Jump to content

4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம்

செய்ய முயன்ற மதபோதகர் கைது

மே 09, 2007

சென்னை: 4 பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ஜெய் மார்ட்டின் லூதர் (40). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். மதபோதகரான இவர் மற்ற ஜெபக் கூடங்களுக்குக்கும் சென்று பிரசங்கம் செய்வதுண்டு.

இவர் கொடுங்கையூர் சீதாராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்த பிரேமிபியூலா என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பியூலா தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பியூலா சமீபத்தில் ஜெய் மார்ட்டின் லூதர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில்,

ஜெய்மார்ட்ன் லூதர் நடத்தி வரும் ஜெபக்கூடத்துக்கு நான் அடிக்கடி ஜெபம் செய்ய செல்வேன். அப்போது எனக்கும், ஜெய்மார்ட்டின் லூதருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

பின்னர் இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெய் மார்ட்டின் லூதருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. மேலும் மேரி, பரிமளம், சலோமியா ஆகிய 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பதும் தெரிந்தது. அவர்கள் மூவருக்கும் குழந்தைகள் உள்ளனர்.

இதில் மேரியை மனநிலை சரி இல்லாதவர் என்று ஒதுக்கி வைத்து விட்டார். மற்ற இரண்டு பெண்களையும் அது போல விரட்டி விட்டார். என்னையும் சில காலமாக சித்ரவதை செய்து வருகிறார். மேலும் என்னை விபச்சாரத்தில் தள்ள ஏற்பாடு செய்து வருகிறார்.

மேலும் வரதட்சணை வாங்கி வர சொல்லி தினமும் என்னை அடித்து துன்புறுத்தினர். சில வாரங்களுக்கு முன் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி என்னை வீட்டை விட்டு விட்டிவிட்டார்.

இந்நிலையில் அவர் 5வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார். இதை தடுத்து நிறுத்தி ஜெய்மார்ட்டின் லூதர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெய் மார்ட்டின் லூதர் மீது நடவடிக்கை எடுக்க மகாகவி பாரதி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி ஜெய் மார்ட்டின் லூதரை இன்று போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/05/09/pastor.html

Link to comment
Share on other sites

ஹும் இவங்களையெல்லாம் என்ன செய்யிறது எண்டு தெரியல..... :angry:

ஒருவர் கிட்ட 4 பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கினம்... ஹும் நெடுக்ஸ் தாத்தா இந்தச் செய்தியையும் ஒருக்கா வாசிச்சுப் பாருங்க... B) ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹும் இவங்களையெல்லாம் என்ன செய்யிறது எண்டு தெரியல..... :angry:

ஒருவர் கிட்ட 4 பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கினம்... ஹும் நெடுக்ஸ் தாத்தா இந்தச் செய்தியையும் ஒருக்கா வாசிச்சுப் பாருங்க... B) ;)

நெடுக்ஸ் சார் வந்து என்ன செய்யப்போறாரு

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் சார் வந்து என்ன செய்யப்போறாரு

இல்லை வாசிச்சுப் போட்டு, இந்த 4 பெண்களும் பொல்லாதவர்கள் எண்டு சொன்னாலும் சொல்லுவார் :P <_< B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டதுமு; காதல் காதல் கொண்ட சில துளிப்பொழுதில் திருமணம் என்று யோசித்தால் இப்பகடித்தான் நிகழும்.. திருமணம் மிகவும் சிக்கலானது நிதானமாக யோசித்து பாருங்களன்.

பெண்கள் ஏமாளிகளாக இருப்பதுதான் இப்படியானவர்களுக்கு வாய்ப்பாகிவிடுகிறது.

எதிலும் நிதானம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வி கறுப்பி அவர்களே அந்த மத(து)போதகரின் புகைப்படம் இருந்தால் இப்பகுதியில் இணைத்து விடவும்.ஏனெனில் யாழ் கள உறவுகளுக்கு எங்கள் சின்னப்பு மேல் சந்தேகம் வந்துவிடக்கூடாதல்லவா <_<

Link to comment
Share on other sites

வழக்கு மன்றத்துகுச் சென்றால் நான் அவனில்லை என்று சொல்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வி கறுப்பி அவர்களே அந்த மத(து)போதகரின் புகைப்படம் இருந்தால் இப்பகுதியில் இணைத்து விடவும்.ஏனெனில் யாழ் கள உறவுகளுக்கு எங்கள் சின்னப்பு மேல் சந்தேகம் வந்துவிடக்கூடாதல்லவா <_<

ஐயே காட்டிக்கொடுத்திடுவேனா குமாரசாமி .

அதில் இருப்பது உங்க படம் தானே

Link to comment
Share on other sites

5 வதா? கடவுளே எப்படி தான் சமாளிக்கீரார்கலோ தெரியா

இவன்களால நானும் மாட்டுப்படவேண்டி வரலாம்

இனி வேற பெண்ணை ஏறஎடுத்தும் பார்ப்பது இல்லை

அசினை கட்டின கையோடு அப்படியே திரிசாவுக்கும் ஒரு நல்ல வீடு பாத்துபோட்டு கொஞ்ச நாளைக்கு சினேகவை வாடகை வீட்டில் வைச்சு இருந்து கொண்டே நாயனதாரவை அம்மா வீட்டில் கொண்டுபோய்விட்ட உடனே அப்ப தான் அந்தரம் ஆபத்துக்கு ஹரினி யோடு இந்த கொடைகால விடுமுறைஅயை சுவிஸில் அனுபவிக்க வேண்டும் இல்லையேல் காஞ்ச மாடு கம்புல பாச்ச மாதிரி கோவை சராளா தான் மீண்டும் :P

இதை எல்லாம் எப்படியும் விடிய எழும்பின பின் மனைவிக்கு சொல்லனும் இல்லாட்டி அவா யார் முலம் கேள்விப்படா சாப்பாடும் கிடைக்காது( என்ன ஒரு இனிமையான கனவு நாளைக்கும் வரனும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 வதா? கடவுளே எப்படி தான் சமாளிக்கீரார்கலோ தெரியா

இவன்களால நானும் மாட்டுப்படவேண்டி வரலாம்

இனி வேற பெண்ணை ஏறஎடுத்தும் பார்ப்பது இல்லை

அசினை கட்டின கையோடு அப்படியே திரிசாவுக்கும் ஒரு நல்ல வீடு பாத்துபோட்டு கொஞ்ச நாளைக்கு சினேகவை வாடகை வீட்டில் வைச்சு இருந்து கொண்டே நாயனதாரவை அம்மா வீட்டில் கொண்டுபோய்விட்ட உடனே அப்ப தான் அந்தரம் ஆபத்துக்கு ஹரினி யோடு இந்த கொடைகால விடுமுறைஅயை சுவிஸில் அனுபவிக்க வேண்டும் இல்லையேல் காஞ்ச மாடு கம்புல பாச்ச மாதிரி கோவை சராளா தான் மீண்டும் :P

இதை எல்லாம் எப்படியும் விடிய எழும்பின பின் மனைவிக்கு சொல்லனும் இல்லாட்டி அவா யார் முலம் கேள்விப்படா சாப்பாடும் கிடைக்காது( என்ன ஒரு இனிமையான கனவு நாளைக்கும் வரனும்)

கறுவலுக்கு வாற கனவைப்பாரப்பா???? <_<

Link to comment
Share on other sites

கறுவலுக்கு வாற கனவைப்பாரப்பா???? <_<

குசு தாத்தா வேண்டாம் வயது போனவர் என்று மரியாதை வைச்சு இருக்கேன் பிறகு இரவில முடக்கில் நிண்டு தள்ளி விழுத்தி போடுவேன் ஆமா சொல்லிட்டன் :angry:

Link to comment
Share on other sites

ஹும் இவங்களையெல்லாம் என்ன செய்யிறது எண்டு தெரியல..... :angry:

ஒருவர் கிட்ட 4 பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கினம்... ஹும் நெடுக்ஸ் தாத்தா இந்தச் செய்தியையும் ஒருக்கா வாசிச்சுப் பாருங்க... B) ;)

என்ம்மா பிள்ளை அனிதா நெடுக்கு காட்டி என்ன பலன் மனுசன் முதல் கட்டிய ஆத்துகாரிஅயை கூட கண்ணாடி அலுமாரியில பூட்டி வைச்சு கொண்டு இருக்கிறார் ஆவருக்கு ஒய்வாக ஆய்வு எழுத ததன் வருமாம்

:P

Link to comment
Share on other sites

ஹும் இவங்களையெல்லாம் என்ன செய்யிறது எண்டு தெரியல..... :angry:

ஒருவர் கிட்ட 4 பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கினம்... ஹும் நெடுக்ஸ் தாத்தா இந்தச் செய்தியையும் ஒருக்கா வாசிச்சுப் பாருங்க... B) ;)

உங்களுக்கு ஒன்று தெரியுமா எமாற்றுபவர்களை விட ஏமாறுவர்களே குற்றவாளிகள்.ஒரு புடவை வாங்க பலதரம் யோசனை செய்யும் பெண்கள் ஏன் கணவனை மட்டும் அப்படி தெரிவு செய்யவில்லை.எனை பொறுத்தவரையில் இந்த சம்பவங்களுக்கு முக்கிய காரணம் இந்த புகார் கொடுத்த பெண்ணே முதல் பெண்களுக்கு ஆப்பு வசாரோ உங்களுக்கு தெரியாது எனக்கும் தெரியாது.ஏன் எனின் ஒரு போதகர் அதுவும் அவரின் ஜெபகூடத்தில் ஜெபம் செய்யப்போகும் அந்த பெண்ணுக்கு அந்த போதகரை பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் உள்ளூர் போதகர் என்பதால் அவரை பற்றி ஊர் அறிந்திருக்கும் அந்த பெண்ணும் அறிந்திருப்பார் ஆனால் எடுத்ததுகெல்லாம் ஆண்கள் ஏமாற்றூபவர்கள் என சொல்லகூடாது அனித்தா

இதே தாற்ஸ்தமிழில் பெண்கள் செய்த கொலைகளையும் ஆசிங்கத்தை வெளியிட்டு இருந்தது ஆனால் அதனை நாகரிகம் கருதி விவாதிக்கவும் இல்லை இங்கு பிரசுரிக்கவும் இல்லை ஆனால் உங்கள் கருத்து ஒட்டு மொத்த ஆண்களையும் குற்றம் சாட்டும்வகையில் இருந்திருப்பதால் நான் என் கருத்தை முன்வைகின்றேன்.அத்துடன் இவாறான பேர்வழிகளுக்கு துணைபோகும் அல்லது தெரிந்தும் ஏமாறும் இப்படிப்பட்ட பெண்களை கண்டிக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போலிச்சாமியா

Link to comment
Share on other sites

உங்களுக்கு ஒன்று தெரியுமா எமாற்றுபவர்களை விட ஏமாறுவர்களே குற்றவாளிகள்.ஒரு புடவை வாங்க பலதரம் யோசனை செய்யும் பெண்கள் ஏன் கணவனை மட்டும் அப்படி தெரிவு செய்யவில்லை.எனை பொறுத்தவரையில் இந்த சம்பவங்களுக்கு முக்கிய காரணம் இந்த புகார் கொடுத்த பெண்ணே முதல் பெண்களுக்கு ஆப்பு வசாரோ உங்களுக்கு தெரியாது எனக்கும் தெரியாது.ஏன் எனின் ஒரு போதகர் அதுவும் அவரின் ஜெபகூடத்தில் ஜெபம் செய்யப்போகும் அந்த பெண்ணுக்கு அந்த போதகரை பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் உள்ளூர் போதகர் என்பதால் அவரை பற்றி ஊர் அறிந்திருக்கும் அந்த பெண்ணும் அறிந்திருப்பார் ஆனால் எடுத்ததுகெல்லாம் ஆண்கள் ஏமாற்றூபவர்கள் என சொல்லகூடாது அனித்தா

இதே தாற்ஸ்தமிழில் பெண்கள் செய்த கொலைகளையும் ஆசிங்கத்தை வெளியிட்டு இருந்தது ஆனால் அதனை நாகரிகம் கருதி விவாதிக்கவும் இல்லை இங்கு பிரசுரிக்கவும் இல்லை ஆனால் உங்கள் கருத்து ஒட்டு மொத்த ஆண்களையும் குற்றம் சாட்டும்வகையில் இருந்திருப்பதால் நான் என் கருத்தை முன்வைகின்றேன்.அத்துடன் இவாறான பேர்வழிகளுக்கு துணைபோகும் அல்லது தெரிந்தும் ஏமாறும் இப்படிப்பட்ட பெண்களை கண்டிக்கின்றேன்

ஈழவன் உங்களுக்கு ஒன்று தெரியுமா ? யாரும் ஏமாறும் போது தெரிஞ்சுகொண்டு ஏமாறுவதில்லை. இப்படிப்பட்டவர்களை பற்றி தெரியாமல் கல்யாணம் கட்டி பல பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். கல்யாணம் கட்ட முதல் நடந்தவற்றை சொல்லாமல் மறைத்து சில ஆண்கள் பெண்களை ஏமாற்றுகின்றனர்.கல்யாணம் கட்டும் வரை நல்லவராக இருப்பவர்கள். கல்யாணம் கட்டிய பிறகு தங்களின் குணத்தை காட்டுகின்றனர்.

இந்த போதகர் வேற வேற இடங்களில் ஜெபக் கூட்டம் நடத்தி அதில் தெரிஞ்ச 3 பெண்களை கல்யாணம் முடித்திருக்கலாம்.4 வதாகா கல்யாணம் கட்டிய இந்த புகார் குடுத்த பெண்ணுக்கு , ஏற்கனவே இவர் 3 கல்யாணம் கட்டியவரென்று தெரியாமல் இருந்திருக்கு..இப்ப இந்த போதகரின் பழைய வாழ்க்கையும் ,5 வதாக வேற கல்யாணம் கட்ட போறார் எண்டு தெரிஞ்சதும், (அதுவும் தன்னை விபச்சாரி எண்டு பொய் சொல்லி ஊரை ஏமாற்றி) தன்னைப் போல் வேற ஒரு பெண் இவரால் ஏமாற்றப்படப்போகிறார் என்ற ஒரு நல்லென்னத்தில் அந்த பெண் புகார் குடுத்திருக்கலாம். B)

மற்றது நான் ஒட்டு மொத்த ஆண்களையும் ஏமாற்றுபவர்கள் எண்டு சொல்லவில்லை, எனக்கும் ஒரு அண்ணா இருக்கிறார். அத விட யாழ்ல எனக்கு தெரிஞ்ச அண்ணாமாரும்& நண்பர்களும் இருக்கினம். அவர்களைப்பற்றியும் எனக்கு நன்கு தெரியும். சோ நான் சொல்வது இந்த போதகர் மாதிரியான ஆட்களையும் அந்த மூக்கு ( :unsure: )அறுபட்டவர்மாதிரியான ஆண்களையும் தான்.இப்படி 4 பெண்களை ஒருவர் ஏமாற்றியிருக்கிறார் எண்டு தெரிந்தும் அவருக்காக வாதடும் சில பேரை நான் வண்மையாக கண்டிக்கின்றேன். :rolleyes: B) :angry:

Link to comment
Share on other sites

உலகத்தில இவளவு விஷயம் நடக்குதா........? நல்ல வேலை நான் பையனா போய்ட்டேன், இல்லைன இந்த வடிவு, குசா சின்னப்பு போல ஆக்கள் என்ன ஏமாத்தியிருப்பாங்க

Link to comment
Share on other sites

உலகத்தில இவளவு விஷயம் நடக்குதா........? நல்ல வேலை நான் பையனா போய்ட்டேன், இல்லைன இந்த வடிவு, குசா சின்னப்பு போல ஆக்கள் என்ன ஏமாத்தியிருப்பாங்க

என்ன தான் இருந்தாலும் அவரை பாராட்ட தான் வேண்டும் வான்வில் கு,சா தாத்தா,வடிவேல் மாமா எல்லாம் ஒன்றை வைத்து கஷ்டபடினம் ஆனால் அவர் 5 ஆவதுக்கும் ரேடியாம்,உண்மையா அவர் கிரேட் தான்

:P :rolleyes:

Link to comment
Share on other sites

ஒருவர் கிட்ட 4 பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கினம்...

ஏமாற்றப்படவிலையங்கோ ஏமாந்து இருக்கினம். இவர்கள் சிறுமிகள் தானே இந்தா பாப்பா மிட்டாய் என்றதும் பின்னாலே போவதற்கு.

Link to comment
Share on other sites

மாதுகா இதைத்தான் நானும் சொல்றேன்..

எங்கட பாதுகாப்பை நாங்க உறுதிப்படுத்திக்கணும்..

பணத்துக்கும்..பகட்கு;கும்..

பக்திக்கும்..கருணைக்கும்னு 1008 விடயம் இருந்தாலும்..நாங்க தெளிவாக இருக்கணும்..

ஏமாறுறது எங்க தப்பு

Link to comment
Share on other sites

இதையே நானும் சொன்னேன் ஆனால் அனித்தா நான் அந்த கபோதி போதகருக்கு சபோட் பண்ணுவதாக அனிதா நினைத்துவிட்டார் போலும்.

ஒரு வாழ்கை துணையைதேர்வு செய்யும் போது சரிவர விசாரிக்காமல் இப்படி ஏமாறுவது பெண்களின் பிழையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏராளம். ஏமாந்து போகின்ற பெண்களும் ஏமாற்றுவதே வாழ்க்கை என்று வாழ்கின்ற கயவர்களும் அதிகம்!.

ஏமாந்து போகின்றவர்கள் தான் உண்மையில் குற்றவாளிகள். ஒருவரைப்பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளமால் எப்படி கட்டிக்கொள்வது?!.

மதத்தின் போர்வையால் தங்கள் வெறிகளை தீர்த்துக்கொள்ளும் இந்த மாதிரியான ஆக்களை கல்லால் அடித்தே கொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.