Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வு வேண்டுமானால் அன்னத்திற்கு வாக்களியுங்கள் - கிளிநொச்சியில் ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வு வேண்டுமானால் அன்னத்திற்கு வாக்களியுங்கள் - கிளிநொச்சியில் ரணில்

2015 ஆம் ஆண்டு அன்னத்திற்கு வாக்களித்த எம்மிடம் ஆட்சியை வழங்கியமையால்தான்  நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டது. எனவே புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக அதிகாரபகிர்வு வேண்டுமானால் மீண்டும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வருகின்ற 16 ஆம் திகதி அன்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டும் என கிளிநொச்சியில் பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

IMG_7950.JPG

இன்று 03-11-2019 கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில். 

தற்பொழுது நாட்டில் வெள்ளை வேன் வருவது கிடையாது, ஆனால் மக்களை தேடி அவசர அம்பூலன்ஸ் வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லை என்பதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மொட்டுக்கு வாக்களித்தால்  வெள்ளை வேன் மட்டுமே வரும் எனத் தெரிவித்த பிரதமர்

2015 க்கு பின்னர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யலாம், ஊர்வலம் போகலாம், பேசலாம், எழுதலாம்  இந்த நிலைமை தொடர வேண்டுமா?  வேண்டாமா?  நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றை உருவாக்கி சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம்  எனத் தெரிவித்த அவர்

2015க்கு பின் புதிய அரசியலமைப்பினை ஏற்படுத்த முயற்சித்த போதும் பாராளுமன்றத்தில் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமையினால் அதனை கொண்டுவர முடியாது போய்விட்டது. ஆனால் புதிய அரசிலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வை கொண்டுவரவேண்டுமானால்  மக்கள் செய்ய வேண்டியது இரண்டு விடயங்கள்தான் ஒன்று வரும் 16 ஆம் திகதி அன்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்குவது, இரண்டாவது பாராளுமன்றத்தில் 120 க்கு மேறபட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களை எமக்கு வழங்குவது எனக் குறிப்பிட்ட பிரதமர்,

IMG_7981.JPG

கிளிநொச்சியை அபிவிருத்தியை செய்வதற்கு  நாம் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளோம் ஆனையிறவு உப்பளம் புனரமைத்தல், பூநகரியில்  சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும்  திட்டங்களை ஏற்படுத்துதல்,வடக்கு கிழக்கில் விசேட பொருளாதார திட்டங்களை  நடைமுறைப்படுத்துதல்,  தொழில் வாய்ப்பினை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்தன, ஹரிசன்,விஜயகலா மகேஸ்வரன் மற்றும்  பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

https://www.virakesari.lk/article/68089

49 minutes ago, கிருபன் said:

2015 ஆம் ஆண்டு அன்னத்திற்கு வாக்களித்த எம்மிடம் ஆட்சியை வழங்கியமையால்தான்  நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டது. எனவே புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக அதிகாரபகிர்வு வேண்டுமானால் மீண்டும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வருகின்ற 16 ஆம் திகதி அன்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டும் என கிளிநொச்சியில் பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு எந்த ஜனநாயகமும் கிடைக்கவில்லை!

ஆளுநர்களை கொண்டு வடமாகாண சபையை முடக்கியது தான் ஐக்கிய தேசியக் கட்சி  என்னும் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் தற்போதைய தலைவனாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க கூறும் போலி ஜனநாயகம். எனவே தமிழர்களுக்கு ஜனநாயக உரிமைகள் கிடைத்தது என்பது ரணிலின் முழுமையான பச்சைப் பொய், முழுமையான ஏமாற்றல்.  இதை நம்பி தமிழர் இன்னொருமுறை வாக்களித்து ஏமாற வேண்டுமா?

புதிய புதிய அரசியலமைப்பினை உருவாக்க போன 2015 தேர்தலில் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஐநா சபையிலும் வாக்குறுதி வழங்கப்பட்டது. இதை நம்பி தமிழர் வாக்களித்தனர்.  ஆனால்,5 வருடங்களாக எடுபிடிகள் சம்மந்தன்-சுமந்திரன் உதவியுடன் இழுத்தடித்து இனப்பிரச்சினை தீர்வுக்கேற்ற உருப்படியான அரசியலமைப்பினை உருவாக்கவில்லை. இன்னொருமுறை ரணில் என்ற ஏமாற்றுப் பேர்வழியை நம்பி வாக்களித்து மீண்டும் ஏமாற வேண்டுமா?

ஐக்கிய தேசியக் கட்சி  என்னும் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் தற்போதைய தலைவனாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு முழுமையாக முண்டுகொடுத்த சம்மந்தன்-சுமந்திரன் கும்பல் இப்போது கபட நாடகம் ஆடி ஐக்கிய தேசியக் கட்சி  என்னும் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலை மீண்டும் ஆட்சியிலேற்றுவதற்கு தலைதெறிக்க ஓடிவருகின்றனர்.  இந்தக் கும்பலின் சதி முயற்சிக்கு துணை போனால் தமிழின அழிப்பு சர்வதேசத்தின் ஆதரவுடன் தொடரும். தமிழர் இன்னொருமுறை வாக்களித்து சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழின அழிப்பு தொடர வழிவகுக்க வேண்டுமா?

எனவே தமிழர் இரண்டு கொலைகாரக் கும்பல்களுக்கும்  வாக்களிக்காமல், சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பதே சிறந்த முடிவாக இருக்கும். அதைவிட்டு சுயநலவாதிகளின் மிரட்டல்களால் பயந்து, கட்டுக்கதைகளால் கவரப்பட்டு ஏமாந்தால் அதனது விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும்.

"கிளிநொச்சியில் ரணில்" ... இதையே இரணிலால் அம்பாந்தோட்டையிலும் சொல்ல முடியுமா ? 

சொன்னால் நம்பலாம் . 

தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளையும் இரண்டு வருடங்களில் தீர்த்து வைப்போம் வவுனியாவில் நாமல் ராஜபக்ச­ தெரிவிப்பு

காணாமல் போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, நிலப்பிரச்சினை, காணி உரிமைப் பிரச்சினை என முக்கிய பிரச்சினைகளுக்கு இரண்டு வருடங்களில் தீர்வு பெற்று தர முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரித்து வவுனியாவில் இடம் பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமது ஆட்சி வந்ததும் சகல பிரதேச செயலகங்களுக்கும் உட்பட்ட வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலைகளை உருவாக்குவோம் என்றும் 2025 ஆம் ஆண்டாகும் போது ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.

1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம் முதல் 2009 வரை தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதை அறிவோம் என கூறிய நாமல் ராஜபக்ஷ அடுத்துவரும் இரண்டு வருடங்களில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வினைப்பெற்றுதர முடியும் என கூறினார்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இதனை புரிந்து தமது கரத்தை பலப்படுத்துமாறு நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.    

http://valampurii.lk/valampurii/content.php?id=19723&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வு வேண்டுமானால் அன்னத்திற்கு வாக்களியுங்கள் - கிளிநொச்சியில் ரணில்

என்னென்ன அதிகாரம்கள் என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.

பொலிஸ் காணி கல்வி இதில் என்ன தான் முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னென்ன அதிகாரம்கள் என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.

பொலிஸ் காணி கல்வி இதில் என்ன தான் முடிவு.

வாய்ப்பேச்சில் மட்டும்தான் இருக்கும் அதிகாரம் 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கட்சிகளும் தமிழ் மக்களுக்கு எதுவும் தராது என்பது தான் யாதார்த்தம். தேர்த்தலுக்கு  முன் தமிழ் மக்களின் வாக்குகளை பெற தேனாக பேசி விட்டு பின்பு முதுகில் குத்தியதே சிங்கள அரசுகளின் வரலாறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொட்டுக்கு வாக்களித்தால் உங்கள் வீடுகளை தேடி வெள்ளை வாகனம் வரும்..! கிளிநொச்சியில் எச்சாித்தாா் ரணில்..  

 

வெள்ளை வாகனம் அற்ற ஜனநாயகமான நாட்டில் வாழ விரும்பினால் தமிழ் மக்கள் சஜித் பிறேமதாஸவுக்கு வாக்களிக்கவேண்டும். என சிறிலங்கா பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் கூறியிருக்கின்றாா்.

இன்று 03-11-2019 கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில்  சிறிலங்கா  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில். தற்பொழுது நாட்டில் வெள்ளை வேன் வருவது கிடையாது, ஆனால் மக்களை தேடி அவசர அம்பூலன்ஸ் வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லை என்பதனை

மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மொட்டுக்கு வாக்களித்தால் வெள்ளை வேன் மட்டுமே வரும் எனத் தெரிவித்த சிறிலங்கா பிரதமர்2015 க்கு பின்னர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யலாம், ஊர்வலம் போகலாம்,

பேசலாம், எழுதலாம் இந்த நிலைமை தொடர வேண்டுமா? வேண்டாமா? நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றை உருவாக்கி சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம் எனத் தெரிவித்த அவர்

2015க்கு பின் புதிய அரசியலமைப்பினை ஏற்படுத்த முயற்சித்த போதும் பாராளுமன்றத்தில் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமையினால் அதனை கொண்டுவர முடியாது போய்விட்டது.

ஆனால் புதிய அரசிலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வை கொண்டுவர வேண்டுமானால் மக்கள் செய்ய வேண்டியது இரண்டு விடயங்கள்தான் ஒன்று வரும் 16 ஆம் திகதி அன்னத்திற்கு வாக்களித்து

சஜித்தை ஜனாதிபதியாக்குவது, இரண்டாவது பாராளுமன்றத்தில் 120 க்கு மேறபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை எமக்கு வழங்குவது எனக் குறிப்பிட்ட பிரதமர்,கிளிநொச்சியை அபிவிருத்தியை செய்வதற்கு

நாம் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளோம் ஆனையிறவு உப்பளம் புனரமைத்தல், பூநகரியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் திட்டங்களை ஏற்படுத்துதல்,வடக்கு கிழக்கில் விசேட

பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், தொழில் வாய்ப்பினை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.இக் கூட்டத்தில் அமைச்சர்களான

ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்தன, ஹரிசன்,விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://www.thaarakam.com/news/96155

4 hours ago, கிருபன் said:

புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வு வேண்டுமானால் அன்னத்திற்கு வாக்களியுங்கள் - கிளிநொச்சியில் ரணில்

ஒருசில நாட்களில் கல்முனை பிரதேசபை முழுமையாக அமைக்கப்படும் என்று பொய்யன் ரணில் வழங்கிய வாக்குறுதி எங்கே போனது?

அதற்கு என்ன நடந்தது?

முழுமையாக அமைக்கப்பட்டுவிட்டதா?

இதற்கு கயவன் ரணிலின் பதில் என்ன?

ஏமாற்றுப் பேர்வழி ரணிலுக்கு காவடி தூக்கிய மனோகணேசன் எங்கே?

திருட்டு ரணிலுக்காக கல்முனைத் தமிழரை ஏமாற்றப் போய் அடிவாங்கி திரும்பிய சுமந்திரன் எங்கே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.