Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை குடியுரிமையை கைவிட்ட ஆவணங்களை கோட்டா சமர்ப்பிக்கவில்லை: தேர்தல்கள் ஆணையாளரே போட்டுடைத்தார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழு தலைவர் பெறவில்லை என்று சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் மில்ரோய் பெர்னாண்டோ நேற்று (11) தெரிவித்தார்.

“கோட்டாபயராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான சான்றளிக்கப்பட்ட நகல்களுக்காக நான் தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தேன். ஆனால், ஆவணங்களை அவரிடம் இருந்து பெறவில்லையென ஆணைக்குழுவின் தலைவர் என்னிடம் தெரிவித்தார் என பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான அனைத்து ஆவணங்களும் கோட்டாபயவினால் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என, அவரது சட்டத்தரணி பகிரங்க செய்தியாளர் சந்திப்பு நடத்திய மறுநாள், தேர்தல்கள் ஆணையாளரே கைவிரித்துள்ளார்.

இதனால், அன்றைய தினம் அலி சப்ரி கூறியவை பொய்யானவை என்றார் பெர்னாண்டோ.

“ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பாக எந்தவொரு ஆவணமும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை” என்று பெர்னாண்டோ மீண்டும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் ஒரு அமெரிக்க குடிமகன் என்றும், ஒரு அமெரிக்க குடிமகனை இலங்கையின் ஜனாதிபதியாக மாற்றலாமா அல்லது வரவிருக்கும் தேர்தலில் இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் பெர்னாண்டோ கூறினார்.

http://www.pagetamil.com/86682/

தேர்தலில் கோத்தா வென்றால், உச்ச நீதிமன்றம் வரை சஜித் தரப்போ இல்லை இன்னொருவரோ வழக்கு தொடுப்பர். 

5 hours ago, பெருமாள் said:

“கோட்டாபயராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான சான்றளிக்கப்பட்ட நகல்களுக்காக நான் தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தேன். ஆனால், ஆவணங்களை அவரிடம் இருந்து பெறவில்லையென ஆணைக்குழுவின் தலைவர் என்னிடம் தெரிவித்தார் என பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் கூறினார்.

அதனால சஜித்துக்கு வாக்களித்து தமிழினம் ஏமாறனும் என்டு நினைக்கிற ஆட்கள் கோத்தபாய பூச்சாண்டி காட்டி செய்ற வாதம் இனி எடுபடாது.

எனவே பயந்தவர்களும் இனி சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Rajesh said:

அதனால சஜித்துக்கு வாக்களித்து தமிழினம் ஏமாறனும் என்டு நினைக்கிற ஆட்கள் கோத்தபாய பூச்சாண்டி காட்டி செய்ற வாதம் இனி எடுபடாது.

எனவே பயந்தவர்களும் இனி சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கலாம். 

அமெரிக்க சட்டப்படி, கோத்தபாயவின் பகிரங்கப்படுத்தப்பட்ட Certificate of Loss of Nationality உண்மையானதும் இறுதியானதுமான ஆவணம். 

தேர்தல்ஆணைக்குழு இந்த ஆவணத்தை கோரவும் இல்லை, இது தமக்கு தேவையும் இல்லை என தேர்தல்ஆணைக்குழுவின் தலைவர் BBC க்கு தெரிவித்துள்ளார்.

ஆகவே, கோத்தபாயவின் ஜனாதிபதி தெரிவை அவரது இரத்து செய்யப்பட்ட அமெரிக்க குடியுரிமை எவ்விதத்திலும் பாதிக்காது. 

ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சஜித்துக்கு வாக்களித்தாலும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் கோத்தபாய வென்றால் என்ன நடக்கும் என்று யாராவது சொல்லுங்களேன்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

தமிழர்கள் சஜித்துக்கு வாக்களித்தாலும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் கோத்தபாய வென்றால் என்ன நடக்கும் என்று யாராவது சொல்லுங்களேன்?

தமிழர்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து கோத்தபாய வென்றால் நடப்பதே நடக்கும். அதில் ஒன்று சிவாஜிலிங்கம் காணாமல் போவது.

சிவாஜிலிங்கம் எண்டாலே பொதுவாக குழப்படிகளும் , பிரச்சினைகளும் , தர்க்கங்களை நிறைந்த இடம். அத்துடன் உதவிக்கு பதவி ஆசை பிடித்து திரியும் அனந்தி. இவர்கள் யாருமே எமக்கு தீர்வை தரப்போவதில்லை.

இருந்தாலும் இருக்கிற இரண்டு பேய்களில் , நல்ல பேய் ஒன்றை தெரிவு செய்வோம் நாடடை ஆள்வதுக்கு. நிச்சயமாக தமிழன் வரப்போவதில்லை. ஒன்று சஜித் அல்லது கோத்தா. 

கோத்தாவின் குடியுரிமை பற்றி எமக்கு சரியாக தெரியாது. எனவே இது தேர்தல்முடிந்த பின்னர் சடட பிரச்சினையாக மாறும். அதுவரைக்கும் எதுவும் கூற முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Jude said:

தமிழர்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து கோத்தபாய வென்றால் நடப்பதே நடக்கும். அதில் ஒன்று சிவாஜிலிங்கம் காணாமல் போவது.

பிரபாகரனின் தாயாரை பராமரித்தற்காக காணாமல் போகாதவர் தேர்தலில் நின்றதற்காக போவாரா?! 

1 hour ago, Jude said:

தமிழர்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து கோத்தபாய வென்றால் நடப்பதே நடக்கும். அதில் ஒன்று சிவாஜிலிங்கம் காணாமல் போவது.

சிவாஜிலிங்கம் தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பதால் கோத்தாவுக்கு நன்மை. கோத்தபாய வென்றால் தமிழ் மக்கள் தான் காணாமல் போவார்கள், சிவாஜிலிங்கம் அல்ல. சிவாஜிலிங்கம் இருந்தால் தான் இனிவரும் ஜனாதிபதி தேர்தல்களிலும் தமிழர்களின் வாக்குகளை பிரிப்பார். 😀

2010 ஜனாதிபதி தேர்தலிலும் சிவாஜிலிங்கம் தனித்து போட்டியிட்டு தமிழர்கள் வாக்குகளை பிரித்தார். அதில் மகிந்த வென்றவர், சிவாஜிலிங்கம் காணாமல் போகவில்லை தானே?

2 hours ago, Jude said:

ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது. 

ஒரு தமிழ் வேட்பாளரை, ஓடி ஓடி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் விட்டால் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Rajesh said:

ஒரு தமிழ் வேட்பாளரை, ஓடி ஓடி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் விட்டால் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது.

அந்த தமிழ் வேட்பாளர், தமிழரையும் தன்னையும் காணாமல் போகச் செய்யப் போபவரை அல்லவா ஜனாதிபதி ஆக்க போகிறார்?

இதனை புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் தான் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள்.

2 minutes ago, Jude said:

அந்த தமிழ் வேட்பாளர், தமிழரையும் தன்னையும் காணாமல் போகச் செய்யப் போபவரை அல்லவா ஜனாதிபதி ஆக்க போகிறார்?

இதனை புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் தான் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள்.

நல்ல கற்பனை!

ஆனால் உண்மை, ஒரு தமிழ் வேட்பாளரை, ஓடி ஓடி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் விட்டால் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Lara said:

சிவாஜிலிங்கம் தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பதால் கோத்தாவுக்கு நன்மை. கோத்தபாய வென்றால் தமிழ் மக்கள் தான் காணாமல் போவார்கள், சிவாஜிலிங்கம் அல்ல. சிவாஜிலிங்கம் இருந்தால் தான் இனிவரும் ஜனாதிபதி தேர்தல்களிலும் தமிழர்களின் வாக்குகளை பிரிப்பார். 😀

2010 ஜனாதிபதி தேர்தலிலும் சிவாஜிலிங்கம் தனித்து போட்டியிட்டு தமிழர்கள் வாக்குகளை பிரித்தார். அதில் மகிந்த வென்றவர், சிவாஜிலிங்கம் காணாமல் போகவில்லை தானே?

2005 ல் தேர்தலை பகிஷ்கரித்து மகிந்தவை வெற்றி பெற வைத்தோம் - முள்ளிவாய்க்கால் கண்டோம்.

2010 ல் சிவாஜிலிங்கம் வாக்குகளை பிரித்து மகிந்தவை வெற்றி பெற வைத்தோம். சிவாஜிலிங்கம் இன்னமும் இருக்கிறார். இன்னும் சில தமிழரும் தப்பி பிழைத்து இருக்கிறார்கள்.

2019 ல் சிவாஜிலிங்கம் வாக்குகளை பிரித்து கோத்தபாயாவை வெற்றி பெற வைத்து பார்க்கலாம் என்கிறீர்கள். செய்தால் போகிறது - ஈழத்தமிழரை எவருக்கும் வேண்டாம் என்றாகி விட்டது தானே?

5 minutes ago, Rajesh said:

நல்ல கற்பனை!

ஆனால் உண்மை, ஒரு தமிழ் வேட்பாளரை, ஓடி ஓடி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் விட்டால் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது.

போர்க்குற்றங்களை நல்ல கற்பனை என்கிறீர்களா? கோத்தபாயவும் அப்படித்தான் சொல்கிறார்.

1 minute ago, Jude said:

2005 ல் தேர்தலை பகிஷ்கரித்து மகிந்தவை வெற்றி பெற வைத்தோம் - முள்ளிவாய்க்கால் கண்டோம்.

2010 ல் சிவாஜிலிங்கம் வாக்குகளை பிரித்து மகிந்தவை வெற்றி பெற வைத்தோம். சிவாஜிலிங்கம் இன்னமும் இருக்கிறார். இன்னும் சில தமிழரும் தப்பி பிழைத்து இருக்கிறார்கள்.

2019 ல் சிவாஜிலிங்கம் வாக்குகளை பிரித்து கோத்தபாயாவை வெற்றி பெற வைத்து பார்க்கலாம் என்கிறீர்கள். செய்தால் போகிறது - ஈழத்தமிழரை எவருக்கும் வேண்டாம் என்றாகி விட்டது தானே?

போர்க்குற்றங்களை நல்ல கற்பனை என்கிறீர்களா? கோத்தபாயவும் அப்படித்தான் சொல்கிறார்.

உங்கடை கற்பனைகளும் கோத்தாட கற்பனைகளும் ஒரே லைன்ல தான் இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பிரபாகரனின் தாயாரை பராமரித்தற்காக காணாமல் போகாதவர் தேர்தலில் நின்றதற்காக போவாரா?! 

கோத்தபாயவை ஜனாதிபதி ஆக்கிய பிறகு போர்க்குற்றங்களை பற்றி பேசினால் இவர் எங்கே இருப்பார் என்று இருந்து பாருங்கள்.

போர்க்குற்றவாளி கோத்தபாய இன்றுவரை காப்பாற்றப்பட்டது போலவே என்றும் காப்பாற்றபடோணும் என்டால் ஒரேவழி ஐதே.க. ஆட்சி தான். அதான் பலர் சஜித்துக்கு வாக்களிக்கோணும் என்டு ஒற்றைக்காலில நீக்கீனம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.