Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பிள்ளையானை சந்தித்தேன் அவரை வாழ்த்தினேன்” - மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“பிள்ளையானை சந்தித்தேன் அவரை வாழ்த்தினேன்” - மகிந்த

October 27, 2019

“நான் இன்று பிள்ளையானை  சந்தித்து அவருடன் கலந்துரையாடினேன். அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் காரணமாகவே அவரை வந்து நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று மதியம் பிள்ளையானை மட்டக்களப்பு சிறையில் சென்று பார்வையிட்டதுடன் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், “முதலில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் . மலையக மக்களுக்கு தீபாவளி முற்பணம் கொடுப்பார்கள் அதுவும் இம்முறை கொடுக்கப்படவில்லை அதற்கும் எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றேன். மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் இம்முறை தேர்தலில் ஒரு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் தப்பான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மக்கள் நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன். காரணம் இந்த அரசாங்கம் மட்டக்களப்பு மக்கள் மட்டுமல்ல கிழக்கு மாகாண மக்களுக்கு ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எவ்விதமான வேலைத்திட்டங்களை செய்யவில்லை என்பதே உண்மை.

 உங்களுக்கு பார்த்தால் தெரியும் மட்டக்களப்பில் நான் செய்த வேலைத்திட்டங்களை விட ஏதாவது வேலைத் திட்டம் நடைமுறைப் படுத்தபடவில்லை   நீங்களே அதனை பார்க்கலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

73372221_465245120758077_780430154503762

 

http://globaltamilnews.net/2019/132367/

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

அவரை வந்து நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளேன்

எதற்காக வாழ்த்து தெரிவித்தாராம் கூறவில்லையே. அவரது பழைய சேவை தொடரவா?இன்றுவரை சிறையில்தானே சென்று  பார்த்துள்ளார். 

On 10/27/2019 at 2:25 PM, கிருபன் said:

“நான் இன்று பிள்ளையானை  சந்தித்து அவருடன் கலந்துரையாடினேன். அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் காரணமாகவே அவரை வந்து நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று மதியம் பிள்ளையானை மட்டக்களப்பு சிறையில் சென்று பார்வையிட்டதுடன் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

ஓ! இப்பிடி தெரிஞ்சிருந்தா நானும் சிறைக்குள்ள இருந்திருப்பேனே என்டு கருணா புலம்பவில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ பிள்ளையான் தான் கிழக்கின் மீட்பர்.

போர்க்குற்றவாளிகளான கோட்டாபய-மகிந்த ராஜபக்ச கும்பல் செய்த படுகொலைகளை வெளியே கொண்டுவராமல் இருப்பதற்கு பிள்ளையானுடன்  இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கு!

13 hours ago, Rajesh said:

ஓ! இப்பிடி தெரிஞ்சிருந்தா நானும் சிறைக்குள்ள இருந்திருப்பேனே என்டு கருணா புலம்பவில்லையோ?

பிள்ளையானிடம் உள்ள அளவு வாக்கு வங்கி கருணாவிடம் இல்லை.

ஆனால் கருணாவும் மகிந்த & கோ பக்கம் தான்.

3 hours ago, போல் said:

போர்க்குற்றவாளிகளான கோட்டாபய-மகிந்த ராஜபக்ச கும்பல் செய்த படுகொலைகளை வெளியே கொண்டுவராமல் இருப்பதற்கு பிள்ளையானுடன்  இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கு!

பிள்ளையான் மகிந்த & கோவின் ஆள் தானே. இரகசிய ஒப்பந்தத்திற்கான தேவை எதுவும் இல்லை.

Edited by Lara

On 10/29/2019 at 12:36 PM, Lara said:

பிள்ளையான் மகிந்த & கோவின் ஆள் தானே. இரகசிய ஒப்பந்தத்திற்கான தேவை எதுவும் இல்லை.

சம்பந்தன், சுமந்திரன், மாவை, துரைராஜசிங்கம் போன்ற ஏமாளிகள் போலவே பிள்ளையானையும் நினைக்கிறது அறியாமை!

என்ன தான் கொலை செய்தாலும் டீல் இல்லாமல் பிள்ளையான் செய்ததில்லை.

10 hours ago, Rajesh said:

சம்பந்தன், சுமந்திரன், மாவை, துரைராஜசிங்கம் போன்ற ஏமாளிகள் போலவே பிள்ளையானையும் நினைக்கிறது அறியாமை!

என்ன தான் கொலை செய்தாலும் டீல் இல்லாமல் பிள்ளையான் செய்ததில்லை.

கொலை செய்த போது டீலுடன் செய்தாரா பணம் வாங்கி விட்டு செய்தாரா என்பதை பற்றி இங்கு யாரும் உரையாடவில்லை.

இப்பொழுது மகிந்த சந்தித்த போது இரகசிய ஒப்பந்தம் போடும் தேவை எதுவும் இல்லை என கூறினேன்.

மகிந்த சந்திக்க முன்னமே தான் மகிந்த & கோ பக்கம் என பிள்ளையான் கூறிக்கொண்டிருந்தவர்.

கோத்தா ஜனாதிபதியாக வந்தால் அவர் பிள்ளையானை விடுவிப்பார் என நினைத்து பிள்ளையானின் ஆதரவாளர்களும் கோத்தாவுக்கு வாக்களிக்க ரெடி.

On 10/31/2019 at 11:17 AM, Lara said:

கொலை செய்த போது டீலுடன் செய்தாரா பணம் வாங்கி விட்டு செய்தாரா என்பதை பற்றி இங்கு யாரும் உரையாடவில்லை.

ஓ! இங்க உரையாடலை நீங்க முழுமையா குத்தகைக்கு எடுத்திருக்கீங்களோ?
நீங்க நினைக்கிற மாதிரி தான் நாங்கள உரையாட வேண்டுமோ?
இதெல்லாம் தெரியாம போச்சே!

1 minute ago, Rajesh said:

ஓ! இங்க உரையாடலை நீங்க முழுமையா குத்தகைக்கு எடுத்திருக்கீங்களோ?
நீங்க நினைக்கிற மாதிரி தான் நாங்கள உரையாட வேண்டுமோ?
இதெல்லாம் தெரியாம போச்சே!

நான் quote பண்ணிய போலின் கருத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே கருத்து எழுதிறேன்.

உங்களுக்கு விளக்கம் குறைவு என்றால் மீண்டும் மீண்டும் வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.

1 minute ago, Lara said:

நான் quote பண்ணிய போலின் கருத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே கருத்து எழுதிறேன்.

உங்களுக்கு விளக்கம் குறைவு என்றால் மீண்டும் மீண்டும் வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.

ஓ! மற்றவங்க கருத்துக்கு நீங்க மட்டும் தான் கருத்துக் கூறலாமோ?
நாங்க அதுக்கு ஒருகருத்தும் கூறக்கூடாதோ?
இதுவும் தெரியாமப்போச்சே!

11 minutes ago, Rajesh said:

ஓ! மற்றவங்க கருத்துக்கு நீங்க மட்டும் தான் கருத்துக் கூறலாமோ?
நாங்க அதுக்கு ஒருகருத்தும் கூறக்கூடாதோ?
இதுவும் தெரியாமப்போச்சே!

இதென்ன வில்லங்கம். :grin: 

நீங்கள் கருத்து கூறலாம். ஆனால் எழுதப்பட்டிருப்பதை தலைகீழாக வாசித்து பதிலளிக்க கூடாது.

போல் எழுதிய கருத்து மகிந்தவின் இப்போதைய சந்திப்பில் பிள்ளையானுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கு என்று. பிள்ளையான் கொலை செய்த போது டீலுடன் செய்தாரா இல்லையா என்பது பற்றியல்ல.

Edited by Lara

Just now, Lara said:

இதென்ன வில்லங்கம். :grin: 

நீங்கள் கருத்து கூறலாம். ஆனால் எழுதப்பட்டிருப்பதை தலைகீழாக வாசித்து பதிலளிக்க கூடாது.

போல் எழுதிய கருத்து மகிந்தவின் இப்போதைய சந்திப்பில் பிள்ளையானுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கு என்று. பிள்ளையான் கொலை செய்த போது டீலுடன் செய்தாரா இல்லையா என்பது பற்றியல்ல. 

ஓகே. ஓகே!
உங்க வழில குறுக்கிட்டதுக்கு மன்னிக்கவும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோர்மலாய் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலை ஒருத்தர் ஜெயிலுக்கு போனாலே அவர்ரை சரித்திரம் சரி....ஆனால் சிலோனிலை உள்ளுக்கு போனால் தியாகி. :grin:

2 hours ago, குமாரசாமி said:

நோர்மலாய் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலை ஒருத்தர் ஜெயிலுக்கு போனாலே அவர்ரை சரித்திரம் சரி....ஆனால் சிலோனிலை உள்ளுக்கு போனால் தியாகி. :grin:

சிலோனில் மட்டுமில்லை இந்தியாவிலும் ஊழல், திருட்டு, கொள்ளை, கொலை, பாலியல் இம்சை, .... போன்றவற்றில் வெற்றிகரமாக ஈடுபட்டு ஏதாவது குற்றச்சாட்டில் சிறை சென்றவர்கள் தான் தியாகி, தேசத்தின் தந்தை, ... ஆக முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

பிள்ளையானை சந்தித்தேன் அவரை வாழ்த்தினேன்” - மகிந்த

இன்று போல் என்றும் வாழ்க என்று வாழ்த்தியிருப்பாரோ

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.