Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு – முடங்கியது நீதிச் சேவை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-3100-720x450.jpg

வடக்கு மாகாண சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு – முடங்கியது நீதிச் சேவை!

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வடக்கு மாகாண நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் முல்லைத்தீவில் இன்று முற்பகல் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நோக்கிப் பயணமாகியுள்ளனர்.

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த தவறினால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த மதகுருவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/வடக்கு-மாகாண-சட்டத்தரணிக/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களுக்கும் பௌத்தர்களுக்கும் வேறு வேறு சட்டங்கள்….

September 24, 2019

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களுக்கு என்ன தண்டனை? வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வி.

 

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் இன்று (24) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிப்பு செய்து வந்த பௌத்த துறவி இறப்பின் பின்பு அவரது உடலை கோவில் வளாகத்தில் அடக்கம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் பூதவுடைலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இதில் இருந்து ஒன்று மட்டும் புலப்படுகின்றது சட்டம் தமிழர்களுக்கு ஒன்று பௌத்த மதகுருக்களுக்கு ஒன்று. சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர்.

சமாதான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நம்பிக்கை வைத்துள்ளன.

ஆனால் இன்றைய நிகழ்வுகள் ஒருபோதும் நாம் ஒற்றுமையாக வாழ முடியாது என்பதை உணர்தி நிற்க்கின்றன. கடந்த கால எமது ஆயுத போராட்டங்களும் இப்படிப்பட்ட பாதிப்புக்களினாலே ஏற்பட்டன என்பதை ஏன் பேரினவாதம் உணர்ந்து கொள்ளவில்லை.

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமன் என்பதை இந்த நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் நிருபர்

 

http://globaltamilnews.net/2019/130989/

 

கூட்டடமைப்பில் உள்ள சட்டத்தரணிகள் என்ன சொல்லுகிறார்கள் ?   

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற அவமதிப்பு – சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் – பௌத்த பிக்குகளின் அடாவடித்தனம்

மன்னார் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு-மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்…
DSC_0490.jpg?resize=800%2C533

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (24) ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் பூதவுடைலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

குறித்த தடை உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் நேற்று திங்கட்கிழமை (23) தகனம் செய்யப்பட்டுள்ளது. இதன் போது பொதுமக்கள் மீதும் சட்டத்தரணிகள் மீதும் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவங்களை கண்டித்து மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

DSC_0473.jpg?resize=800%2C533

குறித்த சம்பவங்கள் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடையம். இந்து ஆலய வளாகத்திற்குள் அல்லது அதற்கு அருகாமையிலோ இவ்வாறான மனித உடல்கள் எறிக்கப்படுவதோ அல்லது புதைக்கப்படுவதோ இல்லை.ஆனால் நீதிமன்ற கட்டளையையும் மீறி புத்த பிக்குவின் உடல் தீத்தக்கேனிக்கு அருகாமையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் தென்பகுதியில் இருக்கின்ற சிங்கள மக்களும் இலங்கையில் இருக்கின்ற அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டிய விடையம் புத்த மத குருமாரின் உடல்களையோ அல்லது சிங்கள மக்களின் உடல்களையோ அடக்கம் செய்வதற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை.

ஆனால் இந்து ஆலயத்திற்கு அருகாமையில் அல்லது தீத்தக்கேனியில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டமையினை கண்டித்தே எமது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம். எனவே சட்டத்தரணிகளையும் பொது மக்களையும் தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். நீதிமன்றம் வழங்கிய கட்டளை தொடர்பில் தெரியப்படுத்தியதோடு,அருகாமையில் இருந்த பொலிஸாருக்கும் தெரியப்படுத்தி இருந்தார்கள்.

ஆனால் அதனை எல்லாம் தமது கவனத்தில் எடுக்காது அடிhவடியான செயற்பாடுகள் இடம் பெற்றுள்ளது. எனவே தாக்குதல் சம்பவத்துடன் ஈடுபடடவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.உரிய நடவடிக்கைகள் எடுக்காது விட்டால் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடரும் என சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

இதே வேளை மன்னார் சட்டத்தரணிகள் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர்.இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரனைகளுக்காக வந்த மக்கள் திரும்பிச் சென்றுள்ளதோடு, இன்றைய தினம் இடம் பெற இருந்த வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC_0422.jpg?resize=800%2C533DSC_0440.jpg?resize=800%2C533DSC_0446.jpg?resize=800%2C533DSC_0462.jpg?resize=800%2C533  DSC_0477.jpg?resize=800%2C533DSC_0483.jpg?resize=800%2C533

-மன்னார் நிருபர்-
(24-09-2019)

http://globaltamilnews.net/2019/130992/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

கூட்டடமைப்பில் உள்ள சட்டத்தரணிகள் என்ன சொல்லுகிறார்கள் ?   

முதலில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததென்றதை உடனடியாக அவர்களுக்கு அறியப்படுத்துங்கள் பிளீஸ்.

அப்புறம் பாருங்க விளையாட்டை.

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே. இந்தப் போராட்டம் தெற்கில்.. மேற்கில் நிகழனும். வடக்குக் கிழக்கில் அல்ல. வடக்கில்.. கிழக்கில்.. நிகழ்த்தப் படும் இந்தப் போராட்டங்களால்.. தெற்கில்.. மேற்கில்.. ஒரு சஞ்சலமும் ஏற்படாது. சண்டியர்கள் சண்டியர்களாகவே காக்கப்படுவர். 

DSC_0483.jpg?resize=800%2C533

இந்தப் படம் மேல் சொன்ன கருத்துக்கு சாட்சி. 

Edited by nedukkalapoovan

காடையர்களால் ஆளப்படும் சொறிலங்காவில சிங்கள போலீஸ் காடையர்கள் சுதந்திரமாக திரிவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குருகந்தை விகாரை சம்பவம்: ஜெனீவாவுக்கு எடுத்துச் செல்ல முஸ்தீபு

 

e

முல்லைத்தீவு நாயாறு குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்க தேரரின் இறுதிக் கிரியை சம்பவம் தொடர்பான விடயங்கள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட ஏற்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இறுதிக் கிரியை நடைபெறும் நிகழ்வில் அரச சார்பற்ற அமைப்புக்கள் பலவற்றின் பிரதிநிதிகள் காணப்பட்டதாகவும் அவர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஜெனீவாவுக்கு அனுப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் இன்றைய தேசிய சகோதர நாளிதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த இறுதிக் கிரியை நடைபெறும் நிகழ்வுக்கு தமிழ் சட்டத்தரணிகள் மூவர் சமூகமளித்திருந்ததாகவும் அவர்களில் ஒருவருக்கு பிக்குகள் குழுவொன்று தாக்குதல் நடாத்தியதாகவும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

http://www.dailyceylon.com/189835/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.