Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு கிழக்கு தமிழரை நேசிக்கவில்லை

Featured Replies

கூட்டமைப்பு கிழக்கு தமிழரை நேசிக்கவில்லை

Thursday, November 7, 2019 - 9:35am
 
57_06112019_SSF_CMY.jpg?itok=5c4MWdml

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை நேசிக்குமாகவிருந்தால்  இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து இருக்கவேண்டும். கிழக்கு தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்கின்ற தீர்மானத்தினை எப்போதோ எடுத்துவிட்டார்கள் என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார். 

பட்டிருப்பு தொகுதி சங்கர்புர த்தில்  நேற்றுமுன்தினம் (5)  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்படுகின்ற நிலங்களை மீட்பதற்கும், பொருளாதார ரீதியாக தமிழர்கள் வலுவாக வேண்டுமாக இருந்தால் அதற்கு அரசியல் அதிகாரம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. 

அந்த வகையில் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் தங்களது இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு   வாக்களிக்க வேண்டும்.

அரசியல் பசப்பு வார்த்தைகளாலும்,வீர பேச்சுக்களாலும் தமிழர்களுக்கு என்றும் நியாயமான தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதை கடந்த கால அரசியல் உணர்த்தி இருக்கின்றது. 

அன்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் இருக்கின்ற போது எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் இருந்தார். அந்த காலத்திலேயே தமிழருக்கு எதிரான அதிக கூடுதலான குழப்பங்களும், வன்முறைகளும் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டன. அதுபோன்று ஐக்கிய தேசியக் கட்சி நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் இருக்கின்ற போது கிழக்கில் தமிழர்களுக்கான நில, நிர்வாகம் இருப்புக்கள் மறுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி கூட ஏனைய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கல்முனையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்தினை தரம் உயர்த்த முடியாத ஐக்கிய தேசிய கட்சி அரசு கிழக்கு தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்குமா அல்லது வடக்கு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியுமா.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை நேசிக்குமாக இருந்தால் உண்மையில் இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

(வெல்லாவெளி தினகரன் நிருபர்)  

https://www.thinakaran.lk/2019/11/07/அரசியல்/43478/கூட்டமைப்பு-கிழக்கு-தமிழரை-நேசிக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வநாயகத்தின் பிறகு வடக்கு தலைமைகள் எதுவும் கிழக்கு மக்களை சமத்துவமாக நடத்தவில்லை என்பதை வெட்கத்தோடு ஒத்துக்கொள்கிறேன். தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் ராசதுரை, ராஜவரோதயம், ராசமாணிக்கம் போன்ற கிழக்கின் முக்கியமான தலைவர்கள் சம்மதமில்லாமல் கட்ச்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. , அரசியல்  நிபந்தனைகளோ அரசியல் பேரமோ இல்லாமல் யு.என்.பியை ஆதரிப்பது தமிழரசுக் கட்ச்சிக்குப் புதியதல்லவே.   வடக்கின் காலத் தவறுகளுக்காக கிழக்கு மக்களின்முன் வெட்க்கித் தலை குனிகிறேன்.  

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களையும்...   கூட்டமைப்பு நேசிக்கவில்லை என்பதே... உண்மை.
சம்பந்தனும், சுமந்திரனும்... தமது சுயநலத்துக்காக,  
அரசியல் செய்ய வெளிக்கிட்டு, பத்து வருசமாகி  விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

7553-E464-A8-D9-42-E1-A74-C-4-A4511-B217

கிழக்கு மட்டுமல்ல , வன்னியயும் இவர்கள் கவனிப்பதில்லை. வன்னியில் ரிசார்டின் ஆட்சி , கிழக்கில் ஹிஸ்புல்லாவின் ஆட்சி. கோத்த வந்தால் என்ன , சஜித் வந்தால் என்ன இவர்கள்தான் அங்கு அமைச்சர்கள். நம்மட மடையர்கள் அந்த ஆட்சிக்கு முண்டு கொடுப்பாங்க , இவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருப்பார்கள். தமிழனுக்கு அரசியல் உரிமையும் இல்லை , அபிவிருத்தியும் இல்லை. எந்த நாளும் பிச்சைக்காரனாகவே இருக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, poet said:

தந்தை செல்வநாயகத்தின் பிறகு வடக்கு தலைமைகள் எதுவும் கிழக்கு மக்களை சமத்துவமாக நடத்தவில்லை என்பதை வெட்கத்தோடு ஒத்துக்கொள்கிறேன். தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் ராசதுரை, ராஜவரோதயம், ராசமாணிக்கம் போன்ற கிழக்கின் முக்கியமான தலைவர்கள் சம்மதமில்லாமல் கட்ச்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. , அரசியல்  நிபந்தனைகளோ அரசியல் பேரமோ இல்லாமல் யு.என்.பியை ஆதரிப்பது தமிழரசுக் கட்ச்சிக்குப் புதியதல்லவே.   வடக்கின் காலத் தவறுகளுக்காக கிழக்கு மக்களின்முன் வெட்க்கித் தலை குனிகிறேன்.  

கிழக்கில் தற்போது உள்ள தமிழ் தலைவர்களை குறிப்பிடுங்கள் பார்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ampanai said:

கூட்டமைப்பு கிழக்கு தமிழரை நேசிக்கவில்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை நேசிக்குமாக இருந்தால் உண்மையில் இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 

ததேகூடட்டமைப்பு கிழக்குத்தமிழர்  என்றில்லை

எந்த  தமிழரையும்  நேசிப்பதில்லை

ஆனால் இவரது  நோக்கம்  வேறு

கோத்தபயவை ஆதரிக்கவேண்டும்  என்பது  ஒட்டுமொத்த  தமிழர்களின்  முடிவல்ல

அப்படியானால்  தேர்தலின்  பின் கோத்தபயவுக்கு  எதிராக  தமிழர்கள்  வாக்களித்தால்

கூட்டமைப்பு கிழக்குத்தமிழரை ஒதுக்கியது  சரி  என்று  இவர்  எடுத்துக்கொள்ளவேண்டி  வருமே??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kavi arunasalam said:

7553-E464-A8-D9-42-E1-A74-C-4-A4511-B217

சம்பந்தன் ஐயாவின், கழுத்தில் உள்ள மாலை... நல்ல, வடிவாக இருக்கு.  :grin:

18 hours ago, poet said:

தந்தை செல்வநாயகத்தின் பிறகு வடக்கு தலைமைகள் எதுவும் கிழக்கு மக்களை சமத்துவமாக நடத்தவில்லை என்பதை வெட்கத்தோடு ஒத்துக்கொள்கிறேன். தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் ராசதுரை, ராஜவரோதயம், ராசமாணிக்கம் போன்ற கிழக்கின் முக்கியமான தலைவர்கள் சம்மதமில்லாமல் கட்ச்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. , அரசியல்  நிபந்தனைகளோ அரசியல் பேரமோ இல்லாமல் யு.என்.பியை ஆதரிப்பது தமிழரசுக் கட்ச்சிக்குப் புதியதல்லவே. வடக்கின் காலத் தவறுகளுக்காக கிழக்கு மக்களின்முன் வெட்க்கித் தலை குனிகிறேன்.  

சம்பந்தன் திருகோணமலை (கிழக்கு) தானே?

சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் பிறந்திருந்தாலும் கொழும்பில் வளர்ந்தவர். அவர் 2010 இல் தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். அப்படி ஆரம்பித்து இப்பொழுது சம்பந்தனும் சுமந்திரனும் சேர்ந்து கூட்டமைப்பையே ஆட்டிப்படைக்கிறார்கள். வடக்கு கிழக்கு மக்கள் எம்மாத்திரம்?

பிள்ளையானின் கட்சி கோத்தாவை ஆதரிப்பதற்காக கூட்டமைப்பும் கோத்தாவை ஆதரிக்க வேண்டுமென்றில்லை. கூட்டமைப்பு சஜித்தை ஆதரிப்பது சரியான முடிவு.

இலங்கை அரசு பிள்ளையான், கருணா போன்றவர்களை எப்படி பயன்படுத்தியதோ அதே போல் முஸ்லிம்களை பயன்படுத்துகிறது. முஸ்லிம்களை வைத்து தமிழர்களை அழிப்பது இலகு.

கூட்டமைப்பு மூலம் பாராளுமன்ற உறுப்பினராகிய வியாழேந்திரனும் இப்பொழுது கோத்தாவுக்கு ஆதரவு. 

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.