Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்களை பச்சை மட்டையை... எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும்.. சீமான் ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிங்கிலர்கள்

இவர்களை பச்சை மட்டையை... எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும்.. சீமான் ஆவேசம்

10 வருடமாக கத்தி உன் பேச்சை கேட்கிறீர்கள், ஏன் வாக்கு வரலை..ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை. 18 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளார்கள் அல்லவா.. அவர்கள் தான் தமிழர்கள் என்று சீமான் ஆவேசமாக பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "10 வருடமாக கத்தி உன் பேச்சை கேட்கிறீர்கள், ஏன் வாக்கு வரலை..ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை. 18 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளார்கள் அல்லவா அவர்கள் தான் தமிழர்கள்.

ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்கள் தமிங்கிலர்கள். இவர்கள் கேட்கும் பாட்டு புரியவில்லை என்பதற்காக அவர்களுக்கு ஆங்கல எழுத்துக்கள் ஓடவிடப்படுகிறது. எழுத்து இங்கிலீஸ், ஆனால் அது தமிழ் வார்த்தைகள். இவர்கள் தான் தமிங்கிலர்கள். இவர்களை என்ன செய்ய வேண்டும் என்றால், பிடித்து மரத்தில் கட்டி வைத்து, திருக்கவால் பார்த்திருக்கிறீர்களா.. இல்லை விட்டுவிடுங்கள்,, பச்சை மட்டையை எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும். தொலைத்துவிடுவேன் என்றார்.

ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்கள் தமிங்கிலர்கள். இவர்கள் கேட்கும் பாட்டு புரியவில்லை என்பதற்காக அவர்களுக்கு ஆங்கல எழுத்துக்கள் ஓடவிடப்படுகிறது. எழுத்து இங்கிலீஸ், ஆனால் அது தமிழ் வார்த்தைகள். இவர்கள் தான் தமிங்கிலர்கள். இவர்களை என்ன செய்ய வேண்டும் என்றால், பிடித்து மரத்தில் கட்டி வைத்து, திருக்கவால் பார்த்திருக்கிறீர்களா.. இல்லை விட்டுவிடுங்கள்,, பச்சை மட்டையை எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும். தொலைத்து விடுவேன் என்றார்.

தமிழில் பெயர் வைக்காத தமிழ் திரைப்பட இயக்குனர்களை கடுமையாக சீமான் விமர்சித்தார். வீரத்துல கட்டபொம்மன்.. சுரத்துல ஊமத்துரை.. ரோசத்துல நீ ஒரு தேசிங்கு ராஜா என்று சினிமா பாடல் ஒன்றை பாடி அதில் உள்ள கட்டபொம்மன், ஊமைத்துரை, தேசிங்கு ராஜா போன்ற மூன்று மன்னர்களும் தமிழர்கள் இல்லை என்று விமர்சனம் செய்தார்.

மானமும் வீரமும் அறம் என்று வாழ்ந்த கூட்டம் தமிழ் இனம்.. எங்கள் கூட்டத்தில் ஒருவர் கூடவா இல்லை என்று கேள்வி எழுப்பினார். வைரமுத்து கூட ஒருமுறை ஜான்சி ராணியிடம் வீரம் வாங்குவோம் என்று எழுதி இருந்தார். ஏன் வேலுநாச்சியாரிடம் வீரம் வாங்கலாம் அல்லவா என்றும் கேட்டார்.

Read more at: https://tamil.oneindia.com/news/villupuram/seeman-attacks-who-not-vote-to-his-party-on-election-364960.html

  • கருத்துக்கள உறவுகள்

வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஒரு தமிழன் என்றல்லவா நான் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன்.

அவர்கூட தெலுங்கரா??? 

2 hours ago, ரஞ்சித் said:

வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஒரு தமிழன் என்றல்லவா நான் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன்.

அவர்கூட தெலுங்கரா??? 

உண்மை தான்.... அது தான் கருணாநிதியின் திறமை தெலுங்கனை தமிழனாக்கியது அதை விட இவர் ஒரு மன்னன் கூட இல்லை வழிப்பறி கொள்ளைக்காரன்; அதே போல் எட்டப்பன் தான் உண்மையான  தமிழ் அரசன்.

திருடனை அரசனாக்கி,மன்னனை துரோகியாக்கி, தெலுங்கனை தமிழனாக்கியது கருணாநிதியின் தந்திரம்.

On 10/10/2019 at 10:49 PM, Dash said:

உண்மை தான்.... அது தான் கருணாநிதியின் திறமை தெலுங்கனை தமிழனாக்கியது அதை விட இவர் ஒரு மன்னன் கூட இல்லை வழிப்பறி கொள்ளைக்காரன்; அதே போல் எட்டப்பன் தான் உண்மையான  தமிழ் அரசன்.

திருடனை அரசனாக்கி,மன்னனை துரோகியாக்கி, தெலுங்கனை தமிழனாக்கியது கருணாநிதியின் தந்திரம்.

வீரபாண்டிய கட்ட பொம்மன் வரலாற்றை கருணாநிதி  எழுதவில்லை. அந்த வரலாற்றிற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் . அந்த படத்தின்  கதை வசனத்தைக் கூட கருணாநிதி எழுதவில்லை. எமக்கு யாரிலாவது இருக்கும்  ஆத்திரத்தைக்  காட்ட சும்மா சகட்டு மேனிக்கு    அவதூறை  அள்ளி வீசக்கூடாது. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு எம்மவர்களையே அடையாளம் காண முடியாதபடிக்கு எமது இன வரலாறு எம்மிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.

காரணம்.. எமது வரலாற்றை நாம் முறையாக எழுதி வைக்காததும் ஒரு காரணம். அதனை படிப்பிக்காததும் ஒரு காரணம். 

மேலும் இலங்கை உட்பட.. காந்திக்கு சில வைக்க முடிகிறது. ஆனால்.. காந்தியை விட தியாகத்தில் விஞ்சிய தியாக தீபம் திலீபனுக்கு சிலைகளை இந்தியாவில் வைக்க முடியுமா..?! ஏன் தமிழகத்தில் முடியுமா... ஏன் ஈழத்தில் நல்லூரில் தான் வைக்க முடியுமா?!

  • கருத்துக்கள உறவுகள்

கெட்டி பொம்முலுவை “வீரபாண்டியன்” என திரித்து (வடுக கொல்டி என்பதே உண்மை 😃) சிவாஜியை வைத்து நடிக்க வைத்தார்கள். இயக்குநரின் பெயர் பி.ஆர். பந்துலு. 😲🚶🏻‍♂️🚶🏻‍♂️

...அப்ப தமிழ் நாட்டில் / இந்தியாவில் அந்நிய ஆட்சிக்கு, முக்கியமாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய ஒரு தமிழ் மன்னன் கூட இல்லையா?

 

  • கருத்துக்கள உறவுகள்

உளவியல் அராய்ச்சி ஒன்றில் மாணவர்களை அவர்களது சோசல் பாதுகாப்பு இலக்கதின் இறுதி இரண்டு இலக்கத்தை எழுதுமாறு கூறப்பட்டது பின்னர் , அவர்களிடம் ஒரு மதுபான போத்தல் ஒன்ற்றுக்கு ஏலம் விடப்பட்டது , அந்த ஏலம் முடிவில் பார்த்த போது சோசல் பாதுகாப்பு இலக்கதின் இறுதி இரண்டு அதிகமாகவுள்ளவர்களின் ஏலத்தொகையே அதிகமாகவிருந்த்தது , இதனை உளவியலில் Anchoring Bias என்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

...அப்ப தமிழ் நாட்டில் / இந்தியாவில் அந்நிய ஆட்சிக்கு, முக்கியமாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய ஒரு தமிழ் மன்னன் கூட இல்லையா?

 

உள்ளார்களே.. மன்னர்கள் மருது பாண்டியர்கள், அரசி வேலு நாச்சியார் என சிலர் உள்ளார்கள். வெள்ளையர்கள் உள்ளே வரும்பொது தமிழகம் ஏற்கனவே தெலுங்கர்களாலும், மராட்டியர்களாலும் ஆளப்பட்டு வந்தது. மீதமாக இருந்தவர்கள் ஒருசில குறுநில மன்னர்களே.

Edited by இசைக்கலைஞன்

2 hours ago, இசைக்கலைஞன் said:

உள்ளார்களே.. மன்னர்கள் மருது பாண்டியர்கள், அரசி வேலு நாச்சியார் என சிலர் உள்ளார்கள். வெள்ளையர்கள் உள்ளே வரும்பொது தமிழகம் ஏற்கனவே தெலுங்கர்களாலும், மராட்டியர்களாலும் ஆளப்பட்டு வந்தது. மீதமாக இருந்தவர்கள் ஒருசில குறுநில மன்னர்களே.

ஆனால் தமிழ் மன்னர்கள் தமது வீரத்தை மிக அதிகமாக காட்டியது தமக்குள் மோதிக்கொண்ட போது மட்டும் தான்.  அது இன்றும் தொடர்கிறது என்பது தான் வேதனையான உண்மை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.