என்னால் முடிந்த சில குறிப்புக்கள். 

எமது போராட்டம் இனவிடுதலை சார்ந்தது. ஏமனில் நடப்பது கூத்தி என்ற சியா இஸ்லாமிய மதப்பிரிவினர் சுனி மதப்பிரிவினர் இடையே நடக்கும் யுத்தம் என தெரிகின்றது. இரு ஆட்சியாளர்கள் பதவிக்கு போட்டி, மதத்தால் வேறுபட்டவர்கள். 

எம்மைப்போல இரண்டு நாடுகளாக இருந்து ஒருநாடக மாறியது 

இங்கே கூத்தி இனமக்கள் எமது மக்களை விட அதிக அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி கொண்டவர்கள். ஏமன் சண்டை கிட்டத்தட்ட ஆறுவருட சண்டை.  ஈரானும் சவூதியும் ஏமனில் மோதிக்கொள்ளும் களம். 

எனவே, எமக்கும் ஏமனுக்கும் பல வித்தியாசங்கள்.  

ஆனால், அப்பாவி மக்கள் இறப்பு, குழந்தை சிறப்புக்கள், போன்ற மனித அவலங்கள் எமது மக்களை போலவே உள்ளது. இவர்களும் எம்மை போலவே வறுமையானவர்கள், எந்த இயற்கை வளமும் இல்லை. 

எம்மை போல ஒரு கேந்திர முக்கியமான புவிசார் பாதையில் அமைந்துள்ளன. இதுவே வல்லரசுகளின் பார்வையில் உள்ளது.   

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

ஆளில்லா விமானதாக்குதலைதொடர்ந்து - சவுதியின் எண்ணெய் உற்பத்தி பெருமளவு பாதிப்பு- சர்வதேச விநியோகத்தில் நெருக்கடி- விலை அதிகரிக்கும் அபாயம்-

 

3 hours ago, Jude said:

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

 

2 hours ago, ampanai said:

இதுதான் என்பது ஒரு பாடமாக அமையுமா என தெரியவில்லை. காரணம், ஒவ்வொரு போராட்டமும் ஒன்றில் இருந்து வேறுபாடும். 

எதிரி எதிர் பார்க்காத சிறந்த உபகரணமான ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுதும் இதன் மூலம் தமது தரப்புக்கு உயிரிழப்பபை தவிர்த்ததும், எமது மக்களின் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது இவர்களின் சிறந்த அணுகுமுறைகளாக தெரிகின்றன.

Link to comment
Share on other sites

5 hours ago, Jude said:

எதிரி எதிர் பார்க்காத சிறந்த உபகரணமான ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுதும் இதன் மூலம் தமது தரப்புக்கு உயிரிழப்பபை தவிர்த்ததும், எமது மக்களின் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது இவர்களின் சிறந்த அணுகுமுறைகளாக தெரிகின்றன.

ஆம் இந்த தொழில்நுட்பம் இலகுவாக தயாரிக்கபப்படவும்  அதிகம் செலவில்லாமலும், இந்த வருடத்தில் செய்து (2019) , போராட்டத்தில் பாவிக்க கூடியமாதிரி உள்ளது. பத்து வருடத்திற்கு முன்னராக (2009) இந்த தொழில்நுட்பம் இவ்வாறு இல்லை. இன்னும் பத்து வருடத்தில் கூட இந்த தொழில்நுட்பம் மேலும் முன்னேற்றகரமாக அமையலாம் இல்லை இதைவிட மலிவாக உயர் தொழில்நுட்பம் வடிவமைக்கப்படலாம்.  

அதேவேளை, ஈரானின் உதவி அதிகமாக ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்கின்றது. ஈரான் ஒரு அணு ஆயுத வல்லரசாக வர முயலும் நாடு. எனவே, அவர்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை ஒப்பீடடளவில் இலகுவாக செய்யலாம். 

நாளை ஆப்கான் தாலிபான்களும் சோமாலிய கடற்கொள்ளையர்களும் ஆரம்பிக்க இருக்கும் காஸ்மீர் போராட்ட அரங்கிலும் இன்று ட்ரோனை காணவில்லை, ஆனால் விரைவில் இங்கும் வரவும் என்பது வல்லரசு நாடுகளின் உளவுத்துறைக்கும் தெரியும். 

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தாக்குதல் செய்த்தது சாதாரணமாக நாங்கள் க்லியான வீடு சாமத்திய வீடுகளில் படமெடுக்க மேல அனுப்பும் ட்ரோண் வகை இல்லை அதைவிட மேலதிக நவீனத்துடன் வடிவமைக்கப்பட்டது. தவிர ஐரோப்பிய நாடுகளில் இவ்வகை ட்ரோண்கள் பறப்பதற்க்குத் தடை செய்யப்பட்ட பகுதிகளையும் அறிவித்திருக்கிறார்கள் அதைவிட அதனை ஜி பி எஸ் நெவிகேசனில் பதிந்துமிருக்கிறார்கள் அவ்விடங்களில் நாங்கள் ட்ரோண்களை அடாத்தாக மேலே ஏத்த முயன்றாலும் முடியாது அப்படியாகின் ஜிபிஎஸ் சை அணேபிள் பண்ண்வேண்டும். 

ட்றோண்களது முழுமையான வருகை முள்ளிவாய்க்காலுக்குப் பின்பே அதிகரித்தது. அதற்குமுன்பும் இருந்தது ஆனால் எமக்குக் கொஞ்சம் கூரவஏ இருந்தது. 

அப்படி இருந்தாலும் தோல்வியைக் கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கலாமே தவிர நிற்பாட்டியிருக்கமுடியாது. காரணம் இந்தியாவின் செய்மதிகள் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்குப்பகுதிக்கு மேலாகத் திருப்பிவிடப்பட்டிருந்தது அதன்மூலமே சனங்களின் மற்றும் போராளிகளது நடமாட்டத்தை மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு சிறீலங்கா இராணுவத்துக்கு அறிவுறுத்தியிருந்தனர். 

இதன்மூலம் இந்தியா தனது தொழில்நுட்பத்தைச் சோதனைசெய்யும் களமாகவும் தமிழர் தலைகளை மாற்றியிருந்தது அதைத்தவிர இலங்கயிலிருந்து சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்மூலம் வெளியேற்றப்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர்களது மூன்றாவது சந்ததியினர் தங்களது சொந்தங்களைக்காண வன்னிப்பகிதிக்கு வருகிறோம் எனும்போர்வையிலும் இந்திய புலனாய்வு தனது ஆதளை வன்னி வடக்கு எங்கும் உள்நுளைத்திருந்தது. அதைத்தவிர கருணாவுடன் வன்னியில் யெயசுக்குரு காலத்தில் சேர்ந்து செயற்பட்ட பல ஆயிரக்கணக்கான கிழக்கைச் சேர்ந்த முன்னைய கருணாவும் விசுவாசிகள் விருப்பத்துனணோ அன்றேல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியோ இராணுவ ஊடறுப்புகளுக்கு மத்தியில் உள்நுளைக்கப்பட்டனரவர்களே இறுதிகணத்தில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையச் செய்தவர்கள் 

இப்படியான பல விடையங்கள் புலிகளது படை இறுதிப்போரில் வென்றாலும் அதன் பின் அவர்கள் நீண்டகாலத்துக்குத் தாக்குப்பிடிக்கமுடியாதவாறு அனைத்துச் செயல்களும் வடக்கில் செய்துமுடிக்கப்பட்டன ஆகவே தான் 

இந்திய தேசம் தமிழர்விரோத தேசம் என எப்போகும் நான் கூறுவதற்குக்காரணம்.

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

இந்திய தேசம் தமிழர்விரோத தேசம் என எப்போகும் நான் கூறுவதற்குக்காரணம்

இந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. 

இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும்?, முடியாது  

எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்)  ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள்  மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.  

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

இந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. 

இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும்?, முடியாது  

எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்)  ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள்  மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.  

இதற்கும் மேலாக, இந்திய நலன்களுக்கு பாதகமாக அமையும் சிறிலங்கா அரசின் திட்டங்களை அடையாளம் கண்டு, அந்த பாதிப்புகளை குறைக்க தமிழ் மக்கள் செய்ய கூடியவற்றை திட்டமிட்டு, இவற்றை இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது முக்கியமான தேவை.

Link to comment
Share on other sites

4 hours ago, Elugnajiru said:

அப்படி இருந்தாலும் தோல்வியைக் கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கலாமே தவிர நிற்பாட்டியிருக்கமுடியாது. காரணம் இந்தியாவின் செய்மதிகள் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்குப்பகுதிக்கு மேலாகத் திருப்பிவிடப்பட்டிருந்தது அதன்மூலமே சனங்களின் மற்றும் போராளிகளது நடமாட்டத்தை மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு சிறீலங்கா இராணுவத்துக்கு அறிவுறுத்தியிருந்தனர். 

இதன்மூலம் இந்தியா தனது தொழில்நுட்பத்தைச் சோதனைசெய்யும் களமாகவும் தமிழர் தலைகளை மாற்றியிருந்தது அதைத்தவிர இலங்கயிலிருந்து சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்மூலம் வெளியேற்றப்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர்களது மூன்றாவது சந்ததியினர் தங்களது சொந்தங்களைக்காண வன்னிப்பகிதிக்கு வருகிறோம் எனும்போர்வையிலும் இந்திய புலனாய்வு தனது ஆதளை வன்னி வடக்கு எங்கும் உள்நுளைத்திருந்தது. அதைத்தவிர கருணாவுடன் வன்னியில் யெயசுக்குரு காலத்தில் சேர்ந்து செயற்பட்ட பல ஆயிரக்கணக்கான கிழக்கைச் சேர்ந்த முன்னைய கருணாவும் விசுவாசிகள் விருப்பத்துனணோ அன்றேல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியோ இராணுவ ஊடறுப்புகளுக்கு மத்தியில் உள்நுளைக்கப்பட்டனரவர்களே இறுதிகணத்தில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையச் செய்தவர்கள் 

இப்படியான பல விடையங்கள் புலிகளது படை இறுதிப்போரில் வென்றாலும் அதன் பின் அவர்கள் நீண்டகாலத்துக்குத் தாக்குப்பிடிக்கமுடியாதவாறு அனைத்துச் செயல்களும் வடக்கில் செய்துமுடிக்கப்பட்டன ஆகவே தான் 

இந்திய தேசம் தமிழர்விரோத தேசம் என எப்போகும் நான் கூறுவதற்குக்காரணம்.

இலங்கை தமிழரின் அடிப்படை பிரச்சினை, பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் ஆகும். இவை ஏன் தடைப்பட்டன? என்ற கேள்விக்கான பதிலே, மொழிப்பிரச்சினை, பொலிஸ் உரிமை, காணி உரிமை, சுயநிர்ணய உரிமை என்ற தேவைகள் ஆகும். 

இவை இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான பிணக்கு. இந்த பிணக்கை இந்தியா - இலங்கை தமிழர் யுத்தமாக மாற்றியது மாபெரும் தவறு. அதை நிவர்த்தி செய்ய கடுமையான முயற்சி தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

இந்திய தேசத்தை தமிழர் ஆதரவு தேசமாக மாற்றவேண்டியதும் அவ்வாறு மாற்றப்பட்டபின்னர் அதனை தந்திரமாக பேணுவதும் அரசியல் தேவை. 

இந்தியாவை எதிர்த்து யாருடன் நாம் உறவை வைக்க முடியும்?, முடியாது  

எமக்குள் உள்ள பலம் பலவீனங்கள் மற்றும் டெல்லியில் (தமிழகம்)  ஆட்சியில் உள்ளவர்களின் பலம் பலவீனங்கள்  மற்றும் நீண்ட கால இந்திய நலன்கள் அவை சார்ந்த கொள்கைகளை அறிந்து ஆராய்ந்து கொள்கைகளை வகுப்பதே இனத்தை காக்கும்.  

 

27 minutes ago, Jude said:

இதற்கும் மேலாக, இந்திய நலன்களுக்கு பாதகமாக அமையும் சிறிலங்கா அரசின் திட்டங்களை அடையாளம் கண்டு, அந்த பாதிப்புகளை குறைக்க தமிழ் மக்கள் செய்ய கூடியவற்றை திட்டமிட்டு, இவற்றை இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது முக்கியமான தேவை.

இந்தியா என்பது மிகப்பெரிய அனைத்துச் சக்திகளையும் உள்ளடக்கிய நாடு அதற்கு நாம் மேற்றிய செயற்பாடுகளைச் செய்யமுடியாதுஅது எப்படி இருக்குமெனில் பத்துப்பிளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக்காட்டியமாதிரி அதைவிட அவர்கள் எமது வழிக்கு வருவது கிழவி சாமத்தியப்படுவதற்குச்சமன்.  

நாம் யாரும் இந்தியாவுக்குச் சொம்பு தூக்கவேண்டிய அவசியம் இல்லை காரணம் இலங்கைத் தீவில் அனைத்து அரசியல் சூழலையும் தீர்மானிப்பதும் ஏற்படுத்துவதும் இந்தியாவே அப்படியும் நாம் சொம்புதூகினால் நாம் காமடிப்பீசாகவே கணிக்கப்படுவோம்.

கிட்டத்தட்ட இந்தியாவை ஐம்பது வருட காலமாக நம்பியும் ஏமாந்தும் வருகிறோம்

ஐம்பதுக்குக் குறைவான புலொட் போராளிகளைவைத்தே மாலைதீவினை இந்தியா தனது கைக்குள் கொண்டுவந்தது

அது அந்தகாலம் எனினும் தற்போது இலங்கைத் தீவின் அனைக்து இடங்களிலிம் இந்தியா அனைத்து வடிவிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பின்போது நாம் அவதானித்தவையில்  கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலில் வெடித்த குண்டு  சாதாரணமாக முதுகில் எல்லோரும் சுமக்கும் பையில் கொண்டுபோய் வெடிக்கவைத்து அது பாரிய சேதாரத்தை ஏற்படுத்துமாகவிருந்தால் பஞ்சிகாவத்தையில் கையெறி குண்டுக்காகப் பயன்படும் வெடிபொருள் பாவித்திருக்க முடியாது பிளாஸ்டிக் வகை வெடிமருந்தாக இருக்கவேண்டும் அதை சாதாரணமாக நாம் கையாளமுடியாது தவிர வேறு நாடுகளிலிருந்து தருவிக்க முடியாது அப்படித்தருவிக்க முற்பட்டால உடனடியாக அனைத்துலகத்திலுமுள்ள புலனாய்வுத்துறையினருக்க்கும் செய்தி போய்ச்சேரும் அந்த அளவுக்கு வலையமைப்பு இறுக்கமாக இருக்கு அதன் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தினதான வெளியேற்றத்தை பிரிட்டிஸ் ஒரு ஒப்பந்தத்துடன் நடைமுறைப்படுத்த முயல்கிறது இல்லாதுவிட்டால் சர்வதேச மற்றும் பிராந்திய தீவிரவாத அமைப்புகளது செயல்பாடுகள் மற்றும் முனைவுகளைப்பற்றிய தகவல் பரிமாற்றத்துக்கு நிரம்பவே கணிசமான கட்டணத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இங்கிலாந்து கொடுக்கவேண்டிவரும் ஆக புலனாய்வுப்பரிமாற்றம் என்பது உலக அளவில் நாடுகளுக்கு நாடுகள் மாறினாலும் விடையம் ஒன்றாகவே பார்க்கப்படும். ஆக யாரோ ஒரு பிராந்திய வல்லரசு மிகவும் திட்டமிட்ட ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டு அதி தமிழருக்குப் பாதிப்பு ஏற்படும்வண்ணம் (காரணம் அவனது குரல்தான் இப்போது சகல வழிகளிலும் அடைக்கபட்டுள்ளது) ஆனால் இலங்கை அரசியலில் தங்களது ஆடு புலி ஆட்டத்தை தமக்குச்சாதகமாக ஆட யாரோ ஒருவரால் திட்டமிட்ட சம்பவம் அச்சம்பவத்துக்கு எப்போது இலங்கையின் குடுமியை எப்போதும் தன்வசம் வைத்திருக்க எண்ணும் இந்தியாவே செய்திருக்க வாய்ப்புள்ளது. அதுவும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் பத்தாவது வருட நிறவை எதிர்கொள்ளத் தமிழினம் ஆயத்தானவேளையில் மற்றும் சர்வதேச நாடுகள் அதற்கான நீதி இதுவரை கலதாமதகாஇரது ஏன் எனக் கேத முனைகின்றவெளையில் இப்படியான தாக்குதல் நடாத்தப்பட்டது இந்தியாவின் கைங்கரியம் இல்லாது வேறு யாராலும் இருக்கமுடியாது. அமைதிப்படையின் உற்றுகையப்போல பல்மடங்கு வீரியமான முற்றுகையை தமிழினம்மீது இந்தியா இப்போது மேற்கொண்டுள்ளது.

அது எதுபோல் எனில் தமிழ் நாடு அரசை கிரிஜா வைத்திய நாதன் எனும் ஒரு தலைமைச்செயலாளரை வைத்தே இயக்குவதுபோலாகும்.

ஆகவே இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது இதற்கான விவாதக்களம் அனைத்திடங்களிலும் திறக்கப்படுவது காலத்தின் கட்டாயம் இந்தியக்கனவு காண்பவர்கள் பேடிகள் ஒதுங்கி நில்லுங்கள் விருப்பமென்றால் உங்கள் இந்திய எஜமானனுக்குக் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

29 minutes ago, Elugnajiru said:

இந்தியா என்பது மிகப்பெரிய அனைத்துச் சக்திகளையும் உள்ளடக்கிய நாடு அதற்கு நாம் மேற்றிய செயற்பாடுகளைச் செய்யமுடியாதுஅது எப்படி இருக்குமெனில் பத்துப்பிளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக்காட்டியமாதிரி அதைவிட அவர்கள் எமது வழிக்கு வருவது கிழவி சாமத்தியப்படுவதற்குச்சமன்.  

நாம் யாரும் இந்தியாவுக்குச் சொம்பு தூக்கவேண்டிய அவசியம் இல்லை காரணம் இலங்கைத் தீவில் அனைத்து அரசியல் சூழலையும் தீர்மானிப்பதும் ஏற்படுத்துவதும் இந்தியாவே

.......

.......

ஆகவே இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது இதற்கான விவாதக்களம் அனைத்திடங்களிலும் திறக்கப்படுவது காலத்தின் கட்டாயம் இந்தியக்கனவு காண்பவர்கள் பேடிகள் ஒதுங்கி நில்லுங்கள் விருப்பமென்றால் உங்கள் இந்திய எஜமானனுக்குக் கூறுங்கள்.

" இந்தியா அனைத்துச் சக்திகளையும் உள்ளடக்கிய நாடு" , "இலங்கைத் தீவில் அனைத்து அரசியல் சூழலையும் தீர்மானிப்பதும் ஏற்படுத்துவதும் இந்தியாவே" என்று எழுதிய கையோடு "ஆகவே இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது" என்றும் எழுதுகிறீர்கள். இது தானே முள்ளிவாய்க்கால் தற்கொலைக்கு காரணமான சிந்தனை? "இந்தியாவை நாம் புறமொதுக்கும் " கொள்கை தானே இந்திய - தமிழீழ யுத்தத்துக்கு வழி கோலியது? இப்போது என்ன மீண்டும் "இந்தியாவை நாம் புறமொதுக்கும் காலம் இப்போது நன்றாக வந்துவிட்டது"?

 

 

Link to comment
Share on other sites

#1 : உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 13% அதிகரித்துள்ளது ~ கிட்ட்டத்தட்ட 62 அமெரிக்க டாலர்கள் 

https://www.cnbc.com/2019/09/15/us-crude-oil-jumps-15percent-after-drone-strikes-disrupt-saudi-crude-production.html

#2:  திங்கள் அளவில் பாதிக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மூன்றில் ஒரு பகுதி திருத்தப்பட்டு விடும் 

https://www.cnbc.com/2019/09/15/saudi-arabia-aims-to-restore-one-third-of-lost-oil-output-by-monday-wsj-says.html

#3: அமெரிக்க நாடு யுத்தத்திற்கு ஆயத்தம். யார் இதை செய்தார்கள் என்ற தகவல் கிடைத்ததும் நடவடிக்கை - ட்ரம்ப் 

https://www.cnbc.com/2019/09/15/trump-says-us-is-locked-and-loaded-after-attack-on-saudi-oil-supply.html

Link to comment
Share on other sites

 

அமெரிக்க, உலகின் தனிப்பெரும் வல்லரசு என்று ஊடகங்களும் ஆய்வாளர்களும் பொதுவாக முன்வைப்பர். இருந்தும், பல நெருக்கடிக்களுக்குள் உள்ள ஈரான், துணிந்து இந்த 'புரெக்சி' தாக்குதலை, அதாவது ஏமாறும் ஏமன் போராளிகள் ஊடாக செய்துள்ளது. 

அண்மையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ரன் பதவியை துறந்தார். ஒரு காரணமாக ட்ரம்ப் ஈரானின் அதிபரிடன் நேரடியாக கதைக்க விரும்பியதாயும் அதை  ஜான் போல்ரன் எதிர்த்தார் என்றும் கூறப்படுகின்றது. 

பெரிய பொருளுத்தார சிக்கலை எதிர்கொள்ளும் இந்தியா, உருசியாவிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து விலாடிவஸ்த்ரோக் - சென்னை கடல் பயணத்திற்கு உதவி உள்ளது. காரணம்? சீன கடல் ஆதிக்கத்தை தவிர்க்க ? அப்படியானால் சீனா உருசியாவுடன் நல்ல உறவை கொண்டுள்ளதே? அமெரிக்காவுடன் உறவை கொண்ட இந்தியா எவ்வாறு உருசியாவுடன் இதை செய்து கொண்டது.? 

ஈரான் மீது அமெரிக்க பொருளாதார தடை இருந்தும் மசகு எண்ணெயை ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்த இந்தியா அதை அண்மையில் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க நிறுத்து உள்ளது. இப்பொழுது இந்தியா என்ன செய்யப்போகின்றது? 

இந்தியா - சீன - அமெரிக்க - உருசிய உறவுகள் சொல்லும் செய்து : நமக்குள் நிறைந்த நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. ஆக, நிறைந்த பொருளாதார - இராணுவ - அரசியல் தேவைகளே உள்ளன.      
 

Link to comment
Share on other sites

சவுதி மீது ஆளில்லா விமானதாக்குதல்- பதிலடி கொடுப்பதற்கான தயார் நிலையில் அமெரிக்கா- டிரம்ப்

சவுதி அரேபியாவிற்கு எதிராக  ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டவர்களிற்கு எதிராக தாக்குதலை  மேற்கொள்வதற்கான தயார் நிலையில் அமெரிக்க உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ள அவர் சவுதி அரேபியா மீது யார் தாக்குதலை மேற்கொண்டார்கள் என அமெரிக்க நம்புவதற்கான காரணங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

trump_se13.jpg

சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் தாக்கப்பட்டது ,எங்களிற்கு குற்றவாளியை தெரிந்துள்ளது என்பதற்கான காரணங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ள டிரம்ப் உறுதிப்படுத்தல்களை அடிப்படையாக வைத்து நாங்கள் தாக்குதலிற்கு தயாராகவுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த தாக்குதலிற்கு யார் காரணம் என சவுதி அரேபிய கருதுகின்றது என்ற அவர்களின் பதிலிற்காகவும் என்ன அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பிற்காகவும் நாங்கள் காத்திருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/64843

Link to comment
Share on other sites

செளதி அரேபிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்: இரானுக்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட புகைப்படம்

செளதி அரேபியாபடத்தின் காப்புரிமைREUTERS

செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

செளதியில் மீண்டும் எண்ணெய் உற்பத்தி தொடங்கும் வரை அமெரிக்காவின் எண்ணெய் சேமிப்பை வெளியிடுவதாக டிரம்ப் உறுதியளித்த பிறகு விலையில் சிறிது மாறுதல்கள் இருந்தன.

உலகளவில் செளதி அரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பேரல்களை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது.

தாக்குதலுக்கு பிறகு அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தினமும் 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என செளதியின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

இது செளதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதியளவாகும்

அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்துள்ளது.

அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யில் 1% கிடைக்கிறது.

செளதி அரேபியாவில்தான் உலகிற்குத் தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகிறது. எனவே இந்த தாக்குதலால் திங்களன்று எண்ணெய் விலையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-49711737

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை கவலை முழுக்க பெற்றோல் விலை கூடப்போகுது எண்டதுதான்.... மற்றும்படி உவங்கள் எப்பிடி குத்துப்பட்டாலும் எனக்கு கவலையில்லை:cool:

13 hours ago, ampanai said:

சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் தாக்கப்பட்டது ,எங்களிற்கு குற்றவாளியை தெரிந்துள்ளது என்பதற்கான காரணங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ள டிரம்ப் உறுதிப்படுத்தல்களை அடிப்படையாக வைத்து நாங்கள் தாக்குதலிற்கு தயாராகவுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு அடிக்கிறதுக்கு ஒரு சாட்டு வேணும். அதுக்கு இப்பவே ரெடி பண்ணீனம்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/14/2019 at 9:53 PM, Jude said:

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

பெட்ரோலில் குண்டுபோட்டால் பத்தி எரியும் 

Link to comment
Share on other sites

On 9/14/2019 at 7:53 PM, Jude said:

இந்த தாக்குதலில் இருந்து தமிழீழ மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

 

10 hours ago, Maruthankerny said:

பெட்ரோலில் குண்டுபோட்டால் பத்தி எரியும் 

தமிழீழத்தில் பெட்ரோல் இல்லாமலே குண்டு போட்ட இடமெல்லாம் பத்தி எரிந்ததாக வந்த கதை எல்லாம் வெறும் வதந்திகள் தானா?

Link to comment
Share on other sites

சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 2 அல்லது மூன்று வாரங்களில் பணி தொடங்கப்படும்: சவுதி அரசு


சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 அல்லது மூன்று வாரங்களில் பணியை தொடங்கும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை பாதியாக குறைத்து சவுதி அரசு. இந்த நிலையில் சேதங்கள் அனைத்தும் சரி செய்ய 2 அல்லது 3 வாரங்கள் ஆகும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.
 
முன்னதாக சவுதி அரேபியாவின் புக்யக் என்ற இடத்தில் செயல்படும் அரசுக்கு சொந்தமான ‘அராம்கோ’ என்ற நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும்,  குரைஸ் எண்ணெய் வயல் மீதும்  டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான இங்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. டிரோன் தாக்குதலில் பயங்கர சேதம் ஏற்பட்டதால், கச்சா எண்ணெய் சப்ளையை சவுதி அரசு பாதியாக குறைத்துள்ளது.

எண்ணெய் சப்ளையை சவுதி அரேபிய அரசு குறைத்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அல்லது பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.  சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது  ஏமனில் போராடி வரும் ஹவுதி அமைப்பினரோ இந்த டிரோன் தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து சேதங்கள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு இன்னும் இரண்டு அல்லது 3 வாரங்களில் அராம்கோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பழையபடி செயல்படும் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526760

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.